Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விஸ்வரூபம் மீதான தடையை நீக்கியது ஐகோர்ட்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

விஸ்வரூபம் மீதான தடையை நீக்கியது ஐகோர்ட்

 

சென்னை: விஸ்வரூபம் படம் மீது தமிழக அரசு விதித்த தடையை நீக்கி சென்னை ஐகோர்ட் உத்தரவு பிறப்பித்தது. இன்று நடந்த இறுதிக்கட்ட விசாரணைக்கு பின்னர், வழக்கை விசாரித்த நீதிபதி வெங்கட்ராமன் சுமார் இரவு 10 மணியளவில் கமல் தொடர்ந்த வழக்கில், படத்தின் மீதான தடையை நீக்கி உத்தரவு பிறப்பித்தார்.

நடிகர் கமல் நடித்த, சர்ச்சைக்கு உள்ளான, விஸ்வரூபம் படத்தை, தமிழக தியேட்டர்களில் திரையிட, 15 நாட்களுக்கு, மாவட்ட கலெக்டர்கள், தடை விதித்தனர். இதை எதிர்த்து, சென்னை ஐகோர்ட்டில், "ராஜ்கமல் பிலிம்ஸ்' சார்பில், மனு தாக்கல் செய்யப்பட்டது. மனுவை, நீதிபதி வெங்கட்ராமன் விசாரித்தார். படத்தை, 26ம் தேதி, திரையிட்டு காட்டும்படி உத்தரவிட்டு, விசாரணையை, 28ம் தேதிக்கு, நீதிபதி வெங்கட்ராமன் தள்ளி வைத்தார். அதன்படி, 26ம் தேதி, இப்படம், சென்னை வடபழனியில் உள்ள ஒரு ஸ்டூடியோவில், நீதிபதிக்கு திரையிட்டுக் காட்டப்பட்டது. இதையடுத்து, இந்த வழக்கு, நீதிபதி வெங்கட்ராமன் முன், நேற்று விசாரணைக்கு வந்தது. ராஜ்கமல் பிலிம்ஸ் சார்பில், மூத்த வழக்கறிஞர் பி.எஸ்.ராமன், "மாவட்ட கலெக்டர்கள் தடை விதித்து, தியேட்டர்களுக்குப் பிறப்பித்த உத்தரவின் நகல்கள், எங்களுக்கு கிடைத்துள்ளன. இதை எதிர்த்து நாங்கள் மனு தாக்கல் செய்ய உள்ளோம்,'' என்றார். இதற்கான, மனுக்களை தாக்கல் செய்யுமாறும், விசாரணையை இன்று தள்ளிவைப்பதாகவும், நீதிபதி வெங்கட்ராமன் தெரிவித்தார். "இந்தப் பிரச்னையை சுமுகமாகத் தீர்க்க, அனைத்து முயற்சிகளையும் எடுக்கலாம். தனி நபர் உரிமைகளை விட, நாட்டின் ஒற்றுமையே மிகவும் முக்கியம். உங்கள் தரப்பிலோ, எதிர் தரப்பிலோ எடுக்கப்படும் எந்த நடவடிக்கையும், நாட்டின் ஒற்றுமைக்கு குந்தகம் ஏற்படுத்தக் கூடாது' என, நீதிபதி கூறினார்.



இந்நிலையில், இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது வாதம் செய்த தமிழக அரசு வக்கீல் நவநீத கிருஷ்ணன், விஸ்வரூபம் திரைப்படத்திற்கு தணிக்கைச் சான்றிதழ் வழங்கப்பட்டதில் பெரும் முறைகேடு நடந்துள்ளதாக தெரிவித்தார். இப்படத்திற்கு தணிக்கைச் சான்றிதழ் அளித்த குழுவைச் சேர்ந்தவர்கள் யாரும் மத்திய அரசால் நியமிக்கப்பட்டவர்கள் அல்ல என்றும், இந்த படத்தின் தணிக்கைச் சான்றிதழே முறைகேடானது என்றும் வாதிட்டார்.

