Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழீழம் கிடைத்திருக்கும் இலங்கை இந்த தப்பை செய்திருந்தால்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கடுகு சிறுத்தாலும் காரம் போகாது! இலங்கை சிறிய நாடக இருந்தாலும் அரசியல் செய்வதில் இந்தியாவை விட புத்திசாலி. அவர்கள் ஒவ்வொரு அடியும் சரியாகவே எடுத்து வைத்திருக்கிறார்கள் என்று சொல்வதை விட எந்த ஒரு அடியும் 'தப்பாக' எடுத்து வைக்கவில்லை.

ஒரு அடி தப்பாக எடுத்துவைத்தால் குடியா மூழ்கிப் போய்விடும் என்று கேட்பவர்களுக்கு...ஆம்! நாம் 100 அடி சரியாக வைத்தாலும் ஒரு அடி கூட தப்பாக வைக்கக் கூடாது. மலை ஏறுபவர்களை கேளுங்கள்; ஒரு அடி தப்பாக வைத்தாலும் மரணம் தான்

 
அந்த விதத்தில் இலங்கை புத்திசாலிதனமாக செயல்படுவதை காட்டிலும் முட்டாள்தனமானஅந்த ஒரு காரியத்தை தவறுதலாகக் கூட செய்யவில்லை! அதை செய்திருந்தால் தமிழீழம் மலர்ந்து இருக்கும்! அது என்ன அப்பேர்ப்பட்ட செயல்...கீழே செல்லுங்கள்...

|

|

|

|

|

|

|

|

|

|

|

|

|

|

|

|

|

|

|

|

|

|

|

|

|

|

|

|

|

|

|

|

|

|

|

|

|  

|

|

|

|

|

|

|

|

|

|

 
 
images.jpg

High+court.jpg

500 தமிழக மீனவர்களை கேள்வி கேட்பாரின்றி கொன்ற இலங்கை ஒரு 5 மலையாள மீனவர்களை கொன்று இருந்தால் ஈழமே (இலங்கையே) இந்தியாவிற்கு கிடைத்திருக்கும்(இலங்கைக்கு பழைய தமிழ் பெயர் ஈழம்). நம் ஆட்கள் தமிழீழம் தான் கேட்டார்கள்; 5 கேரள மீனவர்களை கொன்று இருந்தால், சேட்டன்கள் "தனி - ஈழமே" வாங்கிக் கொடுத்திருப்பார்கள். கேரளா உயர்நீதிமன்றமும் எவனாவது கேரளாக்காரன் மீது கை வச்சா சும்மா விடாது. 

இலங்கை இந்தியாவையும் வெருப்பேற்ற வேண்டும்; அதே சமயம் ஜாக்கிரதையாகவும் இருக்கணும். இந்தியாவின் அடிமட்ட அரசியல் நன்கு அறிந்தனால் கேள்வி கேட்க நாதியில்லாத தமிழக மீனவர்களை சுட்டார்கள். 

இரண்டு கேரள மீனவர்களை சுட்டவர்களுக்காக "இந்தியாவே கதறுது; உச்சநீதிமன்றம் உயிரையே விடுது!" இதை செய்யவைக்கும் அளவிற்கு சேட்டன்களால் முடியுது. இப்படி ஏன் நம் தமிழக அரசியல்வாதி ஒருவறும் தமிழக மீனவர்களுக்காக ஒன்றும் செய்யவில்லை? இல்லை செய்ய முடிவதில்லை?  

கருணாநிதி தான் ஒன்னும் செய்யவில்லை என்று உலகத்திற்க்கே தெரியுமே! அதை நான் மறுக்கவில்லைஅவர் செய்யமாட்டார்அவரை மட்டும் திட்டி மீதி அரசியல்வாதிகள் தப்பிக்கவேண்டாம். 

தமிழீழத்திற்காக அல்லும் பகலும் பாடுபடும் அரசியல்வாதிகள் முறையே வைகோ, ராமாதாஸ், நெடுமாறன், திருமா, சீமான், **இதர கம்முனிஸ்ட் தலிவர்கள் இத்தனை நாள் தமிழக மீனவர்களுக்கு ஒன்றும் செய்யாமல் போனாலும் பரவாயில்லை. இப்போ சேட்டன்கள் ஒரு முன்னுதாரணத்தை ஏற்படுத்திக் கொடுத்து இருக்கிறார்கள் இரண்டு மீனவர்கள் இறந்தாலும் ---எப்படி போராடவேண்டும் என்று. 

