Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வயது முதிர்க் குழந்தைகள்!!

Featured Replies

untitled.JPG

 

வெறிச்சோடிப் போயிருந்த

அந்த வெற்றுலகத்தில்...
அன்புக்கான ஏக்கம் மட்டும்
தலைவிரித்து ஆடிக்கொண்டிருந்தது!
 
அந்த மண்டலத்தை
என்னவென்று அழைப்பது?
மனிதம் வாழும்
கூடு என்றா?
முதிர்ந்த குழந்தைகளின்
கோவில் என்றா?
பெற்றவருக்காக பிள்ளைகள் கட்டியமைத்த
தனிக்குடித்தன கொட்டகை என்றா?
புறக்கணிக்கப்பட்ட புண்பட்ட
நெஞ்சங்களின் சரணாலயம் என்றா?
 
அங்கே...
நடக்கவே முடியாமல்,
நான்குச் சக்கர வண்டியில்
நகர்ந்துக்கொண்டிருந்தால் ஒருத்தி!
தடுக்கி விழுவோமா என்ற அச்சத்தில்
தாங்கிப் பிடிக்க நாதியற்று,
தடியோடு தள்ளாடிக்கொண்டிருந்தார் ஒருவர்!
 
இவர்களைப் போலவே..
அங்கே..
அறுபதுக்கும் மேற்பட்டவர்கள்...
கூண்டுக்கிளிகளாகவும்,
குற்றவாளிகளாகவும்..
 
நன்றியில்லா நாய்களை
சேய்களாய் ஈன்றெடுத்த
தவறைத் தவிர,
வேறேதும் செய்திடவில்லை...
அந்த வயது முதிர்ந்தக் குழந்தைகள்!!
 
அந்தப் பொக்கை வாய்களில்,
பொன்னைவிட மேலாக
மின்னிய புன்னகைகள்!
தடவிக் கொடுக்கும்போது
தன்னிலையை மறந்து,
தமக்கென யாருமில்லையென
ததும்பி வரும் கண்ணீர்த்துளிகள்!
 
ஆடிப்பாடும் போது மட்டும்
அவர்களை மறந்துப்போனார்கள்!
அன்பாய் பேசும்போது,
அவர்தம் பிள்ளைகளின் நினைவுகளை
அணைத்துக்கொண்டார்கள்!
 
"தவமிருந்துப் பெற்றேன், தங்கமாய் காத்தேன்
தவழும் வயதில் தாங்கிப் பிடித்தேன்..
தரணியில் உயர்ந்திட தட்டியும் கொடுத்தேன்...
தாய் என் வளர்ப்பில் தவறேதும் இல்லை"
இது அங்கிருந்த முனியம்மாளின் முனுகள்.
 
"நோய்வாய்ப்பட்டு நொந்து போயிருந்தேன்..!
என் மகளோ..
நோய் பற்றிக் கொள்ளுமென பயந்து போயிருந்தாள்!
கூனிக் குறுகி,
அடக்கி அமிழ்ந்து
இருமினேன்; தும்மினேன்!
இனி..
சுதந்திரமாய் இருமலாம்..சுதந்திரமாய் தும்மலாம்..
ஆனால் இங்கில்லை,முதியோர் இல்லத்தில்
என்று அனுப்பிவைத்தாள்!
அவசரமாய் விட்டுச் சென்றதால்..
பாதை மறந்து போனாள் போலும்..
இன்னமும் வரவே இல்லை!"
இது கருப்புசாமி தாத்தாவின் கண்ணீர் வடித்த கதை..
 
இப்படித்தான்..
என் பிறந்தநாள் அவியப்பத்தில்
ஏற்றி வைத்த மெழுவர்த்திகள் போல...
கருகி கருகிப் போன அவர்களின் கதையும்..
உருகி உருகிப் போன என் மனமும்...!
 
அந்த
திறந்தவெளி சிறைச்சாலையில்
எங்கும் இரைந்துக் கிடந்தன
குமுறல்கள்...
அங்காங்கே சிதறிக்கிடந்தன
அவலங்கள்...
அன்பு மட்டுமே
அவற்றிற்கு நிவாரணமாக...!
 
