Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

'வர்த்தக பிரிவில் 3 ஏ சித்தி பெற்றவர்களில் ஆயிரக்கணகானோருக்கு சிக்கல்'

Featured Replies

2012 ஆம் ஆண்டு வர்த்தக பிரிவில் 3 ஏ சித்தி பெற்றவர்களில் ஆயிரக்கணக்கானோர் பல்கலைகழக வாய்ப்பை இழக்கு நிலை தோன்றியுள்ளதாக இளமையின் குரல் அமைப்பு எதிர்வு கூறியுள்ளது.

 

 

மருதானை சீ.எஸ்.ஆர் மண்டபத்தில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவித்தபோதே அவ்வமைப்பின் இணை ஏற்பாட்டாளர் கயான் ஜானக்க தெரிவித்தார்.

அங்கு அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,

 

2012 ஆம் ஆண்டுக்கான கல்விப்பொது தராதர உயர்த்தரப்பரீட்சை பெறுபேறுகள் வெளியானதன் பின்னர் பல்கலைக்கழக கல்வித்துறையில் பாரிய பிரச்சினைகள் தோன்றியுள்ளன.


வருடத்திற்கு சராசரியாக 3 இலட்சத்து 50 ஆயிரம் குழந்தைகள் பிறக்கின்றன. அதில் 3 இலட்சத்து 35 ஆயிரம் பேர் பாடசாலைக்கு செல்கின்றனர். அவர்களில் 22 ஆயிரம் பேருக்கு மட்டுமே பல்கலைக்கழகங்களுக்கு செல்வதற்கான வாய்ப்பு கிடைக்கும்.

 

 

பழைய மற்றும் புதிய பாடத்திட்டங்களுக்கு அமைய 2012 ஆம் ஆண்டு உயர்தரப்பரீட்சைக்கு 2 இலட்சத்து 36 ஆயிரத்து 474 பேர் தோற்றினர். அதில் 1 இலட்சத்து 44 ஆயிரத்து 445 பேர் சித்திபெற்று பல்கலைக்கழகங்களுக்கு விண்ணப்பிப்பதற்கு தகுதிப்பெற்றுள்ளனர். 

 

2009 ஆம் ஆண்டு உயர்தரப்பரீட்சைக்கு 2 இலட்சத்து 38 ஆயிரத்து 931 பேர் தோற்றினர். அவர்களில் 1 இலட்சத்து 25 ஆயிரத்து 146 பேருக்கு  பல்கலைக்கழகங்களுக்கு விண்ணப்பிப்பதற்கு தகுதிப்பெற்றனர். எனினும் 2008/2009 ஆம் கல்வியாண்டுக்கென 20 ஆயிரத்து 46 பேர் மட்டுமே தெரிவுசெய்யப்பட்டனர்.


2010 ஆம் ஆண்டு உயர்தரப்பரீட்சைக்கு 2 இலட்சத்து 65 ஆயிரத்து 388 பேர் தோற்றினர். அவர்களில் 1 இலட்சத்து 42 ஆயிரத்து 415 பேர் பல்கலைக்கழகங்களுக்கு விண்ணப்பிப்பதற்கு தகுதிப்பெற்றனர். எனினும் 2009/2010 ஆம் கல்வியாண்டுக்கென 22 ஆயிரத்து 16 பேர் மட்டுமே தெரிவுசெய்யப்பட்டனர்.

 

2012 ஆம் ஆண்டு உயர்தரப்பரீட்சைக்கு 2 இலட்சத்து 30 ஆயிரத்து 435 பேர் தோற்றினர். அவர்களில் 1 இலட்சத்து 44 ஆயிரத்து 445 பேர்பல்கலைக்கழகங்களுக்கு விண்ணப்பிப்பதற்கு தகுதிப்பெற்றனர். அதில் எத்தனை பேர் பல்கலைகழகங்களுக்கு செல்லமுடியும் என்பது தெரியாது.


வர்த்தக பிரிவை பொருத்தவரையில் 2009/2010 ஆம் கல்வியாண்டுக்கென 4583 பேரும், 2010/2011 ஆம் கல்வியாண்டுக்கென 4876 பேரும் பல்கலைகழகங்களுக்கு உள்ளீர்க்கப்பட்டனர்.

 

2012 ஆம் ஆண்டு  பரீட்சைக்கு தோற்றியவர்களில் 9057 பேர் மூன்று பாடங்களிலும் ஏ சித்தி பெற்றுள்ளனர். அதில் 6471 பேர் வர்த்தக பிரிவில் 3  பாடங்களிலும் சித்திபெற்றுள்ளனர்.


கடந்த காலங்களுடன் ஒப்பிட்டுப்பார்த்தால் வர்த்தக பிரிவிலிருந்து ஆகக்குறைந்தது 5000 பேர் மட்டுமே பல்கலைக்கழகங்களுக்குள் உள்ளீர்த்துக்கொள்ளப்படுவர். அப்படியாயின வர்த்தக பிரிவில் 3 ஏ சித்திபெற்ற ஏனையவர்களின் நிலைமை கேள்விக்குள்ளாகியுள்ளது.

 

இந்த நிலைமைக்கு தீர்வுகாண்பதற்கு அரச பல்கலைகழகங்களின் எண்ணிக்கையை அதிகரிக்வேண்டும். 1978 ஆம் ஆண்டுக்கு பின்னர் அரசாங்க பல்கலைகழகங்கள் ஆரம்பிக்கப்படவில்லை.


