Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மஞ்சுள வெடிவர்த்தனாவின் இரண்டு கவிதைகள்........

Featured Replies

ஈழத் தமிழர்களின் அவலத்தை பற்றிய சிங்களக் கவிதைகள். தற்பொழுது ஐரோப்பிய நாடொன்றில் அகதியாக புலம்பெயர்ந்து வாழும் சிங்களக் கவிஞர் மஞ்சுள வெடிவர்த்தன எழுதியவை. "தமிழர்கள் ஒடுக்கப்படும் பொழுது சிங்கள மக்கள் எதிர்க்கவில்லை", என்று இன்னமும் நினைத்துக் கொண்டிருப்பவர்களுக்கு, இந்தக் கவிதைகளை சமர்ப்பிக்கிறேன்.

 

 

255077_530771686933440_834501389_n.jpg

 

துவாரகா

 

உந்துல, சந்திரமண்டலமெனத் தலை சாய்த்திருந்த சிறையில்
...

தண்ணீர் மென்மையானதா நொந்ததா மனவெளி
சுரங்கங்களில் கலகத்தின் அழிவுண்டான இரவொன்றில்
தமிழ்ச் சகோதரியைப் பற்றி எதற்காக கலவரம்?

கனவுகளின் முன்னணிக்கு உண்மையாகவே வெடி பட்ட நாளில்
கண்ணீர் வரிசையிட்டதோ வழி நீளவும்
பிக்குவின் காவியுடையைப் போல காத்திருந்த செங்கொடி
யாருடைய குருதியால் சிவந்ததென்பது மறந்து விட்டதா?

யுத்தத்தின் பெயரில் மனிதர்கள் மலைகள் நடுங்குகையில்
சத்தமின்றி பின்புறங்களில் களைப்பாறிய
துணியை அவிழ்த்துக் கொண்டு ஆயுதங்களை வெளிக்கொணர்ந்து
எய்த மின்னற்தீ இதயத்தின் ஆழத்திலிருந்து கேட்கிறதா?

சிங்கம் வாலின் நுனியை வளைத்துச் சுருட்டிய மாத்திரத்தில் தலை சாய்த்து
தமிழ் அரிச்சுவடிக்கு தீயிட்டவர் யார்?
இருளைக் கிழித்துக் கொண்டு சந்திரன் பிரகாசிக்கும் விதம் குறித்து
நிலாமுற்றங்களில் சண்டைகள் இல்லை சகோதரர்களே!

கார்த்திகைப் பூவொன்றின் அழகு கண்ணில் பட்டு
பறந்து வரத் தோன்றியதா குளவிகளே!
மறைத்து அடிக்கும் இலையொன்றின் தடம் தெரிந்து
சிரித்துப் பிறகு விம்மியழுவோம் நண்பர்களே!

(மஞ்சுள வெடிவர்த்தன, டிசம்பர் 3, 2009)
 
 
எனது நத்தார் (கிறிஸ்மஸ்) இரவு
 
வழி தவறிய கனவொன்று
உண்மையாகவே உத்தரவில்லாத கனவொன்று
ஓட்டையூடாகக் குடிசையினுள் சிரம் நுழைத்து
மேசை மீது தலை சாய்த்துறங்கும்
கவிதையொன்றைத் துயிலெழுப்பும்

துப்பாக்கிச் சன்னம் பட்ட வால் நட்சத்திரமொன்றெழும்பும்
இறுதி ஓலம்
மடு ஆலயத்தின் மேல் வானில்
ஒலியெழுப்பும்

நட்சத்திரக் குறிகளற்று
மூவேந்தர்களுக்கும்
பாதை தவறும்

ஏ ஒன்பது சாலை வழியே வன்னிக்கு
சமாதானத்தின் செய்தியைக் கொண்டு செல்லும்
ஒலிபெருக்கி கெரொல் வதந்திகள்
கீர்த்தனை ஷெல் வெடிகள்
"இலங்கை ராணி அன்னையே
முழுச் சிங்களத்தின் அன்னையே"

வத்திக்கானின்
நாணயங்களை கணக்கிட்ட பிதா அவர்கள்
வைக்கோல் படகொன்றில் பூக்கின்ற
காளான்களுக்கு பெயரிடுகிறார்

புறாக்கள்
நத்தார் இரவிலும்
வெண்கொடிகள் குறித்த தர்க்கங்களில்

சிவனொளிபாதமலை உச்சியில்
ஆதாமின் புனித அடிப்பாதம் வெடிப்பெடுத்து
நாற்றிசையிலும் பிரவாகிக்கிறது குருதி

உத்தரவு இல்லாத கனவை
படுக்கையில் சாயவைத்துக்
கவிதை விழித்திருக்கிறது.

