Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அமெரிக்கா பயிற்சி வழங்குவதற்கு மறுத்தால் சீனாவிடம் பெறுவோம்: கோத்தபாய

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
அமெரிக்கா பயிற்சி வழங்குவதற்கு மறுத்தால் சீனாவிடம் பெறுவோம்: கோத்தபாய
By General 
2013-01-19 10:30:11
 
இலங்கைக்கான இராணுவ பயிற்சிகளை அமெரிக்க வழங்க மறுக்குமேயானல் சீனாவிடம் அவ்வுதவிகளை பெற்றுக்கொள்ள முடியும். இது இலங்கைக்கு பெரிய சவாலான விடயம் அல்ல.
 
எமது இராணுவத்திற்கெதிராக இதைத்தவிர அமெரிக்காவினால் வேறு எதனையும் செய்ய முடியாதென பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
 
பெரும் துயரங்கள் மற்றும் தியாகங்களுக்கு மத்தியில் பெற்றுக்கொள்ளப்பட்ட அமைதியை சீர்குலைக்க இலங்கையை சூழ பல சக்திகள் செயற்படுகின்றன.
 
இவற்றை எதிர்கொண்டு நாட்டின் அமைதியை தொடர்ந்தும் பாதுக்காக்க வேண்டுமென்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அண்மையில் இந்தியாவிற்கே பயிற்சி அளிக்க விரும்பியது சிங்களம்.

 

 

நாளை அமெரிக்காவிற்கும் இதே நிலைமை தான்  :lol: 

  • கருத்துக்கள உறவுகள்

ஆப்கானில் நேட்டோ படைகள் வெற்றி பேறாமல் போனதுக்கு இலங்கையின் பயிற்சியைப் பெற்றுக்கொள்ளாமையே காரணமாகும்..! :D

பிளேக் அதை தெரிந்துதான் இலங்கை படைகளை கோத்தாவிடம் தனக்கிருந்த நட்பை வைத்து ஆப்கான் கொண்டு போக முயன்றவர். ஆனால் கோத்தா மறுத்துவிட்டார். இதனால்த்தான் ஆப்கான் சண்டை சீரளிந்தது.  :(

 

:D

  • கருத்துக்கள உறவுகள்
இலங்கைக்கான இராணுவ பயிற்சிகளை அமெரிக்க வழங்க மறுக்குமேயானல் சீனாவிடம் அவ்வுதவிகளை பெற்றுக்கொள்ள முடியும்.

இதைத்தானே இந்தியாக்காரருக்கு சொல்லி ஏமாத்தி வைத்திருக்கினம் இப்போது அமெரிக்காவுக்கா அமேரிக்கா ஏற்க்கனவே இந்தமாதிரி பல நாடுகளையும் பலரையும் பார்த்திருக்கும் 

 

 

பெரும் துயரங்கள் மற்றும் தியாகங்களுக்கு மத்தியில் பெற்றுக்கொள்ளப்பட்ட அமைதியை சீர்குலைக்க இலங்கையை சூழ பல சக்திகள் செயற்படுகின்றன.

சிங்களவன் கனவு காண்கிறான் 

அமெரிக்கா பயிற்சி வழங்க மறுத்தால் சீனாவிடம் உதவி கேட்போம் - மிரட்டும் கோத்தாபய [ செவ்வாய்க்கிழமை, 22 சனவரி 2013, 07:48 GMT ] [ நித்தியபாரதி ]

Gota%20colombo.jpgஅமெரிக்கா பாதுகாப்புத் திணைக்களத்தின் உயர் மடட அதிகாரிகள் குழு சிறிலங்காவுக்கு பயணம் செய்வதற்கு இன்னமும் சில நாட்கள் உள்ள நிலையில், சிறிலங்கா தொடர்பான மனித உரிமைக் குற்றச்சாட்டுக்களை அடிப்படையாகக் கொண்டு அமெரிக்கா தனது நாட்டு இராணுவத்தினருக்கு பயிற்சி வழங்குவதற்கு மறுத்தால் இது தொடர்பில் சிறிலங்கா, சீனாவிடம் உதவி கேட்கும் என இந்நாட்டின் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார். 

அமெரிக்காவானது தனது இராணுவப் பயிற்சிக் கல்லூரிகளில் சிறிலங்கா இராணுவத்தினர் சிறப்பு பயிற்சி பெறுவதற்கான புலமைப்பரிசிலை வழங்க மறுத்தால் சிறிலங்காவுக்கு இவ்வாறான இராணுவ உதவிகளை வழங்கும் சீனாவிடம் உதவி கேட்பதைத் தவிர வேறு வழியில்லை என தேசிய வர்த்தக சம்மேளனத்துடன் மேற்கொண்ட சந்திப்பொன்றில் கோத்தபாய இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். 

