Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இனப்படுகொலையாளி ராசபக்சேவை தண்டிக்கக்கோரி தஞ்சாவூரில் 5000 மாணவர்கள் திரண்ட பிரம்மாண்ட பேரணி! (ஏனைய போராட்ட செய்திகளும் இங்கு உடனுக்குடன் இணைக்கப்படும்.)

Featured Replies

ஞாயிற்றுக்கிழமையும் கல்லூரிகள் இயங்கும்

மாணவர்களின் போராட்டம் காரணமாக கடந்த சில நாட்களாக பல்கலை., கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. இந்நிலையில், 03.04.2013 புதன்கிழமை முதல் வகுப்புகள் துவக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து விடுமுறையை ஈடுகட்ட கூடுதல் நாட்களில் கல்லூரிகளை நடத்தி கொள்ள பொறியியல் கல்லூரிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமையும் வகுப்புக்களை நடத்தி, பாடங்களை நடத்தலாம் என அண்ணா பல்கலை., துணைவேந்தர் பத்திரிகையாளர்களிடம் கூறினார்.

nakkheeran

 

(முகநூல்)


-----------------------------------------------------------------------------------------------------------------------------------

 

GTV யில் 8 மணிக்கு விவாதம், தலைப்பு “தனி ஈழமா ?! சுயாட்சியா?!

(முகநூல்)

Edited by துளசி

  • Replies 1.3k
  • Views 119.8k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • தமிழரசு
    தமிழரசு

    Indian Students Supporting TN Students protest for Tamil EELAM   Eventhough Indian govt and Indian media trying to supress the feelings of Tamil people and Srilankan Genocide , Indian stu

  • தமிழரசு
    தமிழரசு

    இதே எழுற்சி வன்னியில் முள்ளிவாக்காலில் மிகமோசமான யுத்தம் நடைபெற்ற வேளையில் இருந்திருக்குமேயானால் இவ்வளவு இழப்புகள் ஏற்பட்டிருக்காது 

  • வீரப் பையன்26
    வீரப் பையன்26

    நன்றி தோழர்களே , இடை விடாது தொடர்ந்து அக்கல்லூரி முதல்வரை கண்டித்ததில் அவர் தற்போது ரத்தகொதிப்புக்கு உள்ளாகி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் . மேலும் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்ததால் ம

சன்ரைசெர்ஸ் அணியில் , 2 சிங்கள ஆட்டக்காரர்கள், என்ன சொல்கிறார் கலாநிதி மாறன்? தீர்க்கமான ஒரு முடிவு இன்னும் எடுக்கப்படவில்லை, ஏன்? சங்ககாராவின் பேட்டி படித்தேன், ஒட்டு மொத்த தமிழர்களின் குரல் ஓசை கேட்கவில்லை போல் இருக்கிறது, புறப்படு தமிழா கலாநிதி மாறனை முற்றுகையிட, தமிழனை ஏமாற்றியது போதும், தமிழர்கள் இனியும் ஏமாறமாட்டர்கள்

 

(முகநூல் : loyolahungerstrike)

சன்ரைசர்ஸ் அணியில் சிங்களவனை கேப்டனாக நியமித்து விட்டு ஈழ தமிழர்களுக்காகவே டெசோ என்று சொல்ல எப்படி ஐயா உங்களுக்கு மனம் வருகிறது?
சன் தொலைகாட்சிக்கு உங்கள் கண்டனத்தை தெரிவிக்க...
தொலைபேசி எண் - 04444676767...

(முகநூல்)
 

ஈழத்திற்கு
பொது வாக்கெடுப்பு என்ற நிலையை உலகம் எடுக்கும் வரை , அதற்கான அழுத்தங்களை
திட்டமிட்டு போராடும் பணியை, குணத்தை மானமுள்ள தமிழன் தன் வாழ்வில் ஒரு
பகுதியாக ஏற்றுக்கொண்டதை உலகிற்கு உறுதியாக தெரிவித்து வருகிறது தமிழக
மாணவர்களின் இன மீட்சிக்கான போராட்டம் . அதை தொடர்ந்த உலகம் முழுவதும்
நடக்கும் எழுச்சி போராட்டங்கள் , ஈழ நாட்டிற்கான முழு நம்பிக்கையை
கொடுக்கிறது.

தமிழனுக்கு என்று தனியே ஒரு நாடு இல்லை என்றால்
அவனது மொழியை , அவனது மிச்ச சொச்ச கலாசாரத்தை அவனது பண்பாட்டை , அவனது
அடையாளத்தை எக்காலத்திற்கும், பிற அரசாங்க நடைமுறைகளை கொண்ட
அரசியளிர்க்குள் காக்க முடியாது.

இங்கே தமிழன் என்று சொன்னது ஈழ
தமிழனை மட்டும் அல்ல . ஒட்டு மொத்த உலக தமிழனையும்தான் ; உலகில் அப்படி
ஒரு தனி நாடு உருவாக வாய்ப்பு உள்ள இடம் ஈழம் மட்டுமே .

எனவே ஈழம் என்பது ஈழ தமிழனுக்கு மட்டும் அன்று அது ஒட்டு மொத்த தமிழனுக்கும் மொழி அடையாளமாக, கலாசார அடையாளமாக இருக்கும் .


