Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

"எனது சொந்த வீட்டுக்குச் செல்ல நான் விரும்புகிறேன். ஆனால் முடியவில்லை"

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

A%20war-damaged%20home.jpg

சிறிலங்காவின் வடக்குப் பகுதியைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் தமது சொந்த வீடுகளுக்கும் நிலங்களுக்கும் திரும்பிச் செல்ல முடியாதிருப்பதாகவும், இந்த நிலங்களை சிறிலங்கா இராணுவம் ஆக்கிரமித்துள்ளதாக பிரதேசவாசிகளும் செயற்பாட்டாளர்களும் தெரிவித்துள்ளனர். ஆனால் இந்தக் குற்றச்சாட்டுக்களை சிறிலங்கா இராணுவ வட்டாரங்கள் மறுத்துள்ளன. 

"எனது சொந்த வீட்டுக்குச் செல்ல நான் விரும்புகிறேன். ஆனால் அது முடியவில்லை" என 43 வயதான இரு பிள்ளைகளின் தாயாரான, முல்லைத்தீவு மாவட்டத்தின் சீனியமோட்டைக் கிராமத்தைச் சேர்ந்த சிவகுரு ஆங்காரமுத்து உதயகுமாரி தெரிவித்துள்ளார். 

"நாங்கள் எமது வாழ்வாதாரத்தை இழந்து தற்போது அரசாங்கத்தால் அமைக்கப்பட்ட மீள்குடியேற்றக் கிராமங்களிலும் உறவுகளின் வீடுகளிலும் வாழ்ந்து வருகிறோம்" என பிறிதொரு வாசியான 41 வயதான மனோகரன் சூரியகுமாரி தெரிவித்துள்ளார். 

சிறிலங்கா அரசாங்கப் படைகளுக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான உள்நாட்டு யுத்தம் மே 18, 2009ல் முடிவுக்கு கொண்டு வரப்பட்ட பின்னர், 'உயர் பாதுகாப்பு வலயங்கள்' விடுவிக்கப்பட்டதாக சிறிலங்கா அரசாங்கம் அறிவித்திருந்தது. ஆனால் இன்னமும் சிறிலங்கா இராணுவத்தின் ஆக்கிரமிப்பில் பெரியளவிலான நிலங்கள் உள்ளதாக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர். 

"பல ஆயிரக்கணக்கான மக்கள் தமது சொந்த வீடுகளுக்கு திரும்பிச் செல்ல முடியாத நிலையில் உள்ளனர்" என போரால் பாதிக்கப்பட்ட பெண்களுக்காக பணிபுரியும் சித்தர ஸ்ரீன் அப்துல் சரூர் தெரிவித்துள்ளார். 

முள்ளிக்குளம், மன்னார், யாழ்ப்பாணம், சம்பூர், முல்லைத்தீவு, கிளிநொச்சி போன்ற இடங்களில் சிறிலங்கா இராணுவத்தால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள கிராமங்களைச் சேர்ந்த 26,000ற்கும் மேற்பட்ட மக்கள் மீண்டும் தமது சொந்த வீடுகளுக்கு திரும்பிச் செல்ல முடியாத நிலை காணப்படுவதாக சிறிலங்கா அரசாங்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

கேந்திர முக்கியத்துவம் மிக்க இடங்கள் மீதான தாக்குதல்களைத் தடுப்பதற்காகவும், சிறிலங்கா இராணுவ நிலைகள் மீதான புலிகள் அமைப்பின் ஆட்லறித் தாக்குதல்களை தடுப்பதற்காகவும் 1990களில் பெரும்பாலான உயர் பாதுகாப்பு வலயங்கள் உருவாக்கப்பட்டன. இவ்வாறு அறிவிக்கப்பட்ட உயர் பாதுகாப்பு வலயங்களைச் சேர்ந்த பல பத்தாயிரக்கணக்கான மக்கள் தமது சொந்த வீடுகளிலிருந்து துரத்தப்பட்டனர். 

யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள பெருமளவான நிலங்களை சிறிலங்கா இராணுவத்தினர் உயர் பாதுகாப்பு வலயங்கள் என்ற பெயரில் ஆக்கிரமித்துள்ளனர். 1990ன் ஆரம்பத்தில், யாழ் மாவட்டத்தின் வலிகாமம் வடக்கு பிரதேச செயலர் பிரிவைச் சேர்ந்த 80,000ற்கும் மேற்பட்ட மக்கள் அவர்களது சொந்தக் கிராமங்களிலிருந்து வெளியேற்றப்பட்டனர். இந்த உயர் பாதுகாப்பு வலயத்தில் விமான நிலையம் மற்றும் துறைமுகம் என்பன அமைந்துள்ளன. 

58.6 சதுர கிலோமீற்றர் பரப்பளவைக் கொண்ட வலிகாமம் வடக்கு உயர்பாதுகாப்பு வலயத்தில் தமது சொந்த வீடுகளைக் கொண்ட 23,000 வரையானவர்கள் மீள்குடியேற்றத்திற்காக பதிவுசெய்யப்பட்டுள்ளனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் தமது உறவுகளின் வீடுகளில் வாழ்கின்றனர். வலிகாமம் வடக்கைச் சேர்ந்த பெரும்பாலான இடம்பெயர்ந்த மக்கள் பலாலி இராணுவ விமானத்தளத்திற்கு அருகிலுள்ள இடத்தைச் சேர்ந்தவர்களாவர். இவர்களின் மீள்குடியேற்றம் இன்னமும் தீர்க்கப்படாத பிரச்சினையாக காணப்படுகிறது. 

