Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கூட்டணியில் இருப்பதால்தானே மிரட்ட முடிகிறது: கருணாநிதி விளக்கம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கூட்டணியில் இருப்பதால்தானே மிரட்ட முடிகிறது: கருணாநிதி விளக்கம்

 

  • karunanidhi_speech.JPG

திமுக மத்திய ஆளும் கூட்டணியில் அங்கம் வகிப்பதால்தானே, அதை மிரட்டி தமிழக நலன்களுக்காக சிலவற்றை சாதித்துக் கொள்ள முடிகிறது; 6 வது முறையாக திமுக மிரட்டல் என்று தினமணி கேலிக்காகக் கூறினாலும், அதனால் விளைந்த நன்மைகளை யாரும் மறைக்க முடியாதே என்று திமுக தலைவர் கருணாநிதி புதிய விளக்கத்தைக் கொடுத்துள்ளார்.

இது குறித்து அவர் இன்று வெளியிட்ட அறிக்கை:

தி.மு. கழகம் மத்திய அரசில் அங்கம் வகிப்பது பற்றி தமிழ்நாட்டிலே உள்ள ஆதிக்க எண்ணம் கொண்ட ஒரு சில கட்சிக்காரர்களையும், ஒரு சில ஊடகங்களையும் கடுமையான வயிற்றெரிச்சல் வாட்டிக் கொண்டிருக்கிறது. அதன் காரணமாக, மத்திய அரசை எதற்காகவாவது குறை சொல்ல வேண்டுமென்றால், உடனே “தி.மு.கழகமும் அங்கம் வகிக்கும் மத்திய அரசு” என்று கூறுவார்கள்; எழுதுவார்கள். அதே நேரத்தில் மத்திய அரசு ஏதாவது நல்லது செய்தால், அப்போது மட்டும் தி.மு. கழகமும் அங்கம் வகிக்கும் மத்திய அரசு என்பது அவர்களுக்கு வசதியாக மறந்து விடும்; அல்லது மறைத்து விடுவார்கள். அவர்களது தவிப்பெல்லாம், தி.மு. கழகத்தைத் தனிமைப்படுத்திட வேண்டும் என்பது தான்.

 இலங்கைப் பிரச்சினையிலே கூட தி.மு. கழகம் ஒரு மாநில அரசியல் கட்சி என்பதையே மறந்து விட்டு, ஏதோ தி.மு. கழகம் மிகப் பெரிய வல்லரசு என்பதைப் போலக் கற்பித்துக் கொண்டு, இலங்கையிலே நடைபெற்ற படுகொலைகளையெல்லாம் தி.மு. கழகம் நினைத்திருந்தால் நிறுத்தியிருக்கலாம் என்பதைப் போல இன்றைக்கும் திட்டமிட்டு, வேண்டுமென்றே குறை கூறுவோர் உண்டு.

 இலங்கையில் நடைபெற்ற இனப் படுகொலைகளைக் கண்டித்து, நம்பகத் தன்மை கொண்ட, சுதந்திரமான சர்வ தேச விசாரணை ஒன்றினை நடத்த வேண்டும் என்பதற்காக இந்திய அரசே வலுவான தொரு தீர்மானத்தை ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தில் முன்னெடுத்துச் செல்ல வேண்டுமென்று தொடர்ந்து வலியுறுத்தி; அவ்வாறு இந்திய அரசு தீர்மானத்தை முன் மொழிவதற்கு வெளிப்படையான எந்த முயற்சியையும் மேற்கொள்ளாத காரணத்தால், அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானத்தையாவது உரிய திருத்தங்களோடு ஆதரிக்க முன் வர வேண்டுமென்று பல நாட்களாக வலியுறுத்தி, அதற்கு மத்திய அரசிடமிருந்து தமிழினத்திற்கு நிறைவு தரும் எந்தவிதமான பதிலும் வராத நிலையில்; 15-3-2013 அன்று தி.மு. கழகத்தின் கோரிக்கை நிறைவேற்றப்படாத பட்சத்தில், தி.மு. கழகம் இந்திய அரசின் அமைச்சரவையிலே இனி மேலும் நீடிப்பதென்பது அர்த்தமற்றதாகி விடும் என்று அறிக்கை ஒன்றினை விடுத்திருந்தேன்.