(சிங்கள மூலம்: மஞ்சுள வெடிவர்த்தன)
(தமிழில்: பஹீமா ஜஹான்)

(நன்றி :உயிர்நிழல், ஏப்ரல்-ஜூன் 2010)
 
நன்றி முகநூல்

ஈழத் தமிழர்களின் அவலத்தை பற்றிய சிங்களக் கவிதைகள். தற்பொழுது ஐரோப்பிய நாடொன்றில் அகதியாக புலம்பெயர்ந்து வாழும் சிங்களக் கவிஞர் மஞ்சுள வெடிவர்த்தன எழுதியவை. "தமிழர்கள் ஒடுக்கப்படும் பொழுது சிங்கள மக்கள் எதிர்க்கவில்லை", என்று இன்னமும் நினைத்துக் கொண்டிருப்பவர்களுக்கு, இந்தக் கவிதைகளை சமர்ப்பிக்கிறேன்.

 

//"தமிழர்கள் ஒடுக்கப்படும் பொழுது சிங்கள மக்கள் எதிர்க்கவில்லை", என்று இன்னமும் நினைத்துக் கொண்டிருப்பவர்களுக்கு, இந்தக் கவிதைகளை சமர்ப்பிக்கிறேன்.// 

 

ஒருசில சிங்களவர்கள் சிங்கள மக்கள் ஆகிவிடமாட்டார்கள்

 

 

 

நிலம் அபகரிக்கப்படுகின்றது

எத்தனை சிங்கள மக்கள் எதிர்த்தனர்

சந்திக்கு சந்தி புத்த கோயில்கள்

எத்தனை சிங்கள மக்கள் எதிர்த்தனர்

 

அரசியல் தீர்வு மறுக்கின்றது

எத்தனை சிங்கள மக்கள் எதிர்த்தனர்

நல்லிணக்கம் நிராகரிக்கப்படுகின்றது

எத்தனை சிங்கள மக்கள் எதிர்த்தனர்

 

இனப்படுகொலை நடந்தது

எத்தனை சிங்கள மக்கள் எதிர்த்தனர்

போர்குற்ற விசாரணை கோரினோம்

எத்தனை சிங்கள மக்கள் எதிர்த்தனர்

 

குற்றவாளிகளே எமது அதிகாரிகளானார்

எத்தனை சிங்கள மக்கள் எதிர்த்தனர்

 

நன்றிகள் வெடிவர்த்தானா!

ஆனால், நீங்கள் சிங்கள மக்கள்இல்லை, தனிமரம். 

//"தமிழர்கள் ஒடுக்கப்படும் பொழுது சிங்கள மக்கள் எதிர்க்கவில்லை", என்று இன்னமும் நினைத்துக் கொண்டிருப்பவர்களுக்கு, இந்தக் கவிதைகளை சமர்ப்பிக்கிறேன்.// 

 

ஒருசில சிங்களவர்கள் சிங்கள மக்கள் ஆகிவிடமாட்டார்கள்

 

 

 

நன்றிகள் வெடிவர்த்தானா!

ஆனால், நீங்கள் சிங்கள மக்கள்இல்லை, தனிமரம். 

 

நன்றிகள்.இதுதான் உண்மை.கால்நூற்றாண்டுக்கு மேலாக மாரதா சிங்கள பெரும்பான்மை பேரின்வாதத்தின் புத்தியில் சம்மட்டியால் அடிக்கும் மஞ்சுளபோன்ற சிற்பிகள் வெகு சிலரே சிங்கள இனத்தில் இருப்பது தமிழினத்தின் துரதிஸ்டம்.கோமகன் இதன்மூலம் சிங்கள பேரினவாதத்தின் கொலைகளை சமப்படுத்த நினைக்கிரார் போல் உள்ளது.அதுதவறு.மஞ்சுளவெடிவர்த்தனை கைதொழும் அதே வேளை நாங்கள் ரத்வைத்தைகளாகவும் கோத்தபாயக்களாகவும் வாழும் சிங்கள பேரின பெரும்பான்மையை மறந்துவிடமுடியாது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.