Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மாலத்தீவு முன்னாள் அதிபர் நசீத், 6 எம்.பிக்கள் இந்திய தூதரகத்தில் தஞ்சம்!: போலீஸ் சுற்றிவளைப்பு

Featured Replies

13-mohamed-nasheed-300.jpg

மாலத்தீவின் முன்னாள் அதிபர் முகம்மத் நசீதை கைது செய்ய அந் நாட்டு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இதையடுத்து அவர் அந் நாட்டில் உள்ள இந்தியத் தூதரகத்தில் தஞ்சமடைந்துள்ளார். அவருடன் 6 எம்.பிக்களும் இந்திய தூதரகத்தில் தஞ்சமடைந்துள்ளனர். இதையடுத்து மாலே நகரில் உள்ள இந்தியத் தூதரகத்தை அந் நாட்டு கலவரத் தடுப்பு போலீசார் சுற்றி வளைத்துள்ளனர். இதனால் அங்கு பெரும் பதற்றம் நிலவுகிறது. கடந்த ஆண்டு அந் நாட்டு தலைமை நீதிபதி அப்துல்லா முகம்மத் கைது செய்யப்பட்டார். அதிபராக இருந்த நசீத்தீன் உத்தரவால் அவர் கைதானார். இதையடுத்து நாட்டில் புரட்சி வெடித்தது. நசீத் பதவியிலிருந்து விரப்பட்டார். நீதிபதி கைது செய்யப்பட்ட வழக்கு விசாரணை நடந்து வருகிறது. இதில் கடந்த 10ம் தேதி நசீத் நீதிமன்றத்தில் ஆஜராகி இருக்க வேண்டும். ஆனால், ஆஜராகவில்லை. இதையடுத்து அவரைக் கைது செய்ய நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது.

 

இந்த உத்தரவை எதிர்பார்த்திருந்த உடனடியாக நசீத் இந்தியத் தூதரகத்துக்குள் நுழைந்துவிட்டார். அவருடன் அவரது ஆதரவு எம்பிக்கள் 6 பேரும் தூதரகத்துக்குள் தஞ்சம் புகுந்துள்ளனர். கைது நடவடிக்கையில் இருந்து காப்பாற்றிக் கொள்ளவும், இந்தியாவில் தஞ்சமடையவும் இவர்கள் முயற்சிப்பதாகத் தெரிகிறது. ஆனால், இந்திய அதிகாரிகளின் யோசனையைப் பெறவே அவர்கள் தூதரகத்துக்குள் சென்றுள்ளதாக அவர்களது கட்சியினர் கூறுகின்றனர். இந் நிலையில் நசீதை கைது செய்யவும், அப்பகுதியில் கலவரம் ஏதும் மூளாமல் தடுக்கவும் இந்தியத் தூதரகத்தை கலவரத் தடுப்பு போலீசார் சுற்றி வளைத்துள்ளனர். கடந்த வாரம் நசீத் இந்தியாவில் இருந்தது குறிப்பிடத்தக்கது. நீதிமன்ற அனுமதி வாங்கி இந்தியாவுக்கு வந்த அவர் 9ம் தேதி மாலத்தீவுக்கு திரும்பியிருக்க வேண்டும். 10ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராகி இருக்க வேண்டும். ஆனால், 11ம் தேதி தான் அவர் மாலத்தீவுக்கே திரும்பினார்.

http://tamil.oneindia.in/

Edited by யாழ்அன்பு

  • கருத்துக்கள உறவுகள்

332074591Untitled-1.jpg

இந்திய தூதரகத்தில் தஞ்சமடைந்த மாலைதீவின் முன்னாள் ஜனாதிபதி!

மாலைதீவு ஜனாதிபதியாக இருந்த முஹம்மது நஷீத், பதவி விலக வேண்டும் என கடந்த ஆண்டு அந்நாட்டு மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

நாளடைவில் இப்போராட்டத்தில் இராணுவத்தினரும் பொலிசாரும் இணைந்து கொண்டனர். இதனால் போராட்டம் தீவிரமடைந்தது. இதனையடுத்து, ஜனாதிபதி பதவியில் இருந்து முஹம்மது நஷீத் விலகினார். 

பதவி விலகிய பின்னர் பேட்டியளித்த முஹம்மது நஷீத், இராணுவத்தினரும் பொலிசாரும் துப்பாக்கி முனையில் தன்னை மிரட்டி பதவி விலக வைத்ததாக கூறினார். 

கடந்த அக்டோபர் மாதம் முஹம்மது நஷீத் பொலிசாரால் கைது செய்யப்பட்டார். பிணையில் வெளிவந்த அவரை மற்றொரு வழக்கில் கைது செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டது. 

கைது நடவடிக்கைக்கு பயந்த முஹம்மது நஷீத், 12 எம்.பி.க்களுடன் மாலைதீவில் உள்ள இந்திய தூதரகத்தில் இன்று தஞ்சம் அடைந்தார். அவர் தஞ்சம் அடைந்த தகவல் கிடைத்ததும் அவரது ஆதரவாளர்கள் இந்திய தூதரகத்தின் முன் குவிந்தனர். 

அவர்கள் தூதரகத்திற்குள் நுழைந்து விடாமல் தடுப்பதற்காக சுமார் 200 பொலிசார் பாதுகாப்பு பணிக்காக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளனர். 

சர்வதேச சட்டங்களின்படி, எந்த நாட்டு தூதரகங்களுக்குள்ளேயும் வேறு நாட்டு பொலிசார் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது. தங்கள் நாட்டில் அமைந்திருந்தாலும் வெளிநாட்டு தூதரங்களுக்குள் பொலிசார் நுழைய முடியாது. 

இதனால், கைது நடவடிக்கையில் இருந்து தப்புவதற்காக முஹம்மது நஷீத் இந்திய தூதரகத்தில் தஞ்சம் அடைந்திருக்கலாம் என அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர். 

 

இவர் முன்னர் இந்தியாவிற்கு எதிராக செயல்பட்டு இந்தியா நடாத்திய ஆட்சி கவிழ்ப்பின்போது இலங்கைக்கு ஓடினவர்  :wub:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.