Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புலிகளின் சர்வதேச வலையமைப்பு மூன்றாக பிளவடைந்துள்ளதாம் - குதூகலிக்கிறது சிங்கள ஊடகம்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Run_run_escap_seithy150.jpg

தமிழீழ விடுதலைப் புலிகளின் சர்வதேச வலையமைப்பு மூன்றாக பிளவடைந்துள்ளதாக கொழும்பை தளமாகக்கொண்ட சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. இங்கிலாந்தின் லண்டன் நகரில் கூட்டாக மாவீரர் தின நிகழ்வுகளை நடாத்த திட்டமிடப்பட்டிருந்தது. எனினும், முரண்பாடுகள் காரணமாக லண்டனில் மூன்று இடங்களில் மாவீரர் தின நிகழ்வுகள் இன்று நடைபெறவுள்ளது. விடுதலைப் புலிகளின் சர்வதேச வலையமைப்பில் ஏற்பட்டுள்ள பிளவு நிலைமை உக்கிரமடைந்துள்ளது. இதன் காரணமாக மாவீரர் தின நிகழ்வுகள் கடந்த ஆண்டுகளை விடவும் தோல்வியடையும்.

ருத்ரகுமாரன் தரப்பு, நெடியவன் தரப்பு மற்றும் விநாயகம் தரப்பு என புலிகள் தனித்தனியாக மாவீரர் தின நிகழ்வுகளை நடாத்தத் திட்டமிட்டுள்ளனர். ஒன்றிணைந்து நிகழ்வுகளை நடாத்துமாறு அருட்தந்தை இமானுவல் விடுத்த கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்படவில்லை என புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

அண்மையில் பிரான்ஸில் வைத்து புலிகளின் தலைவர் பரிதி கொலை செய்யப்பட்டதனைத் தொடர்ந்து, புலிகள் வலையமைப்பின் பிளவு அதிகரித்துள்ளதாக குறித்த சிங்கள பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

http://www.seithy.co...&language=tamil

நீங்க பிளவுபடலையா பின்ன?

விடுத்த கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்படவில்லை என புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

[size=4]தாயகத்தில் மீண்டும் எழுந்துள்ள மாவீரர் உணர்வுகள் எம்மை மீண்டும் பலப்படுத்தி உள்ளன. [/size]

[size=4]புதிய உறுதியையும் ஒற்றுமையையும் தந்துள்ளன. [/size]

சரியாய் பயப்படுகிறார்கள். வரும் மார்சில் மகிந்தா பக்கம் பொறுப்பு கூறவேண்டும் என்று நேருக்கு நேராக கேட்கப்படலாம். அப்போது மகிந்தாவுக்கு தர்ம சங்கடமாகும். நீதி அரசரரை மாற்றி இலங்ககைக்குள் சடையலாம். ஆனல் அது இலங்கைக்கு வெளியில் விரைவில் போக போகின்றது

பிளவோ என்னவோ? சிங்கள அரச ஊடகமும் எங்கள் ப்ளொக்குகளும் ஆதாரம் இல்லாமல் பிளந்து கட்டுகின்றன.

சிங்கள ஊடகத்தின் நோக்கம் அது தான். ஆனால் எங்கள் தமிழர்களின் ஊடகங்கள் பல தமது பிஸ்னஸ் நன்றாக நடக்க வேண்டும் என்பதற்காக புனைகதைகளை எழுதி மறைமுகமாக சிங்களவர்களுக்கு உதவியாக உள்ளார்கள் என்பது கவலைக்குரிய விடயம். தமிழீழ அக்கறை உண்மையில் இருந்தால் பிரிந்த குழுக்களை ஒற்றுமையாக்க தமது எழுத்துகளை கட்டுரையாளர்கள் பயன்படுத்த வேண்டும்.

சிங்கள ஊடகத்தின் நோக்கம் அது தான். ஆனால் எங்கள் தமிழர்களின் ஊடகங்கள் பல தமது பிஸ்னஸ் நன்றாக நடக்க வேண்டும் என்பதற்காக புனைகதைகளை எழுதி மறைமுகமாக சிங்களவர்களுக்கு உதவியாக உள்ளார்கள் என்பது கவலைக்குரிய விடயம். தமிழீழ அக்கறை உண்மையில் இருந்தால் பிரிந்த குழுக்களை ஒற்றுமையாக்க தமது எழுத்துகளை கட்டுரையாளர்கள் பயன்படுத்த வேண்டும்.

