Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தினமணி ஆசிரிய தலையங்கம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு சர்வதேச உதவிகள் கிடைக்க வேண்டும்: தமிழக 'தினமணி' நாளேடு வலியுறுத்தல் இலங்கையில் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு மனிதாபிமான அடைப்படையில் சர்வதேச உதவிகள் கிடைக்கச் செய்ய வேண்டும் என்று தமிழ்நாட்டிலிருந்து வெளியாகும் 'தினமணி' நாளேடு வலியுறுத்தியுள்ளது.

தினமணி நாளேட்டில் இன்று புதன்கிழமை எழுதப்பட்டுள்ள தலையங்கம்:

நோர்வே அரசின் முயற்சியால் இலங்கை அரசுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையே நடைபெற்று வந்த சமரச முயற்சிகளில் முட்டுக்கட்டை ஏற்பட்டு பேச்சுவார்த்தை தொடர முடியாமல் போனதை அடுத்து இலங்கையில் பதற்ற சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

இலங்கையில் கண்ணி வெடித் தாக்குதலில் பலர் பலி...

தமிழர்கள் வசிக்கும் பகுதிகளில் இலங்கை ராணுவத்தினர் குண்டு வீசித் தாக்குதல்...

தேவாலயத்தில் புகுந்து துப்பாக்கிச் சூடு...

என்று அடுத்தடுத்து நிகழ்ந்து வரும் சம்பவங்கள், இலங்கையில் கடந்த காலத்தில் ஏற்பட்ட போர்ச்சூழலை மீண்டும் கொண்டு வந்து விடுமோ என்ற கவலையை ஏற்படுத்தியுள்ளது.

இதற்கிடையே இலங்கையின் வட-கிழக்குப் பகுதியில் உள்ள தமிழர்கள் தங்களது உயிருக்குப் பயந்து, படகுகள் மூலம் தமிழகத்துக்கு அகதிகளாக வருவது தொடர்கிறது.

இலங்கையில் அமைதிக்கு வழி காண இந்திய அரசு ஆவண செய்ய வேண்டும் என்று திமுக கூட்டணிக் கட்சிகளின் கூட்டத்தில், தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இலங்கையில் அமைதிநிலை திரும்ப இந்திய அரசு உரிய முயற்சிகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இலங்கைத் தமிழரின் தற்போதைய உண்மை நிலையை அறிய இந்தியாவிலிருந்து அனைத்துக் கட்சி எம்பிக்கள் குழுவை அனுப்ப வேண்டும் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார்.

திமுக மற்றும் தோழமைக் கட்சிகளின் கோரிக்கையை அடுத்து, இப்பிரச்சினை குறித்து கலந்து பேசுவதற்காக தில்லியிலிருந்து பிரதிநிதியை அனுப்புவதாக பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார்.

இலங்கை இனப் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதில் இந்தியா தலையிட்டதும், இந்திய அமைதிப்படை இலங்கைக்குச் சென்று திரும்பியதும் கடந்த கால நிகழ்வுகள்.

ராஜீவ் கொலைச் சம்பவத்துக்குப் பிறகு இலங்கைப் பிரச்சினையிலிருந்து விலகியே நிற்கும் இந்திய அரசு தற்போதைய நிலையில் என்ன நடவடிக்கையை மேற்கொள்ளப் போகிறது என்பது மிகப்பெரிய கேள்விக்குறி.

இலங்கைப் பிரச்சினையை அண்டை நாட்டுப் பிரச்சினையாகக் கருதி நாம் ஒதுங்கிவிட முடியாது.

ஏனெனில் இலங்கையிலிருந்து தமிழகத்துக்கு அகதிகளாகத் தஞ்சம் வருபவர்கள் தமிழர்கள். அவர்கள் எண்ணிக்கை உயரும் பட்சத்தில் இங்கு பிரச்சினைகள் மேலும் தீவிரமாகும்.

அகதிகள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளவர்களின் நிலைமை குறித்து இரு தமிழக அமைச்சர்கள் நேரடியாகப் பார்வையிட்டு வந்துள்ளனர். அவர்களது அறிக்கையின் அடிப்படையில் அகதிகளின் நல்வாழ்வுக்காக உரிய நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும்.

இலங்கைப் பிரச்சினை தலைதூக்கும்போதெல்லாம், கடலில் மீன் பிடிக்கச் செல்லும் இந்திய மீனவர்கள் அந்நாட்டுக் கடற்படையால் தாக்கப்படுகின்ற நிலைமைக்கு முற்றுப்புள்ளி வைக்க மத்திய அரசு உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

இதற்கிடையில் விடுதலைப் புலிகளுக்கும் இலங்கை அரசுக்கும் இடையே தொடர்ந்து போர்நிறுத்த ஒப்பந்தத்தை செயல்படுத்தச் செய்ய வேண்டும்.

