Jump to content

யார் இந்த முருகதாஸ்


Recommended Posts

சுண்டல்! தமிழ் மாணவர் போராட்டம் பற்றி நான் எதுவும் அபசகுனமாக சொல்ல விரும்பவில்லை. இரண்டு வாரங்கள் கழித்து இதற்கு பதில் சொல்கிறேன்.

சபேசன் இந்த மாணவர் போரராட்டத்தை தோற்கடிக்க வேண்டுமாயின் நிறைய அரசியல் தெரிய வேண்டும்.

 

மாணவர் வெளியில் காட்டவிட்டாலும் கருணநிதிதான் இன்றைய எழுச்சிக்கு காரணம். கருணாநிதியும் போடாவும் இல்லாமலிருந்திருந்தால் ஒருவேலை இந்திய அரசுக்கு இலங்கையை கொண்டு புலிகளை அழித்திருக்க முடிந்திருக்காமலிருந்திருக்கலாம். ஆனால் அது அதற்கு மேலே போயிருக்காது. தமிழ் நாட்டவர் ரஜபக்ஷாமீது மட்டும்தான் கோபம் காடியிருப்பார்கள். இன்றைய அவர்களது கோபம் மத்திய அரசு மீது. இதை மத்திய அரசு ஜெயலலிதாவை நெருக்குவித்து  அடக்குவித்தால் ஜெயலலிதாவின் மிக்கக்குடிய இழப்பு அடுத்த தேர்தலில் முதல் அமைச்சர் பதவி மட்டும்.

 

ஆனால் மத்திய அரசு போராட்டத்தை அடக்குகிறதோ இல்லையோ, மாணர்களை(வரும் கால தமிழ்நாட்டை) இனி இந்திய குடையை ஏற்கவைக்க வேண்டுமாயின் சோனியா மாதிரி ஒரு சிறறிவுத்தலைக்கு முடியாது. ஏழமையில் இருந்த தமிழ் நாட்டிலேயே அண்ண அரசியலை கைக்குள் எடுத்தவுடன், காமராஜர், ராஜாஜி எல்லோருமே ஒதுங்கினார்கள். ஆனால் அண்ணா மானிலத்தின் நிலைமையை அறிந்து தான் தான் பின்வாங்கினார். மானிலம் இன்னும் பத்து, பதின்னைந்து  வருசத்தில் தென் கிழக்கசியாவில் ஒரு அரசியல்,பொருளாதார  சக்தியாக மாறப் போகிறது. அன்று அதிகாரக் கதிரைகள் இதே மாணவர்களின் கீழ் மெல்ல மெல்ல  உருண்டு வரத்தொடங்கும். அதை உணர்ந்து கொள்ளத்தெரியாத சோனியா காந்தி இந்த போராட்டதை கையாண்ட்டால் என்ன நடக்கும் என்பதை எதிர்வு கூற முடியாது. கல்லெறி வந்து விழுந்தாலும் சிதம்பரம், தங்கபாலு  போன்றோர் மாணவர்களுக்காக விழுந்து அடிப்பது அவர்கள் இதை விளங்கிக்கொண்டதினால். ஆனால் அவர்களின் கதை கண்கெட்ட பின் சூரிய நமஸ்காரமா தெரியாது.

 

ஆனால் உங்களை போல சொல்ல விரும்பாதது மாதிரி அபசகுன எதிர்வு கூறினால் இந்த மானிலம் தெற்கில் ஒரு காஸ்மீரமாகும்.

 

இது அரசியலை அறிந்த எவைக்கும் தெரியும் இது தோற்கடிக்கப்படக்கூடாத போராட்டம். கவனமா அரசியல் அறிந்து பேச்சுவார்த்தைகளால் தீர்க்க வேண்டிய போராட்டம். இந்தியாவை இலங்கையில் வைத்து சிரித்த போல பலர் அட  இந்தியா எந்தப் பெரிய நாடு என்றார்கள். ஆனால் அவர்களால் மாலைதீவில் சரண் அடைந்த ஜனாதிபதியை காக்க முடியவில்லை. பாகிஸ்தானுடன், வங்காளத்துடன் பேசமுடியவில்லை.(நான் சீனாவை பற்றி எழுதவில்லை).ஆனால் இவை எல்லாம் காட்டு மிராண்டு நாடுகள்.என்று கழித்துவிட்டால். இந்தியா ராஜதந்திரிகளுக்கு இத்தாலி ஒரு சின்ன நாகரிகமான நட்டை கையாள முடியவில்லை.(இலங்கை அதேநேரம் எல்லா மேற்கு நாடுகளும் ஒரே தடவையில் தண்ணி காட்டி வந்தது) முதலில் சோனியா அரசியல் என்றால் என்ன என்று புரிந்து கொள்ள வேண்டும். இரண்டு கிழமைக்குள் இந்த மாணவர் போரட்டத்தை தீர்த்துவைக்காமல் தோற்கடித்தால் இன்னும் 20 வருசத்தில் தெற்கில் ஒரு தனி நாடு இருக்கும்.

Link to comment
Share on other sites

  • Replies 100
  • Created
  • Last Reply

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.