Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புலன் பெயர்நதவனின் புலம்பல் - வட மாகாணத்தையும் பறிகொடுப்பம்….

Featured Replies

தமிழாக்களுக்கு உரிமை குடுங்கோ எண்டு சொல்லிக் கொண்டிருந்த உலகமெல்லாம் இப்ப வட மாகாணத்துக்கு எலக்சன் வையுங்கோ எண்டு சொல்லுற அளவுக்கு வந்திருக்கினம் எண்டது எல்லாருக்கும் தெரியும்.

 

ஆனால் உடனை எலக்சன் வைச்சால் என்ன நடக்கும் எண்டு தெரிஞ்ச ‘றாஜ‘ குடும்பம் அங்கை கண்ணி வெடி கிடக்குது சனத்தைக் குடியேற்ற வேணும் எண்டு அதை இதைச் சொல்லிக் காலத்தைக் கழிச்சதும் தெரியும்.

 

இனியும் இழுத்தடிக்கிறது கஸ்ரம் எண்டு தெரிஞ்சதும் 2013 செப்டம்பரிலை எலக்சன் எண்டு திகதி வைச்சிருக்கிறதும் எல்லாருக்கும் தெரியும்.

 

ஆனால் போற போக்கைப் பாத்தால் வடக்கையும் றாஜ குடும்பத்திட்டையும் அவையின்ரை பரிவாரங்களிட்டையும் பறி குடுத்துப் போட்டு அணிலேற விட்ட நாயைப் போல ஆவெண்டு கொண்டு நிக்கப் போறமோ எண்டொரு சந்தேகம் வந்திட்டுது.

 

தென்னிலங்கையிலை இவ்வளவு காலமும் இல்லாத மாதிரி வித்தியாசமா அரசியல் செய்து கொண்டிருக்கிற மனோ கணேசனைப் பற்றி ஒரு வயதான ஆளோடை கதைச்சுக் கொண்டிருந்தன். அவர் தமிழரசுக் கட்சியின்ரை தூணா இருந்தவர். ‘அடைஞ்சால் தமிழீழம் இல்லாட்டி சிறைக்கூடம்’ எண்டு கர்ஜித்த அப்பாப்பிள்ளையின்ரை மகனுக்கு ரத்தத்தாலை பொட்டு வைச்சதை இண்டைக்கும் பெருமையாச் சொல்லிக் கொண்டு திரியிறவர். ‘தூக்கு மேடை பஞ்சணை மெத்தை, சிறைச்சாலை பூஞ்சோலை… அகப்பை பிடிக்கிற கையாலை வாளேந்துவம்’ எண்டு மேடைக்கு மேடை முழங்கின அப்பாப்பிள்ளையின்ரை மருமகளை ஆவெண்டு பாத்துக் கொண்டு நிண்டவர்….

 

அவர் என்ன சொன்னவர் எண்டால் எங்;கடை தலைவர் மாரின்ரை அரசியல் சாணக்கியத்திலை ஒரு தூசெண்டாலும் இவையிட்டை இருக்கே?. இப்ப பெரிய அரசியல் தலைவர் எண்டு தங்களைத் தாங்களே சொல்லிக் கொண்டு திரியினம் எண்டு கோபப்பட்டார்.

 