மீண்டும் அமைதிப் பேச்சுவார்த்தையை தொடரச் செய்வதற்கு இரு தரப்பினரையும் இணங்கச் செய்யும் முயற்சியில் ஈடுபட வேண்டும்.

பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு மனிதாபிமான அடைப்படையில் சர்வதேச உதவிகள் கிடைக்கச் செய்ய வேண்டியதும் முக்கியம்.

போர் மூலம் எந்தத் தீர்வையும் பெற முடியாது என்பதை கடந்த கால வரலாறுகள் காட்டுகின்றன.

முறிந்து போன பேச்சுவார்த்தையை மீண்டும் தொடருவதன் மூலம் பிரச்சினைக்குத் தீர்வு காண முடியும்.

இந்தவகையில் பேச்சுவார்த்தை நடத்த வருமாறு விடுதலைப் புலிகளுக்கு இலங்கை அரசு விடுத்துள்ள அழைப்பு சற்று நம்பிக்கையூட்டுவதாக உள்ளது என்று தினமணியின் தலையங்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

- புதினம்

இப்படியான நிலைப்பாடுகளை ஏன் சுனாமியின் பின்னரான புனருத்தான மீள்குடியமர்விற்குகான கட்டமைப்பிற் கான பேச்சுவார்த்தையின் போது கொண்டிருக்கவில்லை?

இன்று போர்சூழலில் எப்படி மனிதாபிமான உதவிகளை வழங்குவது அதுவும் சர்வதேச உதவியுடன்? இப்படி நேரத்திற்கு ஒவ்வாத வேண்டுகோள்கள் வலியுறுத்தல்களில் என்ன பயன்?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை நெருக்கடியில் தற்போதைய நிலையில் இந்திய அரசு என்ன நடவடிக்கையை மேற்கொள்ளும்?

நோர்வே அரசின் முயற்சியால் இலங்கை அரசுக்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையே நடைபெற்று வந்த சமரச முயற்சிகளில் முட்டுக்கட்டை ஏற்பட்டு பேச்சுவார்த்தை தொடர முடியாமல் போனதை அடுத்து இலங்கையில் பதற்ற சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இலங்கையில் கண்ணிவெடித் தாக்குதலில் பலர் பலி.. தமிழர்கள் வசிக்கும் பகுதிகளில் இலங்கை இராணுவத்தினர் குண்டு வீசித் தாக்குதல்... தேவாலயத்தில் புகுந்து துப்பாக்கிச் சூடு.... என்று அடுத்தடுத்து நிகழ்ந்து வரும் சம்பவங்கள், இலங்கையில் கடந்த காலத்தில் ஏற்பட்ட போர்ச் சூழலை மீண்டும் கொண்டு வந்து விடுமோ என்ற கவலையை ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையே இலங்கையின் வட, கிழக்குப் பகுதியில் உள்ள தமிழர்கள் தங்களது உயிருக்குப் பயந்து, படகுகள் மூலம் தமிழகத்துக்கு அகதிகளாக வருவது தொடர்கிறது. இலங்கையில் அமைதிக்கு வழி காண இந்திய அரசு ஆவன செய்ய வேண்டும் என்று தி.மு.க. கூட்டணிக் கட்சிகளின் கூட்டத்தில், தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இலங்கையில் அமைதி நிலை திரும்ப இந்திய அரசு உரிய முயற்சிகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்று அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா வேண்டுகோள் விடுத்துள்ளார். இலங்கைத் தமிழரின் தற்போதைய உண்மை நிலையை அறிய இந்தியாவிலிருந்து அனைத்துக் கட்சி எம்.பி.க்கள் குழுவை அனுப்ப வேண்டும் என்று ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார். தி.மு.க. மற்றும் தோழமைக் கட்சிகளின் கோரிக்கையை அடுத்து இப் பிரச்சினை குறித்து கலந்து பேசுவதற்காக டில்லியிலிருந்து பிரதிநிதியை அனுப்புவதாக பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார். இலங்கை இனப் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதில் இந்தியா தலையிட்டதும், இந்திய அமைதிப் படை இலங்கைக்குச் சென்று திரும்பியதும் கடந்த கால நிகழ்வுகள். ராஜீவ் கொலைச் சம்பவத்துக்குப் பிறகு இலங்கைப் பிரச்சினையிலிருந்து விலகியே நிற்கும் இந்திய அரசு தற்போதைய நிலையில் என்ன நடவடிக்கையை மேற்கொள்ளப் போகிறது என்பது மிகப் பெரிய கேள்விக்குறி.