இதைத்தொடர்ந்து பேசிய கமல் தரப்பு வக்கீல் ராமன், விஸ்வரூபம் படத்திற்காக கமல் இதுவரை தான் சம்பாதித்த பணம் அனைத்தையும் கொட்டியுள்ளார். இப்படத்திற்காக அவர் முழுமையாக உழைத்துள்ளார். சென்சார் போர்டு அனுமதியளித்து விட்ட நிலையில், தற்போது மாநில அரசு தடை செய்வது சட்டவிரோதமானது என்றும் தெரிவித்தார். இப்படம் கேரளா மற்றும் ஆந்திராவில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. அப்படியிருக்கும் போது தமிழகத்தில் மட்டும் ஏன் வெளியிடக்கூடாது என்றும் கேள்வி எழுப்பினார். தமிழகத்தில் ஒரு படத்தை எதிர்த்து 31 மாவட்டங்களில் 144 தடை சட்டம் விதிக்கப்பட்டுள்ளது. அப்படி தடைவிதிக்கும் அளவுக்கு சட்டம், ஒழுங்கு கெட்டு விட்டதா எனவும் கேள்வி எழுப்பினார்.



இதற்கு பதிலளித்த தமிழக தரப்பு வக்கீல், விஸ்வரூபம் என்ற படத்தை கமல், வினியோகஸ்தர்களுக்கு விற்றுவிட்டார். அதன் பின்னர் இப்படம் தொடர்பாக எந்த உரிமையும் தற்போது அவரிடம் இல்லை. எனவே இப்படத்திற்கு விதிக்கப்பட்டுள்ள தடைக்கு எதிராக வழக்கு தொடரும் உரிமை கமலுக்கு இல்லை என்றும், இப்படம் சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கும் வகையிலும், மத நல்லிணக்கத்துக்கு எதிராக உள்ளதால் அரசு இந்த தடையை விதித்துள்ளது என்று கூறினார். பின்னர் வழக்கு விசாரணை முடிவடைந்ததை தொடர்ந்து,இந்த வழக்கின் மீதான விசாரணை முடிவடைந்ததை தொடர்ந்து இரவு 8 மணிக்கு தீர்ப்பு வழங்கப்படும் என நீதிபதி அறிவித்திருந்தார். இந்நிலையில் தீர்ப்பு இரவு 10 மணிக்கு தள்ளிவைக்கப்பட்டது.

விஸ்வரூபம் படத்திற்கு தடை விதித்து மாவட்ட கலெக்டர்கள் விதித்த தடையை சென்னை ஐகோர்ட் நீக்கியது. . இன்று நடந்த பல கட்ட விசாரணைக்கு பின்னர், வழக்கை விசாரித்த நீதிபதி வெங்கட்ராமன் சுமார் இரவு 10 மணியளவில் கமல் தொடர்ந்த வழக்கில், படத்தின் மீதான தடையை நீக்கி உத்தரவு பிறப்பித்தார்.

 

http://www.dinamalar.com/News_Detail.asp?Id=636338

அப்பாடா எனி நான் நிம்மதியா பாத்தூரும் போவன்

யப்பா!! எங்க போனாலும் இதே பேச்சு.. கேட்டு கேட்டு காது தீஞ்சு போச்சு !! பேசி பேசி வாயும் ஓய்ஞ்சு போச்சு !!

 

இனிமேலாவது விடுவாங்களா நிம்மதி மூச்சு !! :)

Edited by ஆதித்ய இளம்பிறையன்

  • கருத்துக்கள உறவுகள்

கமல் அரசியலில் அதிகம் மூக்கை நுழைப்பதில்லை.

அதனால் இங்கே அரசியல் விளையாடவில்லை போல் இருக்கின்றது.

 

நீதிபதி ரொம்ப நல்லவராக இருக்கின்றார். 

banned again...

banned again...

 

'விஸ்வரூபம்' திரைப்படத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை

 

உலக நாயகன் கமல்ஹாஸன் தயாரித்து நடித்துள்ள 'விஸ்வரூபம்' திரைப்படத்துக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் குழு இன்று தடை விதித்துள்ளது.

 

 

நடிகர் கமல்ஹாசன் நடித்த விஸ்வரூபம் திரைப்படத்தை தமிழகம் முழுவதும் திரையிடலாம் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி வெங்கட்ராமன் நேற்று இரவு 10.20க்கு தீர்ப்பு வழங்கியிருந்தது.