தமிழரின் தனி நாடு, தமிழ் மொழியை காப்பாற்றும் ; தமிழர் கலாசாரத்தை வாழ்வு
முறைகளை உயிர்பித்து எப்போதும் நிற்கும். அதையே பிரதானமாக கொண்டு
நிற்கும்.

தமிழ் இனம் , தமிழ் மொழி காக்க படவேண்டும் என்றால் வாய்ப்பு உள்ள தமிழ் ஈழம் நாடு தமிழருக்கு என்று நிச்சயம் வேண்டும்.


அதற்குண்டான பணிகளை நாம் நாளும் நம் சிந்தனையில் திட்டமிடுவோம்

 

  -முகநூல்-

Edited by சகானா

இன்று தலைநகர் சென்னையில் நடைபெற்ற தமிழீழ விடுதலைக்கான மாணவர் கூட்டமைப்பின் அனைத்து மாவட்ட பிரதிநிதிகள் பங்கேற்ற கூட்டத்தில் இறுதித் தேர்வு வரையில் இந்த போராட்டத்தை தக்கவைத்துக்கொள்ள நூதனமான முறையிலும் அனைத்து உலக மக்களும் பங்கேற்கும் வகையில் போராட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. நேரில் வர இயலாத சில மாவட்ட பிரதிநிதிகளுக்கு இந்த முடிவு தொலைபேசி மூலம் தெரிவிக்கப்பட்டு ஒப்புதல் பெறப்பட்டது.

மாணவர்களாகிய நாங்கள் எங்களது வகுப்பறையில் தினமும் காலை 11 முதல் 11:02 வரை இரண்டு நிமிடங்களுக்கு மௌனம் கடைபிடிப்போம். நம் தமிழினம் படும் துன்பங்களை இந்த உலகம் உணரும் வரையில், ஐநா மன்றம் ஈழத்தில் பொது வாக்கெடுப்பு நடத்தும் வரையில் தினமும் இரண்டு நிமிடங்கள் மௌனத்தை தொடருவோம். இந்த மௌனப் புரட்சியை அனைத்து உலக மாணவ சமுதாயத்துக்கும் பரப்புவோம்.

இன்று அனைத்து மாவட்ட மாணவர்களும் ஈழத்தில் பொது வாக்கெடுப்பு நடத்த வலியுறுத்தி இரண்டு நிமிடம் மௌனம் செலுத்தியபோது எடுக்கப்பட்ட படம்.

கீழுள்ள கடிதத்தை அனைத்து மொழிகளிலும் மொழிபெயர்த்து இணையதளத்தில் வெளியிடப்படும்.

ஓ உலக மனிதர்களே! உலக நாடுகளே !!
உங்களைப் போல் ஒருவராய் சக பயணியாய் எல்லையில்லா இப்பரந்த பூமியில் வாழப் பிறந்த ஈழத் தமிழர்களாகிய எங்களை, யாதும் ஊரே! யாவரும் கேளிர் என்று பேதம் பார்க்காமல் எல்லோரையும் நேசித்து வாழ்ந்த எங்களை, மனித நாகரிகத்திற்கும் அறிவிற்கும் ஒவ்வாத வகையில் இனம், மதம், நிறம், மொழி பார்த்து, கருத்து பேதம் கொண்டு எம் உயிரை, உடலை, உணர்வை, உருக்குலைத்து கொன்று சிதைக்கின்றனரே!

எம் தாயை, தமக்கையை, சேயை ஒரு துளி இரக்கமின்றி வெறிபிடித்து அழித்து, செத்த பிணத்தையும் புணர்ந்து தீக்கிரையாக்கி எம்மக்களை காற்றோடு காற்றாய் மண்ணோடு மண்ணாய் புதைக்கின்றனரே! இதை பார்த்துக்கொண்டிருப்பது மனித நீதியா? உங்களின் மனசாட்சிக்கு ஏற்புடையதுதானா? ஒரு கணம் சிந்தியுங்கள்.

வீடிழந்து நாடிழந்து எம்மக்களில் பல இலட்சம் பேர் உலகெங்கும் உயிர்பிழைக்க ஓடுகின்றனரே! பாராமுகம் காட்டும் அண்டை இந்தியநாட்டில் பல இலட்சம் பேர் தஞ்சம் அடைந்துள்ளனரே! ஒன்றரை இலட்சம் பேர் கொல்லப்பட்டனரே! இன்றும் தினம் தினம் எம்மவர் பிடித்துச் செல்லப்பட்டு காணாமல் ஆக்கப்படுகின்றனரே! எம் பெண்டிரின் நிலை சொல்லக்கூடியதா?

உறவிழந்து, உடமையிழந்து, உணர்ச்சி செத்து உரிமை பெற வழியின்றி வாடும் எம்மை மனிதராய் வாழ வழி காட்ட மாட்டீரா? இந்த அழிவை தடுத்து நிறுத்த மாட்டீரா? இவ்வுலகில் வாழும் மனிதர் எந்நாட்டவராக இருந்தாலும் அவர்களின் அடிப்படை வாழ்வுரிமையை பாதுகாப்பதாகச் சொல்லும் ஐநா மன்றமே “எம்மண்ணில் எங்களின் வாழ்வை நாங்களே தீர்மானிக்க இப்போதேனும் பொதுவாக்கெடுப்பு நடத்துக ! We Want Referendum.”