இவர் எங்கடை தலைவர் மாரெண்டு சொல்லுற அப்புக்காத்து மாரும் அவையின்ரை இளம்வாரிசுகளும் தான் இண்டைக்கும் எங்கடை தலைவர்களா இருக்கினம். ஆனால் அவை நடந்து கொள்ளுற விதத்தைப் பாத்தால் அருவருப்பாக் கிடக்குது. அவையள் தமிழாக்களுக்காக அரசியல் செய்யினமா அல்லது தங்கடை இருப்புக்காகவும் தங்கடை வாரிசுகளுக்காகவும் அரசியல் செய்யினமா எண்ட சந்தேகம் எக்கச் சக்கமா வந்திட்டுது. படிச்ச ஆக்கள் இங்கிலீசு தெரிஞ்சவை எண்டு போட்டு இவையை வெளிநாட்டுக் காறரோடை கதைக்க விட்டால் இவை போய் என்ன கதைக்கினம் எண்டது ஒருத்தருக்கும் விளங்கேல்லை. இவை உரிமை கேக்கேல்லை சைக்கிள் தான் கேட்டவை எண்டு ஒரு வெள்ளைக்காற மந்திரி சொல்லுறார். இவை பாளிமென்ரிலை கதைக்கிறதைக் கேட்டாலும் சிதம்பர சக்கரத்தைப் பேய் பாத்த மாதிரிக் கிடக்குது. ஏனெண்டால் மாத்தி மாத்திக் கதைக்கினம். சரி மற்றவை சொல்லுற கதையை நூறு வீதம் நம்பேலாது தான். ஆனால் இவை நடந்து கொள்ளுற விதத்தைப் பாத்தாலும் சமசியப் பட வேண்டித் தான் கிடக்குது.

 

தமிழரின்ரை பாதுகாப்பு, தமிழரின்ரை ஒற்றுமை எண்டுபக்கம் பக்கமா அறிக்கை விடுகினம். ஆனால் தமிழருக்கு நடக்கிற கொடுமையைப் பற்றி மூச்சும் விடாமல் இருக்கினம். இப்படித் தான் இந்தக் கம்பஸ் பெடியளைப் பிடிச்சுக் கொண்டு உள்ளுக்குப் போட்டதையும் வைச்சு ஏட்டிக்குப் போட்டியா மறியல் செய்ய வெளிக்கிட்டவை. பிறகு சனத்தின்ரை எதிர்பபைக் கண்டு போட்டு கஜேந்திரகுமார் ஆக்களோடை வேண்டா வெறுப்பாப் போய் நிண்டவை.

 

பிறகு தமிழ் அரசியல் தலைமை மேலை மெல்லக் கை வைக்க நினைச்ச றாஜ குடும்பம் கஜேந்திரகுமாரை விசாரணைக்குக் கூப்பிட்டனுப்பின கடிதத்தைப் பற்றி இவை வாயே திறக்கேல்லை. ஆட்டைக் கடிச்சு மாட்டைக் கடிச்சு பிறகு மனிசனையே கடிப்பினம் எண்டு தெரியிற அளவுக்குக் கூட இவைக்கு அரசியல் அறிவு இருக்கேல்லையா அல்லது எதிரி அழியட்டும் நாங்கள் நிரந்தரமாப் பாய் விரிப்பம் எண்டு நினைச்சினமோ தெரியேல்லை.

 

சரி ஆட்டைக் கடிச்சம் சத்தமில்லை இனி மாட்டைக் கடிப்பம் எண்டு நினைச்சு தமிழரசுக் கட்சிக்காறரான சிறதரன் எம்பியின்ரை ஒபிசுக்குள்ளை போய் நாடகமாடி இப்ப அவரைச் சிக்க வைக்கவும் வேலைகள் நடக்குது. ஆனால் படிச்ச அனுபவமுள்ள தலைவர்மார் அதைப் பற்றி மூச்சுக் கூட விடாமல் தென்னாபிரிக்காவுக்கு பிளேன் ரிக்கற் என்ன விலை எண்டு தேடிக் கொண்டிருக்கினம்.

 

தன்ரை அடிமட்டத் தொண்டனைக் கூட பிரச்சினைகளிலை இருந்து காப்பாற்றிறவன் தானே உண்மையான அரசியல் தலைவனா இருக்க முடியும்? ஆனால் கட்சியிலை ஒரு முக்கியமான இடத்திலை இருக்கிற மக்களாலை தெரிவுசெய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினரை பிடிச்சடைக்க நடக்கிற வேலைகளைப் பற்றிக் கூட மூச்சு விடாட்டி இவை என்ன தலைவர்கள்? இவையளின்ரை இளம் அப்புக்காத்து வாரிசுக்கு எதிரா அந்தாள் ஒருக்கால் கதைச்சுப் போட்டுது எண்ட பழங்கறளை வைச்சுக் கொண்டு சாதிக்கினமோ எண்டு என்னை மாதிரியான அரசியல் அறிவு குறைஞ்ச ஆக்கள் நினைக்கிறது பிழையோ?