இதனையடுத்து தமிழக அரசினால் இன்று காலை மேற்படி திரைப்படத்துக்கு தடை கோரி மேல் முறையீட்டு மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு உயர்நீதிமன்ற நீதிபதிகள் குழுவினால் இன்று பிற்பகல் 2.30 மணிக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

 

உரிய விசாரணைகளை அடுத்து தமிழக அரசின் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் குழு, தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்ததுடன் திரைப்படத்தை திரையிடவும் தடை விதித்தது. 

இத்திரைப்படத்துக்கு தமிழக அரசு ஏற்கனவே தடை விதித்திருந்தது. இதை எதிர்த்து கமல் தரப்பு உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது. இதை விசாரித்த நீதிபதி வெங்கட்ராமன் நேற்றிரவு 10.20 மணிக்கு திரைப்படத்துக்கு விதிக்கப்பட்ட தடையை ரத்து செய்து உத்தரவிட்டார்.

 

இதையடுத்து நேற்று இரவு 11 மணிக்கு உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி எலிபி தர்மராவின் வீட்டுக்குச் சென்ற அரசு வழக்கறிஞர்கள், திரைப்படத்துக்கு தடை விதிக்கக் கோரி மேன்முறையீட்டு மனுவொன்றைத் தாக்கல் செய்யப் போவதாகத் தெரிவித்தனர். இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி, நாளை (இன்று) காலை இந்த வழக்கை விசாரிப்பதாக அறிவித்தார்.

இந்நிலையில், இந்த திரைப்படத்தின் மீதான தடை நீக்கத்தை எதிர்த்து இன்று காலை மேல் முறையீடு செய்தது தமிழக அரசு. இதை ஏற்று அரசு வழக்கறிஞர் நவநீத கிருஷ்ணன் தலைமையிலான குழு காலை 10.30 மணிக்கு முதல் வழக்காக இதனை பதிவு செய்தது. பின்னர் வழக்கு பகல் 2.30 மணிக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

 

நீதிபதி எலிபி தர்மராவ், நீதிபதி அருணா ஜெகதீசன் ஆகியோர் அடங்கிய நீதிபதிகள் குழு, இந்த வழக்கை விசாரித்தது. பின்னர் நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், படத்துக்கு தடையை நீக்கி தனி நீதிபதி வெங்கட்ராமன் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்தனர். தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று விஸ்வரூபம் படத்துக்கான தடையை நீட்டித்து உத்தரவிட்டனர்.

இந்த வழக்கு தொடர்பில், எதிர்வரும் திங்கட்கிழமைக்குள் தமிழக அரசு விரிவான பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்ட நீதிபதிகள், இறுதி விசாரணையை 6ஆம் திகதிக்கு ஒத்தி வைத்தனர்.

 

http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/57988-2013-01-30-10-19-20.html

  • கருத்துக்கள உறவுகள்

விஸ்வரூபம் படத்தின் சர்ச்சை பற்றிய ஒரு சிறு பகுதி ஜூனியர் விகடன் இதழில் இருந்து 

பிரச்சனைக்கு காரணம் தி .மு .க நெருக்கமா ?
--------------------------------------------------------------------------------------
செம்சார் போர்டில் அசன் முகம்மது ஜின்னா என்ற முஸ்லிம் ஒருவரே படத்தை பார்த்து ஓகே செய்து இருக்கிறார் அப்படி இருக்கும்போது படத்தை எதிர்ப்பது எந்த வகையில் நியாயம் ? என்று கமல் தரப்பில் கேட்கிறார்கள் .இந்த ஜின்னா யார் தெரியுமா ? கடந்த சட்டசபைத் தேர்தலில் ஆயிரம் விளக்குத் தொகுதியில் அதிமுகவின் வளர்மதியை அவர்களை எதிர்த்து திமுக சார்பில் போட்டியிட்டவர் .
மனித நேய மக்கள் கட்சி எம்.எல்.ஏ .வான ஜவாஹிருல்லா ."முஸ்லிம்களுக்கு எதிரான காட்சிகள் விஸ்வரூபம் படத்தில் இருப்பதாக செய்தி வந்ததும் அதற்க்கு கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டோம் ..உடனே ,கமல் சார்பில் என்னிடம் பேசியவர் ஜின்னா தான் . 'படத்தின் டிரைலரைப் பார்த்து விட்டு எதிர்க்க வேண்டாம் .கமல் பேசத் தயாராக இருக்கிறார் ' என்றார் . படத்தை சென்சார் செய்வதோடு ஜின்னாவின் வேலை முடிந்து விட்டது .அவர் எதற்காக கமலுக்கு ஆதரவாகப் பேச வேண்டும் ? அப்படிப்பட்டவர் எப்படி படத்தை சென்சார் செய்திருப்பார் ? என்கிறார்

