Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

மத்திய அரசு நெருப்போடு விளையாடுகிறது - வைகோ எச்சரிக்கை !

Featured Replies

ஜெனிவாவில், ராஜபக்சேவின்  அறிக்கையை அப்படியே வெளியிட்ட  இந்தியா.


ஜெனிவாவில்
இன்று இலங்கை அரசின் நிலைபாட்டை அப்படியே ஆதரித்து  இந்தியா அறிக்கை ஒன்றை
வெளியிட்டு உள்ளது பற்றி மதிமுக தலைவர் வைகோ அறிக்கை ஒன்றை வெளியிட்டு
உள்ளார் அதில் உள்ள வாசகங்கள் வருமாறு :



 சிங்களக் கொலைபாதக
அரசு ஈழத் தமிழ் இனத்தைக் கூண்டோடு கருவறுக்க திட்டமிட்டு நடத்திய
இனப்படுகொலை குறித்து சுதந்திரமான சர்வதேச விசாரணை நடத்த, மனித உரிமை
கவுன்சில் தீர்மானிக்க வேண்டுமென்ற கோரிக்கை உலகெங்கும் உள்ள தமிழர்கள்
உள்ளத்தில் இமயமாய் எழுந்துள்ள நிலையில், தமிழகத்தின் இலட்சோப இலட்ச
மாணவர்கள் அறவழி போர்க்கொடி உயர்த்தி, மவுனப் புரட்சி நடத்தும் இன்றைய
சூழலில், இந்திய அரசு நேற்று முன்தினம் மார்ச் 15 ஆம் தேதி மனித உரிமை
கவுன்சிலில் சிங்கள அரசை பட்டவர்த்தனமாக ஆதரித்து, அக்கிரமமான அறிக்கை
தந்துள்ள துரோகம், தமிழர் நெஞ்சில் சூட்டுக்கோலைத் திணித்துள்ளது.

 

இந்த அறிக்கை சிங்கள இராஜபக்சே அரசு தயாரித்துத் தந்த அறிக்கையாகவே
தோன்றுகிறது. தமிழ் இனப்படுகொலையின் கூட்டுக் குற்றவாளிதானே இந்திய அரசு.
தமிழர்களின் மீள் குடியேற்றமும் மறுவாழ்வும் வரவேற்கத்தக்க விதத்தில்
சிங்கள அரசு நடத்தியுள்ளதாகவும், இராஜபக்சே அரசு அமைத்த நல்லிணக்க
ஆணையத்தின் பரிந்துரைகளை நிறைவேற்ற வேண்டுமென்றும், மனித உரிமை மீறல்
குறித்த புகார்களை சிங்கள அரசே முறையாக விசாரிக்கும் என்று நம்புவதாகவும்,
வடக்கு மாகாணத்தில் தேர்தல்களை நடத்தி, இலங்கை சுமூகமான வெற்றிகாண
வேண்டுமென்று வாழ்த்துவதாகவும், ஜெனீவா மனித உரிமை கவுன்சிலில் இந்திய அரசு
அறிக்கை தந்து, கொலைபாதக சிங்கள அரசுக்கு பல்லாக்குத் தூக்குகிற ஈனச்
செயலைச் செய்துள்ளது.

 

இலட்சக்கணக்கான ஈழத்தமிழர்களின் படுகொலைக்கு இந்தியாவின் ஐக்கிய
முற்போக்குக் கூட்டணி அரசு உடந்தையாக செயல்பட்டது என்பதற்கு, 2004 ஆம்
ஆண்டிலிருந்து இந்திய அரசு செய்த துரோகங்களை ஆணித்தரமான ஆதாரங்களைக்
காரணமாகச் சொல்லி வந்துள்ளேன்.

 

சிங்கள அரசு இலங்கைத் தீவில் கட்டமைக்கப்பட்ட தமிழின அழிப்பைச் செய்து
வருகிறது. கேரள மாநில கடற்கரையை ஒட்டிய கடலில், இந்திய அதிகார எல்லையை
அடுத்துள்ள கடல் பகுதியில், இத்தாலிய வர்த்தகக் கப்பலில் இருந்த
கடற்படையினர், கடல் கொள்ளைக்காரர்கள் என்று எண்ணியதால் துப்பாக்கிச் சூடு
நடத்தியது. அத்தாக்குதலில் இரண்டு மீனவர்கள் உயிர் இழந்தனர். இதில் கைது
செய்யப்பட்ட இத்தாலியக் கடற்படை வீரர்கள் இருவர், இந்திய நீதிமன்றத்தில்
கொடுத்த உத்தரவாதத்தின்படி, இத்தாலியிலிருந்து திருப்பி அனுப்பப்படவில்லை
என்பதற்காக, இத்தாலியோடு இராஜ்ய உறவுகளை முறிப்போம் என்று இந்திய அரசு
எச்சரித்தது. இத்தாலியத் தூதர் டேனியல் மன்சினி இந்தியாவிலிருந்து
வெளியேறக்கூடாது என்று உச்ச நீதிமன்றம் கூறியதால், அவர் வெளியேறி விடாமல்
அனைத்து விமான நிலையங்களிலும் கட்டுக்காவலை இந்திய அரசு
பலப்படுத்தியுள்ளது.

