Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இந்தியா - பாகிஸ்தான் இடையே யுத்தம் தொடங்கியதா ?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்


1297586503images.jpg

இந்தியா - பாகிஸ்தான் இடையே யுத்தம் தொடங்கியதா ?

 

இந்திய எல்லைப் பகுதியில் 8 இடங்களில் பாகிஸ்தான் ராணுவம் மீண்டும் தாக்குதல் நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால், இரு நாட்டு எல்லைப் பகுதியில் தொடர்ந்து பதற்றம் நீடிக்கிறது. 

எல்.ஓ.சி. என்றழைக்கப்படும் இந்திய - பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் உள்ள கிருஷ்ணா காடி மற்றும் சோனகலி பகுதிகளில் நேற்று பாகிஸ்தான் ராணுவம் அடுத்தடுத்து துப்பாக்கிச்சூடு நடத்தியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதனால் எல்லைப் பகுதியில் ஏற்பட்டுள்ள பதற்றத்தை குறைக்கும் நோக்கத்துடன், ஆலோசனை நடத்த பாகிஸ்தான் ராணுவத்திற்கு இந்தியா அழைப்பு விடுத்துள்ளது. எனினும், அதுதொடர்பாக பாகிஸ்தான் தரப்பில் இருந்து எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. 

இந்நிலையில், எல்லைப் பகுதி பாதுகாப்பு பணியில் இருந்து விடுப்பில் சென்ற வீரர்கள் அனைவரும் உடனடியாக பணிக்குத் திரும்ப வேண்டும் என பாகிஸ்தான் ராணுவம் அந்நாட்டு வீரர்களுக்கு உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

இந்திய தரப்பிலும் எல்லைப் பகுதியில் பாதுகாப்பை மேம்படுத்த பல்வேறு துரித நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. பூஞ்ச் மற்றும் ரஜோரி பகுதிகளில், ஆளில்லாத உளவு விமானங்கள் மூலம் நிலைமை கண்காணிக்கப்பட்டு வருவதாக இந்திய ராணுவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.


http://www.adaderana.lk/tamil/news.php?nid=33401

என்னதான் பாகிஸ்தான் செய்தாலும் இந்தியா யுத்தத்தை விரும்பாது.

 

காரணம் : பொருளாதாரம்.

பாக்., உடன் இயல்பான உறவுக்கு இனி வாய்ப்பு இல்லை என பிரதமர் அறிவிப்பு

 

இந்திய ராணுவ வீரர்கள் இருவரை, கொடூரமாக கொலை செய்தபின், பாகிஸ்தானுடன் இயல் பான உறவு வைத்துக் கொள்வதற்கு, இனி என்ன வேலை இருக்கிறது. பாக்., ராணுவத்தின் நடவடிக்கை, காட்டுமிராண்டித் தனமானது, என, மிகவும் தாமதமாக பிரதமர் மன்மோகன் சிங் கண்டனம் தெரிவித்துள்ளார்.

 

http://tamil.yahoo.com/%E0%AE%AA-%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA-%E0%AE%A9-%E0%AE%B1%E0%AE%B5-%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%87%E0%AE%A9-191600019.html

  • கருத்துக்கள உறவுகள்
எல்லையில் இந்தியா மீண்டும் பதிலடி தாக்குதல்: பாக். ராணுவ வீரர் ஒருவர் பலி
Posted by: Mathi Updated: Wednesday, January 16, 2013, 11:17 [iST]
 
ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில் நேற்றும் பாகிஸ்தான் ராணுவம் இந்திய நிலைகள் மீது தாக்குதல் நடத்தியது. இதற்கு இந்தியத் தரப்பில் பதிலடித் தாக்குதல் நடத்தப்பட்டதில் ஒரு பாகிஸ்தான் ராணுவ வீரர் கொல்லப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் எல்லைக் கட்டுப்பாட்டுப் பகுதியில் ஜனவரி 6-ந் தேதி முதல் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல்களை நடத்தி வருகிறது. இதற்கு இந்தியா தந்த பதிலடியில் ஒரு பாகிஸ்தான் ராணுவ வீரர் கொல்லப்பட்டார். பின்னர் ஜனவரி 8-ந் தேதியன்று பாகிஸ்தான் ராணுவத்தினர் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டை மீறி இந்திய பகுதிக்குள் ஊடுருவி இரு இந்திய ராணுவ வீரர்களை மிகக் கோரமான முறையில் படுகொலை செய்தனர். மேலும் ஹேம்ராஜ் என்ற ராணுவ வீரரின் தலையை துண்டித்தும் எடுத்துச் சென்றனர். இதற்கு இந்தியத் தரப்பில் பதிலடி தாக்குதல் நடத்தப்பட்டது. இத்தாக்குதலில் மேலும் ஒரு பாகிஸ்தான் வீரர் கொல்லப்பட்டதாகக் கூறப்பட்டது.
இதைத் தொடர்ந்த் இருநாடுகளிடையேயான உறவு விரிசலைடைந்து எல்லையில் மிகவும் பதற்றமான சூழ்நிலை உருவாகியுள்ளது. மேலும் பாகிஸ்தானுடனான சுமூக உறவு இல்லை என்றும் நேற்று பிரதமர் மன்மோகன்சிங் எச்சரித்திருந்தார். பாகிஸ்தானின் ஆத்திரமூட்டும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் பதிலடி கொடுக்கப்படும் என்றும் இந்தியத் தரப்பில் கூறப்பட்டு வந்தது. இந்தியாவின் எச்சரிக்கையையும் மீறி நேற்று இரவு 8. 15 மணியளவில் பாகிஸ்தான் மீண்டும் தாக்குதலை நடத்தியது.
பாகிஸ்தானின் புதிய தாக்குதலுக்கு இந்தியத் தரப்பில் பதிலடி கொடுக்கப்பட்டது. இந்தத் தாக்குதலில் நேற்று இரவு 10 மணியளவில் ஒரு பாகிஸ்தான் வீரர் கொல்லப்பட்டதாக அந்நாட்டு ராணுவம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில் இந்த ஜனவரி மாதம் மட்டும் நடந்த மோதல்களில் பலியானோர் எண்ணிக்கை 5 ஆக அதிகரித்துள்ளது.
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

 naaikal_zps22c53156.jpg

 

 

இவங்கள் இரண்டுபேரும் காலைத்தூக்கி வைச்சிருக்கிறதே ஒரு அழகு...... :lol:

பாகிஸ்தானில் நடப்பது என்ன ?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.