பல்கலைகங்களின் அனுமதி தொடர்பில் ஏற்பட்டுள்ள நெருக்கடிகள் தொடர்பில் தெளிவுப்படுத்தும் வகையில் எதிர்வரும் 20 ஆம் திகதிவரை நாடளாவிய ரீதியில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களும் கையெழுத்து வேட்டை பெறும் நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படும் என்றார்.

 

http://www.tamilmirror.lk/2010-07-14-09-13-23/58481--3-.html

  • தொடங்கியவர்

 2012 ஆம் ஆண்டு  பரீட்சைக்கு தோற்றியவர்களில் 9057 பேர் மூன்று பாடங்களிலும் ஏ சித்தி பெற்றுள்ளனர். அதில் 6471 பேர் வர்த்தக பிரிவில் 3  பாடங்களிலும் சித்திபெற்றுள்ளனர்.

 

கடந்த காலங்களுடன் ஒப்பிட்டுப்பார்த்தால் வர்த்தக பிரிவிலிருந்து ஆகக்குறைந்தது 5000 பேர் மட்டுமே பல்கலைக்கழகங்களுக்குள் உள்ளீர்த்துக்கொள்ளப்படுவர். அப்படியாயின வர்த்தக பிரிவில் 3 ஏ சித்திபெற்ற ஏனையவர்களின் நிலைமை கேள்விக்குள்ளாகியுள்ளது.

 

 

1471 பேர் மூன்று பாடங்களிலும் அதியுயர் சித்தி பெற்றும் பல்கலைக்கழக அனுமதி செல்ல முடியாது எனில் மாணவர்கள் மத்தியில் விரக்தி வரத்தான் செய்யும்.

 

ஒன்றில் பாடங்களை கடினமாக்க வேண்டும் இல்லை மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவேண்டும். அதிகரிக்க, பேராசியர்கள் உட்பட பணம் தேவை.


படித்து என்ன செய்வது? வேலை வேண்டுமே  :o

  • கருத்துக்கள உறவுகள்

ஏற்கனவே பாடங்கள் மிகக் கடுமையாகத்தான் உள்ளன 

ஒரு பெண் குழந்தையை பிரசவிக்கும் போது படும் வேதனையை விட 

அதிக வேதனையை ,துன்பத்தை அடைந்தே ஒவொரு மாணவனும் ,மாணவியும் உ /த 

சித்தி அடைகிறார்கள். அதைவிட கொடுமை பரீட்சை மைய கல்வி: கற்பிப்பதை விட அதிகமாக கேட்பது  

சில கேள்விகளுக்கு அதனை தயாரிக்கும் பேராசிரியர்களால் கூட விடை கூறமுடியாது 

எல்லாமே மாணவர்களை பல்கலைகழகத்துக்கு புறக்கணிக்க செய்யப்படும் யுத்தி.

ஒவொரு வருடமும் இலங்கை திறமைகள் கொண்ட  பட்டதாரிகளை விட

தேக்க நிலையில் உள்ள, திறமைகள் மிக்க, ஆனால்  உ/த மூலம் முடிவு செய்த முட்டாள் மாணவர்களையே அதிகம் உற்பத்தி செய்கிறது.

உ /த வில் தோற்றால் வாழ்கையில் தோற்றதற்கு சமம் :(  

  • தொடங்கியவர்

இலங்கை சுதந்திரம் அடைந்தும் இன்றும் அது ஒரு விவசாய மாறும் சிறு கைத்தொழில் நாடாகவே உள்ளது. அதையும் பெரிதாக நவீனமயப்படுத்தவில்லை. உள்ளூரில் தனக்கென்று எந்த தொழில்சார் முறையையும் கட்டி எழுப்பவில்லை.
  
அதைவிட இலங்கையின் பொருளாதார வரவு - செலவில் அதிகூடிய பணத்தை பெறுவது பாதுகாப்பு துறையே.

சனத்தொகை மேலும் வளர வளர உயர்கல்வியும் அதற்கான வேலைவாய்ப்புக்களும் உருவாக்கப்படவில்லை. ஆகவே படிப்பிற்கோ இல்லை படித்தவர்களுக்கான வேலை வாய்ப்புக்களை உருவாக்குவதிலோ நாடு தவறிவிட்டது.

  • கருத்துக்கள உறவுகள்

சிறிலங்கா அரசில் அங்கம் வகிக்கும் அமைச்சர்களைக் குறைத்து 

அவர்கள் கொள்ளையடிக்கும் பணத்தைக் கைப்பற்றி 

கல்வித்துறைக்குப் பயன்படுத்தலாம்.


அரசியல்வாதிகளின் நிதிநிலைமை உயர உயர 

குழந்தைகளின் கல்வி கேள்விக்குறியாகின்றது

  • கருத்துக்கள உறவுகள்

மேலை நாடுகளில் பத்தாம்வகுப்பு தாண்டாதவனும் ஒரு வேலை பெற்று வீடு வசதி என வாழ்வான். உழைக்கும் மனநிலை மட்டும் இருந்தால் போதும். இலங்கையில் ஏட்டுக்கல்வி ஒன்றே பிழைப்புக்கு வழி.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.