எப்படியும், மறுபடியும் தமிழக மீனவர்கள் கொல்லப்படுவார்கள். அப்போவாவது கேரளா மீனவர்கள் இருவருக்காக சேட்டன்கள் போராடினா மாதிரி 'நம் தமிழக மீனவர்களுக்காக'இந்திய அரசாங்கத்தை போராட வைப்பார்களா இவர்கள்? இல்லை. டெல்லியில் போய்  இலங்கை தூதரகம் முன்னால் "கைது ஆகாமல்," at least ஒரு கறுப்புக் கொடியாவது காட்டுவார்களா?##

**தா. பாண்டியன் கம்முனிஸ்ட் தலிவர் ஆட்டத்தில் இப்போ இல்லை; அவரை விட்டு விடலாம்; அவர் எப்பவோ கூன் பாண்டியானாகி விட்டார். 

##மூலம் வந்து பேளும் போது, ரத்தம் வந்தா அதுக்கு கூட கருணாநிதி தான் காரணம் என்று சொல்பவர்கள் இதற்கு ஒரு காரணம் கண்டு பிடிக்கமாட்டார்களா என்ன?  (Inspired by நாஞ்சில் நாடன் வசனம்)

பின்குறிப்பு: 

நான் திமுக அனுதாபியும் இல்லை சொம்பும் இல்லை. கருணாநிதி அரசியலில் இருந்து ஒய்வு பெற்றுவிட்டார். இதர அரசியல்வாதிகள் உங்கள் சாமார்த்தியத்தைக் காட்டி தமிழக மீனவர்கள் கொலைகளை தடுத்துக் காட்டுங்கள் பார்க்கலாம்: Either shoot the message or take up the challenge!  

தமிழக மீனவர்களை காப்பாற்றிக் காட்டுங்கள் பார்க்கலாம். எல்லை தாண்டி போனான்...அதனால் அவன் சுட்டான்...அதெல்லாம் முட்டாப் பத்திரிக்கை எழுதுவது; எல்லை தாண்டினாலும் எவனுக்கும் சுட உரிமையில்லை; மேலும், இலங்கை நட்பு நாடு...! 

நன்றி http://www.nambalki.com/2013/03/blog-post_20.html

  • கருத்துக்கள உறவுகள்

தற்போது தமிழக முதலமைச்சராக இருக்கும் ஜெயலலிதா மட்டும் தமிழக மீனவர்கள் கொல்லப்பட்டதற்கு என்ன செய்து விட்டார்? அவரும் தமிழக அரசியல்வாதி என்பதில் மாற்றுக்கருத்து ஏதுமுண்டா?

இந்தப் பிரச்சினை மாறுவதற்கு தமிழக மக்கள் தான் ஒன்றாக முயல வேண்டும்!

அவர்கள் தி.மு,க., அ.தி.மு.க., காங்கிரஸ், பி.ஜே.பி. தவிர்ந்த, வைகோ தலைமையிலான ஒரு பலம் வாய்ந்த அரசை அடுத்த தேர்தலில் தெரிவு செய்ய வேண்டும்! 

இந்தப் பிரச்சினை மாறுவதற்கு தமிழக மக்கள் தான் ஒன்றாக முயல வேண்டும்!

அவர்கள் தி.மு,க., அ.தி.மு.க., காங்கிரஸ், பி.ஜே.பி. தவிர்ந்த, வைகோ தலைமையிலான ஒரு பலம் வாய்ந்த அரசை அடுத்த தேர்தலில் தெரிவு செய்ய வேண்டும்! 

 

இம்முறை அம்மையார் வெற்றியை கூர்ந்து நோக்கினால் ஒன்று புரியும். ஓட்டுவங்கியை தாண்டி புதிய வாக்காளர்களின் வாக்குகள் மாற்றத்தை விரும்பியதால் வந்த பலன் தான் ஆட்சி மாற்றம். ஓரளவுக்குமேல் வாக்கு வங்கிகளை மாற்ற இயலாது ஆனால் அரசியல் பற்றிய ஒரு சரியான புரிதலை மாணவர்கள் மனதில் விதைப்பதன் மூலம் வெகுவிரைவில் சரியான அரசியல் தலைமையை ஆட்சிக்கட்டிலில் அமரச்செய்ய முடியும். ஏதோ ஒரு தலைமையின் பின் கொடிபிடித்து கத்துவதை நிறுத்தி, தமது மக்களுக்காக அரசியல் பின்புலமில்லாமல் போராட்டம் என்று வந்ததிலிருந்து மாணவர்களின் இன்றைய நிலையையும், அவர்களுக்கு ஆதரவாக கட்சி பெயர்களை விடுத்து கிராம மக்கள் என்று ஒற்றுமையாய் பேருந்துளில் பதாகைகள் ஒட்டுவதிலும், உண்ணாவிரதம் இருப்பதிலும் இருந்து அந்த மாற்றம் விரைவில் வரும் என்று நம்பலாம். ஆனால் இந்த ஒரு சில அரசியல் கட்சிகள் நடுவில் புகுந்து தகிடுதித்தம் செய்யாமல் மக்களிடம் விழிப்புணர்வு ஏற்ப்படுத்த வேண்டியது நமது கடைமை.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.