மனித நேயத்தோடு எங்களின் நிலையையும் எம்மைப் போன்று உலகமெங்கும் பல நாடுகளில் பெரும்பான்மையோரால் நசுக்கி அழிக்கப்படும் பரிதாபப்பட்ட சிறுபான்மை மக்களின் துயரத்தையும் மனதில் நினைத்து இழப்பிற்கு வருந்தியும் மீதமிருப்போரை வாழ வைக்கவும் ஒவ்வொரு நாளும் (காலை 11 முதல் 11.02 வரை) 2 நிமிடங்கள் எழுந்து நின்று மௌனம் கடைப்பிடியுங்கள். உங்களின் மனித நேயத்தை மௌனத்தால் உலகுக்கு தெரியப்படுத்துங்கள். உங்கள் மௌனம் உலகத்தாரின் மனசாட்சியை தட்டி எழுப்பட்டும். மாணவர் தொடக்கும் இம்மௌனப் புரட்சி உலகெங்கும் பரவட்டும். இம்மௌன மொழி அடக்கி ஆளும் நாடுகளின், ஐநா மன்றத்தின் காதுகளை கண்களை சிந்தையை தட்டி எழுப்பும் வரை தொடரட்டும். தன் நாட்டின் நலமொன்றே பெரிதென்றெண்ணி பிற மனித உயிர்களை துச்சமாக மதிக்கும் உலக நாடுகளின் போக்கு மாறட்டும்! மாபெரும் வலிமையுடன் மனிதரின் வாழ்வுரிமை நிலைநாட்டப்படட்டும்.
வையம் வாழ வாழும் பண்பை இவ்வுலகம் கற்கட்டும்.
ஈழம் மலரட்டும் ! மானுடம் வெல்லட்டும் ! !

 

http://www.facebook.com/photo.php?v=446970508717379&set=vb.100002133006250&type=2&theater

 

(முகநூல் : loyolahungerstrike)

Vicky Pillai

 

தமிழ் ஈழம் ஒன்றே குறிக்கோள்.

தோழர்களே மன்றாடி கேட்டுக்கொள்கிறேன் தயவு செய்து உங்கள் முகநூலின் சுயவிவர படமாக loyola hunger strike, சுயவிவர படத்தை
பாவிக்கவும், தமிழ் ஈழம் காணும் வரை உங்களின் சொந்த சுயவிவர படத்தை பாவிப்பதை தவிர்க்கவும். எல்லோரும் ஒரே குரல் கொடுப்பது போல், ஒரே சுயவிவர படத்தை பயன் படுத்துவோம், முடிந்த அளவுக்கு உங்களின் நண்பர்களையும், உறவினர்களையும் மாற்ற செய்யுங்கள், தமிழ் இன ஒற்றுமை ஓங்குக ஒற்றுமையை உலகத்துக்கு வெளிபடுத்துவோம். சுய விவர படத்தை மாற்ற உதவி தேவைபடுபவர்கள் அணுகலாம் நன்றி. please share.

 

---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

 

வணக்கம் நண்பர்களே. நாளை காலை 9மணிக்கு சென்னை எழில் நகரில் உள்ள தீயணைப்பு நிலையம் அருகில் ஆர்பாட்டம், போரட்டம் எழில் நகர் வியாபரிகள் மற்றும் ஆட்டோ ஒட்டுநர்கள் தலைமையில் நடைபெற உள்ளது. காலை 9 மணி அளவில்.


(முகநூல் : loyolahungerstrike)

மீண்டும் கல்லூரிகள் திறக்கபடுகின்றன .

மாணவர்கள் , அவரவர் உள்ளூர் நிலைமைகளுக்கு , ஏற்ப அமைதி அறவழி போராட்டங்களை சிந்தியுங்கள் .
கல்லூரி மாணவர்கள் மற்றும் மாணவியர் அனைவரிடமும் ஆதரவு தர கோரி பேசுங்கள் , நிச்சயம் அனைவரும் ஆதரவு தருவார்கள்.

இரண்டு நிமிடம் அமைதி என்பது செய்ய கூடியவர்கள் செய்யட்டும் .

அதை விட , கல்லூரி வளாகத்திற்கு முன் , சாலையோரத்தில் யாருக்கும் எந்த வித இடைஞ்சல் இல்லாமல் , மாணவர் சங்கிலி கைகோர்ப்பு என்று ஒவ்வொரு கல்லூரிக்கும் முன்னர் ஏன் செய்ய கூடாது ?

கல்லூரிக்குள் இரண்டு நிமிட அமைதி போராட்டம் அது கல்லூரி மாணவர்களிற்கு மட்டுமே தெரியும் , கல்லூரிக்கு வெளியே இப்படி அமைதியான சங்கிலி கோர்வையை மாணவர்கள் ஒழுங்கு அமைத்தால் மட்டுமே அது பொது மக்களின் மனதை உலுக்கும்.

