Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இனப் பிரச்சினை தீர்வில் அரசை நம்பி பிரயோசனம் இல்லை - ரெலோ

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

telo.jpg

தமிழ்த் தாயகத்தில் இலங்கை இராணுவம் நிலை கொண்டிப்பது குறித்த விவாதங்கள் தமிழ் அரசியல் வட்டாரங்களில் சமீப காலங்களாக இடம் பெற்ற வருகின்றது. 
 
இது குறித்து தமிழ் ஈழ விடுதலை இயக்கம் (ரெலோ) தமது நிலைப்பாட்டை தெளிவுபடுத்த விரும்புகிறது. 
 
இலங்கை அரசினால் இதுவரை காலமும் மேற்கொள்ளப்பட்டு வந்த தமிழ் இனப் படுகொலையை முன்னின்று நடாத்திய இலங்கை இராணுவம் உட்பட முப்படைகள் தமிழ் மக்களால் ஆக்கிரமிப்பு படைகளாகவே அதாவது சிங்களப் படைகளாவே பார்க்கப்படுகின்றது. 
 
எமது தாயகத்தில் இருந்த ஆக்கிரமிப்பு படைகள் முற்றாக வெளியேற வேண்டும் என்பதே தமிழ்மக்களின் விருப்பமாகும். 
 
இலங்கை இனப்பிரச்சனைக்குத் தீர்வு காணப்பட்ட பின்னர் தமிழ் மக்களை உள்ளடக்கிய இலங்கை இராணுவம் தமிழ்த் தாயகத்தில் நிலை கொள்ள முடியும். 
 
தமிழ் இனப் படுகொலைகளுக்கும், போர்க் குற்றங்களுக்கும் சர்வதேச நீதியை வேண்டி நிற்கும் தமிழ் இனம் சுயநிர்ணய அடிப்படையிலான தீர்வையே நாடி நிற்கின்றது. 
 
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் தமிழ் இனத்தின் தேசிய விடுதலை இயக்கம் என்பதினை மிகப் பெரும்பாலன தமிழ் மக்கள் ஏற்றுக் கொண்டிருந்தார்கள். 
 
புலிகள் இயக்கத்தின் கட்டுப்பாட்டில் தமிழ்தாயகத்தில் நடைமுறை அரசாங்கம் (Defacto State) செயல்பாட்டில் இருப்பதையும் உலகம் அறிந்திருந்தது. 
 
பெரும் தவறுகளைச் செய்த பலஸ்தீன விடுதலை இயக்கம் நடாத்திய ஆயுதப் போராட்டத்தின் விளைவாக பலஸ்தீனம் பார்வையாளர் அந்தஸ்துள்ள நாடாக ஐக்கிய நாடுகள் சபையினால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இதைப் போலவே அயர்லாந்தில் ஐரிஸ்; குடியரசு இராணுவம் நடாத்திய ஆயுதப்போராட்டத்தின் விளைவாக பிரச்சினைக்குத் தீர்வு ஏற்பட்டள்ளது. 
 
ஆனால், தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்ட இயக்கமாகிய தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை உலகின் பலநாடுகள் சேர்ந்து அழித்தது. ஐக்கிய நாடுகள் சபையோ அல்லது எந்த ஒரு நாடாவது பகிரங்கமாக தமிழ் இனப் படுகொலைகளைத் தடுத்து நிறுத்த முன்வரவில்லை. 
 
தற்பொழுது இலங்கையின் வன்னிப் பகுதியில் மாபெரும் மனிதப் படுகொலைகளைத் ஐக்கிய நாடுகள் சபை தடுக்கத் தவறி விட்டதாக அதன் உள்ளக அறிக்கையே குற்றம் சாட்டும் அளவுக்கு நிலமை ஏற்பட்டுள்ளது. 
 
இலங்கை அரசு இனப்பிரச்சினையைத் தீர்க்கும் என்று நம்பியிராமல் சர்வதேச சமூகத்தின் உதவியுடன் தமிழ் மக்கள் தமது தாயகத்தில் தங்களைத் தாங்களே ஆளக் கூடிய தீர்வைப் பெற நாம் அனைவரும் ஒன்றினைந்து பணியாற்ற வேண்டும். இதன் மூலமே இலங்கைத் தீவில் நிலையயான சமாதான ஏற்படுத்தப்பட முடியும். 

 

http://www.eeladhesam.com/index.php?option=com_content&view=article&id=17941:2012-12-18-13-16-03&catid=1:aktuelle-nachrichten&Itemid=50

அப்பாடா இப்பவாச்சு தெளிஞ்சுதே...

டெலோ கூட்டமைப்பின் குழு விவாதத்திற்கு தனது தீர்வு பொத்திய சமர்ப்பிக்கும் என்று கூறியிருந்தது. சம்பந்தர், கூட்டமைப்பின் தலைவராக, பேச்சுவார்த்தையில் தாம் அரசிடம் கையளித்த ஆவணங்களுக்குத்தான் தாம் பதிலை எதிர்பார்ப்பதாகவும், அதில் தாம் தீர்வு பற்றி கூறியிருந்தவைக்கு பதில் அளித்தால் தான் தாம் அரசுக்கு தீர்வு சம்பந்தமாக ஒன்றை முன் வைக்கலாம் என்றும் கூறியிருந்தார். 

 

அரசு, ஐந்து வீடுகள் அல்ல ஐந்து ஈ அமரும் இடம் கூடத்தரத்தயாராக இல்லை என்பது தமிழ்மக்கள் எல்லோரும் அறிந்தது. சிவாஜிலிங்கம் சிந்தித்து செயல் படவேண்டும். அவசரபட்டு குட்டையை குழப்பக்கூடாது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.