Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழில்.பந்தல் சேதம்,கழிவு ஊற்றி நாசம், உண்ணாவிரதமும் ஆரம்பம்

Featured Replies

யாழில்.பந்தல் சேதம்,கழிவு ஊற்றி நாசம், உண்ணாவிரதமும் ஆரம்பம்

வெள்ளிக்கிழமை, 21 டிசெம்பர் 2012 08:29
protest(18).jpg(சுமித்தி)

கைதுகளுக்கும் காரணமின்றிய தடுத்து வைத்தலுக்கும் எதிராக தமிழ் அரசியல் கட்சிகள் ஒன்றிணைந்து ஏற்பாடு செய்துள்ள அடையாள உண்ணாவிரத போராட்டம் ஆரம்பமாகியுள்ளது.

யாழ். நகரில் அமைந்துள்ள தந்தை செல்வா சதுக்கத்தில் தற்காலிகமாக அமைக்கப்பட்டுள்ள மேடையிலேயே உண்ணாவிரத போராட்டம் நடைபெறுகின்றது.

உண்ணாவிரத போராட்டம் இன்று நடைபெறுவதை முன்னிட்டு அந்த இடத்தில் தற்காலிக மேடை அமைக்கப்பட்டிருந்தது. அந்த மேடையை இனந்தெரியாதோர் நேற்றிரவு சேதப்படுத்தியதுடன் பந்தலின் மேல் போடப்பட்டிருந்த தகரங்களை கழற்றி கழிவு கால்வாய்களில் வீசியெறிந்துள்ளனர்.

அத்துடன் அந்த இடத்தில் கழிவு தண்ணீரை ஊற்றி நாசப்படுத்தியும் உள்ளனர். அவ்விடத்திற்கு இன்றுக்காலை வருகைதந்த தமிழ் அரசியல் கட்சிகளின் பிரதிநிகள் கழிவுகளை அகற்றிவிட்டு பந்தலை மீண்டும் அமைத்து உண்ணாவிரத போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.

பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் அப்பாவி பொதுமக்களின் காரணமற்ற கைதுகளை  தடுத்து வைத்தலை கண்டித்தும் பல்கலைக்கழக மாணவர்களை விடுதலை செய்ய கோரியுமே இந்த உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படுகின்றது.

இன்று  வெள்ளிக்கிழமை காலை 7 மணிக்கு ஆரம்பமான உண்ணாவிரதம் மாலை 4.00 மணிவரை நடைபெறும் என  தமிழ் அரசியல் கட்சிகள் அறிவித்துள்ளன.

 

சிங்களவனோடை கொலை வெறி அடங்காது 

  • கருத்துக்கள உறவுகள்
திட்டமிட்ட இன அடக்குமுறைக்கும் தமிழரின் இருப்பை கேள்விக்கு உள்ளாக்கும் செயற்பாடுகளுக்கும் எதிர்ப்பு
21 டிசம்பர் 2012
 
கைதுகளுக்கும் காரணமின்றிய தடுத்து வைத்தலுக்கும் எதிராக தமிழ் அரசியல் கட்சிகள் ஒன்றிணைந்து ஏற்பாடு செய்துள்ள அடையாள உண்ணாவிரத போராட்டம் ஆரம்பமாகியுள்ளது.
 
யாழ். நகரில் அமைந்துள்ள தந்தை செல்வா சதுக்கத்தில் தற்காலிகமாக அமைக்கப்பட்டுள்ள மேடையிலேயே உண்ணாவிரத போராட்டம் நடைபெறுகின்றது.
 
உண்ணாவிரத போராட்டம் இன்று நடைபெறுவதை முன்னிட்டு அந்த இடத்தில் தற்காலிக மேடை அமைக்கப்பட்டிருந்தது. அந்த மேடையை இனந்தெரியாதோர் நேற்றிரவு சேதப்படுத்தியதுடன் பந்தலின் மேல் போடப்பட்டிருந்த தகரங்களை கழற்றி கழிவு கால்வாய்களில் வீசியெறிந்துள்ளனர்.
 
அத்துடன் அந்த இடத்தில் கழிவு தண்ணீரை ஊற்றி நாசப்படுத்தியும் உள்ளனர். அவ்விடத்திற்கு இன்றுக்காலை வருகைதந்த தமிழ் அரசியல் கட்சிகளின் பிரதிநிகள் கழிவுகளை அகற்றிவிட்டு  உண்ணாவிரத போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.
 
பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் அப்பாவி பொதுமக்களின் காரணமற்ற கைதுகளை  தடுத்து வைத்தலை கண்டித்தும் பல்கலைக்கழக மாணவர்களை விடுதலை செய்ய கோரியுமே இந்த உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படுகின்றது.
 