 

ஆனால், தமிழக மீனவர்கள் 578 பேரை, இதுவரை பல நேரங்களில் இந்திய கடல்
எல்லைக்குள்ளேயே வந்து சுட்டுப் படுகொலை செய்த சிங்களக் கடற்படையை இயக்கும்
இலங்கை அரசுக்கு, இந்திய அரசு எந்த எச்சரிக்கையும் என்றும் செய்தது
கிடையாது. அதற்கு மாறாக, அக்கொலைகார அரசை தோளில் தூக்கி வைத்துக்
கொண்டாடுகிறது.

 

தமிழ்நாடு இந்தியாவில் இருக்கிறதா? தமிழக மீனவர்களை இந்தியக்
குடிமக்களாக இந்திய அரசு ஏற்கவில்லையா? என்ற கேள்வி தமிழர் மனங்களில்
பூதாகாரமாக எழுந்துள்ளது.

 

இந்தியாவின் ஒருமைப்பாட்டுக்கும், இறையாண்மைக்கும் குழி பறிக்கும்
வேலையை ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு செய்கிறது. வினையை
விதைத்துக்கொண்டே இருக்கிறது. இதற்கான விலையை காங்கிரஸ்  கட்சியும், அதன்
தலைமையிலான மத்திய அரசும் கொடுக்க நேரிடும்.

 


மத்திய அரசு நெருப்போடு விளையாடுகிறது. விபரீதங்களை அறுவடை செய்யப்போகிறது என்று எச்சரிக்கிறேன்.

இவ்வாறு அந்த அறிக்கையில் விவரங்கள் தரப்பட்டுள்ளது.

 

http://www.dinaithal.com/index.php?option=com_content&view=article&id=13414:vaiko-statement-on-india-on-jenevaa-today&catid=36:tamilnadu&Itemid=102

இந்திய தேசத்தில் தமிழர்களின் உணர்வுகளை டெல்லி மதித்ததாக வரலாறு இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்

இந்திய தேசத்தில் தமிழர்களின் உணர்வுகளை டெல்லி மதித்ததாக வரலாறு இல்லை.

 

இங்கே டெல்லி என்பது காங்கிரஸ் அரசு என்பதாகவே கொள்ளப்படவேண்டும்..! மற்றக் கட்சி அரசுகள் இருந்தபோதெல்லாம் நிலைமை இந்த அளவுக்கு மோசமாக இருந்ததில்லை..

 

இதற்குக் காரணம் எல்லோருக்கும் தெரிந்ததுதான்.. காங்கிரஸ் கட்சி சிங்கள அரசின் போர்ப் பங்காளி..! முதிர்ச்சியற்ற, உணர்ச்சியின்பாற்பட்ட முடிவுகளை எடுத்த காங்கிரஸ் தலைமையின் குடுமி இன்று சிங்காள இனவாத அரசின் கைகளில்..!! இத்தகைய ஒரு நிலையில், காங்கிரஸ் அரசிடம் இருந்து வேறு அதனை எதிர்பார்க்க முடியும்?

 

இப்போது தமிழர்களுக்கு சிறு உடனடி நன்மையாவது கிடைக்கவேண்டுமாயின், அதற்கான துருப்புச் சீட்டை வைத்துக்கொண்டிருப்பவர் கலைஞர்..! காங்கிரஸ் அரசுக்கான தனது ஆதரவை அவர் விலக்கி நடவடிக்கை எடுக்கலாம்.. மத்திய அரசு கவிழும் வாய்ப்பே அதிகம்.. அடுத்த வருடமே நாடாளுமன்றத்தேர்தல் வர உள்ளதால், இந்த ஆட்சி கவிழ்வதையே எல்லா எதிர்க்கட்சிகளும் எதிர்பார்ப்பார்கள்.