பிளவு பிளவு என கனவு காணும் சிங்களப் பயங்கரவாதிகளின் கற்பனைக்கு உயிர் கொடுக்கும் வேலையை காலம் காலமாக அரைவேக்காட்டு தமிழ்ப் பத்திரிகையாளர்கள் செய்து வருகின்றனர்.

மூன்றல்ல பல பிரிவுகளாக பலமுனைத் தாக்குதல் நடக்கும்போது குதூகலம் காணாமல் போகும்.

சிங்கள ஊடகமோ, சிங்கள அரசாங்கமோ சொன்ன விடயம் உண்மைதான். அதை நாம் மறைத்துவைக்க வேண்டிய அவசியமில்லை. சில இடங்களில் ஒரேநாளில் இரு மாவீரர் நிகழ்வுகள் நடந்துள்ளன. இருபகுதியினரும் ஆளையாள் சிறிலங்கா அரசாங்கத்தின் சார்பாகச் செயற்படுகிறார்கள் எனக் குற்றஞ்சாட்டிக் கொள்கின்றனர். வெளிச்சம் எதுவோ அது அவர்களுக்குத்தான் தெரியும். தமிழருக்குத்தான் அது இருள்.

  • கருத்துக்கள உறவுகள்

இலண்டனில் மூன்று இடங்களில் மாவீரர் தினத்தை நடாத்தினார்கள் என்பது உண்மையே. எக்ஸெல் மண்டபத்தில் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவும், முருகதாசன் திடல் என்று அழைக்கப்பட்ட இடத்தில் தலைமைச் செயலகத்தினரின் சார்பானவர்களும், Mitcham பகுதியில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள்( PFLT) என்று இலண்டனில் கட்சி ஒன்றைப் பதிவு செய்தவர்களும் நடாத்தினார்கள்.

எக்ஸெல் மண்டபத்தில் சந்தித்த ஒருவர் தான் மூன்று இடங்களிற்கும் போனதாகவும், முருகதாசன் திடலில் 1000க்கும் குறைவானவர்களும், Mitcham பகுதியில் 100 க்கும் குறைவானவர்களும் வந்திருந்ததாகவும் சொன்னார். மாவீரர்களுக்குப் பேதம் இல்லையென்பதால் தான் எல்லா இடங்களிற்கும் போனதாகச் சொன்னாலும், அதை ஏற்றுக்கொள்ளமுடியவில்லை.

[size=5]மூன்று மாவீரர்தின அறிக்கைகள் மீதான பார்வை[/size]

[size=4]வழமைபோல இம்முறையும் மாவீரர்தினத்தன்று மூன்று அறிக்கைகள் வெளியாகியுள்ளன அவையாவன :[/size]

[size=2][size=4]1. தேசிய மாவீரர்நாள் அறிக்கை 2012 தமிழீழ விடுதலைப் புலிகள்

2. மாவீரர் நாள் அறிக்கை தலைமைச் செயலகம்

3. நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் மாவீரர் நாள் அறிக்கை[/size][/size]

[size=2][size=4]இந்த மூன்று அறிக்கைகளையும் தயாரித்தவர்களின் எண்ண ஓட்டங்களும் ஏறத்தாழ ஒன்றாகவே இருக்கின்றன, ஆனால் கொழுக்கட்டைக்கும், மோதகத்திற்கும் உள்ள வேறுபாடுபோல உருவ வேறுபாடுகள் மட்டும் தெரிகின்றன.[/size][/size]

[size=2][size=4]இந்த மூன்று அறிக்கைகளிலும் மூன்று முக்கிய பிரிவுகளாக நோக்கலாம் :[/size][/size]

[size=2][size=4]01. அறிக்கையின் முதற் பகுதி விடுதலைக்காக போராடிய மாவீரர்களின் புகழ்..[/size][/size]

[size=2][size=4]02. இரண்டாம் பகுதி சிங்கள இனவாதத்தின் ஒடுக்குமுறையால் தமிழ் மக்கள் படும் பாடு, இப்போது படும் அவஸ்தை, உரிமைகளைச் சிங்கள இனவாதம் வழங்காது என்ற விரக்தி, ஆகியன வரலாற்று ரீதியாக எடுத்துரைக்கப்படுகின்றன.[/size][/size]

[size=2][size=4]03. மூன்றாம் பகுதியில் உலக சமுதாயம் ஆற்றிவரும் பணிகளும், அவை வெற்றி பெறாவிட்டால் போராடுவதைத் தவிர வேறு வழியில்லை என்று சொல்லி, தமிழீழம் கிடைக்க தொடர்ந்தும் போராடுவோம் என்ற கோஷத்துடன் முடிவடைகிறது.[/size][/size]