 

 

இப்படியே போனால் செப்டம்பருக்கிடையிலை கழுதை தேஞ்சு கட்டெறும்பானது மாதிரி கட்சி தேஞ்சு போயிடும். பிறகென்ன றாஜ குடும்பத்துக்குக் கொண்டாட்டம் தானே!

 

 

சத்தியமாச் சொல்லுறன். எங்கடை சனத்தின்ரை இருப்பு சரியான அரசியல் தலைமையிலை தான் இருக்குது. அதைக் காப்பாத்தாட்டில்; பிறகு நாங்கள் அரசியல் அனாதைகளாத் தான் இருக்க வேணும். கண்கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் செய்யாமல் உடனை பரிகாரம் செய்ய வேண்டியது எல்லாரிண்டையும் கடமையெல்லே

Edited by Manivasahan

தமிழாக்களுக்கு உரிமை குடுங்கோ எண்டு சொல்லிக் கொண்டிருந்த உலகமெல்லாம் இப்ப வட மாகாணத்துக்கு எலக்சன் வையுங்கோ எண்டு சொல்லுற அளவுக்கு வந்திருக்கினம் எண்டது எல்லாருக்கும் தெரியும்.

 

ஆனால் உடனை எலக்சன் வைச்சால் என்ன நடக்கும் எண்டு தெரிஞ்ச ‘றாஜ‘ குடும்பம் அங்கை கண்ணி வெடி கிடக்குது சனத்தைக் குடியேற்ற வேணும் எண்டு அதை இதைச் சொல்லிக் காலத்தைக் கழிச்சதும் தெரியும்.

 

இனியும் இழுத்தடிக்கிறது கஸ்ரம் எண்டு தெரிஞ்சதும் 2013 செப்டம்பரிலை எலக்சன் எண்டு திகதி வைச்சிருக்கிறதும் எல்லாருக்கும் தெரியும்.

 

ஆனால் போற போக்கைப் பாத்தால் வடக்கையும் றாஜ குடும்பத்திட்டையும் அவையின்ரை பரிவாரங்களிட்டையும் பறி குடுத்துப் போட்டு அணிலேற விட்ட நாயைப் போல ஆவெண்டு கொண்டு நிக்கப் போறமோ எண்டொரு சந்தேகம் வந்திட்டுது.

 

தென்னிலங்கையிலை இவ்வளவு காலமும் இல்லாத மாதிரி வித்தியாசமா அரசியல் செய்து கொண்டிருக்கிற மனோ கணேசனைப் பற்றி ஒரு வயதான ஆளோடை கதைச்சுக் கொண்டிருந்தன். அவர் தமிழரசுக் கட்சியின்ரை தூணா இருந்தவர். ‘அடைஞ்சால் தமிழீழம் இல்லாட்டி சிறைக்கூடம்’ எண்டு கர்ஜித்த அப்பாப்பிள்ளையின்ரை மகனுக்கு ரத்தத்தாலை பொட்டு வைச்சதை இண்டைக்கும் பெருமையாச் சொல்லிக் கொண்டு திரியிறவர். ‘தூக்கு மேடை பஞ்சணை மெத்தை, சிறைச்சாலை பூஞ்சோலை… அகப்பை பிடிக்கிற கையாலை வாளேந்துவம்’ எண்டு மேடைக்கு மேடை முழங்கின அப்பாப்பிள்ளையின்ரை மருமகளை ஆவெண்டு பாத்துக் கொண்டு நிண்டவர்….

 

அவர் என்ன சொன்னவர் எண்டால் எங்;கடை தலைவர் மாரின்ரை அரசியல் சாணக்கியத்திலை ஒரு தூசெண்டாலும் இவையிட்டை இருக்கே?. இப்ப பெரிய அரசியல் தலைவர் எண்டு தங்களைத் தாங்களே சொல்லிக் கொண்டு திரியினம் எண்டு கோபப்பட்டார்.