ஒவ்வொரு போராட்டத்தையும் வெகு ஜன செய்தியாக்குங்கள் .:

(முகநூல் : loyolahungerstrike)

மாணவர்களை தொடர்ந்து தற்பொழுது பொதுமக்களும் தமிழீழ போராட்ட களத்தில்....

தமிழீழ இன படுகொலையை கண்டித்து பொதுமக்கள் சார்பாக நாளை (03.04.2013) மாலை SRP Tools முதல் OMR சாலையில் மனித சங்கிலி போராட்டம், OMR சாலையில் வேலை செய்யும் தகவல் தொழல் நுட்ப பணியாளர்கள் மற்றவர்களும், வாய்ப்பு உள்ளவர்கள் தவறாமல் கலந்து கொள்ளவும், முடிந்தால் செய்தியை மற்றவர்களுக்கு பகிரவும்...... மனித சங்கிலியில் கலந்து கொண்டு தமிழீழதிற்கான நமது ஆதரவினை பதிவு செய்வோம் !


(முகநூல்)

students will wear black band on 3rd april & attend colg demanding indian govt to remove 13 srilankan players from IPL team,,,,,,,,,pls forward nd share it....!!!!!!

 

625707_571559669551516_1987748374_n.jpg

 


(முகநூல்)

581392_499898133403471_356018596_n.jpg

 

ஈழ விடுதலைக்கான போராட்டம்:
இடம்: பெங்களூர்
நாள் : ஏப்ரல் 6,சனிக்கிழமை

அன்பார்ந்த நண்பர்களுக்கு:

ஈழத்தில் நடந்த இனப்படுகொலைக்கு நியாயம் கேட்டு வருகிற ஏப்ரல் முதல் வாரத்தில் பெங்களூரில் ஒரு கவன ஈர்ப்பு போராட்டத்தை முன்னெடுக்கலாம் என்று நண்பர்கள் பலரோடு கடந்த வாரங்களில் விவாதித்து வந்தோம்.எந்த வகையில் போராட்டத்தை முன்னெடுக்கலாம் என்று விவாதித்த போது, ஏற்கனவே ஏப்ரல் 6ஆம் தேதி பெங்களூர் தமிழ் மக்கள் சார்பாக, ஈழ மக்களுக்கான ஒரு வலுவான போராட்டம் முன்னெடுக்கப் படுவதாக தகவல் அறிந்தோம்.

அன்றைய போராட்டத்தை முன்னெடுக்க அய்யா பழ. நெடுமாறனும், வைகோவும் பெங்களூருக்கு வரவிருக்கிறார்கள்.

நம் நோக்கம் கோரிக்கை எல்லாம் ஒன்று தான். அது ஈழ மண்ணில் கடந்த அறுபது ஆண்டுகளாக,சிங்களனின் தொடர் அடக்குமுறைக்கு உள்ளாகி வரும், எம் உறவுகள் அனைவரும்,சிங்களனின் அடக்குமுறைகளில் இருந்து விடுபட்டு, தங்களுக்கான, சுதந்திர தமிழீழ தாயகத்தை அமைத்து கொள்ள, சர்வதேச நாடுகள் உதவியுடன் பொது வாக்கெடுப்பு ஒன்று நடத்த பட வேண்டும்.

ஏப்ரல் 6ஆம் தேதி பெங்களூரில் முன்னெடுக்கப்படும் போராட்டத்தின் கோரிக்கையும் அதுவே என்பதால்,தனித் தனியாக போராட்டத்தை முன்னெடுப்பதற்கு பதிலாக, நண்பர்களின் ஆலோசனை படியே, நாமும் அந்த போராட்டத்தில் கலந்து கொண்டு, போராட்டத்தை வலுப்பெற செய்வது தான் மிகச்சரியாக இருக்கும் என்று எண்ணுகிறோம்.

உணர்வுள்ள தமிழர்கள் அனைவரும் அந்த போராட்டத்தில் கலந்து கொண்டு, போராட்டத்தை வலுப்பெற செய்வது, தமிழர்கள் நம் ஒவ்வொருவரின் கடமையாகும். போராட்டம் வார இறுதி நாளான சனிக்கிழமை என்பதால், சாக்கு போக்குகளை தவிர்த்து விட்டு களம் காணுவோம்.

 

போராட்ட இடமும்,நேரமும் இன்னும் முடிவு செய்யப்படவில்லை.முழுமையான தகவல் தெரிந்தவுடன் உங்களோடு பகிர்ந்து கொள்ள ஆவலாய் இருக்கிறோம்.

தயாராகுங்கள் நண்பர்களே!

பெங்களூரில் இப்படி ஒரு நிகழ்வு நடக்கிறது என்பதே பலருக்கு தெரியாமல் இருக்கிறது. எனவே தயவு செய்து நண்பர்களே! இந்த செய்தியை பகிர்ந்தால், பலர் வந்து கலந்து கொள்ள உதவியாக இருக்கும்.

