Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

முள்ளிவாய்க்காலுக்கு பின் பெண்களை தலைமையாகக் கொண்ட குடும்பங்களின் வாழ்க்கைநிலமை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வன்னியில் இருந்து ச.பாரதி குளோபல் தமிழ்ச் செய்திகளுக்கு அனுப்பிவைத்த பதிவு இது

 

கிளிநொச்சி மாவட்டத்தின் பல கிராமங்களில் உள்ள கிராம அலுவலர்கள் போருக்கு முன்னர் காணிகளை கொள்வனவு செய்து வீடுகட்டி

வாழ்ந்து வந்த பலருடைய காணிகளை ஏற்கனவே காணியை விற்றவருக்கோ அல்லது காணிக்கு தொடர்பில்லாத மூன்றாம் நபருக்கோ பெற்றுக்கொடுக்கும் நோக்குடன் செயற்பட்டு வருவதாக பலரும் தெரிவிக்கின்றனர்.

 

இதிலும் அதிகளவு பாதிக்கப்படுபவர்கள் கணவனை இழந்த பெண்களும், சரணடைந்த போராளிகளதும், குடும்பத் தலைவர் இல்லாமல் வாழ்கின்ற பெண்களுமே. இவர்களே தமது குடும்ப வாழ்விற்கான வருமானத்தை ஈட்டவேண்டிய துர்ப்பாக்கிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இவர்கள் உழைக்க

வேண்டிய தேவையுடன், பிள்ளைகளை பராமரிக்க வேண்டியதுடன், சமூகத்தின் பிழையான கதைகளுக்குள் இருந்தும,;  தனிமையாக வாழும் பெண்களுடன் சேட்டை விடுவதற்கும், அவர்களுக்கு அவப்பெயரை ஏற்படுத்துவதற்குமென காத்திருக்கும் காமுகர் மத்தியிலும் தம்மை காத்துக் கொள்ள வேண்டிய நிலையில் உள்ளனர். இவர்களின் நிலை பற்றி யாரும் கண்டுகொள்வதாக தெரியவில்லை. பெண்கள்பற்றி வாய்கிழிய

பேசும் பெண் அமைப்புக்களும் வன்னியில் வாழும் பெண்களை தலைமையாகக் கொண்டபெண்கள் பற்றி சிந்;திக்கவில்லை. கூட்டமைப்பு அரசியல்வாதிகளும் இதுபற்றி பேசுவதில்லை. பொதுவாக எமது அரசியல்வாதிக்ள காணாமல் போனவர்கள் பற்றி இதுவரை

அரசாங்கம் காத்திரமான பதில் எதுவும் தரவில்லை என்றுதான் கூறுகிறார்கள். ஆனால் எந்தளவுக்கு இவர்கள் நல்லெண்ணத்துடன் செயற்படுகின்றார்கள் என்பதுதெளிவில்லை.

 

குடும்பத் தலைவன் என்பவன் குடும்பத்திற்கு வருமானத்தை ஈட்டித்தரும் பொறுப்பாளி. மனைவி குடும்பத்தை நிர்வகிக்கும் ஒரு

நிர்வாகி. இதுதான் எங்கள் வாழ்வுமுறை.

 

சர்வதேச பெண்கள் தினம். சர்வதேச சிறுவர் தினம், சர்வதேச சிறுமியர் தினம், சர்வதேச யுவதிகள் தினம் என்றெல்லாம் புதுபுது தினங்களை அறிமுகப்படுத்தும் சிறிலங்கா அரசாங்கம் ஏனோ தன்னால் கட்டவிழ்த்து விடப்பட்ட கொடியபோரினால் பாதிக்கப்பட்ட வடக்குகிழக்கு

தமிழ்பெண்கள் பற்றியோ, தமிழ் சிறுவர் சிறுமியர் பற்றியோ அக்கறை கொள்வதில்லை. பெண்களுக்கெதிரான வன்முறையும், சிறுவர் துஸ்பிரயோகமும் இடம் பெற்றுக்கொண்டுதான் இருக்கின்றது.

