Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழகத்திற்கு சாதகமான மத்திய அரசை அமைப்பதே குறிக்கோள்: ஜெயலலிதா

Featured Replies

தமிழக மக்களின் குறைகளை கேட்கும் மத்திய அரசை அமைப்பதே தனது குறிக்கோள் என தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.
 
சென்னையில் 65 ஜோடிகளுக்கு முதலமைச்சர் ஜெயலலிதா தலைமையில் திருமணம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பேசிய அவர் : காவிரி நீர் விவகாரத்தில், கர்நாடகாவுக்கு
ஆதரவாக காங்கிரஸ் , பா.ஜ., கட்சிகள் செயல்படுவதாக குற்றஞ்சாட்டினார்.

மின் வெட்டு, டெல்டா மாவட்ட விவசாயிகளின் பிரச்னையை சரி செய்ய மத்தியில் தமிழகத்திற்கு ஆதரவான அரசு தேவை என முதலமைச்சர் ஜெயலலிதா வலியுறுத்தியுள்ளார். 2014ஆம் ஆண்டு தேர்தலில் உருவாகும் மாற்றம் தமிழகத்தை முன்னேற்றப்பாதையில் கொண்டு போகும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
 
காவிரி பிரச்னையில் தமிழகத்திற்கு மத்திய அரசு உதவவில்லை என கூறிய அவர் கேபிள் டிவி டிஜிட்டல்மயமாக்குவதிலும் தமிழக அரசுக்கு எதிராக மத்திய அரசு செயல்படுவதாக கூறினார். எனவே தமிழக மக்களின் குறைகளை கேட்கும் அரசு மத்தியில் அமைய வேண்டும் என்றும், அதை நிறைவேற்றுவதே தமது குறிக்கோள் என்றும் தெரிவித்தார்.

தமிழகத்தில் காங்கிரஸ் மற்றம் பாரதிஜ ஜனதா கட்சிகளுக்கு செல்வாக்கு இல்லை என்றும் எனவே தமிழகத்தில் அக்கட்சிகள் எப்போதுமே ஆட்சி அமைக்க முடியாது என்றார்.
 
http://puthiyathalaimurai.tv/will-work-for-establishing-a-supportvie-government-incentre-jayalalitha

  • கருத்துக்கள உறவுகள்

1374452267evks-mirror.jpg

ஜெயலலிதா எப்படி கனவு கண்டாலும் பிரதமர் நற்காலியை கூட தொட முடியாது!

தமிழகத்தில் தேசியக் கட்சிகள் தலைகீழாக நின்றாலும் ஆட்சி அமைக்க முடியாது என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா கூறிய கருத்துக்கு காங்கிரஸ் மற்றும் பாரதிய ஜனதா கட்சி கண்டனம் தெரிவித்துள்ளன. இந்நிலையில், தமிழக காங்கிரஸ் உறுப்பினர்கள் தமிழகத்திற்கு காவிரி நீர் பெற்று தருவது குறித்து பல முறை பிரதமரிடம் வலியுறுத்தியுள்ளதாக அக்கட்சியின் மூத்த தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் தெரிவித்துள்ளார். ஆனால் தமிழக முதல்வர் தான், ஒரு முறை கூட இந்த பிரச்சனை குறித்து பிரதமரை நேரில் சந்தித்து வலியுறுத்தவில்லை என்று இளங்கோவன் குற்றம்சாட்டினார். 

மேலும், காவிரி பிரச்சனை தொடர்பாக, ஜெயலலிதா இதுவரை அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டி கண்டனத்தை தெரிவிக்கவில்லை என்றும் அவர் குற்றம்சாட்டினார். தொடர்ந்து பேசிய அவர், மத்திய அரசிடம் ஜெயலலிதா தொடர்ந்து மோதல் போக்கை கையாளுவதாகவும், தன்னை தமிழக வீராங்கனை போல் காட்டிக் கொள்வதாகவும் இளங்கோவன் விமர்சனம் செய்துள்ளார். காவிரி நீர் பிரச்சனையில் மிக பெரிய தடையாக இருப்பது ஜெயலலிதா மட்டும் தான் என்றும் அவர் குற்றம் சாட்டியுள்ளார். 

தனது சொந்த விருப்பு வெறுப்புகளை விட்டு தமிழக நலனில் ஜெயலலிதா அக்கறை காட்டும் வேண்டும் என்று கூறிய அவர், காங்கிரஸ் நினைத்தால் தமிழகத்தில் மீண்டும் ஆட்சி அமைக்க முடியும் என்றும் கூறியுள்ளார். மேலும், ஜெயலலிதா எப்படி கனவு கண்டாலும் பிரதமர் நற்காலி பக்கத்தில் கூட போக முடியாது என்றும் அவர் கருத்து தெரிவித்துள்ளார். 

தமிழக முதல்வரின் இந்த கருத்துக்கு தமிழக பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் இல.கணேசன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். காவிரி பிரச்சனையில் தேசிய கட்சிகளை குற்றம் சொல்லும் ஜெயலலிதாவின் கர்நாடகாவில் உள்ள அதிமுக கட்சியை சேர்ந்தவர்கள் அம்மாநில அரசுக்கு எதிராக குரல் கொடுக்காதது ஏன் என்று கேள்வி எழுப்பியுள்ளார். 

தமிழகத்தில் தேசிய கட்சி வராது என்று கூறிய ஜெயலலிதா பல்லாண்டு வாழ வேண்டும் என்று கூறிய அவர், அப்போது தான் தமிழகத்தில் பாரதிய ஜனதா ஆட்சி அமைப்பதை அவரால் பார்க்க முடியும் என்று விமர்சனம் செய்துள்ளார்

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.