நன்றி!
பெங்களூர் தமிழ் நண்பர்கள்.
பொறியாளர். ஆன்டனி வளன்


(முகநூல்)

538957_366725153442189_1390293637_n.jpg

 

(முகநூல்)

புலிகள் தொடர்ந்தும் நாட்டுக்கு அச்சுறுத்தலாகவே காணப்படுகின்றனர் - இந்தியா #


புலி இருக்கும்போதும் அச்சுறுத்தல்.. இல்லாத போதும் அச்சுறுத்தல்..இதிலயிருந்து என்ன விளங்குது..?

பிரச்சினை புலியில்லை..உங்கட கொள்கை வகுப்பாக்கம். அதை முதல்ல மாத்துற வழியை பாருங்கோ..


பிறகு தெரியும் புலி அச்சுறுத்தலா? சிங்க(ள)ம் அச்சுறுத்தலா என்று..!

 

இல்லை மாத்தமாட்டம் என்று அடம்பிடிச்சா சிங்களவனும் சீனாக்காரனும் கட்டுற பாடையில போய்ச்சேருங்கோ..

Best of luck..

அண்ணாமலைப் பல்கலை மாணவர்கள் உண்ணாவிரதம்

திருச்சியில் கல்லூரி மாணவர்கள் அரசியல் கட்சியினரால் தாக்கப்பட்டதை கண்டித்து அண்ணாமலைப் பல்கலைக்கழக கலை, அறிவியல் மற்றும் வேளாண் புல மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்தனர். பின்னர் மாணவர்கள் சுமார் 50 பேர் அண்ணாமலைநகர் பூமா கோயில் முன்பு ஒரு நாள் அடையாள உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பின்னர் மாலை 5 மணிக்கு பேராசிரியர் செல்லப்பன் உண்ணாவிரதத்தை முடித்து வைத்தார்.

 

(முகநூல்: loyolahungerstrike)

போர்க்குற்றத்தில் ஈடுபட்ட இலங்கை தண்டிக்கப்பட வேண்டும்: நடிகர்கள் ஆவேசம்

 

இலங்கை தமிழர்களுக்காக உண்ணாவிரதம் இருந்த நடிகர்கள் தெரிவித்த கருத்து வருமாறு:-
 
விஷால்:- இலங்கையில் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு உரிமைகள் கிடைக்க வேண்டும். மத்திய அரசு இதில் தலையிட்டு தமிழர்களின் மறுவாழ்வுக்கு ஏற்பாடு செய்ய வேண்டும். போர்க்குற்றத்தில் ஈடுபட்டவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்.
 
நாசர்:- இலங்கை தமிழர்களுக்காக உலகம் முழுவதும் மக்கள் ஆதரவு கரம் நீட்டி வருகின்றனர். நடிகர் சங்கமும் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளது. இலங்கை தமிழர்களின் கோரிக்கையான தமிழ் ஈழம் எப்போதோ அமைந்து இருக்க வேண்டும். இவ்வளவு உயிர்ச் சேதம் ஏற்பட்ட பிறகும் அவர்கள் கோரிக்கை நிறைவேறாதது வருத்தம் அளிக்கிறது. இந்த எழுச்சி உலகத்தின் காதுகளில் விழும். இனியாவது விடியல் ஏற்படட்டும்.
 
பிரகாஷ்ராஜ்:- மனிதர்களின் அடிப்படை உரிமையை பறிப்பதற்கு எவருக்கும் உரிமை இல்லை. இலங்கையில் நடந்துள்ளது மோசமான செயல்பாடுகள். தமிழ் இனம் அழிக்கப்பட்டுள்ளது. இதற்கு எதிராக மாணர்கள் நடத்தும் போராட்டத்தை விட்டுவிட வேண்டும். இலங்கை மக்களுக்கு விடியல் ஏற்படட்டும். இலங்கை பிரச்சினை தொடர்பாக தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை மத்திய அரசு ஏற்று செயல்படுத்த வேண்டும். அதுவரை போராட்டம் நீடிக்கும்.
 
கோவை சரளா:- இலங்கை தமிழர் பிரச்சினையில் மத்திய அரசு தலையிட தமிழகம் முழுவதும் மக்கள் ஒன்றிணைந்து போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர். உரிமைக்காகவே இப்போராட்டம், ஈழ தமிழ் மக்களுக்கு விடிவு ஏற்பட வேண்டும்.
 
பரத்:- இலங்கை தமிழர்கள் நம் உடன்பிறப்புக்கள். அவர்கள் எந்த வகையிலும் பாதிக்கப்படக்கூடாது. மத்திய அரசு தலையிட்டு மறுவாழ்வுக்கான நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு தெரிவித்தனர்.

 

http://www.paristamil.com/tamilnews/view-news-MjYwNTc4MjYw.htm#.UVt-wjeG2Qs

நடிகர்களின் உண்ணாவிரதத்தில் மாணவன் ஜோ. பிரிட்டோவின் உரை..
 

நடிகர்களின் உண்ணாவிரதத்தில் பல குறைகள் இருப்பதாக பலர் முகநூலில் தெரிவித்துள்ளார்கள். :rolleyes:

எவ்வாறாயினும் நடிகர்கள் உண்ணாவிரதமிருப்பது நிச்சயம் மாணவர் போராட்டத்துக்கு ஒரு பிரச்சாரமாக அமையும். எனவே அவர்கள் உண்ணாவிரதம் வரவேற்கப்பட வேண்டிய ஒன்றே...