இவ் உண்ணவிரதத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன், தமிழரசு கட்சியின் பொதுச் செயலாளர் மாவை சேனாதிராஜா, தமிழ் தேசய கூட்டமைப்பின்  நாடாளுமன்ற உறுப்பினர் அப்பாத்துரை விநாயகமூர்த்தி, தமிழரசுக் கட்சியின் துணைச் செயலாளர் சீ.வீ.கே. சிவஞானம் உட்பட தமிழ் தேசிய கூட்டமைப்பின் உள்ளூராட்சி உறுப்பினர்கள் மற்றும் பிரதேச சபை தவிசாளர்கள், மாநகர சபை உறுப்பினர்கள் எனப்பலர் கலந்து கொண்டனர்.
 
இன்று  வெள்ளிக்கிழமை காலை 7 மணிக்கு ஆரம்பமான உண்ணாவிரதம் மாலை 4.00 மணிவரை நடைபெறும் என  தமிழ் அரசியல் கட்சிகள் அறிவித்துள்ளன.
 
திட்டமிட்ட இன அடக்குமுறைக்கும் தமிழரின் இருப்பை கேள்விக்கு உள்ளாக்கும்  செயற்பாடுகளுக்கும் எதிர்ப்பு
20-12-2012 15:38
 
தமிழர் தாயகப்பிரதேசங்களில் அரசாங்கம் மேற்கொண்டுவரும் திட்டமிட்ட இன அடக்கு முறைகளுக்கும், தமிழரின் இருப்பை கேள்விக்குள்ளாக்கும் செயற்பாடுகளுக்கும் எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் நாளை தந்தை செல்வா சதுக்கத்தில் நடைபெறவுள்ள உண்ணாவிரதப் போராட்டத்தில் அனைவரையும் கலந்துகொள்ளுமாறு தமிழ்தேசிய கூட்டமைப்பு அழைப்பு விடுத்துள்ளது.
 
இவ்விடயம் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் மாவைசேனாதிராசா கருத்துத் தெரிவிக்கையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஏற்பாட்டில் யாழ் துரையப்பா விளையாட்டரங்கை அண்மித்துள்ள தந்நை செல்வா நினைவு சதுக்கத்தில்; நாளை காலை 7மணிமுதல்  மாலை 4.30 மணிவரை உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறவுள்ளது. இதன்போது பயங்கரவாத குற்றத்தடுப்பு பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டு தடுத்து வைக்கப் பட்டிருக்கும், யாழ்.பல்கலைக்கழக மாணவர்களினதும், அப்பாவி பொதுமக்களினதும் விடுதலை தொடர்பில் நடவடிக்கை எடுப்பதற்கு சர்வதேசத்தையும், இலங்கை அரசாங்கத்தையும் வலியுறுத்தவுள்ளோம் என்றார். அவர் மேலும் தமிழர் தாயகத்தில் இராணுவப்பிரசன்னம் நீக்கப்பட வேண்டுமென்றும் இனப்பிரச்சனைக்கு கௌரவமான தீர்வு காணப்பட வேண்டுமென்ற தமிழ் மக்களின் அபிலாசையினையும் சர்வதேசத்தின் கவனத்தையீர்க்கும் வகையில் உறுதிபடத் தெரிவிக்கவிருக்கின்றோம்.
 
இதேவேளை இந்த உண்ணாவிரதப் போராட்டத்திற்கு பல்வேறு தரப்பினரும் தமது ஆதரவினைத் தெரிவித்திருக்கின்றனர். இதேபோல் போராட்டத்திற்கு பல்வேறு கட்சிகளைச் சார்ந்தவர்கள் மற்றும் பொது அமைப்புக்கள் உட்பட பலதரப்பினர்கள் ஆதரவு தெரிவித்துள்ளதுடன் இதில் கலந்து கொள்ளவுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். 

உண்ணாவிரத போராட்டம் இன்று நடைபெறுவதை முன்னிட்டு அந்த இடத்தில் தற்காலிக மேடை அமைக்கப்பட்டிருந்தது. அந்த மேடையை இனந்தெரியாதோர் நேற்றிரவு சேதப்படுத்தியதுடன் பந்தலின் மேல் போடப்பட்டிருந்த தகரங்களை கழற்றி கழிவு கால்வாய்களில் வீசியெறிந்துள்ளனர்.

 புலிகளை அழித்தால் ஜனநாயகம் செழிக்கும் என்றார்களே  :(

DSC00975.JPG

DSC00972.JPG

IMG_0216.JPG

  • தொடங்கியவர்

சர்வதேசம், சீனாவுக்கு பயந்து தமிழரை கேடயமாகப்பாவித்தது. இதனால் காபற்றப்பட்ட சர்வாதிகாரி  ராசபக்சா சீனாவுடன் தன்னும் நண்பராக இருப்பாரா என்பது சீனாவுக்கும் தெரியாது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.