 இந்தச் செய்தி “தினமலர்” நாளிதழைத் தவிர மற்ற ஏடுகளில் எல்லாம் வெளி வந்துள்ளது. “தினமணி” நாளிதழும் என்னுடைய இந்த அறிக்கையை முழுமையாக வெளியிட்டதோடு, ஆறாவது முறையாக தி.மு. கழகம் இவ்வாறு விலகல் எச்சரிக்கையை விடுத்துள்ளது என்றும் எழுதியுள்ளது. அவர்கள் தி.மு. கழகத்தைக் கிண்டல் செய்ய வேண்டும் என்பதற்காக எழுதினாலும், அவர்களாலேயே கடந்த காலத்தில் அவ்வாறு விலகல் எச்சரிக்கை விடுத்தபோது தமிழ்நாட்டிற்கு நன்மை ஏற்பட்டதை மறைத்திட முடியவில்லை. உதாரணமாக, முதல் முறையாக நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தின் 10 சதவிகித பங்குகளை தனியாருக்கு மத்திய அரசு விற்க 2006ஆம் ஆண்டு அக்டோபர் திங்களில் மத்திய அரசு முடிவு செய்த போது நான் கடும் எதிர்ப்பு தெரிவித்ததுடன், அந்த நிலை நீடித்தால் மத்திய அமைச்சரவையில் இருந்து விலக நேரிடும் என்று அறிவித்ததாகவும், அந்த அறிவிப்பு வந்ததுமே மத்திய அரசு தன் முடிவில் இருந்து பிறகு பின் வாங்கியது என்றும்; மத்திய அமைச்சரவையிலே தி.மு. கழகம் நீடித்தது என்று எழுதியுள்ளது. இதிலிருந்து தி.மு. கழகம் விடுத்த எச்சரிக்கையின் காரணத்தால், தமிழகத்திற்கு நன்மை ஏற்பட்டதா இல்லையா என்பது தான் நம்முடைய கேள்வி.

 அதைப் போலவே கடந்த ஆண்டு இலங்கைக்கு எதிராக அமெரிக்கா தீர்மானம் கொண்டு வந்த போது, அதனை இந்தியா ஆதரிக்காவிட்டால் விலகுவோம் என்று கருணாநிதி அறிவித்தார், பிறகு தீர்மானத்தை இந்தியா ஆதரித்தது; தி.மு.க. அமைச்சரவையிலே தொடர்ந்தது என்று “தினமணி” எழுதுகிறது. அப்போதும் ஈழத் தமிழர்களுக்கு ஆறுதல் அளித்திடும் தி.மு.க. வின் கோரிக்கையை மத்திய அரசு ஏற்றுக் கொண்ட பிறகு தான், தி.மு. கழகம் அமைச்சரவையிலே தொடர்ந்தது. கூட்டணியில் அங்கம் வகிப்பதால், எந்தவொரு முக்கியமான பிரச்சினையிலும், முதலில் கோரிக்கை வைக்கிறோம்; அடுத்து வலியுறுத்துகிறோம்; பிறகு அழுத்தம் தருகிறோம்; தொடர்ந்து இப்படிச் செய்ததற்குப் பின்னரும், நம்பிக்கை ஒளி தோன்றவில்லையென்றால், இறுதிக் கட்ட உத்தியாக இத்தகைய முடிவை எடுத்து அறிவிக்கிறோம். இதிலே கிண்டலுக்கோ, கேலிக்கோ இடமில்லை. இப்படி முடிவெடுப்பது என்பது கூட்டணி அரசியலில் நடைபெறும் நிகழ்வு தான். தமிழ்நாட்டின் நலன்களுக்காக, தமிழர்களின் உணர்வுகளுக்கும் எண்ணங்களுக்கும் உகந்த வகையிலேயே தி.மு. கழகம் இப்படிப்பட்ட முடிவுகளை எடுத்து அறிவிக்கின்றது. ஆனால் மத்திய அரசிலே தி.மு. கழகம் நீடிப்பதே உறுத்துகிறதே என்ற எண்ணத்தோடு அவலை நினைத்து உரலை இடிப்பதைப் போலச் செயல்படுவோருக்கு, தி.மு.க. எடுக்கும் முடிவுகள் விந்தையாக இருந்தாலும், தமிழக மக்கள் சரியாகவே புரிந்து கொண்டுள்ளார்கள்!

