Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ராஜீவ்காந்தி கொலைக் கைதிகள் முருகன், நளினி உண்ணாவிரதம்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ராஜீவ்காந்தி கொலைக் கைதிகள்

முருகன், நளினி உண்ணாவிரதம்!

மகளுக்கு "விஸா' வழங்கக் கோரி

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் குற்றவாளிகளான முருகன் மற்றும் அவரது மனைவி நளினி ஆகியோர் தமது மகள் தமிழ்நாட்டில் தங்கியிருந்து படிப்பதற்கு "விஸா' வழங்கப்பட வேண்டும் என்று கோரி கடந்த இரு தினங்களாக உண்ணாவிரதப் போராட்டத்தில் குதித்திருக்கின்றனர்.

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் முருகன், நளினி, பேரறிவாளன், சாந்தன் ஆகியோ ருக்கு பூந்தமல்லி நீதிமன்றம் 1998 ஆம் ஆண்டு தூக்குத் தண்டனை விதித்தது.

இதனை ஆயுள் தண்டனையாகக் குறைக்கக் கோரி அவர்கள் ஜனாதிபதிக்குக் கருணை மனு அனுப்பினார்கள். அந்த நேரத்தில் நளினி கர்ப்பமாக இருந்ததால் அவருக்கு மட்டும் ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்டது.

ஆயுள் தண்டனைக் கைதியான நளினி வேலூர் பெண்கள் சிறையிலும், முருகன் உட்பட மற்றவர்கள் வேலூர் ஆண்கள் சிறையிலும் உள்ளனர்.

இதற்கிடையே சிறையில் இருக்கும் முருகன், நளினி ஆகியோர் நேற்றுமுன்தினம் திடீ ரென உண்ணாவிரதம் இருந்தனர். அவர்களது உண்ணாவிரதப் போராட்டம் இரண்டாவது நாளாக நேற்றும் தொடர்ந்தது.

முருகன், நளினி தம்பதியினரின் மகள் அரித்ரா (வயது15) இலங்கையில் உள்ளார். அவரை தமிழ்நாட்டில் தங்கிப் படிக்க விஸா வழங்க வேண்டும் என்று கோரியே அவர்கள் இந்த உண்ணாவிரதத்தில் ஈடுபட்டனர்.

கடந்த ஆண்டு டிசம்பர் மாதமும் முருகன் 8 நாள்கள் உண்ணாவிரதம் இருந்தார் என்பது குறிப்பிடத் தக்கது

-உதயன்

முருகன், நளினி தம்பதியினரின் மகள் அரித்ரா (வயது15) இலங்கையில் உள்ளார். அவரை தமிழ்நாட்டில் தங்கிப் படிக்க விஸா வழங்க வேண்டும் என்று கோரியே அவர்கள் இந்த உண்ணாவிரதத்தில் ஈடுபட்டனர்.

இது மிகவும் நியாயமான ஒரு கோரிக்கைக்காக இருக்கும் உண்ணாவிரதம்.... இந்திய அரசு இவர்கள் கோரிக்கையை ஏற்று இவர்களது உண்ணாநோன்பை விரைவில் முடிக்க வேண்டும் என விரும்புகிறேன்.....

நன்றி Luckyluke

பார்ப்போம் விரைவில் நல்ல தீர்வு கிடைக்கவேண்டும்.

.

இது மிகவும் நியாயமான ஒரு கோரிக்கைக்காக இருக்கும் உண்ணாவிரதம்.... இந்திய அரசு இவர்கள் கோரிக்கையை ஏற்று இவர்களது உண்ணாநோன்பை விரைவில் முடிக்க வேண்டும் என விரும்புகிறேன்.....

என்ர ராசா நன்றியப்பு உங்கடவிருப்பத்துக்கு

:shock: :shock: :shock: :shock: :shock: :shock:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நன்றிகள் லக்கிலுக்கு

வேலூர் சிறையில் முருகன், நளினி மூன்றாவது நாளாக உண்ணாநிலை

ராஜீவ் கொலை வழக்கில் வேலூர் சிறையில் உள்ள முருகன் மற்றும் அவரது துணைவியார் நளினி ஆகியோர் கடந்த மூன்று நாட்களாக உண்ணாநிலைப் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

முருகன் - நளினி ஆகியோரின் மகள் அரித்ரா (வயது 15) இலங்கையில் வசித்து வருகிறார்.