இலங்கைப் பிரச்சினையை அண்டை நாட்டுப் பிரச்சினையாகக் கருதி நாம் ஒதுங்கி விட முடியாது. ஏனெனில், இலங்கையிலிருந்து தமிழகத்துக்கு அகதிகளாகத் தஞ்சம் வருபவர்கள் தமிழகர்கள். அவர்கள் எண்ணிக்கை உயரும் பட்சத்தில் இங்கு பிரச்சினைகள் மேலும் தீவிரமாகும். அகதிகள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளவர்களின் நிலைமை குறித்து இரு தமிழக அமைச்சர்கள் நேரடியாகப் பார்வையிட்டு வந்துள்ளனர். அவர்களது அறிக்கையின் அடிப்படையில் அகதிகளின் நல்வாழ்வுக்காக உரிய நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும். இலங்கைப் பிரச்சினை தலைதூக்கும் போதெல்லாம், கடலில் மீன் பிடிக்கச் செல்லும் இந்திய மீனவர்கள் அந் நாட்டு கடற்படையால் தாக்கப்படுகின்ற நிலைமைக்கு முற்றுப் புள்ளி வைக்க மத்திய அரசு உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

இதற்கிடையில் விடுதலைப் புலிகளுக்கும் இலங்கை அரசுக்கும் இடையே தொடர்ந்து போர் நிறுத்த ஒப்பந்தத்தை செயல்படுத்தச் செய்ய வேண்டும். மீண்டும் அமைதிப் பேச்சுவார்த்தையை தொடரச் செய்வதற்கு இரு தரப்பினரையும் இணங்கச் செய்யும் முயற்சியில் ஈடுபட வேண்டும். பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு மனிதாபிமான அடிப்படையில் சர்வதேச உதவிகள் கிடைக்கச் செய்ய வேண்டியதும் முக்கியம். போர் மூலம் எந்தத் தீர்வையும் பெற முடியாது என்பதை கடந்த கால வரலாறுகள் காட்டுகின்றன. முறிந்து போன பேச்சுவார்த்தையை மீண்டும் தொடருவதன் மூலம் பிரச்சினைக்குத் தீர்வு காண முடியும். இந்தவகையில் பேச்சுவார்த்தை நடத்த வருமாறு விடுதலைப் புலிகளுக்கு இலங்கை அரசு விடுத்துள்ள அழைப்பு சற்று நம்பிக்கையூட்டுவதாக உள்ளது.

- தினமணி ஆசிரிய தலையங்கம் 21 ஜூன் 2006.

- தினக்குரல்

பேச்சுவார்த்தைக்கு வருமாறு சிங்கள அரசு அழைத்த உடனே நம்பிக்கை கொள்ளுவதாக தினமணி எழுதி இருப்பது சிரிப்பை வரவழைக்க்pறது. சிங்கள அரசின் குள்ளநரித்தந்திரம் இன்னுமா புரியவில்லை இவர்களுக்கு?

þùÅ¡Ú ¸Ã¢º¨É ¸¡ðÎõ ¾¢ÉÁ½¢, Åí¸¡¨Ä ÀΦ¸¡¨Ä¨Â ÀüÈ¢ ´Õ ¦ºö¾¢ ܼ À¢ÃÍâì¸Å¢ø¨Ä§Â? «Ð ÁðÎÁ¡? þÅ÷¸Ç¢ý ¾Á¢Æý ±ìÍÀ¢ÃÍ Àò¾¢Ã¢¨¸ «ñ¨Á¢ø ܼ "ÒÄ¢¸Ä¢ý ŨÄ¢ø ¾Á¢Æ¸ ¾¨ÄÅ÷¸û" ±ýÚ ´Õ ¸ðΨà ¾£ðÊ¢Õó¾Ð. «¾¢ø ¦º¡øÄôÀð¼ Å¢¼Âí¸ÙìÌõ «ó¾ ¸ðΨâý Àà ÀÃôÒ ¾¨ÄÂí¸òÐìÌõ ¦¸¡ïºÓõ ºõÀó¾Á¢ø¨Ä. ÍõÁ¡ ÀÃÀÃôÒ측¸, Àò¾¢Ã¢¨¸ Å¢üÀ¾ü측 «ôÀÊ ´Õ ¾¨ÄÂí¸ò¨¾ ¾£ðÊ þÕó¾¡÷¸û.

¬É¡ø þó¾ô Àò¾¢Ã¢¨¸¨Â Å¡í¸¡Áø, §À¡Ìõ º¡ì¸¢ø ÓýÀì¸ò¨¾ ÁðÎõ À¡÷ìÌõ ´Õ ¾Á¢Æ¸ Å¡º¸É¢ý Áɾ¢ø þÐ §¾¨ÅÂüÈ ±ñ½í¸¨Ç ²üÀÎòЧÁ ±ýÚ ¾¢ÉÁ½¢ ¸Å¨Äô À¼Å¢ø¨Ä.

þó¾ ¬º¢Ã¢Â÷ ¸ðΨâø ¾¢ÉÁ½¢ ¸¡ðÊ¢ÕìÌõ ¦À¡ÚôÒ½÷¨Â Áü¨È Ţ¼Âí¸Ç¢Öõ ¸¡ðÊÉ¡ø ¿ýȡ¢ÕìÌõ.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.