http://dinamani.com/latest_news/article1504033.ece

  • கருத்துக்கள உறவுகள்

கலைஞரின் சாணக்கியத்தை தினமணி புரிந்துகொள்ளவில்லை.. :D

 

புலி வருது கதை மாதிரி இது.. இவர் சும்மா அடிக்கடி மிரட்டுவதால் மத்திய அரசு கண்டுகொள்வதில்லை.. உண்மையிலேயே ஒரு நாள் ஆதரவை விலக்கும்போது விளைவு படுபயங்கரமாக இருக்கும்..! :D

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

//கூட்டணியில் இருப்பதால்தானே மிரட்ட முடிகிறது: கருணாநிதி///
வாரிசுகளுக்கு மந்திரி பதவிக்க்காகவா ..............................?

இவர் வடிவேலு இடத்தை நிரப்ப முயல்கிறார்.

 

எனக்கு ஒரு டவுட்டு : இந்தமாதிரிலாம் அறிக்கை தயாரிக்க தலீவருக்கு பத்து பேர் கொண்ட குழு இருக்குமோ ?

  • கருத்துக்கள உறவுகள்

கூட்டணியில் இருப்பதால்தானே மிரட்ட முடிகிறது: கருணாநிதி விளக்கம்....//

 

 

கூட்டணியில் இருப்பதால்தானே சுருட்ட முடிகிறது...கருணாநிதி மைண்ட் வாய்ஸ்... :D 

 

 

 

 
 
 
 

எந்தவொரு முக்கியமான பிரச்சினையிலும், முதலில் கோரிக்கை வைக்கிறோம்; அடுத்து வலியுறுத்துகிறோம்; பிறகு அழுத்தம் தருகிறோம்; தொடர்ந்து இப்படிச் செய்ததற்குப் பின்னரும், நம்பிக்கை ஒளி தோன்றவில்லையென்றால், இறுதிக் கட்ட உத்தியாக இத்தகைய முடிவை எடுத்து அறிவிக்கிறோம். இதிலே கிண்டலுக்கோ, கேலிக்கோ இடமில்லை. இப்படி முடிவெடுப்பது என்பது கூட்டணி அரசியலில் நடைபெறும் நிகழ்வு தான். தமிழ்நாட்டின் நலன்களுக்காக, தமிழர்களின் உணர்வுகளுக்கும் எண்ணங்களுக்கும் உகந்த வகையிலேயே தி.மு. கழகம் இப்படிப்பட்ட முடிவுகளை எடுத்து அறிவிக்கின்றது. ஆனால் மத்திய அரசிலே தி.மு. கழகம் நீடிப்பதே உறுத்துகிறதே என்ற எண்ணத்தோடு அவலை நினைத்து உரலை இடிப்பதைப் போலச் செயல்படுவோருக்கு, தி.மு.க. எடுக்கும் முடிவுகள் விந்தையாக இருந்தாலும், தமிழக மக்கள் சரியாகவே புரிந்து கொண்டுள்ளார்கள்!

http://dinamani.com/latest_news/article1504033.ece

இடையில் கடிதம் எழுதுகிறோம் என்பதை ஏன் விட்டுவிட்டார்...திமுகாவின் கிளைமாக்ஸே கடுதம் தானே..அதை தானை தலைவர் எப்படி மறப்பது..? :D

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

 ஏதோ தி.மு. கழகம் மிகப் பெரிய வல்லரசு என்பதைப் போலக் கற்பித்துக் கொண்டு

 

தலீவா ................