[size=2][size=4]அறிக்கைகளை தயாரித்தவர்களை முதலில் பாராட்ட வேண்டும்…[/size][/size]

[size=2][size=4]ஆனால் மூன்று அறிக்கைகளும் போதியவை அல்ல.. இனி அடுத்த ஆண்டு அறிக்கை எழுதும்போது பின்வரும் விடயங்கள் கவனிக்கப்பட வேண்டும் :[/size][/size]

[size=2][size=4]01. மூன்று அறிக்கைகளுமே மக்களால் பற்றிக்கொள்ள முடியாத ஓரங்களற்ற, விரல்களில் அகப்படாத வழுகியோடும் பனிக்கட்டிகளாக இருக்கின்றன.[/size][/size]

[size=2][size=4]02. சிங்கள இனவாதத்தின் ஒடுக்குமுறையும், அது நகர்ந்த வரலாறும் தமிழ் மக்கள் அறியாததல்ல… திருத்த முடியாத ஒரு கூட்டத்தைப் பற்றியே இன்னும் எவ்வளவு காலம் அறிக்கை எழுதிச் சலிக்கப்போகிறோம்…?[/size][/size]

[size=2][size=4]03. அதை விடுத்து… நாங்கள் யார்..? நாம் இப்போது என்ன செய்கிறோம்..? கடந்த மூன்றரை ஆண்டுகளாக நாம் எடுத்த நகர்வு என்ன..? அடுத்ததாக நமது தெட்டத்தெளிவான நடவடிக்கை என்ன..? அதற்கான துல்லியமான வேலைத்திட்டம் என்ன..? அதற்கு மக்கள் என்ன செய்ய வேண்டும்..? இந்தக் கேள்விகளுக்கான பதிலைத் தேடினால் பிடிக்க முடியவில்லை.[/size][/size]

[size=2][size=4]04. வாய்ப்புக்களை காலமும், உலக சமுதாயமும் நகர்த்தும் அதற்காக அனைவரும் பாடுபட வேண்டும் என்று கூறி, அதேவேளை நகரும் பல்வேறு நகர்வுகளில் எது சரியான வழி என்ற விடயத்தில் தம்மை அடையாளம் காட்டாமல் மதில் மேற் பூனைகளாக குந்தியிருக்கின்றன.[/size][/size]

[size=2][size=4]05. முதலில் போரினால் பாதிக்கப்பட்டு நொந்து நூலாகியிருக்கும் மக்களுக்கு நாம் என்ன செய்யப்போகிறோம் என்ற பிரகாசமான நம்பிக்கை மொழி அவசியம்.[/size][/size]

[size=2][size=4]06. பாலஸ்தீனம் ஐ.நாவில் பார்வையாளர் அந்தஸ்த்து பெறுவதற்கான வாக்கெடுப்பு நாளை நடைபெறவுள்ளது. கொசோவா தனிநாட்டு அந்தஸ்த்து பெற்றுவிட்டது, இதில் பாலஸ்தீனத்தைப் போல ஐ.நாவில் கண்காணிப்பாளர் அந்தஸ்தையாவது முதலில் தமிழீழத்திற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை கூட நீங்கள் முன் வைக்கவில்லை.[/size][/size]

[size=2][size=4]07. சர்வதேச சமுதாயம் நம்மைப் பற்றிக் கொள்ள நாமும் கை நீட்ட வேண்டும், இல்லாவிட்டால் சர்வதேச சமுதாயம் ஒரு கையால் ஓசை எழுப்ப முடியாது.[/size][/size]

[size=2][size=4]08. தமிழீழத்தை அடைவதாயின் முதலில் அடுத்து எட்ட வேண்டிய மிகக் கிட்டிய குறுங்கால இலக்கு என்ன.. அதை அடைய செய்ய வேண்டிய பணிகள் என்ன.. இவைகளை கருத்தில் கொண்டு அடுத்த ஆண்டு மாவீரர் நாள் அறிக்கை தயாரிக்கப்பட வேண்டும்.[/size][/size]

[size=2][size=4]09. மாவீரன் சங்கர் தலைவரின் மடியில் மரணிக்கவில்லை தலைவர் அருகில் இருக்க கிட்டுவின் மடியில் வீரச்சாவடைந்தார் என்றும் சிலர் கூறுகிறார்கள் அது ஊர்ஜிதம் செய்யப்பட வேண்டும்.[/size][/size]