தங்கள் மகள் அரித்ராஇ இந்தியாவுக்கு வர விசா வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி முருகனும், அவருடைய துணைவியார் நளினியும் கடந்த 14 ஆம் நாள் முதல் காலவரையற்ற உண்ணாநிலைப் போராட்டம் நடத்துகின்றனர்.

மூன்றாவது நாளாக அவர்கள் தொடர்ந்து உண்ணாநிலைப் போராட்டம் நடத்தினர்.

முருகனும்இ நளினியும் சிறையில் தண்ணீரை மட்டுமே குடிப்பதாக சிறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

-புதினம்-

மேற்கோள்:

இது மிகவும் நியாயமான ஒரு கோரிக்கைக்காக இருக்கும் உண்ணாவிரதம்.... இந்திய அரசு இவர்கள் கோரிக்கையை ஏற்று இவர்களது உண்ணாநோன்பை விரைவில் முடிக்க வேண்டும் என விரும்புகிறேன்.....

அடங்க் கொக்காமக்கா - லக்கி என்னாச்சு? :shock:

இப்பிடியும் இடைக்கிடை எடுத்துவிட்டாதான் - களத்தில இருந்து -

ப்ளொக் பண்ணமாட்டங்கனு - வேதாந்தமோ?:roll:

எது எப்பிடியோ - நல்லமனசோட சொல்லி இருந்தா- நல்லதொரு கருத்துதான்! 8)

மேற்கோள்:

இது மிகவும் நியாயமான ஒரு கோரிக்கைக்காக இருக்கும் உண்ணாவிரதம்.... இந்திய அரசு இவர்கள் கோரிக்கையை ஏற்று இவர்களது உண்ணாநோன்பை விரைவில் முடிக்க வேண்டும் என விரும்புகிறேன்.....

அடங்க் கொக்காமக்கா - லக்கி என்னாச்சு? :shock:

இப்பிடியும் இடைக்கிடை எடுத்துவிட்டாதான் - களத்தில இருந்து -

ப்ளொக் பண்ணமாட்டங்கனு - வேதாந்தமோ?:roll:

எது எப்பிடியோ - நல்லமனசோட சொல்லி இருந்தா- நல்லதொரு கருத்துதான்! 8)

ஓய் வர்ணா ம...பாாாாா யோவ் தொட்டிலையும் ஆட்டி பிள்ளையையும் நுள்ளுறது தெரியாதா உமக்கு

ஓய் நீர் என்ன அரச பரம்பரையா ?? :shock: :shock:

உது கூடத்தெரியாமல் :evil: :evil:

மேற்கோள்:

ஓய் வர்ணா ம...பாாாாா யோவ் தொட்டிலையும் ஆட்டி பிள்ளையையும் நுள்ளுறது தெரியாதா உமக்கு

ஓய் நீர் என்ன அரச பரம்பரையா ??

உது கூடத்தெரியாமல்

தெரியுது சின்னப்பு - சும்மா அதிர்ச்சி மாதிரி காட்டி கொண்டு உண்மையை - புதிய கள உறவுகளுக்கு விளங்க படுத்தினனாம்! :roll: :P 8)

உண்ணாநோன்பு இருந்த 5வது நாளில் நளினி மயங்கி விழுந்தார்.....

உண்ணாநோன்பு இருந்த 5வது நாளில் நளினி மயங்கி விழுந்தார்.....

:evil: :evil: :evil:

ராசாமார் உலகத்திலேயே மனிதன் செய்யிற அதி கூடின பாவம் தாயை விட்டு பிள்ளையை பிரிப்பது சரி பிரித்தாலும் அந்தத்தாயின் சிறிய சிறிய கோரிக்கைகளை நிறைவேற்றுவது தான் மனித இயல்பு ஏன் எண்டா தாயில்லாமல் யாரும் இல்லை ம் 5ம் வகுப்பு படித்தவனுக்கே ஏன் 8ம் வகுப்பு (சுகுமார் போன்றவர்களுக்கு :? ) படித்தவனுக்கே விளங்கிது

மேல் படிப்பு படிச்ச அதிகாரிகளுக்கு :?: :?: :?: :?: :?: :?: :?: :?:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