 

ஆனால் கலைஞரால் ஆதரவை விலக்க முடியாது. அவரது குடுமி கொலைகார காங்கிரஸ் அரசின் கைகளில்..! கலைஞர் ஆதரவை விலக்கினால் அவரது குடும்பத்தினர் சிலர் கம்பி எண்ணுவார்கள்..!! ஊழல் பேர்வழிகள் தமிழர் தலைமையாவது எவ்வாறு ஒரு இன அழிவுக்கே துணைபோகிறது என்பதற்கு இது ஒரு சிறு உதாரணம்..!

 

இன்று இங்கே திமுகவைத் தூக்கிப் பிடிப்பவர்கள் எவ்வாறு தமிழின அழிவுக்குத் துணைபோகிறார்கள் என்பது மேற்கூறிய சமன்பாட்டில் இருந்து விளங்கிக்கொள்ள வேண்டும்..!

இங்கே டெல்லி என்பது காங்கிரஸ் அரசு என்பதாகவே கொள்ளப்படவேண்டும்..! மற்றக் கட்சி அரசுகள் இருந்தபோதெல்லாம் நிலைமை இந்த அளவுக்கு மோசமாக இருந்ததில்லை..

 

இதற்குக் காரணம் எல்லோருக்கும் தெரிந்ததுதான்.. காங்கிரஸ் கட்சி சிங்கள அரசின் போர்ப் பங்காளி..! முதிர்ச்சியற்ற, உணர்ச்சியின்பாற்பட்ட முடிவுகளை எடுத்த காங்கிரஸ் தலைமையின் குடுமி இன்று சிங்காள இனவாத அரசின் கைகளில்..!! இத்தகைய ஒரு நிலையில், காங்கிரஸ் அரசிடம் இருந்து வேறு அதனை எதிர்பார்க்க முடியும்?

 

இப்போது தமிழர்களுக்கு சிறு உடனடி நன்மையாவது கிடைக்கவேண்டுமாயின், அதற்கான துருப்புச் சீட்டை வைத்துக்கொண்டிருப்பவர் கலைஞர்..! காங்கிரஸ் அரசுக்கான தனது ஆதரவை அவர் விலக்கி நடவடிக்கை எடுக்கலாம்.. மத்திய அரசு கவிழும் வாய்ப்பே அதிகம்.. அடுத்த வருடமே நாடாளுமன்றத்தேர்தல் வர உள்ளதால், இந்த ஆட்சி கவிழ்வதையே எல்லா எதிர்க்கட்சிகளும் எதிர்பார்ப்பார்கள்.

 

ஆனால் கலைஞரால் ஆதரவை விலக்க முடியாது. அவரது குடுமி கொலைகார காங்கிரஸ் அரசின் கைகளில்..! கலைஞர் ஆதரவை விலக்கினால் அவரது குடும்பத்தினர் சிலர் கம்பி எண்ணுவார்கள்..!! ஊழல் பேர்வழிகள் தமிழர் தலைமையாவது எவ்வாறு ஒரு இன அழிவுக்கே துணைபோகிறது என்பதற்கு இது ஒரு சிறு உதாரணம்..!

 

இன்று இங்கே திமுகவைத் தூக்கிப் பிடிப்பவர்கள் எவ்வாறு தமிழின அழிவுக்குத் துணைபோகிறார்கள் என்பது மேற்கூறிய சமன்பாட்டில் இருந்து விளங்கிக்கொள்ள வேண்டும்..!

 

உண்மை, 1990-2004 வரை மலையாளீ காங்கிரஸ் பலம் இல்லாமல் இருந்து அப்போது ஈழ போராட்ததிற்கு இடைஞ்சல் வரவில்லை, ஆனால் அவர்கள் வந்த பிறகு தான் எல்லா அழிவும்.

கருணாநிதி விழுத்துவார். காங்கிரசை விழுத்தாமல் திரும்ப தமிழகத்தில் அவரால் தேர்தலில் நிற்கமுடியாது.

 

காங்கிரசை விழுத்தும் நேரம் காங்கிரஸ் இவரை திருப்பி பழிவாங்க முடியாத நேரமாக வந்தவுடன் அது நடக்கும். அது வரையும் கருணாநிதி தன்னை தமிழ் நாட்டில் காப்பாறிக்கொள்ள சும்மா பதவி விலகுவதாக மிரட்டுவார். 

 

இலங்கையும் காங்கிரசுக்கு எதிராக சில பழிவாங்கல்களை அந்த நேரம் செய்யும். எண்ணை குததோட்டம், 13ம் திருத்தம், பலாலி விமான நிலையம் என பல இலங்கையின் கைக்குள் இருக்கிறது. :)

Edited by மல்லையூரான்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.