தமிழினத்திற்கு மரணம் தான் முடிவா?
வாக்காளர் அடையாள அட்டைகளை தீயிலிட்டு கொளுத்திய மாணவர்கள்

"தனி தமிழ் ஈழம் வேண்டும்".
உலக அளவில் பரந்து விரிந்து கிடக்கும் ஈழத் தமிழ்ர்களிடம் பொதுவாக்கெடுப்பு நடத்த வேண்டும் போன்ற கோரிக்கைளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் மாணவர்கள் போராட்டம் தீவிரமடைந்து நடந்து கொண்டிருக்கிறது.

இந்த நிலையில் கடலூர் மாவட்ட மாணவர்கள் பல கட்ட போராட்டங்களை நடத்தி உள்ளனர். புதன் கிழமை இன்று (03/04/2013) விருத்தாசலம் பேருந்து நிலையம் முன்பு திரண்ட மாணவர்கள் இந்திய அரசே..

மரணம் தான் முடிவா தமிழினத்திற்கு..
வாக்காளர் அடையாள அட்டை இனி எதற்கு என்று தங்களுடைய வாக்காளர் அடையாள அட்டையை தீயிலிட்டனர்

இந்த போராட்டம் மீண்டும் அடுத்த வடிவம் பெறும்.
தமிழ் ஈழம் பெறும் வரை மாணவர்கள் போராட்டம் ஓயாது என்றனர் போராட்ட மாணவர்கள்.

 

(முகநூல்)



------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

தமிழீழமும் மாணவர் கடமையும்...
கருத்தரங்கம்...5-4-2013, வெள்ளி மாலை 3.00 மணிக்கு ,காயத்ரி மகால்,
காங்கயம் சாலை,வேலன் ஓட்டல் எதிரில்... திருப்பூர். தவறாது வருக.

 

521663_601677523177610_1326846778_n.jpg

 

(முகநூல்: loyolahungerstrike)

72988_443451892396245_762194372_n.jpg

 

ஈழத்தமிழர் விவகாரம் காரணமாக கால வரையற்று மூடப்பட்டு இருந்த அனைத்து பொறியியல் கல்லூரிகளும் இன்று. திறக்கப்பட்டன. மாணவர்களின் போராட்டத்தால் மொத்தமாக 15 நாள் விடுமுறை விடப்பட்டு இருக்கிறது. பாடங்கள் எதுவும் எடுத்து நடத்தி முடிக்கப்படவில்லை. தேர்வுகளும் நெருங்கி விட்டன . ஆக இந்த 15 நாள் விடுமுறையை ஈடுகட்ட இன்று முதல் தினம் 9 மணி நேரம் கல்லூரிகள் இயங்கும் என்றும், சனி, ஞாயிறு விடுமுறை கூட கிடையாது என்றும் கல்வித்துறை அறிவித்து இருக்கிறது .

 

இது ஒருபக்கமானாலும், மறுபக்கம் இன்று கல்லூரி வந்த மாணவர்கள் அனைவரும் 'கருப்பு பேட்ஜ்' அணிந்து வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

(முகநூல்)

 

தமிழ் ஈழ விடுதலைக்காக சென்னை செம்பரம்பாக்கம் சாஸ்தா பொறியியல் கல்லூரி மாணவர்களின் கருப்பு அடையாளப் போராட்டம்…

 

299243_4682654944031_29921055_n.jpg

 

(முகநூல்)



கல்லூரிகள் திறப்பு: கறுப்பு பேட்ஜ் அணிந்து வந்தனர் மாணவர்கள்

 

black-badge.png

 

மாணவர்கள் நடத்திய போராட்டங்களால் மூடப்பட்டிருந்த தமிழகத்தின் அனைத்துக் கல்லூரிகளும் இன்று திறக்கப்பட்டன. இருப்பினும் எதிர்ப்புகளை தொடர்ந்து தெரிவிக்கும் வகையில் கருப்பு பேட்ஜ் அணிந்து வகுப்புகளுக்கு சென்றனர் மாணவர்கள்.

அப்பாவித் தமிழர்களைக் கொன்று குவித்த இலங்கை அதிபர் ராஜபக்சவைப் போர்க்குற்றவாளியாக அறிவிக்க வேண்டும், இலங்கை மீது பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, கல்லூரி மாணவர்கள் தமிழகம் முழுவதும் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டனர்.

மாணவர்களின் இந்த எழுச்சி போராட்டங்களால், கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், கடந்த மார்ச் 15-ஆம் தேதி முதல் காலவரையின்றி மூடப்பட்டன.

இதேபோல் பொறியியல் கல்லூரிகளுக்கும், மார்ச் 18-ஆம் தேதி முதல் விடுமுறை அளிக்கப்பட்டது. நடப்பாண்டிற்கான இறுதி தேர்வுகள் நெருங்கி வருவதாலும், மாணவர்களின் கல்வி பாதிக்கப்படாமலும் இருக்க, தமிழகத்தில் மூடப்பட்ட அனைத்துக் கல்லூரிகளும், இன்று திறக்கப்பட்டன.