 

வாழ்வாதாரம் இன்றி அவர்கள் ஒரு நேரஉணவுக்காக துன்பப்பட்டு வாழ்கிறார்கள். சிறுவர். சிறுமியர் உணவும் இன்றி,உடையும் இன்றி,கல்வி வசதி இன்றி எதிர்காலம கேள்விக்குறியாக வாழ்கின்றனர். சர்வதேசத்திற்கு அரசு ஒரு பொய்யான பிரசாரத்தை மெற்கொண்டு சர்வதேச தினங்களை தாம் கடைப்பிடிப்பதன் மூலம் தனது நாட்டில்; ஒரு நல்லாட்சி நிலவுவதாக காட்டுகின்றது. இவை எல்லாம் எந்தளவிற்கு உண்மை என்பதை சர்வதேசம்

சுதந்திரமான வருகையுடன் தனது சுயநிகழ்ச்சி நிரலுக்கு ஏற்ப செயற்படுவதன் மூலம் ஓரளவு புரிந்து கொள்ளலாம்.

 

போரினால் தந்தையை, தாயை இழந்த குழந்தைகள் இனறு நம் நாட்டில் அவதிப்படுகின்றன. சரணடைந்த, காணாமல் போன உறவுகளின்

குழந்தைகள் எத்தனையோ வறுமையிலும், ஏக்கத்திலும் வாழ்கின்றன.

 

மனித நேயத்திற்கெதிரான குற்றங்கள் எந்த பொதுமக்கள் சமூகத்திறகும் எதிராக ஏவிவிடப்படும், பரந்துவிடப்படும் அல்லது

முறைமை ரீதியான தாக்குதல், கொலைக் குழுவினரை கொலை செய்தல், அடிமையாக்குதல்,நாடுகடத்துதல் அல்லது கட்டாய சனத்தொகை மாற்றியனுப்புதல் ,சிறைக்குத்தள்ளுதல்.சித்திரவதை, வன்புணர்ச்சி, அல்லது ஏனைய பாரதூரமான பாலியல்வன்முறைகள், கொடூரம் செய்தல், நிர்ப்பந்திக்கப்பட்டு காணாமல் போகச்செய்தல்,ஒதுக்குதல், ஏனைய மனிதநேயமற்ற செயற்பாடுகள் உட்பட்டவை.

 

கட்டாயமாக்கப்பட்ட காணாமலாக்கச் செய்தல் என்பது கைதுசெய்தல் என்பது கைது செய்தல், தடுத்து வைத்தல், ஆட்களைக்

கடத்தல், அதிகாரிகளினதோ அல்லது அரசாங்கத்துடனோ, அரசியல் நிறுவனத்தினது ஆதரவுடனே இவ்வாறு செய்து அவ்வாறு செய்யப்பட்ட செயல் ஏற்றுக்கொள்ளப்படாதுமறுக்கப்பட்டு, அவ்வாறான ஆட்களுக்கு என்ன நடந்தது அல்லது எங்கு இருக்கிறார்கள் என்பது குறித்து நீண்டகாலமாக, அவர்களின் பாதுகாப்பிலிருந்து நீக்கும் எண்ணத்துடன் சட்டத்தின் பாதுகாப்பில் இருந்து நீக்கும்

நோக்கத்துடன் அத்தகவல்களைக் கொடுக்காது விடல்'

 

மேற்குறித்த மூலம் ஐஊஊ நியதிச்சட்டம் கூறுகின்றது. சர்வதேச குற்ற விசாரணைகளின் மூலம் இனக்கொலை, மனிதநேயத்திற்கெதிரான  குற்றங்கள் மற்றம் யுத்தக் குற்றங்கள் தொடர்பில்அரசு பொறுப்புக்கூறாமல் இருப்பது சர்வதேசத்தின் தலையீட்டை வலுவாக்கும்

செயற்பாடாக அமையும்.

 

வன்னியில் இருந்து ச.பாரதி குளோபல் தமிழ்ச் செய்திகளுக்கு அனுப்பிவைத்த பதிவு இது:-

 

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/87933/language/ta-IN/article.aspx

ஒரு அரசியல் தீர்வு கிடைக்கும்வரை எமது மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவது என்பது சவால் நிறைந்த விடையம். அடக்குமுறை இராணுவத்தையும் மீறி புலிகள் என்ற முத்திரையும் பெறாமல் உதவ வேண்டிய கட்டாயம் உண்டு.

 

 

பகிர்விற்கு நன்றிகள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.