 

இவர் எங்கடை தலைவர் மாரெண்டு சொல்லுற அப்புக்காத்து மாரும் அவையின்ரை இளம்வாரிசுகளும் தான் இண்டைக்கும் எங்கடை தலைவர்களா இருக்கினம். ஆனால் அவை நடந்து கொள்ளுற விதத்தைப் பாத்தால் அருவருப்பாக் கிடக்குது. அவையள் தமிழாக்களுக்காக அரசியல் செய்யினமா அல்லது தங்கடை இருப்புக்காகவும் தங்கடை வாரிசுகளுக்காகவும் அரசியல் செய்யினமா எண்ட சந்தேகம் எக்கச் சக்கமா வந்திட்டுது. படிச்ச ஆக்கள் இங்கிலீசு தெரிஞ்சவை எண்டு போட்டு இவையை வெளிநாட்டுக் காறரோடை கதைக்க விட்டால் இவை போய் என்ன கதைக்கினம் எண்டது ஒருத்தருக்கும் விளங்கேல்லை. இவை உரிமை கேக்கேல்லை சைக்கிள் தான் கேட்டவை எண்டு ஒரு வெள்ளைக்காற மந்திரி சொல்லுறார். இவை பாளிமென்ரிலை கதைக்கிறதைக் கேட்டாலும் சிதம்பர சக்கரத்தைப் பேய் பாத்த மாதிரிக் கிடக்குது. ஏனெண்டால் மாத்தி மாத்திக் கதைக்கினம். சரி மற்றவை சொல்லுற கதையை நூறு வீதம் நம்பேலாது தான். ஆனால் இவை நடந்து கொள்ளுற விதத்தைப் பாத்தாலும் சமசியப் பட வேண்டித் தான் கிடக்குது.

 

தமிழரின்ரை பாதுகாப்பு, தமிழரின்ரை ஒற்றுமை எண்டுபக்கம் பக்கமா அறிக்கை விடுகினம். ஆனால் தமிழருக்கு நடக்கிற கொடுமையைப் பற்றி மூச்சும் விடாமல் இருக்கினம். இப்படித் தான் இந்தக் கம்பஸ் பெடியளைப் பிடிச்சுக் கொண்டு உள்ளுக்குப் போட்டதையும் வைச்சு ஏட்டிக்குப் போட்டியா மறியல் செய்ய வெளிக்கிட்டவை. பிறகு சனத்தின்ரை எதிர்பபைக் கண்டு போட்டு கஜேந்திரகுமார் ஆக்களோடை வேண்டா வெறுப்பாப் போய் நிண்டவை.

 

பிறகு தமிழ் அரசியல் தலைமை மேலை மெல்லக் கை வைக்க நினைச்ச றாஜ குடும்பம் கஜேந்திரகுமாரை விசாரணைக்குக் கூப்பிட்டனுப்பின கடிதத்தைப் பற்றி இவை வாயே திறக்கேல்லை. ஆட்டைக் கடிச்சு மாட்டைக் கடிச்சு பிறகு மனிசனையே கடிப்பினம் எண்டு தெரியிற அளவுக்குக் கூட இவைக்கு அரசியல் அறிவு இருக்கேல்லையா அல்லது எதிரி அழியட்டும் நாங்கள் நிரந்தரமாப் பாய் விரிப்பம் எண்டு நினைச்சினமோ தெரியேல்லை.

 

சரி ஆட்டைக் கடிச்சம் சத்தமில்லை இனி மாட்டைக் கடிப்பம் எண்டு நினைச்சு தமிழரசுக் கட்சிக்காறரான சிறதரன் எம்பியின்ரை ஒபிசுக்குள்ளை போய் நாடகமாடி இப்ப அவரைச் சிக்க வைக்கவும் வேலைகள் நடக்குது. ஆனால் படிச்ச அனுபவமுள்ள தலைவர்மார் அதைப் பற்றி மூச்சுக் கூட விடாமல் தென்னாபிரிக்காவுக்கு பிளேன் ரிக்கற் என்ன விலை எண்டு தேடிக் கொண்டிருக்கினம்.