அந்த முதிர்ந்தப் பிஞ்சுக் குழந்தைகளின்
அன்பு வேண்டுகோள் மட்டும்
என் மனதை கொந்தி எடுத்து கூர் போட்டது...
மீளப் பெறவியலாத அந்த
இறுதி வசனம்..
 
"உன் பிறந்த நாளுக்கு மட்டும்
வந்து போகாதே..
எங்கள் இறந்த நாளுக்கும் வந்து போ"
 
கேட்ட பொழுதில் கண்ணீரை மட்டுமே
பதிலாய் வடிக்க முடிந்தது..
மனிதத்தை இழந்து விட்ட
மிருகங்களை கடிந்துக் கொண்டது
என் மனம்...
 

Edited by தமிழீழன்

  • கருத்துக்கள உறவுகள்

இது கவிதையா? இல்லை, எம்மைக் கண்ணே பொன்னே என்று தோளிலும் மார்பிலும் தூக்கி வளர்த்தவர் விடும் கண்ணீர்த் தூறலா? தினம் தினம் இக் கண்ணீர்த் தூறலில் நனைவதால் எனக்குள்ளும் இப் பெற்றவர் விடும் மூச்சுக் காற்றின் வெப்பம்.... முனகல்களின் ஆதங்கம்... ஏமாற்றத்தின் ஏக்கம்.. எதிர்பார்ப்பின் தாபம்..என எத்தனையோ உணர்வுகள். மழலைகளாக மாறிப்போயிருக்கும் இம் முதிய குழந்தைகளின் தேவைகளை நிறைவு செய்வது என் மனதுக்குப் பிடித்த சேவை இம் முதிய குழந்தைகளைப் பார்க்கும் போதும் பழகும் போதும் அவர்களின் மன எக்கங்களைப் பகிரும் போதும் எனக்கிருக்கும் மனநிறைவு வேறெதிலும் இல்ழல வீட்டில் அடிமையாகக் கிடப்பதிலும் இக் காப்பகங்களில் சுதந்திரமாய் இருப்பது அவாகளைப் பொறுத்தவரை சுகமானது என்பது என் எண்ணம் அடுத்த தலைமுறை அதற்கு ஆயத்தமாகிவிட்டோம் எம் பெற்றவர்கள் பாவம் அவர்களுக்கு இது எதிர்பார்க்காத தண்டனை நல்லதொரு கவிதை தந்த தமிமீழனுக்கு பாராட்டுக்கள்

நல்ல அர்த்தமுள்ள கவிதையை இங்கு இணைத்தமைக்கு நன்றி தமிழீழன் அண்ணா.

 

வயது முதிர்ந்தவுடன் மனிதர்கள் ஒரு குழந்தைத்தன்மையை பெறுகிறார்கள்.

 

உண்மையில் பெற்றவர்களின் துயர் பிள்ளைகளுக்கு உடனே புரிவதில்லை. புரியும் போது பெற்றவர்கள் இருக்கமாட்டார்கள் அல்லது பெற்றவர்களுக்கு ஏதும் செய்யும் சந்தர்ப்பங்கள் அனைத்தும் கடந்து போய் விடும்.


இன்று பெற்றோரை துரத்தி விடுவோரை நாளைக்கு அவர்கள் பிள்ளைகளும் துரத்தி விடும் சந்தர்ப்பம் உள்ளது. ஆனால் வெளிநாட்டில் ஓரளவு சிறுவயதிலிருந்து/ நடுத்தர வயதிலிருந்து வாழ்வோருக்கு பிள்ளைகள் துரத்தி விட்டால் தாக்கம் குறைவு. சமாளித்து வாழ்வார்கள். தாயகத்தில் என்றால் மனதில் தாக்கம் மிக மிக அதிகம்.

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு தனி மனித வாழ்வின் நீட்சியே சமூக வாழ்வு என்பார்கள்!

 

தனி மனிதர்களின்  'அதீத சுயநலத்தின்' கண்ணாடி விம்பங்களே, இப்படியான ஆதரவில்லாத பெற்றோர்!

 

இணைப்புக்கு நன்றிகள், தமிழீழன்!

Edited by புங்கையூரன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.