Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

திரையில் புகுந்த கதைகள்

Featured Replies

"திரையில் புகுந்த கதைகள்" என்ற வானொலிப்படைப்பை நான் வழங்கியபோது சேர்த்த சில விஷயங்களை இங்கே பகிர்கின்றேன்.மலையாள சினிமா உலகு போல் அதிகப்படியான நாவல் இலக்கியங்களைத் திரையில், தமிழ்ப்படங்கள் தராவிட்டாலும் சிறந்த பல நாவல்கள் படமாக்கப்பட்டிருக்கின்றன.

முழுப்பதிவிற்கும்:

http://kanapraba.blogspot.com/2006/07/blog...og-post_04.html

அகிலனின் பாகப்பிரிவினை, சிவகுமார்,லக்சுமி,ஜெய்சங்கர்

சுலக்சனா நடித்த படம் (இன்று போய் நாளை வா - என்ற பெயரில் இருக்கலாம் என நினைக்கிறேன்), இலங்கையில் செங்கையாழியனின் வாடைக்காற்று அதே பெயரில் திரைப்படமாக வந்தது. சிவசங்கர்/அல்லது இந்துமதியின் நாவல் அவன் அவள் அது என்ற படமாக வந்தது என்று நினைக்கிறேன். புவனா ஒரு கேள்விக்குறியும் ஒரு நாவல் என்று நினைக்கிறேன். நிச்சயமாகச் சொல்லமுடியாது

தங்கர் பச்சானின் திரைப்படங்கள் பெரும்பாலும் நாவலாக இருந்து திரைப்படமானவை தான்....

விக்ரம் திரைப்படம் குமுதத்தில் தொடராக வந்தபோதே படப்பிடிப்பும் நடத்தப்பட்டதாம்... நான் அடிமை இல்லை திரைப்படமும் இதுபோல தான்....

  • தொடங்கியவர்

அரவிந்தன், லக்கிலுக்

மேலதிக தகவல்களுக்கு நன்றிகள்,

அவன், அவள் அது, சிவசங்கரியின் கதை

அகிலனின் பாகப்பிரிவினை, சிவகுமார்,லக்சுமி,ஜெய்சங்கர்

சுலக்சனா நடித்த படம் (இன்று போய் நாளை வா - என்ற பெயரில் இருக்கலாம் என நினைக்கிறேன்),

"இன்று போய் நாளை வா" பாக்யராஜ் இயக்கி நடித்தப் படம்... எனவே அதுவாக இருக்க வாய்ப்பில்லை...

நான் இதுவரை அறியாத தகவல்கள்..நன்றி க.பிரபா அண்ணா, லக்கி அண்ணா, அரவிந்தன் அண்ணா

நல்லதொரு பதிவு கானபிரபா

சினிமாவுக்குள் சிந்திக்க வைக்கும் உங்கள் பணி தொடரட்டும்.

அதற்கான நன்றிகள்.

"உயர்வான ஒரு சினிமாவே ஒரு இலக்கியம்தான்!.

அதே சமயம் இலக்கியம் சார்ந்து நல்ல ரசனையோடு

ஒரு திரைப்படம் உருவாகும் போது

அந்தத் திரைப்படத்தின் இரட்டிப்பு வெற்றியும் சிறப்பும் உன்னதமானது."

-மகேந்திரன்

(சினிமாவும் நானும் புத்தகத்திலிருந்து............)

உருப்படியான திரைக் கதை உருவாகாத காரணத்தால்

பல தமிழ் திரைப்படங்கள் தோல்வி கண்டன.

ஆனால்

pather-panchali.jpg

சத்யஜித் ரேயின் பெரும்பாலான படங்கள்

நாவல்களிலிருந்து உதித்தவை.

வெற்றி கண்டவை..........

இவர் நாவலைப் படமாக்கும் போது

அதை திரைக்கு ஏற்ற விதத்தில் மாற்றங்களைக்

கொண்டு வந்தார்.

இதில் அவருக்கும் நாவலாசிரியர்களுக்குமிடையே

பல முரண்பாடுகள் தோன்றின.

அப்போது ரே

"மூலக் கதை அல்லது கதை உங்களுடையதுதான்.

ஆனால் திரைக் கதை என்னுடையது" என்றார்.

இதுதான் ரே அவர்களது வெற்றிக்கு காரணம்.

இப்பதிவு கண்டதும்

கதையை வாசித்து விட்டு படத்தை பார்ப்பதா?

அல்லது

படத்தைப் பார்த்து விட்டு கதையை வாசிப்பதா?

என்று யோசிக்கிறேன்.

குழப்பிட்டீங்க பிரபா? :P

"இன்று போய் நாளை வா" பாக்யராஜ் இயக்கி நடித்தப் படம்... எனவே அதுவாக இருக்க வாய்ப்பில்லை...