ஜனவரி 26 தொடக்கம் பெப்ரவரி 01 வரை அமெரிக்க உயர் மட்டப் பிரதிநிதிகளான பிரதி உதவி இராஜாங்கச் செயலர் ஜேன் சிமேர்மன், பிரதி உதவி இராஜாங்கச் செயலர் ஜேம்ஸ் மூர் மற்றும் பாதுகாப்பு பிரதி உதவிச் செயலர் விக்ரம் சிங் ஆகியோர் சிறிலங்கா மற்றும் மாலைதீவு ஆகிய இரு நாடுகளுக்கும் பயணம் மேற்கொள்ளவுள்ளனர் என அமெரிக்கத் தூதரகம் அறிவித்துள்ளது. 

"சிறிலங்காவுக்கு வருகை தரும் அமெரிக்க உயர் மட்டப் பிரதிநிதிகள் சிறிலங்காவின் பல்வேறு மட்ட அரசியற் கட்சிகள், பொது அமைப்புக்கள் போன்றவற்றைச் சந்தித்து கற்றுக் கொண்ட பாடங்களுக்கான நல்லிணக்க ஆணைக்குழுவால் பரிந்துரைக்கப்பட்ட விடயங்கள், தேசிய செயற் திட்டம் உள்ளடங்கலாக பல்வேறு பிரச்சினைகள் தொடர்பாக ஆராயவுள்ளனர்" என ஊடக குறிப்பொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அமெரிக்க பாதுகாப்பு திணைக்களத்திற்கு உட்பட்ட பாதுகாப்பு மூலோபாயங்கள் மற்றும் ஆசிய பிராந்தியத் திட்டங்கள் போன்றவற்றுடன் தொடர்புபட்ட கோட்பாடுகள் அனைத்தையும் அமுல்படுத்துவதற்கான மூத்த அதிகாரிகளுக்கான முதன்மை ஆலோசகராக விக்ரம் சிங் செயற்படுகிறார். 

சிறிலங்காவின் முன்னாள் தலைமை நீதியரசர் சிராணி பண்டாரநாயக்க மீதான நம்பிக்கையில்லாப் பிரேரணை மற்றும் இவர் பதவியிலிருந்து நீக்கப்பட்டமை போன்றன சிறிலங்காவின் சட்ட ஆட்சி எவ்வாறான பின்னடைவைச் சந்தித்துள்ளது என்பதைச் சுட்டிக்காட்டுகின்றது என மனித உரிமைகளுக்கான ஐ.நா உயர் ஆணையாளர் நவி பிள்ளை விபரித்துள்ளார். 

"சிறிலங்காவானது நீண்ட காலமாக நிறைவேற்று அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தி வருகின்றது. இந்நிலையில் அண்மையில் பிரதம நீதியரசர் பதவி விலக்கப்பட்டமையானது அடிப்படை உரிமையையும் சுயாதீன செயற்பாட்டையும் மீறி மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையாகும். இது சிறிலங்கர்கள் அனைவருக்கும் எச்சரிக்கை ஒலியை ஏற்படுத்தியுள்ளது" என நவி பிள்ளையின் பேச்சாளர் றுபேற் கொல்விலே தெரிவித்துள்ளார். 

சிறிலங்காவின் முன்னாள் பிரதம நீதியரசர் மீதான நம்பிக்கையில்லாப் பிரேரணை மற்றும் பதவி விலக்கப்பட்டமை தொடர்பாக நவி பிள்ளை ஜெனீவாவில் வரும் மார்ச் மாதம் இடம்பெறவுள்ள ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் கூட்டத் தொடரில் விவாதிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இதேவேளையில், நாட்டின் நீதித்துறையைக் கட்டுப்படுத்தல் மற்றும் நாடாளுமன்றைப் பலப்படுத்தல் போன்றவற்றை உள்ளடக்கிய புதிய வரைபொன்றை அரசியல் யாப்பில் இணைப்பதற்கான முயற்சியை மகிந்த ராஜபக்சவின் சிறிலங்கா அரசாங்கம் மேற்கொண்டு வருகின்றமையும் இங்கு குறிப்பிடத்தக்கதே. 

செய்தி வழிமூலம் : DAWN.COM

 

http://www.puthinappalakai.com/view.php?20130122107644

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.