 

நீயே இப்படி சொல்லலாமா, துவண்டு போகலாமா, அடுத்த பாக்ஸ் எங்கே, ஈமெயில் எங்கே,..டெலிக்ராம் எங்கே.........ஏதாவது என்று செய்ய வேண்டாமா ஆணை இடு.. 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

717168190index.jpg

மத்திய அரசின் மௌனம் இன்னும் கலையவில்லை - கருணாநிதி

அமெரிக்க தீர்மானத்தின் மீதான இந்திய அரசின் நிலைப்பாடு குறித்து மத்திய அரசு மௌனம் சாதித்து வரும் நிலையில் தங்கள் தரப்பிலிருந்து போதிய அழுத்தம் கொடுத்துள்ளதாக கருணாநிதி செய்தியாளர்களிடம் தெரிவித்தார். 

அமெரிக்க தீர்மானமே ஒரு கண்துடைப்பு வெற்றுத் தீர்மானம் என்று போராடும் மாணவர்கள் தரப்பு மிகச்சரியாக புரிந்து வைத்துள்ள நிலையில் அந்தத் தீர்மானத்தின் மீதான மத்திய அரசின் ஆதரவுக்கு அழுத்தம் கொடுத்துள்ளதாக கருணாநிதி பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். 

இது குறித்து செய்தியாளர்கள் கேள்விக்குப்பதில் அளித்த கருணாநிதி, மத்திய அரசின் நிலைப்பாடு உங்களுக்கு எந்த அளவுக்கு வருத்தத்தை அளிக்கிறது என்று கேள்வி கேட்கப்பட அதற்கு "மத்திய அரசு வழக்கம் போல் நடந்து கொள்கிறது என்றார். 

கேள்வி பதில் விவரம் வருமாறு: 

உங்களுடைய இறுதியான எதிர்பார்ப்பு என்ன? 

அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானத்தில், தேவையான திருத்தங்களைச் செய்வதற்கு மத்திய அரசு முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும். 

மத்திய அரசிடமிருந்து பதில் வருவதற்கு ஏதாவது காலக்கெடு வைத்திருக்கிறீர்களா? 

காலக்கெடு என்பது இது பற்றி மத்திய அரசு தருகின்ற பதில்தான். அதற்கிடையே உள்ளதுதான் காலக்கெடு. 

டெல்லியில் நடைபெற்ற “டெசோ” கருத்தரங்கில் கலந்து கொண்ட மத்திய அமைச்சர் குலாம் நபி ஆசாத் அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானத்தை ஆதரிப்போம் என்று சொல்லியிருக்கிறார். ஆனால் அதே சமயத்தில் இந்திய அரசிடமிருந்து எந்தவிதமான பதிலும் வராமல் இருப்பதால், எத்தகைய அழுத்தத்தைக் கொடுக்கவிருக்கிறீர்கள்? 

அதனால்தான் அறிக்கை கொடுத்திருக்கிறோம். தேவையான அழுத்தம் கொடுத்து விட்டோம். என்று கூறினார். 

 
 

 

http://www.adaderana.lk/tamil/news.php?nid=36416

கூட்டணியை விட்டு இவர்போகமாட்டார் என்பது காங்கிரசுக்கு நன்றாகவே தெரிந்த விடயம்.

அத்துடன் இந்தியா அமெரிக்க தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களிக்காது எனவும் கருணாநிதிக்கு தெரியும்.

 

இரண்டையும் வைத்து விட்ட அறிக்கையே இது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.