இன்று நீ நாளை நானாக இருக்கலாம்

  • தொடங்கியவர்

வணக்கம் அஜீவன்

மகேந்திரனின் மேற்கோள்களோடு உங்கள் சிறப்பான, தனித்துவமான பின்னூட்டம் தந்திருக்கிறீர்கள். பல நாவல்களைப் படித்துவிட்டுப் படம் பார்த்தால் ஏமாற்றம் தான் மிஞ்சும், ஆனாலும் நாவல் தரும் சுகத்தை இரண்டரை மணி நேர சினிமா தருவது கடினமே.

வணக்கம் தூயா

தங்களின் கருத்துக்கு என் நன்றிகள்

  • கருத்துக்கள உறவுகள்

நாவல்களில் இருந்து உருவான திரைப்படங்கள் போல திரைப்படங்களில் இருந்தும் நாவல்கள் உருவாகியுள்ளது. அகத்தியனின் காதல் கோட்டை படம் பெரும் வெற்றி பெற்றதன் பிறகு, அவர் இப்படத்தின் கதையினை நாவலாக வெளியிட்டார்.

நாவல்களில் இருந்து சின்னத்திரை தொடர்களும் உருவாக்கப்பட்டது. நா.பார்த்தசாரதியின் குறிஞ்சி மலர் நாவல் 90ம் ஆண்டில் தூரதர்சனில் கலைஞ்சரின் மகன் ஸ்டாலின் நடிக்க தொடராக ஒளிபரப்புச் செய்தார்கள்.

இந்துமதியின் நாவல் பிறகு விஜய் தொலைக்காட்சியின் தயாரிப்பில் ' நீ நான் அவள்' என்ற சின்னத்திரை நாடகமாக ஒளிபரப்பாகி வந்தது.

  • தொடங்கியவர்

மேலதிக தகவல்களுக்கு என் நன்றிகள் கந்தப்பு

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நாவல் தரும் சுகத்தை இரண்டரை மணி நேர சினிமா தருவது கடினமே.

முற்றிலும் உண்மை Kanapraba.

நாவல்கள் படிப்பதும் தனி சுகம்.

  • தொடங்கியவர்

கருத்துக்களைப் பகிர்ந்தமைக்கு நன்றிகள் பிறேம்

ஆங்கிலத்தில் Harrypotter அப்படி தான்..

புத்தகங்களில் வரும் பல விடயங்கள் படத்தில் வராத போது..ஏமாற்றமாக இருக்கும்...

நாவல்களில் இருந்து உருவான திரைப்படங்கள் போல திரைப்படங்களில் இருந்தும் நாவல்கள் உருவாகியுள்ளது. அகத்தியனின் காதல் கோட்டை படம் பெரும் வெற்றி பெற்றதன் பிறகு, அவர் இப்படத்தின் கதையினை நாவலாக வெளியிட்டார்.

இதுபோலவே கலைஞரின் பராசக்தி 1952ல் வெளிவந்து பெரும் வெற்றி பெற்ற பின்னர்..... படத்தின் கதை வசனம் புத்தகமாக வெளிவந்து பரபரப்பாக விற்பனை ஆகி இருக்கிறது.... அந்தப் புத்தகத்தில் வந்த லாபத்தில் தான் கலைஞர் முரசொலிக்கு பிரிண்டிங் பிரஸ்ஸே வாங்கினார்.....

நாவல்களில் இருந்து சின்னத்திரை தொடர்களும் உருவாக்கப்பட்டது. நா.பார்த்தசாரதியின் குறிஞ்சி மலர்

புகழ் பெற்ற இந்த நாவலில் வந்த கதா நாயகனின்(அரவிந்தன்) பெயரினைத்தான் அன்னாவலினை வாசித்த எனது பெற்றோர்கள் நான் பிறந்த போது எனக்குப் பெயர் சூட்டினார்கள்

  • தொடங்கியவர்

லக்கி லூக் அரிய தகவலைத் தந்ததற்கு நன்றிகள்

அரவிந்தன்,

உங்கட அப்பா, தன்ர மகன் பார்த்தசாரதி லெவலுக்கு வரவேணும் எண்டு நினைச்சிருப்பார் என்ன:-)

லக்கி லூக் அரிய தகவலைத் தந்ததற்கு நன்றிகள்

அரவிந்தன்,

உங்கட அப்பா, தன்ர மகன் பார்த்தசாரதி லெவலுக்கு வரவேணும் எண்டு நினைச்சிருப்பார் என்ன:-)

பார்த்தசாரதிக்கு சமமாக வர நினைக்கவில்லை. அவ் நாவலின் கதா நாயகன் அரவிந்தன், தனது வாழ் நாளின் பிற்பகுதியில் தொழு நோயினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிசெய்து கடைசியில் தொழு நோயினால் இறக்கிறார்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.