Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ் அரசியல் கைதிகள் குறித்த ஹக்கீமின் குற்றச்சாட்டு கேலிக்கூத்து! – கைதிகளின் உறவினர்கள் ஆழ்ந்த கவலை!!

Featured Replies

தமிழ் அரசியல் கைதிகள் குறித்த ஹக்கீமின் குற்றச்சாட்டு கேலிக்கூத்து! – கைதிகளின் உறவினர்கள் ஆழ்ந்த கவலை!!

 

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் நீதியமைச்சர் ரவூப் ஹக்கீமுக்கு துளியளவேனும் அக்கறையில்லை என்பதையே அவரின் கேலிக்கூத்தான கருத்துகள் வெளிப்படுத்துகின்றன என தமிழ் அரசியல் கைதிகளின் உறவினர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

நாடாளுமன்றில் கடந்த 22ஆம் திகதி நடைபெற்ற குற்றவியல் நடைமுறைக்கோவை (விசேட ஏற்பாடுகள்) சட்டமூலம் மீதான விவாதத்திற்கு பதிலளித்து உரையாற்றிய நீதியமைச்சர் ரவூப் ஹக்கீம்,

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமிழ்க் கைதிகள் தொடர்பில் இங்கு பேசினாலும் அவர்கள் குறித்தான தகவல்களை வழங்கத் தவறிவிட்டது என்று கூறினார்.

அமைச்சரின் மேற்படி கருத்தானது தமிழ் அரசியல் கைதிகளின் உறவுகளின் மனங்களில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருப்பதுடன் தமது உறவுகளுக்கு விரைவில் விடிவுகிட்டும் என நம்பியிருந்தவர்களின் எதிர்பார்ப்புகளையும் சிதைக்கும் வகையில் அமைந்துள்ளது.

தமிழ் அரசியல் கைதிகள் தொடர்பில் நடவடிக்கை எடுக்கவேண்டிய அரச தரப்பிடம் அதுவும் நீதியமைச்சரிடம் அவர்கள் குறித்தான தகவல்கள் நிச்சயம் இருக்கவேண்டும். நிலைமை இப்படியிருக்கையில், நீதியமைச்சர் கூட்டமைப்பு தகவல் தரவில்லை எனக் குற்றஞ்சாட்டுவதைக் கேலிக்கூத்து என்று சொல்லாமல் வேறு எப்படிக் கூறுவது என்றும் தமிழ்க் கைதிகளின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

தற்போதைய நீதியமைச்சர் ரவூப் ஹக்கீம் எதிர்க்கட்சியில் இருக்கும்போதுகூட நாம் எமது உறவுகள் தொடர்பிலான தகவல்களை அவரிடம் கையளித்திருக்கின்றோம். இவற்றையெல்லாம் மறந்து பொறுப்புவாய்ந்த ஒரு அமைச்சர் பொறுப்பற்ற விதத்தில் கருத்து வெளியிடுவது கவலையளிக்கின்றது.

குறிப்பாக, சிறுபான்மையினத்தைச் சேர்ந்த அமைச்சர் ஹக்கீம், இது விடயத்தில் கூடுதல் கவனம் செலுத்தாவிட்டால் அரச தரப்பில் வேறு யாரை நாம் நம்புவது

அதேவேளை, தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையைத் துரிதப்படுத்துவதற்கு விசேட நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டுள்ளன என்று அரசு உலகுக்கு அறிவித்தாலும் அதன் செயற்பாடுகள் ஆமை வேகத்திலேயே நடைபெறுகின்றன என்றும், இதே வேகத்தில் அவை இயங்கினால் தமது உறவுகள் இன்னும் எத்தனை வருடங்கள் சிறைவாசம் அனுபவிக்கவேண்டிவருமோ எனத் தெரியவில்லை என்றும் அவர்களின் உறவினர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

 

http://ponguthamil.com/shownewscontent.aspx?sectionid=1&contentid=4f0abe52-185f-4387-b660-279b8308add8

இஸ்லாமிய வெறியர்களிடம் நட்பு பாராட்டும் சுயநலச் சந்தர்ப்பவாதிகள் என்ன சொல்லப் போகிறார்கள்?

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலைக்காக நான் முயற்சிகளை மேற்கொண்டேன் US தூதரிடம் ஹக்கீம் விளக்கம்!
24 ஜனவரி 2013

 

 

 

பிரதம நீதியரசருக்கு எதிரான குற்றப்பிரேரணை மேற்கொள்ளப்பட்ட விதம் குறித்து அமெரிக்க விசனம் தெரிவிப்பதாகவும், அதேவேளை இலங்கையின் சட்டத்துறை சம்பந்தப்பட்ட கருத்திட்டங்களுக்கு தொடர்ந்தும் ஒத்துழைப்பதாகவும் இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் மிசேல் ஜே.சிசோன் நீதியமைச்சரிடம் தெரிவித்துள்ளதாக நீதியமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் மிசேல் ஜே. சிசோன் அமைச்சர் ரவூப் ஹக்கீமை நேற்று பிற்பகல் நீதியமைச்சில் சந்தித்து கலந்துரையாடிய போதே இதனைத் தெரிவித்தார்.

இந்த சந்திப்பின் போது அமெரிக்க தூதரக அரசியல் அதிகாரி வில்லியம் லின்ஸன்மீயர், அமெரிக்க உதவி திட்ட உயர் அதிகாரிகள் சிலரும் நீதியமைச்சின் செயலாளர் கமலினி டி சில்வாவும் கலந்து கொண்டனர்.

இதன்போது நல்லிணக்க ஆணைக்குழுவின் விதந்துரைகளைச் செயற்படுத்துவது தொடர்பில் உரிய கவனம் செலுத்தப்பட்டு வருவதாக அமைச்சர் ஹக்கீம் குறிப்பிட்டதாக குறித்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன் அமைச்சர் ஹக்கீமைப் பதவி விலகுமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் நாடாளுமன்ற விவாதத்தின் போது குறிப்பிட்டதைச் சுட்டிக்காட்டிய அமெரிக்க தூதுவர் அது தொடர்பில் கேள்வி எழுப்பியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு பதிலளித்த அமைச்சர், தடுப்புக் காவலில் உள்ள தமிழ் சிறைக்கைதிகளை விடுதலைச் செய்யும் விவகாரம் தமது அமைச்சோடு மாத்திரம் சம்பந்தப்பட்டது அல்லவென்றும் அதில் பாதுகாப்பு அமைச்சும், சட்ட மா அதிபர் திணைக்களமும், சிறைச்சாலைகள் சீர்திருத்த அமைச்சும் சம்பந்தப்பட்டிருப்பதாக கூறியதோடு அத்தகைய கைதிகள் தொடர்பிலான விசாரணைகளை துரிதப்படுத்தி குற்றமற்றவர்களை விடுவிப்பதற்காக தாம் முயறஙசிகளை மேற்கொண்டதாகவும் கூறினார்.

அத்துடன் தற்போது முன்னெடுகப்பட்டு வரும் முஸ்லிம் விரோத நடவடிக்கைகள் பற்றியும், தூதுவர் அமைச்சரிடம் கேட்டறிந்ததாகவும் குறித்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ள

பல் தமிழ் செ/globaltamilnewய்தி வலையமைப்பு

 

.

இதுவரை இருந்த முஸ்லீம் தலைமைகளில் மிகவும் சிங்கள விசுவாசம் கொண்டவராக ஹக்கீம் உள்ளார்  <_<

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.