Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஒருகன்னத்தில் அடித்தால் மறுகன்னத்தை காட்டு

Featured Replies

அறை வாங்கினேன்

மறு கன்னத்திலும்

ஏசுவே

இனி என்ன செய்ய???????

(காசி ஆனந்தன் நறுக்குகள்)

விசுகு அண்ணா ஏசுநாதர் ""ஒருகன்னத்தில் அடித்தால் மறுகன்னத்தை காட்டு என்று கூறியது"" ......ஒருவர் அடிக்கும் போது மறு கன்னத்தை காட்டு என்று இயேசுவை சிலுவையில் அறைந்த மனித இனம் மேலோட்டமாய் புரிந்து கொண்டு பைபிளை கற்பிப்பதால் தான் இவ்வளவு பிரச்னையும் ..................உண்மையில் அவர் கூறிய கருத்தின் ஆழத்தை பார்த்தால் இன்னொருவன் உனக்கு தீங்கு செய்யும்போது அவனுக்கு நீ செய்தது தீங்கு என்று உணர்த்தி அவனை நல்வழியில் நடாத்தி அவனுடன் சமாதானம் செய் என்பதாகும் ..................அவனை பழி வாங்காதே என்னும் அர்த்தத்தையே கூறி நிற்கிறது ................இதையே நான் படித்தேன் .......ஆனால் இன்றைய உலகில் கிறிஸ்தவர்கள் அறவே மறந்து அநியாயம் செய்பவர்களை இருப்பதை பார்க்கும் போது .மனம் வெறுக்குது ..............

ஆனால் ஒருவன் உன்னை அடித்து உன் உடைமைகளை பறித்து ,உன்னை கொள்ள வரும்போது உன்னை நீ பாது காத்துக்கொள்ள நீ நடவடிக்கை எடுப்பது குற்றம் அல்ல ..................பைபிளில் எங்கும் இப்படி சொல்லப்படவில்லை

இதை

ஏன்

எழுதுகிறேன் என்றால் மதிப்புக்குரிய காசியானந்தன் அவர்களுடைய வரிகளை உங்கள் அடையாள வரிகளாய் கண்டேன் ...

அருமையான வரிகளுக்கு என்னாலான சிறிய விளக்கத்தை தருகிறேன் ..........இது உங்களுக்கல்ல ...............இதனால் பயன்படக்கூடிய அனைத்து உறவுகளுக்கும் .............நன்றி ......

அறை வாங்கினேன்

மறு கன்னத்திலும்

ஏசுவே

இனி என்ன செய்ய???????

சிலுவையை சுமந்து உனது முடிவை தேடு!

ஏசு ஆன்ம விடுலைக்கு வழிகாட்டி. யாரிடம் எதற்கு பாதை கேட்கவேண்டும் என்பதை தெரிய வேண்டும். கோவலன் தனது மனைவியின் நகைப் பொதியை விரித்துக்காட்டி விலை கூறியவர் தப்பான ஆள் என்பதை அவன் அறிந்திருக்கவில்லை.

தழிழில் ஒரு பொருள் முதுமொழி(சொலவடை) சொல்வார்கள்.

"கொல் குறளும், தச்சு நெடிசும்". அதாவது நீங்கள் அளவு எடுக்கும் போது என்ன வேலையை தொடங்குகிறீர்கள் என்பது முக்கியம்.

இரும்புத்துண்டு ஒன்றை வைத்து வேலையை ஆரம்பிக்கிறீர்களாக இருந்தால், துண்டை நறுக்கும் போது சற்று சிறிதாக இருக்கும் படி பார்த்துக்கொள்ளுங்கள். ஏன் எனில் காச்சி அடிக்கும் போது அது நீண்டுவிடும். ஆனால் அப்படி நீளாமல் இருந்துவிட்டால் தேவையான நேரம் தட்டி நீட்டிவிடலாம். ஆனால் மறுவளம் எளிதல்ல.

