Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

2014இல் ஐ.தே.க ஆட்சியமைக்கும்: ரணில்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ranil(25).jpg

எதிர்வரும் 2014ஆம் ஆண்டில் தேர்தலொன்றை நடத்துவதற்கான சூழல் நிலவுகின்றது. அந்த தேர்தலின் போது, நாட்டில் மீண்டும் ஐக்கிய தேசிய கட்சியின் அரசாங்கமொன்று உருவாகும் என்று அக்கட்சியின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். 

இத்தாலிக்கான விஜயத்தை மேற்கொண்டுள்ள ரணில் விக்கிரமசிங்க, இன்று ரோம் நகருக்கு சென்றிருந்தார். அங்கு ஐ.தே.க ஆதரவாளர்களைச் சந்தித்து உரையாடும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். 

 ஐக்கிய தேசிய கட்சி இந்த ஆண்டில் பல்வேறு முன்னேற்ற வேலைத்திட்டங்களை முன்னெடுக்கவுள்ளது. அத்துடன், வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு, நீதிமன்றத்தின் சுயாதீனம் மற்றும் ஜனநாயகத்தை பாதுகாத்தல் தொடர்பில் ஆர்ப்பாட்டங்களை ஐ.தே.ன நடத்தும் என்றும் என்றும் ரணில் விக்கிரமசிங்க கூறியுள்ளார்.

 

http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/56132-2014----.html

  • கருத்துக்கள உறவுகள்

இவருக்கு அறளை பேந்திட்டுது

இனி  ஆட்சியை ஐதேகட்சி  அதிலும் இவர் தலைமையில்  நினைத்த பார்க்கவே முடியாது

நிற்கும் இடம் பிழை. மாபியாக்கள் எதை எதையோ எல்லாம் இப்போ சந்தை படுத்துகிறார்கள்.

 

சுகநலமாய் ஊர் போய்ச்சேர்ந்திட்டால் காணும் என்று இருக்கு. ஜனாதிபதி பதவி பற்றி பிறகு பேசலாம். <_<

Edited by மல்லையூரான்

அடுத்த ஆண்டு அறிக்கையில் 2019 இல் ஐ.தே.க ஆட்சியமைக்கும் என்று சொல்லுவார் ரணில் இது ஒரு காமடி பீஸ் இந்தாளை யாரும் மதிக்கிறது இல்லை

  • கருத்துக்கள உறவுகள்

சிங்களத்தின் தற்போதைய மகிந்த அரசாங்கம், ஆட்டோக்காரர், புலனாய்வுத்துறை. இராணுவம் போன்றவற்றை நம்பியே இருக்கின்றது. சிங்களவன்கள் சோத்துக்கு வழி இல்லாதுதான் இப்போதும் இருக்கிறார்கள். தமிழரது மண்ணை ஆக்கிரமித்தபின்பு, தமிழர் சொத்துக்களைச் சூறையாடிட பின்பு, மிகிந்த, கொத்தா தலைமையிலான குழு, தெற்கில் வாழும் சிங்களவர்க்கு அங்காங்கே இருக்கும் புத்தவிகாரைகள் மூலம் வடக்குக்கான சுற்றுலாவுக்காகத், தமிழர்களிடமிருந்து அபகரித்த செல்வங்களில் சில பகுதியை பங்கிட்டுக் கொடுத்து அவர்களை வடக்குக்கான சுற்றிலாவுக்கு அனுப்பினாற்போல் அவர்கள் வாழ்வில் தேனும் பாலும் வழிந்தோடுகின்றது என யாராவது கூறினால் அது தவறு. தவிர மேற்குலகமமும் இந்துசமுத்திரப்பிராந்தியத்தை தங்களது வல்லாதிக்கத்துக்குள்ளும் வைத்திருக்க முனையும் உலகின் வல்லரசுகள் சிலவற்றிற்கும் மகிந்த அரசாங்கமானது இல்லாதொழிய வேண்டுமென்பதே விருப்பம்.தவிர புலம்பெயர் தமிழர் உட்பட்ட, தமிழின அழிப்பிற்கான குர்றவியல் விசாரணை வேண்டிநிற்கும் அனைவரதும் செயலாற்றலை ஒருசில காலத்திற்கேனும் நீர்த்துப்போகச் செய்யவேண்டுமாகவிருந்தால் இலங்கைத்தீவில் மகிந்தவினது இருப்பை இல்லாதொழிக்கவேண்டுமென்பதும், அதன்மூலம் தமிழர் இனவழிப்பில் தங்களது கரங்களும் ஈடுபட்டதை எப்படியாவது மரைத்து விடலாம் அன்றேல் விசாரணையிலிருந்து தப்பித்துவிடலாம் எனும் நிலைப்பாட்டின் அறிகுறியே ரணிலினது இன்றைய கருத்தும், இந்திய எடுபிடி சுமந்திரனது அண்மைய பாராளுமன்றக் கலைப்பு பற்றிய  கருத்துமாகும். ஆக மகிந்தவுக்கு ஆப்பு  ஆயத்தமாகின்றது. இதன்மூலம் தமிழா ஏமாந்து விடாதே.

D28401754000.jpg

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.