அப்போது வகுப்புகளுக்கு வந்த மாணவர்கள், தங்களின் எதிர்ப்புகளை தொடர்ந்து பதிவு செய்யும் வகையில் கருப்பு பேட்ஜ் அணிந்து வந்தனர்.

இறுதித் தேர்வுகள் முடியும் வரை தொடர்ந்து கருப்பு பேட்ஜ் அணிந்து வருவது என்றும், அடுத்த கட்டப் போராட்டங்கள் குறித்து மாணவர் அமைப்பினருடன் கலந்து பேசிய பின்னர் முடிவு செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும், தினமும் ஒரு கல்லூரி வீதம் கருப்பு பேட்ஜ் போராட்டம் நடைபெறும் என்றும் மாணவர் தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

 

http://puthiyathalaimurai.tv/tn-colleges-reopened

  • கருத்துக்கள உறவுகள்

மாணவர்கள்

மக்கள்

திரைப்படத்துறையினர்

கட்சியினர்

அனைவருக்கும் கரம் கூப்பி நன்றிகள்

 

தொடர்ந்து இந்த திரியில் தமது நேரங்களைச்செலவிடும் துளசி  பையன்26 தமிழரசு அகூதா  மற்றும் தம்பி  சுண்டல் ஆகியோருக்கு தலை சாய்த்து நன்றிகள்

'IPL' சன் ரைசஸ் அணியிலிருந்து இனப்படுகொலை நாடான இலங்கை வீரர்களை வெளியேற்ற கோரி சன் தொலைக்காட்சி அலுவலகம் நாளை மாணவர்களால் முற்றுகை ..

Date: 04.04.2013
Place: Murasoli Maran Towers
73, MRC Nagar Main Road,
MRC Nagar,
Chennai - 600 028

 

24303_325748357527503_1058342432_n.jpg

 

(முகநூல்)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

tomorrow's boycott of sun office should make the owner kalanidhi maran to get rid of srilankan players from his team ......

 

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

 

 

நாளை காலை 10 மணிக்கு சிங்கள வீரர்களை நீக்காத சன்ரைசர்ஸ் அணியின் உரிமையாளாரன சன்குழுமத்தின் பட்டினப்பாக்கம் சன் தொலைக்காட்சி அலுவலகம் முற்றுகை... தமிழர்களிடம் பிழைப்பு நடத்தி அவர்கள் பணத்தை கொண்டு அவர்கள் மண்ணிலே இருந்து கொண்டு சிங்கள வீரர்களை விளையாட வைத்தால் என்ன நடக்கும் என உணர்த்துவோம்,...!!

தமிழரின் தாகம்!! தமிழீழ தாயகம்!!
 

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

 

மாணவர் கூட்டமைப்பினர் திருச்சியில் உள்ள நிகின் லங்கா அலுவலகத்தை இழுத்துப் பூட்டியதால் கண்டோன்மென்ட் பகுதியில் பதற்றம் நிலவுகிறது.

சிங்கள நிறுவனங்கள் வெளியேற 24 மணி நேரம் கெடு: திருச்சியில் மாணவர் கூட்டமைப்பு எச்சரிக்கை.

http://www.dinaithal.com/index.php?option=com_content&view=article&id=13756%3Anikin-lanka&catid=36%3Atamilnadu&Itemid=102

 

-முகநூல்-Loyolahungerstrike

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~ திருச்சியில் சிங்கள அலுவலகத்தை இழுத்துப் பூட்டிய மாணவர்கள் ; பதற்றம் நிலவுகிறது.[படங்கள் ] பிரிவு: தமிழ் நாடு

trchy-2day-1.JPG

ஈழவிடுதலைக்கான மாணவர் கூட்டமைப்பினர் திருச்சியில் உள்ள நிகின் லங்கா அலுவலகத்தை இழுத்துப் பூட்டியதால் கண்டோன்மென்ட் பகுதியில் பதற்றம் நிலவுகிறது.

திருச்சியில் இலங்கை சம்பந்தப்பட்ட விமான நிறுவன‌ங்கள் உள்ளிட்ட பல்வேறு சேவை நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. ஈழத்திற்கான மாணவர் போராட்டங்கள் உச்சத்தில் இருந்த போது இந்த அலுவலகங்கள் மீது தாக்குதல் நடத்தப் போவதாக ஒரு தகவல் பரவியது. போலீஸார் எச்சரிக்கை கொடுத்ததால் உடனடியாக இந்த நிறுவனங்கள் இழுத்து மூடப்பட்டு தாக்குதலுக்கு தப்பின.