மரதுண்டை எடுத்து வேலையை ஆரம்பிக்கிறீர்களாக இருந்தால், சற்று நீளகாக வைத்துக்கொள்ளுங்கள். ஏனெனில் அறுக்கும் போது மரத்துண்டு சிறு கனத்தை இழந்துதான் அறுபட்டு முடியும். அப்படி இல்லாமல் அது இருந்துவிட்டால் வேலை செய்யும் போது உளியால் செத்துக்கி நீக்கிவிடமுடியும். மறுவளம் சாத்தியம் இல்லை.

பரமகம்சரிடம் முத்தியை பற்றியும் ராஜராஜ சோழனிடம் யுத்தத்தை பற்றியும் அறிவுரை கேட்பதுதான் சரி.

Edited by மல்லையூரான்

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி பதிவுக்கு தமிழ் சூரியன்

இதை நான் பதிவுக்கு கொண்டுவர முதல் பல தடவை யோசித்தேன்.

ஏனெனில் பல உறவுகள் இருக்கும் இடமிது. அத்துடன் எவ்வாறு என்றாலும் எங்கு என்றாலும் மத உணர்வுகளை மதிப்பவன் நான். அந்தவகையில் எவரையும் பாதித்துவிடக்கூடாது என்பதற்காக அதிலிருக்கும் ஏசுவே என்ற வரியை எடுத்துவிட்டு பதியலாமா என்றும் யோசித்தேன். ஆனால் அது இன்னொருவரது படைப்பு அதில் தலையிட எனக்கு உரிமையில்லை என்பதால் அவ்வாறே இங்கு பதிந்தேன்.

முன்னர் எழுதும்போது எனக்கு உடன்பாடான கருத்துக்கள் வந்தபோது வெறும் ஆமென் என்று போட்டு எனது நேரத்தை மீதப்படுத்திக்கொண்டேன். அதற்கு நிலாமதி ரீச்சர் அவர்கள் அது ஒரு மதம் சம்பந்தப்பட்ட சொல். அதை தவிர்க்க முடியுமாயின் தவிருங்கள் எனக்கேட்ட அன்றிலிருந்து அந்த சொல்லை நான் எக்காரணம் கொண்டும் பாவிப்பதில்லை. அந்தளவுக்கு மற்றவர்களின் மதம் சம்பந்தமாக மரியாதை அளிப்பவன் யான்.

எனக்கு இவ்வரிகள் பிடித்ததற்கு காரணம்

நான் இன்று இந்த நிலையிலேயே உள்ளேன். தமிழன் ஒவ்வொருவரது நிலையும் இதுவே.

பொறுமையின் எல்லையில் உள்ளோம் என்பதே இதன் அர்த்தம்.

எமது அடுத்த முடிவுக்கு எம்மை தள்ளுகிறீர்கள் என்பதே நிலை.

அந்த முடிவுக்கான சகல வேலைகளையும் நீங்கள் செய்து தள்ளியபோதும் நாம் மௌனமாக பொறுமை காத்து அமைதிக்காக வேண்டிநிற்கின்றோம். இன்னும் எவ்வளவு காலத்துக்கு இது என்பதே கேள்வி.........??

அதே நேரம் அடுத்த கட்டத்துக்கு போகமுன் தமிழனுக்கான தீர்வை வையுங்கள்.

இல்லாதுவிட்டால் அதற்கு நாம் பொறுப்பல்ல என்பதே சொல்லாத செய்தி.

தம்பி படத்தின் இறுதிக்காட்சியில்

எல்லாவகையிலும் அடக்கப்பட்டு அடிமைப்படுத்தப்பட்டு அல்லோகல்லப்பட்ட கதாநாயன்

வன்முறை வேண்டாம் என்பவரைப்பார்த்து

அதை உடைத்து வரக்கூடாது என்று கட்டளையிட்டவரிடம் கேட்கும் கேள்வி

இப்போ என்ன செய்ய..........?? என்பது.

அதுவும் இதுவும் ஒன்றே.

யாராவது தெரிந்தால் செல்லுங்கள்

நான் இனி என்ன செய்ய............???

Edited by விசுகு

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.