திமுக வுடன் கமல் காட்டிய நெருக்கம் தான் விவகாரம் விஸ்வரூபம் எடுக்க காரணம் என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள் ."படத்தின் சேலம் உரிமத்தை உதயநிதி ஸ்டாலின் வாங்கி இருக்கிறார் .சென்சார் போர்டில் திமுகவைச் சேர்ந்த ஜின்னா , ப. சிதம்பரம் நூல் வெளியீட்டு விழாவில் கருணாநிதியோடு கமல் மேடை ஏறியது இவரை எல்லாம் ஆளும் கட்சி ரசிக்கவில்லை அதன் பிறகு தான் ,கமலுக்குப் பிரச்சனைகளும் ஆரம்பம் ஆனது " என்கிறார்கள் .

ஜின்னா என்ன சொல்கிறார் ? " எந்த மதத்தின் உணர்வும் புண்படுத்தப்படுவதை தணிகைத் துறை விதிமுறைகள் அனுமதிப்பது இல்லை . வழி காட்டும் முறைகளின்படி தான் தணிக்கை நடக்கிறது .சமுதாயத்தின் அமைதியைக் குலைக்ககூடிய வகையிலோ ,வக்கிரம் மற்றும் ஆபாசம் நிறைத்வையாகவோ காட்சிகள் இருப்பின் அவை நீக்கப்படுகின்றன .ஒரு படத்துக்கான தணிக்கை முறைகளில் அதில் பங்கு பெறும் உறுப்பினர்களின் பெரும்பான்மை முடிவே இறுதியானது .நான் என் கடமையில் இருந்து ஒரு போதும் தவறியது இல்லை ,இஸ்லாத்துக்கு எதிராக மட்டும்மல்ல ,எந்த மதத்துக்கும் எதிரான தவறான உள்நோக்கம் கொண்ட சித்திரிப்புகளை பலமாகவே எதிர்த்து இருக்கிறேன் " என்றார் . 

சேட்டிலைட் நிழல் யுத்தம் !
--------------------------------------------------------
விஸ்வரூபம் சேட்டிலைட் உரிமம் முதலில் ஒரு டி.வி க்கு விற்கப்பட்டது அதன் பிறகு தான் , டி.டிஹெச் ல் 'விஸ்வரூபம்' வெளியாகும் என்பதை கமல் அறிவித்தார் ,இதை நீங்கள் ஏன் முன்பே சொல்லி இருந்தால் ,நாங்கள் இன்னும் விலையைக் குறைத்துக் கேட்டு இருப்போம் ' என்று டிவி தரப்பில் சொல்லப்பட்டதாம் .விலைக் குறைக்கச் சொல்லி பேரம் நடந்து இருக்கிறது ..கமல் தரப்பிலோ ,இதைவிட அதிக விலைக்கு வாங்க வேறு சேனல் தயாராக இருக்கிறது உங்களுக்கு விருப்பம் இல்லை என்றல் விடுங்கள் ' என்று சொன்னதோடு ,வேறு சேனலுக்கும் படத்தை விற்று விட்டதாம் ." சேட்டிலைட் உரிமத்துக்கான நிழல் யுத்தமே , விஸ்வரூபம் படத்துக்கு எழுந்த தடை " என தெலுங்கு நடிகர் பவன் கல்யான் பகிரங்கமாகவே சொல்லி இருக்கிறார் .

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.