Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இனியும் எதற்கு தமிழகத்தில் இலங்கை தூதரகம் ?

Featured Replies

தமிழர்கள் எங்களது சகோதரர்கள்: இலங்கைத்தூதர்

 

 

விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் மகன் குறித்து சேனல் 4 வெளியிட்ட படம் உண்மையானதல்ல என இந்தியாவுக்கான இந்திய தூதர் கரியவாசம் கூறியுள்ளார். இது குறித்து அவர் மேலும் கூறியதாவது: பிரபாகரன் மகன் குறித்து வெளியான படம் உண்மையானதல்ல. அது சித்தரிக்கப்பட்ட படம். கடந்த ஆண்டு ஐ.நா., மனித உரிமை கவுன்சில் கூடும் போது இதே போன்ற படம் வெளியிடப்பட்டது. இதுபோன்ற படங்கள் இலங்கையில் தமிழர்களின் வாழ்வுரிமையை பாதிக்கும். வேண்டுமென்றே வதந்தி பரப்பப்படுகிறது. அமைதியை குலைக்க முயற்சி நடக்கிறது . சேனல் 4 படம் போலியானது. இலங்கை முன்னேற்றத்திற்கு எதிரான இது போன்ற வதந்திகளை நம்ப வேண்டாம்.

இனரீதியாக அதிகார பங்கீடு கிடையாது என்றே இலங்கை அதிபர் ராஜபக்சே கூறியுள்ளார். விடுதலை புலிஆதரவாளர்கள் இதனை திரித்து கூறுகிறார்கள். இலங்கையில் மட்டும் தான் தமிழ் ஆட்சி மொழியாக உள்ளது. தமிழர்களை பகுதிகளை பார்வையிடலாம். தமிழக தலைவர்களின் கருத்து தவறானது. தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை தாக்கியதில்லை. தமிழர்கள் எங்களுக்கு சகோதரர்கள் என கூறியுள்ளார்.

 

http://tamil.yahoo.com/%E0%AE%AE-%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3-%E0%AE%9A%E0%AE%95-%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95-%E0%AF%8D-%E0%AE%B0%E0%AF%8D-130600794.html

 

------------------------------------------------

 

தேசிய தலைவரின் மகனை இரக்கமின்றி படுகொலை செய்து தமிழ் மக்களை ஆழ்ந்த துயரத்தில் ஆழ்த்திய இலங்கை தூதரகம் தமிழகத்தில் எதற்கு ? எத்தனை எத்தனை படுகொலைகள்? எத்தனை காலம் தான் பொறுத்துக் கொள்வது?

 

538278_604997732848414_945781109_n.jpg

 

 

அனைத்து தமிழக கட்சிகளும் இணைந்து தமிழக சட்டமன்ற தீர்மானம் இயற்றி இலங்கை தூதரகத்தை இழுத்து மூடுவோம் . சட்டமன்ற தீர்மானம் மூலமாக நடுவண் அரசுக்கு தமிழர்களின் நிலைப்பாட்டை சொல்வோம். இந்தியாவிற்கு சொல்வோம். உலகிற்கு இலங்கை நாட்டின் கொடிய செயல்கள் பற்றி இதன் மூலம் உணர்த்துவோம் ! இழுத்து மூடுவோம் இனப்படுகொலை இலங்கை தூதரகத்தை !

 

 

  • கருத்துக்கள உறவுகள்

நன்றிகள்..எங்கள் ரத்த உறவுகளே......உங்கள் உணர்வை கண்ணீரினூடு  ஏற்கின்றோம்...வெல்க உங்கள் எங்கள் போராட்டம்....

  • தொடங்கியவர்

46989_10200628247692160_1392653742_n.jpg



நீங்கள் எந்த இயக்கத்தவராக வேண்டுமானாலும் இருக்கலாம், தமிழராக கை கோர்த்து எதிரியை வெல்ல வாருங்கள்.. கடந்த காலத்தில் கட்சியாய், இயக்கமாய், சாதியாய், மதமாய் பிரிந்து நின்று 2009இல் துரோகம் இழைத்தோம். இனிமேலாவது தமிழீழ தேசியத்திற்கு நிகழ்ந்த துரோகத்திற்கு நியாயம் கேட்க எதிரிகளை கதவுகளை எட்டி உதைக்க வாருங்கள்..

 

 

களத்திற்கு அழைக்கிறோம். ஆயிரமாய் திரண்டால் பாலச்சந்திரனை படுகொலை செய்ய உதவிய கொலைகாரர்களை விரட்ட முடியும்.

 

சில நூறு பேராய் திரண்டால் அடையாளப் போராட்டமே காண முடியும்.பங்கேற்பதும், மறுப்பதும் உங்கள் விருப்பம்.


- முகநூல்

  • தொடங்கியவர்

Urgent Missed Call to Investigate Srilanka - Amnesty International

Use Mobile, Social Media to ciruculate this number ask everyone to give missed call...

 

267804_10200556107843442_1173502832_n.jp

சென்னை: சென்னையில் ஸ்ரீலங்கா ஏர்லைன்ஸ் அலுவலகம் மீது மர்ம நபர்கள் இன்று காலை தாக்குதல் நடத்தினர். சென்னை கோடம்பாக்கம் -நுங்கம்பாக்கம் சாலையில் ஸ்ரீலங்கா ஏர்லைன்ஸ் அலுவலகம் உள்ளது. இங்கு ‌இன்று அதிகாலை 2.30 மணியளவில் பைக்கில் வந்த மர்ம நபர்கள் சிலர் கல்வீசி தாக்கினர். இதில் கண்ணாடி சேதமடைந்தது.இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. நுங்கம்பாக்கம் போலீசார் விசாரிக்கின்றனர்.

 

http://www.dinamalar.com/news_detail.asp?id=652130

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.