Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

டெல்லி மாணவிக்கு அமெரிக்கா அரசின் சர்வதேச வீர மங்கை விருது!

Featured Replies

629010092delligirl.jpg

டெல்லி மாணவிக்கு அமெரிக்கா அரசின் சர்வதேச வீர மங்கை விருது!

March 9, 2013  10:04 am

lg-share-en.gif
டெல்லியில் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு உயிரிழந்த மருத்துவ மாணவிக்கு அமெரிக்கா அரசின் சர்வதேச வீர மங்கை விருது வழங்கப்பட்டது. இந்த விருதை அமெரிக்காவின் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜான் கெர்ரி மற்றும் அதிபர் ஒபாமாவின் மனைவியும் வழங்கினார். 

மாணவியின் சார்பில் அமெரிக்காவுக்கான இந்திய தூதர் நிரூபமா ராவ் விருதினை பெற்றுக் கொண்டார். டெல்லி மாணவியை தைரியமான பெண் என குறிப்பிட்ட ஜான் கெர்ரி, அவருக்காக சிறிது நேரம் மௌன அஞ்சலி செலுத்துமாறு அனைவரையும் கேட்டுக் கொண்டார். 

மேலும் டெல்லி மாணவி, உயிர்வாழ விரும்பியதையும், தன்னை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்பதில் உறுதியாக இருந்ததையும் ஜான் கெர்ரி வெகுவாக பாராட்டினார். 

டெல்லி மாணவியின் போராட்ட குணம் லட்சக்கணக்கானவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தியது என்றும், பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்க வீதியில் வந்து போராட வைத்தது என்றும் கூறினார். 

மாணவிக்கு நேர்ந்த கொடுமைக்கு நீதி கேட்டு அந்த மாணவியின் குடும்பத்தினர் நடத்தி வரும் தொடர் போராட்டத்தையும் அமெரிக்க அரசு புகழ்ந்துள்ளது. 

உலக அளவில் மகளிரின் உரிமைகள் மற்றும் அதிகாரத்திற்காக உத்வேகத்துடன் போராடி வரும் பெண்களை அடையாளம் கண்டு, அவர்களுக்கு அமெரிக்க அரசு ஆண்டுதோறும் வீரமங்கை விருது வழங்கி வருகிறது. 

 
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

 

மாணவியின் சார்பில் அமெரிக்காவுக்கான இந்திய தூதர் நிரூபமா ராவ் விருதினை பெற்றுக் கொண்டார். டெல்லி மாணவியை தைரியமான பெண் என குறிப்பிட்ட ஜான் கெர்ரி, அவருக்காக சிறிது நேரம் மௌன அஞ்சலி செலுத்துமாறு அனைவரையும் கேட்டுக் கொண்டார்.

அந்த விருதிற்க்கே களங்கம் ...

அவருடைய பெற்றோர் எங்கே...?????????????????????????????????????

எந்த முகத்துடன் இந்திய ஆட்சியாளர்கள் விருது வாங்கினார்கள்

  • கருத்துக்கள உறவுகள்

என்னத்தில் வீரம்? :unsure:

 

நாட்டு மக்களை பாதுகாக்க வக்கில்லாதவர்கள் விருதுகளை அந்தப் பெண் சார்பாக வாங்கிக் கொள்கிறார்கள்..! வெட்கம்கெட்ட பிழைப்பு..

  • தொடங்கியவர்

அந்த பெண் ஒரு வீராங்கணைதான். தனது காதலனை காக்க 6 தெரு விடுகாலிகளை எதிர்த்து உயிர் கொடுத்தார். ஆனால் மகிந்தா, கோத்தாவிட்டு சோறுக்காக அவர்களின் கையாளாக இருந்து, பதவி உயர்வு பெற்ற போது கோத்தாவால் விருந்துவைத்து சிறப்பிக்கப்பட்ட நிருபம்மா அந்த பக்கம் கூட போக லாயக் இல்லாத மனுசி. இந்த இரண்டு காதகர்கள் கையில் பல்லாயிரம் குழந்தைகள், பெண்கள் கதறக் கதற உயிர் விட்ட  பொது அருகில் இருந்து வேடிக்கை பார்த்த அதிகாரி.

Edited by மல்லையூரான்

  • கருத்துக்கள உறவுகள்
பெண்ணின் பரிதாபகரமான இறப்புக்கு காரணமானவர்களை இன்னும் தண்டிக்கவில்லை. பெண்ணின் இறப்புக்கு பின்னும் பல நிகழ்வுகள் நடந்த வண்ணமே உள்ளன.இதை தடுக்க இந்திய அரசு என்ன நடவடிக்கை எடுத்தது??
 
இந்திய மக்களும் உலக ஊடகங்களும் தான் உண்மையை உலகுக்கு கொண்டு வந்தவர்கள்.அப்பெண்ணின் படத்தை ஊடகத்தில் போடச்சொல்லியும் தமது பிள்ளைக்கு நீதி வேண்டும் என கோரியும் அப்பெண்ணின் பெற்றோர் கேட்டும் இந்திய ஊடகங்கள் போடாதது ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.பின்னர் லண்டன் பத்திரிகை அப்பிள்ளையின் படத்தை வெளியிட்டது.
 
இவ்வளவு கேவலமான நிலையில் இருந்து கொண்டு அமெரிக்காவின் விருதை பாய்ந்து ஓடி வாங்குவது ஏன்?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.