இப்பிரதேசத்து மக்களுக்குச் சொந்தமான ஆயிரக்கணக்காண கெக்ரேயர் நிலத்தை சிறிலங்கா அரசாங்கம் சொந்த நில உரிமையாளர்களிடம் கொடுக்கத் தவறியுள்ளது. இவர்களில் பெரும்பாலான நில உரிமையாளர்கள் காணி உறுதிகளைக் கொண்டுள்ள போதிலும் கூட இவர்களின் நிலங்களை கையளிக்க சிறிலங்கா அரசாங்கம் தொடர்ந்தும் மறுத்துவருகிறது. 

"சிறிலங்காவில் யுத்தம் முடிந்து, உத்தியோகபூர்வமாக உயர் பாதுகாப்பு வலயங்கள் மூடப்பட்டதாக அறிவிக்கப்பட்ட போதிலும் கூட, குறிப்பிட்ட இந்த நிலங்கள் இன்னமும் சிறிலங்கா இராணுவத்தால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன" என மனித உரிமைச் சட்டவாளரான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்திருந்தார். 

"'யுத்தம் முடிவுற்று உயர் பாதுகாப்பு வலயங்கள் நீக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்ட நிலையில் இந்த நிலங்களை சிறிலங்கா இராணுவம் கையகப்படுத்தியுள்ளமை சட்டரீதியற்றதாகும்" என சுமந்திரன் மேலும் சுட்டிக்காட்டியிருந்தார். 

"இவ்வாறான நில அபகரிப்பானது நாட்டில் சமாதானம் மற்றும் மீளிணக்கப்பாட்டை உருவாக்குவதற்கு தடையாக காணப்படுவதுடன், மக்களின் சிவில் உரிமையைப் பறிப்பதாகவும் காணப்படுகிறது" என செயற்பாட்டாளரான சரூர் மேலும் தெரிவித்துள்ளார். 

உயர் பாதுகாப்பு வலயங்கள் இன்னமும் இருப்பதையோ அல்லது மக்களின் நிலங்களை அபகரித்து வைத்திருப்பது தொடர்பில் மேற்கொள்ளப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களை சிறிலங்கா இராணுவத்தினர் மறுத்துள்ளனர். 

"2011 ஆகஸ்ட்டில் எடுக்கப்பட்ட சில அவசர காலச் சட்ட நடைமுறையின் படி, உயர் பாதுகாப்பு வலயங்களில் காணப்படும் தனியார் நிலங்கள் அவற்றின் உரிமையாளர்களிடம் மீளவழங்கப்பட வேண்டும். இவை நான்கு மாவட்டங்களின் அரசாங்க அதிபர்களின் ஊடாக உரிமையாளர்களிடம் கையளிக்கப்பட வேண்டும்" என இராணுவப் பேச்சாளரான பிரிகேடியர் றுவான் வனிகசூரிய தெரிவித்துள்ளார். 

இந்தப் பிரதேசங்களில் காணப்படும் நிலக்கண்ணி வெடிகளை அகற்றுதலில் ஏற்பட்டுள்ள தாமதம் மற்றும் தொலைந்த நில ஆவணங்களைப் பெற்றுக் கொடுப்பதில் ஏற்பட்டுள்ள தாமதங்களால் நிலக் கையளிப்பு இன்னமும் நடைபெறவில்லை என இராணுவப் பேச்சாளர் மேலும் குறிப்பிட்டுள்ளார். 

"யுத்தத்தின் போது சிறிலங்கா இராணுவத்தால் ஆக்கிரமிக்கப்பட்ட நிலங்கள் விடுவிக்கப்பட்டுள்ளன. பலாலி மற்றும் காங்கேசன்துறையில் அனைத்துலக விமான நிலையம் மற்றும் துறைமுகம் போன்றவற்றை அமைப்பதற்கான நிலங்கள் சட்டரீதியாக ஒதுக்கப்பட்டுள்ளன" எனவும் பேச்சாளர் சுட்டிக்காட்டியுள்ளார். 

2011ல் சிறிலங்காவின் கற்றுக் கொண்ட பாடங்களுக்கான நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையில், உயர்பாதுகாப்பு வலயங்களாகப் பிரகடனப்படுத்தப்பட்ட பலாலி மற்றும் சம்பூர் விவகாரங்களை மீள ஆராய்வதுடன், தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இல்லாது இங்குள்ள நிலங்களை மக்களிடம் கையளிக்குமாறு பரிந்துரைக்கப்பட்டது. 

உயர் பாதுகாப்பு வலயங்கள் அமைக்கப்பட்டமை மற்றும் முறைசாராத பாதுகாப்பு தேவைகளுக்காக நிலங்கள் அபகரிக்கப்பட்டதால் தமது நிலங்களை அல்லது வீடுகளை இழந்தவர்களுக்கு மாற்றீடாக, ஐ.நாவின் இடம்பெயர்வு மற்றும் இடம்பெயர்ந்தவர்களின் நிலங்களுக்கான நட்டஈட்டு வழங்கல் தொடர்பான வழிகாட்டல் கோட்பாடுகளை அடிப்படையாகக் கொண்டு, வேறு நிலங்கள் வழங்கப்பட வேண்டும் என கற்றுக் கொண்;ட பாடங்களுக்கான நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்ட போதிலும், இதுவரை இவை எதுவும் நடைமுறைப்படுத்தவில்லை என ஆர்வலர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். 

செய்திவழிமூலம் : IRIN 
மொழிமாற்றம் : நித்தியபாரதி

 

http://www.puthinappalakai.com/view.php?20130111107575

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.