[size=2][size=4]மாவீரர் நாளில் அறிக்கைகள் வெளியிட்டு கருத்தியலை வழங்கியது பாராட்டுக்குரியது, ஆனால் அதில் ஒரு வளர்ச்சி அவசியம்…[/size][/size]

[size=2][size=4]மக்கள் விழிப்பாக இருக்கிறார்கள்..[/size][/size]

http://www.alaikal.com/news/?p=117994

சிங்கள ஊடகத்தின் நோக்கம் அது தான். ஆனால் எங்கள் தமிழர்களின் ஊடகங்கள் பல தமது பிஸ்னஸ் நன்றாக நடக்க வேண்டும் என்பதற்காக புனைகதைகளை எழுதி மறைமுகமாக சிங்களவர்களுக்கு உதவியாக உள்ளார்கள் என்பது கவலைக்குரிய விடயம். தமிழீழ அக்கறை உண்மையில் இருந்தால் பிரிந்த குழுக்களை ஒற்றுமையாக்க தமது எழுத்துகளை கட்டுரையாளர்கள் பயன்படுத்த வேண்டும்.

அதற்கு தமிழ் புலனாய்வு எழுத்தாளர்களும் இணையங்களும் விடாது தோழி
  • கருத்துக்கள உறவுகள்

நியாயமான கேள்விகள். பிரிந்த மாவீரர் தின நிகழ்வுகள் தமிழ் மக்களின் மீதான அதிகாரத்தை நிலைநிறுத்தவே நடாத்தப்பட்டன. எதிர்காலத்திலும் நடாத்தப்படலாம்.

எக்ஸெல் மண்டபத்தில் உரையாற்றிய ஒரு பிரமுகர் தமிழ் ஒருங்கிணைப்புக் குழுதான் தமிழ் மக்களின் உண்மையான பிரதிநிதி என்பதற்கும் குழப்பும் மற்ற அணிகளைக் கண்டு கொள்ளக்கூடாது என்பதற்கும் சில மணித்துளிகளைச் செலவழித்தார். மாவீரர் தினத்தை அரசியலாக்கியது வேதனையாக இருந்தது.

[size=2][size=4]03. அதை விடுத்து… நாங்கள் யார்..? நாம் இப்போது என்ன செய்கிறோம்..? கடந்த மூன்றரை ஆண்டுகளாக நாம் எடுத்த நகர்வு என்ன..? அடுத்ததாக நமது தெட்டத்தெளிவான நடவடிக்கை என்ன..? அதற்கான துல்லியமான வேலைத்திட்டம் என்ன..? அதற்கு மக்கள் என்ன செய்ய வேண்டும்..? இந்தக் கேள்விகளுக்கான பதிலைத் தேடினால் பிடிக்க முடியவில்லை.[/size][/size]
  • கருத்துக்கள உறவுகள்

இலண்டனில் மூன்று இடங்களில் மாவீரர் தினத்தை நடாத்தினார்கள் என்பது உண்மையே. எக்ஸெல் மண்டபத்தில் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவும், முருகதாசன் திடல் என்று அழைக்கப்பட்ட இடத்தில் தலைமைச் செயலகத்தினரின் சார்பானவர்களும், Mitcham பகுதியில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள்( PFLT) என்று இலண்டனில் கட்சி ஒன்றைப் பதிவு செய்தவர்களும் நடாத்தினார்கள்.

எக்ஸெல் மண்டபத்தில் சந்தித்த ஒருவர் தான் மூன்று இடங்களிற்கும் போனதாகவும், முருகதாசன் திடலில் 1000க்கும் குறைவானவர்களும், Mitcham பகுதியில் 100 க்கும் குறைவானவர்களும் வந்திருந்ததாகவும் சொன்னார். மாவீரர்களுக்குப் பேதம் இல்லையென்பதால் தான் எல்லா இடங்களிற்கும் போனதாகச் சொன்னாலும், அதை ஏற்றுக்கொள்ளமுடியவில்லை.

தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் என்றால் இலண்டனில் கருணா குழுவா?

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் என்றால் இலண்டனில் கருணா குழுவா?

விடுதலைப் புலிகள் மக்கள் முன்னணி என்று வந்திருக்கவேண்டும். புலிகளின் பெயரில் பலரும் இயக்கங்கள் தொடங்கியதால் வந்த குழப்பம்!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.