Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரனை 4ஆம் மாடி அழைத்துள்ளது:-

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Sritharan_CI.jpg

[size=3][size=4]வன்னியினில் தமிழ் யுவதிகளை படையில் இணைத்துக் கொண்டுள்ளமை தொடர்பாக பி.பி.சி வானொலிக்கு வழங்கிய செவ்வி தொடர்பில் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் குற்றப்புலனாய்வு பிரிவு விசாரணைக்கு உட்படுத்தப்படவுள்ளார். [/size]

[size=4]நாளை செவ்வாய்கிழமை கொழும்பு குற்றப்புலனாய்வு பிரிவு 4ம் மாடிக்கு விசாரணைக்காக சமூகமளிக்குமாறு அவருக்கு இன்று பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது. [/size]

[size=4]முன்னதாக இன்று காலை யாழ்ப்பாணத்திலுள்ள தனது குடும்பத்தினருடன் தங்கியிருந்த நிலையில் அவரது வாக்குமூலமொன்றை பதிவு செய்ய வருகை தரவுள்ளதாக பொலிஸ் தரப்பினால் அறிவிக்கப்பட்டதாக தெரியவருகின்றது. [/size]

[size=4]எனினும் மாலை வரை அவ்வாறு எவரும் பிரசன்னமாகி இருக்கவில்லையென தொடர்புடைய தரப்புக்கள் தெரிவித்தன.[/size]

[size=4]ஏற்கனவே புலம்பெயர் தேசத்து வானொலியொன்றிற்கு வழங்கிய செவ்வி ஒன்று தொடர்பில் சிறீதரன் 4ம் மாடியில் கடந்த ஜீன் மாதமளவில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டிருந்தார். [/size]

[size=4]எனினும் குறித்த செவ்வியின் மூலப்பிரதி கிடைக்காமையினால் அவ்விசாரணை பின்னர் பிசுபிசுத்துப் போயிருந்தது. இந்நிலையில் தற்போது பி.பி.சி வானொலிக்கு வழங்கிய செவ்வி ஒன்று தொடர்பில் அவர் விசாரணைகளை எதிர் கொண்டுள்ளார். [/size]

[size=4]இதனிடையே குடாநாட்டு நாளிதழ்கள் இரண்டு தனக்கு அபகீர்த்தியை ஏற்படுத்தும் வகையிலான செய்திகளை பிரசுரித்துள்ளதாக கூறி இராணுவத்தளபதி தலா 100 மில்லியன் மான நஸ்டம் கோரியுள்ளமை குறிப்பிடத்தக்கது.[/size][/size]

[size=4]http://www.globaltam...IN/article.aspx[/size]

[size=4]கனடாவில் உள்ள டி.பி.எஸ்.ஜெயராஜ் சுதந்திரமாக உள்ள [/size]கே.பி. அவர்களை பேட்டி கண்டு எழுதுகின்றது. அதில் எந்த குற்றத்தையும் கண்டுபிடித்து நாலாம் மாடிக்கு அவரை ஏனோ புலனாய்வு துறை அழைத்து செல்வதில்லை.

[size=4]மக்களால் தெரிவுசெய்யப்பட்ட பா.உ வை கேட்கிறது இனவாத பயங்கரவாத அரசு. [/size]

புலம் பெயர் அமைப்புக்கள் விரைந்து மேலைநாட்டு ராஜதந்திரிகளிடம் சிங்கள அரச பயங்கரவாதிகளின் அடக்குமுறைகளை கண்டிக்கும்படியும், பயங்கரவாத அரசாக அறிவிக்கும்படியும் கோர வேண்டும்.

இவர்கள் இனி ஸ்ரீதரனை ஒன்றும் செய்ய இயலாது. ஆனால் இது மார்ச் 2013 க்கு நல்ல பிரச்சாரம்.

கூட்டமைப்புடன் நாலாம் மாடிக்காறர்தான் பேசுவார்களாம். ஆனால் ரப்பர் டக்கி, K.P. போன்றோர் புலம்பெயர் மக்களுடன் பேசுவார்களாம்.

கூட்டமைப்பை இந்த பாடு படுத்திக்கொண்டு, அதே நேரம் ரப்பர் டக்கி, K.P. புலம் பெயர் மக்களுடன் பேச்சுவார்த்தைக்கு அழைப்பு அனுப்பியிருக்கிறார்கள். யாழில் அதை அறிவிக்க மிக்க கஸ்டப்பட்டு முயற்சிக்கிறார்கள்.

Edited by மல்லையூரான்

[size=4]

கூட்டமைப்பை இந்த பாடு படுத்திக்கொண்டு, அதே நேரம் ரப்பர் டாகி, K.P. புலம் பெயர் மக்களுடன் பேச்சுவார்த்தைக்கு அழைப்பு அனுப்பியிருக்கிறார்கள். யாழில் அதை அறிவிக்க மிக்க கஸ்டப்பட்டு முயற்சிக்கிறார்கள்.