முருகன் நளினி ஆகியோரின் உடல்நிலை மோசமாகின்றது

இந்தியாவில் தங்கிக் கல்வி பயில்வதற்கு தமது மகளுக்கு அனுமதி வழங்கப்பட வேண்டுமெனக் கோரி உண்ணாவிரதமிருந்து வரும் ராஜீவ்காந்தி கொலைக் குற்றவாளிகளான முருகன் நளினி தம்பதிகளின் உடல்நிலை மோசமடைந்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. உடல்நலம் பாதிக்கப்பட்டு நேற்று முன்தினம் நளினி மயங்கி வீழ்ந்தமை வேலூர் சிறைச் சாலையில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் முருகன் நளினி தம்பதி கள் கைதாகி, வேலூர் சிறையில் தண்டனை அனுபவித்து வருகின்றனர். இவர்களின் மகள் அரித்திரா, இலங்கையிலிருந்து தமிழகம் வந்து தங்கிப் படிப்பதற்காக மாணவர் "விஸா'வுக்கு விண்ணப்பித்திருந்தார்.

ஆனால், விஸா கொடுக்க அரசு மறுத்து வருகிறது. இதைத் தொடர்ந்து தங்கள் மகளுக்கு "விஸா' வழங்கக் கோரி கடந்த நான்கு நாட்களாக வேலூர் சிறையில் முருகன் நளினி தம் பதிகள் உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர். நான்காவது நாளாக நேற்று முன்தினம் உண்ணாவிரதத்தைத் தொடர்ந்து நளினி மயக்கம் போட்டு வீழ்ந்தார். இதனால், சிறையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து சிறை மருத்துவர்கள் நளினிக்கு சிகிச்சை அளித்தனர். உண்ணாவிரதத்தைக் கைவிடக் கோரி இருவரிடமும் சிறைத்துறை அதிகாரிகள் பேச்சு நடத்தி வருகின்றனர் எனத் தெரிவிக்கப்பட்டது.

-உதயன்

விஸா குடுக்க மறுப்பதற்கான காரணங்கள்???

  • கருத்துக்கள உறவுகள்

இந்திய மற்றும் இலங்கை பிரதம மந்திரிகளை கேட்டு சொல்றன் பாப்ஸ்....

விஸா குடுக்க மறுப்பதற்கான காரணங்கள்???

வீம்பு.

நேற்று நளினி, முருகன் இருவரும் கோரிக்கை நிறைவேறாத நிலையிலேயே உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்டிருக்கிறார்கள்....

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அந்த சிறு பெண்ணும் எல்லா ஈழத் தமிழர் போல் "பயங்கரவாதி" என்று இந்திய அரசாங்க அதிகாரிகள் முத்திரை குத்திவிட்டார்களே!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மகளின் விசா விண்ணப்பம் பரிசீலனை:

நளினி, முருகன் உண்ணாவிரதம் முடிவு

தங்களுடைய மகளுக்கு இந்தியாவில் கல்விகற்க விசா வழங்கக்கோரி வேலூர் சிறையில் உண்ணாவிரதம் மேற்கொண்ட ராஜீவ் காந்தி கொலை குற்றவாளிகளான நளினியும் அவரது கணவர் முருகனும் தங்களுடைய போராட்டத்தைக் கைவிட்டனர்.

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்டு வேலூர் சிறையில் நளினியும் அவரது கணவர் முருகனும் தண்டனை அனுபவித்து வருகிறார்கள். நளினியின் மரண தண்டனை ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில் அவரது கணவர் முருகன் ஜனாதிபதிக்கு அனுப்பப்பட்ட தனது கருணை மனு மீதான முடிவை எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்.

இந்த நிலையில், தற்போது இலங்கையில் பத்தாம் வகுப்பைமுடித்துள்ள அவர்களின் மகள் அரித்ரா தமிழ் நாட்டில் மேல் படிப்பை தொடர விசா வழங்கக் கோரி 6 தினங்களாக வேலூர் சிறையில் நளினியும், முருகனும் உண்ணா விரதம் மேற்கொண்டனர்.

அரித்ராவுக்கு விசா வழங்குவது குறித்து சாதகமான முறையில் பரிசீலிக்கப்பட்டு வருவதாகக் கொழும்பிலுள்ள இந்தியத் தூதரகத்திடம் இருந்து தகவல் வந்ததையடுத்து நளினியும், முருகனும் தங்களுடைய உண்ணாவிரதத்தை நேற்றுமுன்தினம் இரவு கைவிட்டனர் என்று அவர்களின் சட்டத்தரணி வி.இளங்கோவன் தெரிவித்தார்.