 

தன்ரை அடிமட்டத் தொண்டனைக் கூட பிரச்சினைகளிலை இருந்து காப்பாற்றிறவன் தானே உண்மையான அரசியல் தலைவனா இருக்க முடியும்? ஆனால் கட்சியிலை ஒரு முக்கியமான இடத்திலை இருக்கிற மக்களாலை தெரிவுசெய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினரை பிடிச்சடைக்க நடக்கிற வேலைகளைப் பற்றிக் கூட மூச்சு விடாட்டி இவை என்ன தலைவர்கள்? இவையளின்ரை இளம் அப்புக்காத்து வாரிசுக்கு எதிரா அந்தாள் ஒருக்கால் கதைச்சுப் போட்டுது எண்ட பழங்கறளை வைச்சுக் கொண்டு சாதிக்கினமோ எண்டு என்னை மாதிரியான அரசியல் அறிவு குறைஞ்ச ஆக்கள் நினைக்கிறது பிழையோ?

 

 

இப்படியே போனால் செப்டம்பருக்கிடையிலை கழுதை தேஞ்சு கட்டெறும்பானது மாதிரி கட்சி தேஞ்சு போயிடும். பிறகென்ன றாஜ குடும்பத்துக்குக் கொண்டாட்டம் தானே!

 

 

சத்தியமாச் சொல்லுறன். எங்கடை சனத்தின்ரை இருப்பு சரியான அரசியல் தலைமையிலை தான் இருக்குது. அதைக் காப்பாத்தாட்டில்; பிறகு நாங்கள் அரசியல் அனாதைகளாத் தான் இருக்க வேணும். கண்கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் செய்யாமல் உடனை பரிகாரம் செய்ய வேண்டியது எல்லாரிண்டையும் கடமையெல்லே

 

அரசியலிலை இதெல்லாம் சகஜம் மணி . மந்தைகள் தொடருகின்றன . மேய்பர்களும் அவைகளை தொடருகின்றார்கள் .

Edited by கோமகன்

 ஆனால் போற போக்கைப் பாத்தால் வடக்கையும் றாஜ குடும்பத்திட்டையும் அவையின்ரை பரிவாரங்களிட்டையும் பறி குடுத்துப் போட்டு அணிலேற விட்ட நாயைப் போல ஆவெண்டு கொண்டு நிக்கப் போறமோ எண்டொரு சந்தேகம் வந்திட்டுது.

 

ஏற்கனவே பறிகொடுத்தாகி விட்டது, ஆனால் முழுமையாக இல்லை என்பது எனது கருத்து.

அதற்கு தனிய ஒரு கூட்டத்தை மட்டுமே குறை சொல்ல முடியாது.

 

தேவை : எவ்வாறு இழந்ததை மீட்பது? இருப்பதை தக்க வைப்பது என்ற அலசல், வடிவம், செய்முறை.

 

 

  • தொடங்கியவர்

அரசியலிலை இதெல்லாம் சகஜம் மணி . மந்தைகள் தொடருகின்றன . மேய்பர்களும் அவைகளை தொடருகின்றார்கள் .

 

வணக்கம் கோ அண்ணா!

 

மக்களின் தலையில் மிளகாய் அரைக்காத ஒரு தலைமை இன்றைய தேவை

ஏற்கனவே பறிகொடுத்தாகி விட்டது, ஆனால் முழுமையாக இல்லை என்பது எனது கருத்து.

அதற்கு தனிய ஒரு கூட்டத்தை மட்டுமே குறை சொல்ல முடியாது.

 

தேவை : எவ்வாறு இழந்ததை மீட்பது? இருப்பதை தக்க வைப்பது என்ற அலசல், வடிவம், செய்முறை.

 

வணக்கம் அகூதா!

 

இன்றைய தேவை கட்சியை முன்னிலைப்படுத்தாத மக்களை முன்னிலைப்படுத்தும் அரசியல்.. 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.