[/size]

[size=4]அவர்கள் இந்த திரியை கண்டும் காணாமல் இருப்பார்கள்.[/size]

[size=4]கருத்து எதனையும் எழுத மாட்டார்கள். [/size]

பா.உறுப்பினர்களான சிறிதரன், திகாம்பரம் ஆகியோர் விசாரணைக்கு அழைப்பு

November 27, 2012

mps_27-150x150.jpg

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரனை விசாரணைக்கு வருமாறு கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவினர் அழைப்பு விடுத்துள்ளனர். கொழும்பிலுள்ள குற்றத்தடுப்புப் பிரிவு முதலாம் மாடிக்கு சிறிதரன் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளார். இந்த விசாரணைகளை எதிர்கொள்ள பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரன் தற்போது உரிய இடத்திற்கு சென்றுள்ளார். இதேவேளை, தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ப.திகாம்பரத்திற்கு குற்றப் புலனாய்வுப் பிரிவினர் அழைப்பு விடுத்து அவர் விசாரணைகளை எதிர்கொண்டுள்ளார்.

ஹட்டன் பகுதியில் உள்ள நபரொருவர் தாக்கல் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் திகாம்பரத்திற்கு இந்த விசாரணை அழைப்பு விடுக்கப்பட்டது. வர்த்தகரான பாராளுமன்ற உறுப்பினர் திகாம்பரம் முன்னர் தற்போதைய மத்திய மாகாண சபை உறுப்பினர் உதயகுமாருடன் இணைந்து வர்த்தக நடவடிக்கையில் ஈடுபட்டுவந்தார். அப்போது நிதி விடயங்களுக்கு பொறுப்பாளராக நியமிக்கப்பட்டிருந்த ஒருவர் தங்களிடம் இருந்து 5 கோடி ரூபா பணத்தை மோசடி செய்ததாகவும் வங்கி விசாரணைகளில் இது கண்டு பிடிக்கப்பட்டதை அடுத்து குறித்த நபர் தனது மோசடியை ஒப்புக் கொண்டு அதனை திருப்பிச் செலுத்தியதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் ப.திகாம்பரம் அத அதரணவிடம் தெரிவித்தார்.

எனினும் பணமோசடி செய்த குறித்த நபர் வீட்டை பிடுங்க முயற்சிப்பதாக தன்மீது தற்போது முறைப்பாடு செய்துள்ளதாகவும் அது குறித்து தனக்கு குற்றத்தடுப்புப் பிரிவினரிடம் இருந்து கிடைக்கப்பெற்ற விசாரணை அழைப்பை ஏற்று அதனை எதிர்கொண்டதாகவும் குறித்த நபருக்கு 5 கோடி ரூபா பணம் வந்தது எப்படி என விசாரிக்குமாறு குற்றப்புலனாய்வுப் பிரிவினரிடம் கோரியதாகவும் திகாம்பரம் தெரிவித்தார். இதேவேளை, ஜனாதிபதியின் பெயரைக்கூறி அதிகார மோசடியில் ஈடுபட்டதாக பாராளுமன்ற உறுப்பினர் திகாம்பரம் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

http://srilanka.thaalamnews.com/2012/11/27/pop-ciritaran-members-calls-for-the-hearing-tikamparam/

திகாம்பரம் தொண்டைமான் ஆகியோர் போன்று அரசில் இல்லையா?

கிளிநொச்சியில் இராணுவத்துக்கு பெண்கள் சேர்க்கப்பட்டமை தொடர்பாக பாராளுமன்றத்தில் உரையாற்றிய யாழ். மாவட்ட எம்.பி. எஸ்.சிறிதரன் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் இன்று இரண்டு மணி நேரம் விசாரணைக்குள்ளாக்கப்பட்டார்.

பி.பி.சி.க்கு தான் வழங்கிய செவ்வி குறித்தும் குற்றப்புலனாய்வு பிரிவினரால் விசாரிக்கப்பட்டதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் உள்ள இலங்கை குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் 4 ஆம் மாடி அலுவலகத்தில் அந்த திணைக்களத்தின் பொலிஸ் அதிகாரிகளால் தான் சுமார் இரு மணித்தியாலங்கள் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டதாக சிறிதரன் எம்பி கூறியுள்ளார்.

இலங்கை இராணுவத்துக்கு தமிழ் பெண்கள் சேர்க்கப்படுவது குறித்து நாடாளுமன்றத்தில் தான் பேசிய உரை தொடர்பாகவும், இது தொடர்பாக பிபிசி தமிழோசைக்கு வழங்கிய செவ்வி குறித்தும் தான் விசாரிக்கப்பட்டதாக சிறிதரன் கூறியுள்ளார்.

பிபிசி செவ்வியில் தமிழ் பெண்கள் பாலியல் தொல்லைகள் காரணமாக இராணுவத்தில் இருந்து தப்பி ஓடியதாக தான் கூறியதாக தன்னை விசாரித்தவர்கள் தன்னைக் கேட்டதாகவும், ஆனால் தான் அப்படி அந்தச் செவ்வியில் இடம்பெறவில்லை என்று அவர்களுக்கு விளக்கியதாகவும் அவர் கூறினார்.

அத்துடன் இது ஒரு இனச் சுத்திகரிப்பு நடவடிக்கை என்று தான் கூறிய கருத்து குறித்தும் தன்னை அவர்கள் விசாரித்ததாகவும் சிறிதரன் கூறினார்.

தான் நாடாளுமன்றத்தில் பேசிய விடயங்கள் தொடர்பில் தன்னை குற்றப் புலனாய்வு பிரிவினர் இதுவரை இருதடவைகள் விசாரித்திருப்பதாக கூறிய சிறிதரன், அது நாடாளுமன்ற சிறப்புரிமையை மீறும் செயல் என்றும் கூறினார்.

http://www.tamilleader.com/tamilleadernews/7729-2012-11-27-16-02-16.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.