அரித்ரா வேலூர் சிறையில் பிறந்தார். இலங்கையில் வசிக்கும் முருகனின் குடும்பத்தினரால் அவர் வளர்க்கப்பட்டு வருகிறார். இப்போது 15 வயதான அவர் கடந்த ஜனவரியில் தமிழகத்திற்கு வந்து வேலூர் சிறையில் உள்ள தனது பெற்றோரை சந்தித்தார்.

-உதயன்

  • 2 weeks later...
  • 2 weeks later...

ராஜிவ் கொலை குற்றவாளிகள் நளினி, முருகன் உண்ணாவிரதத்தை தொடர்ந்து மருத்துவமனையில் அனுமதி

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழககில் தண்டனைபெற்ற நளினி மற்றும் முருகன், இலங்கையிலுள்ள தங்கள் மகள் அரித்திராவிற்கு விசா கோரி, தொடர்ந்து 17 நாட்கள் உண்ணாவிரதம் இருந்ததன் பின்னணியில் நேற்றிரவு அவர்கள் வேலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிககப்பட்டனர். அவர்கள் தங்கள் உண்ணாவிரதத்தை இன்னமும் தொடர்வதாகவும், ஆனால் அவர்களுககு களூகோஸ் ஏற்றப்படுவதாகவும், அவர்கள் உடல்நிலை சீராக இருப்பதாகவும் தகவலறிந்த வட்டாரங்கள் கூறுகின்றன.

இருவருககும் தூககுதண்டனை விதிககப்பட்டாலும், நளினியின் தண்டனை ஆயுட்கால சிறைவாசமாகக் குறைககப்பட்டது. முருகனின் கருணைமனு இன்னமும் குடியரசுத்தலைவரின் பரிசீலனையில் இருப்பதாகத்தெரிகிறது.

நளினிககும் முருகனுககும் 1992ம் ஆண்டில் சிறையில் பிறந்த அரித்திரா இலங்கையில் முருகனின் குடும்பத்தினரால் வளர்ககப்பட்டுவருகிறார்.

இதனிடையே கடந்த ஆண்டு முதல் முறையாக அரித்திரா தனது பெற்றோரை வேலூர் சிறையில் சந்தித்தார். ஆனால் உடனேயே இலங்கை திரும்பிவிட்டார். அப்போதும் நளினி, முருகன் சில நாட்கள் உண்ணாவிரதம் இருந்தே தங்கள் மகளுககு சுற்றுலா விசாவை பெற்றுத்தர முடிந்தது என்பது குறிப்பிடத்தககது.

இந்நிலையில் தனது படிப்பை அரித்திரா இந்தியாவில் தொடர்வதற்கு அனுமதிககப்படவேண்டும் என்றும், எனவே அவர் இங்கே தங்கி படிப்பதற்காக கல்வி விசா வழங்கப்படவேண்டும் என்றும் கோரி கடந்த மாதம் சிலநாட்கள் நளினி, மற்றும் முருகன் சில நாட்கள் உண்ணாவிரதம் இருந்தனர். ஏதோ சில வாககுறுதிகளின் பேரின் அவர் தங்கள் போராட்டத்தை கைவிட்டனர் என்று தெரிகிறது. ஆனால் விசா மனுகுறித்து மத்திய அரசிடமிருந்து எவ்வித பதிலும் இல்லாத நிலையில் அவ்விருவரும் மீண்டும் தங்கள் உண்ணாவிரத்தை துவககினர். இம்முறைவிசா வழங்கப்படாமல் தங்கள் போராட்டத்தை கைவிடப்போவதில்லை என்பதில் உறுதியாக இருப்பதாக செய்திகள் கூறுகின்றன. மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அரித்திராவிற்கு விசா வழங்கப்படவேண்டுமென்று வற்புறுத்தி பிரதமர் மன்மோகன்சிங்கிற்கு கடிதம் எழுதியிருககிறார். அவர்கள் உடல்நிலை குறித்து அதிகாரபூர்வமாக எதுவும் அறிவிககப்படவில்லை. வேலூர்மருத்துவமனையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.

BBC தமிழ்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.