இந்த நிலையில் இன்று, கண்டோன்மென்ட் போலீஸ் ஸ்டேஷன் அருகில் உள்ள நிகின் லங்கா ஏர்லைன்ஸ் அலுவலகத்திற்கு திரண்டு வந்த மாணவர் கூட்டமைப்பினர், அங்கிருந்த ஊழியர்களை வெளியேற்றிவிட்டு அலுவலகத்தை இழுத்து மூடி பூட்டுப் போட்டனர்.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய போராட்ட குழுவை சேர்ந்த சத்தியகுமாரன், பெருமாள் ஆகியோர், ''திருச்சியில் உள்ள சிங்களர்கள் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் அனைத்தும் இன்னும் 24 மணி நேரத்திற்குள் இழுத்துப் பூட்டி இடத்தைக் காலி செய்ய வேண்டும். இல்லாவிட்டால் நாங்கள் காலி செய்வோம். இதுவரை அகிம்சை வழியில் போராடிக் கொண்டிருந்த நாங்கள் இனி மாற்று வழியில் போராட்டம் நடத்தவும் தயங்க மாட்டோம்" என்று எச்சரித்தார்கள்.

 
 நிகின் லங்கா அலுவலகத்திற்கு பூட்டுப் போட்டது தொடர்பாக சட்டக் கல்லூரி மாணவர்கள் பத்துப்பேரை கஸ்டடியில் வைத்து விசாரித்துக் கொண்டிருக்கிறது கண்டோன்மென்ட் போலீஸ். இதனால் கண்டோன்மென்ட் பகுதியில் பதற்றம் நிலவி வருகிறது.trchy-2day.JPG

 

 

 

 

 



http://www.dinaithal.com/index.php?option=com_content&view=article&id=13756%3Anikin-lanka&catid=36%3Atamilnadu&Itemid=102

  • கருத்துக்கள உறவுகள்

பிரான்சிலிருந்து மாணவர்களின் போராட்டத்துக்கு ஆதரவாக  ஒரு தளம்

 

http://www.tagtamil.com/

மாணவர்களுக்கு ஆதரவாய் எட்டு கி.மீ மனித சங்கிலி போராட்டம்.

ஈழ மக்களின் நலனுக்காக வேண்டி முக்கிய கோரிக்கைகளை வைத்து கடந்த இரண்டு வாரங்களுக்கு மேல் போராடி வரும் மாணவர்களுக்கு ஆதரவாக இன்று மாலை பொது மக்களும் வியாபாரிகளும் மனித சங்கிலி போராட்டத்தை நடத்தினார்கள். சென்னை தரமணி டைடல் பார்க்கை அடுத்த எஸ்.ஆர்.பி நிறுத்தம் தொடங்கி பழைய மகாபலிபுரம் சாலையில் கோழிங்கநல்லூர் வரை தொடர்ந்து எட்டு கிலோ மீட்டர் நீளத்திற்கு இந்த போராட்டம் நடந்தது.

பொது மக்கள் வியாபாரிகள், ஆட்டோ ஓட்டுனர்கள்,பள்ளி மாணவர்கள் சிறுவர்கள், பெண்கள் என்று பலரும் இந்த போராட்டத்தில் முனைப்போடு பங்கேற்றார்கள். இந்த மனித சங்கிலியில் ஐயா பழ. நெடுமாறன், வியாபாரிகள் சங்க தலைவர் வெள்ளையன், இயக்குனர்கள் புகழேந்தி தங்கராஜ், கௌதமன், மதிமுக நிர்வாகி பாலவாக்கம் சோமு, நாம் தமிழர் கட்சியின் செய்தி தொடர்பாளர் ஆவல் சீமான்,வேளச்சேரி மணிமாறன்,காஞ்சி ராஜன்,தசரதன், பிரபாகரன் உள்ளிட்ட பல நிர்வாகிகளும் பங்கேற்றார்கள்.ஈழத்திற்கு ஆதவாகவும் ராஜபக்சேவுக்கு எதிராகவும் முழக்கமிட்டபடி போராட்டம் நீண்டு நடந்து முடிந்தது.

 

529495_438688216217765_1148912762_n.jpg

 

48093_438688212884432_1761841756_n.jpg

 

48162_438688209551099_640190999_n.jpg

 

2524_438688222884431_1094229561_n.jpg

 

531781_438688239551096_604233059_n.jpg

 

483577_438688289551091_1695372848_n.jpg

 

48150_438688336217753_2081839797_n.jpg

 

(முகநூல்)

மனித சங்கிலி போராட்டம் தொடர்பான மேலும் சில படங்கள்.

 

46973_600027196691378_176734273_n.jpg

 

562614_600026840024747_167972344_n.jpg

 

388707_600026316691466_1945719700_n.jpg

 

555119_600026700024761_1327585094_n.jpg

 

63577_600026663358098_1587393877_n.jpg

 

579738_600027323358032_1554794579_n.jpg

 

533863_600027610024670_178121707_n.jpg

 

150768_600027753357989_1294810126_n.jpg

 

3021_600027890024642_1924708812_n.jpg

 

6741_600028170024614_1907686751_n.jpg

 

532157_600028440024587_1549356128_n.jpg

 

544697_600028786691219_1301585066_n.jpg

 

531969_600028826691215_1498280406_n.jpg

 

156822_600029053357859_446135079_n.jpg

 

73141_600029136691184_1606002077_n.jpg

 

156824_600029653357799_701677265_n.jpg

 

149445_600029646691133_2053909971_n.jpg

 

563579_600030016691096_56669415_n.jpg

 

485368_600029953357769_59920647_n.jpg

 

544529_600026073358157_403314989_n.jpg

 

(முகநூல்)

 

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.