Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கை தமிழர் விவகாரம்; கட்சிகள், "எஸ்கேப்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை தமிழர் விவகாரம்; கட்சிகள், "எஸ்கேப்!'

""கடைசி நேரத்துல, நம்ம ஊரு தலைவர்கள் கைவிரிச்சதால, நடக்குமா, நடக்காதாங்கற குழப்பம் உருவாகியிருக்கு வே...'' என, புதுத் தகவலைக் கூறியபடியே, நாயர் கடைக்கு வந்தார் பெரியசாமி அண்ணாச்சி.

""விவரமா சொல்லுங்க...'' எனக் கேட்டார் அந்தோணிசாமி.

""சுவிட்சர்லாந்துல, அடுத்த மாசம், 2, 3ம் தேதி, ஈழ மக்களவை அமைப்பு சார்புல, இலங்கை தமிழர்கள் பாதுகாப்பு சம்பந்தமா, மாநாடு நடத்தப் போறதா அறிவிச்சாங்க... இந்த மாநாட்டுல, நம்ம ஊரு அரசியல் தலைவர்களை, கட்சி சார்புல அழைச்சிருக்காங்க...

""தி.மு.க., சார்புல ஒருத்தரு, "தலைவர்ட்ட அனுமதி, விசா வாங்க, நாள் இல்லை'ன்னு சொல்லிட்டாரு... கம்யூனிஸ்ட் கட்சி சார்புலயும், "வர இயலவில்லை'ன்னு சொல்லிட்டாவ... மற்றொரு கட்சி தலைவர், "விமானத்துல பறக்கிற அளவுக்கு, உடம்பு ஒத்துழைக்காது'ன்னு சொல்லிட்டாரு... முக்கிய கட்சிகளை சேர்ந்தவக வரலேன்னு சொன்னதால, மாநாட்டை நடத்துறதா, வேண்டாமான்னு யோசிக்காவ...'' என்றார் அண்ணாச்சி.

இதற்கு, லோக்சபா தேர்தல் தான் காரணம் என, எல்லாருக்குமே அர்த்தம் புரிந்ததால், மவுனம் காத்தனர்.

Thanks to dinamalar (tea kadai bench)

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முக்கியஸ்தர்கள் நாளை 28 ஆம் திகதி வியாழக்கிழமை ஜெனிவாவிற்கு பயணமாகவிருக்கின்றனர்.

 

 

மார்ச் மாதம் 2 ஆம் மற்றும் 3 ஆம் திகதிகளில் நடைபெறவிருக்கின்ற உலகத் தமிழர் பேரவையின் மாநாட்டில் பங்கேற்பதற்காக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியச் செயலாளர் டி. ராஜா, மாநிலச் செயலாளர் தா. பாண்டியன் ஆகியோர் ஜெனிவா பயணமாகவுள்ளனர்.


அத்துடன் பிரபாகரனின் 12 வயது மகன் படையினரால் கொடூரமாகக் கொல்லப்பட்டது மற்றும் இனப்படுகொலையைக் கண்டித்து இலங்கையிலிருந்து வெளியேறியுள்ள ராணுவ வீரர்கள், டாக்டர்கள், எழுத்தாளர்களை கொலை செய்யும் இலங்கை அரசை விசாரித்து நீதி வழங்கக்கோரி இந்த மாநாடு நடைபெறுகிறது.

 

இந்த மாநாட்டில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் டி. ராஜா, தா. பாண்டியன் ஆகியோர் உரையாற்றவுள்ளதாக  அக்கட்சி அறிவித்துள்ளது.

 

http://www.yarl.com/forum3/index.php?showtopic=117930

63239_416389018450860_1530894057_n.jpg

ஐநா மனித உரிமைகள் மாநாட்டில் ம.தி.மு.க நாடாளுமன்ற உறுப்பினர் திரு.கணேசமூர்த்தி கலந்து கொள்கிறார் !

 

 

மதுரை அருகே திருமங்கலத்தில் நடந்த பொதுக் கூட்டத்தில் தடை செய்யப்பட்ட விடுதலைப் புலிகள் இயக்கத்தை ஆதரித்துப் பேசியதாக கடந்த அ.தி.மு.க ஆட்சியின் போது திரு.வைகோ, திரு.கணேசமூர்த்தி உள்ளிட்ட சிலர் மீது பொடா சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இவர்கள் கைது செய்யப்பட்டு, 16 மாதங்கள் வரை சிறையில் இருந்தனர்.

 

இந்தியாவை விட்டு வெளியே செல்ல வேண்டும் என்றால் பொடா நீதிமன்றில் அனுமதி பெறவேண்டும்.

திரு.கணேசமூர்த்தி, தாக்கல் செய்த மனுவில், ஜெனிவாவில் நடக்கும், ஐநா மனித உரிமைகள் மாநாட்டில் பங்கேற்க உள்ளேன்; இம்மாதம் 28ம் தேதி முதல் மார்ச்13ம் தேதி வரை வெளிநாட்டில் தங்கியிருக்க வேண்டும். இதற்கு அனுமதியளிக்க வேண்டும் என கூறியுள்ளார். இம்மனுவை நீதிபதி கலியமூர்த்தி விசாரித்தார். நாடாளுமன்ற உறுப்பினர் கணேசமூர்த்தியின் மனுவை ஏற்று வெளிநாடு செல்ல அனுமதி அளித்தார். -

சுவிஸ் தூதருடன் பாலு சந்திப்பு

 

ஐ.நா., மனித உரிமை சபையில்அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானத்தை ஆதரிக்கவேண்டும் என டில்லியில் சுவிட்சர்லாந்து தூதரை சந்தித்து தி.மு.க., எம்.பி., டி.ஆர்., பாலு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

 

http://tamil.yahoo.com/%E0%AE%9A-%E0%AE%B5-%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%B0-%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA-%E0%AE%B2-%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D-055700017.html

இலங்கை தமிழர் விவகாரம்;  BJP "எஸ்கேப்!'

69631_551050778267894_111321369_n.jpg

"தாய்மண் மீட்பு இயக்கத்தின் "-ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமாறன் தலைமையில் இன்று 3-ம் நாளாக கடலூரில் இருந்து சென்னை நோக்கிய கோரிக்கை நடைப்பயணத்தில் ,இன்று அதிகாலை(01/03/2013) காஞ்சிபுரம் மாவட்டம் கானத்தூர் காவல் துறையினால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

 

கைதுக்கு காரணம் தமிழக காவல்துறை ஆணையரிடம் அனுமதி பெறாமல் நடைபயணம் மேற்கொண்டது தவறு என கூறியுள்ளனர்.

 

*இனவெறி இலங்கை அரசின்மீது பன்னாட்டு விசாரணை வேண்டியும்...................

*ஐ.நா.முன்னிலையில் ஈழத்தமிழரிடையே பொதுவாக்கெடுப்பு நடத்த வலியுறித்தியும் .....................................

 

 

 

மேலும் தகவலுக்கு: திருமாறன்-9842050015,9944742532. /

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.