Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

'சர்வதேச ஆதரவை இலங்கை பெருமளவு இழந்துவிட்டது'

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

dayan(2).jpg
சர்வதேச அரசியல் அரங்கில் இலங்கை கடந்த மூன்றரை ஆண்டுகளில் தனக்கான ஆதரவை பெருமளவில் இழந்துள்ளதாக ஜெனிவாவுக்கான இலங்கையின் முன்னாள் தூதுவர் தயான் ஜயத்திலக்க தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டு அமெரிக்கத் தீர்மானத்தின்போது, இலங்கைக்கு ஆதரவாக 15 நாடுகள் வாக்களித்தன. ஆனால் அந்த ஆதரவு இப்போது 13 நாடுகளாகக் குறைந்துள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

2009 ஆம் ஆண்டில் தனக்கு இருந்த சர்வதேச ஆதரவை இலங்கை பெருமளவு இழந்துவிட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

இலங்கை அரசு அது நியமித்த நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை முழுமையாக அமல்படுத்துவதன் மூலம் சர்வதேச ஆதரவை தக்கவைத்திருந்திருக்கலாம் என்றும் அவர் தெரிவித்தார்.

நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதற்கு மேல் எதனையும் சர்வதேச சமூகம் இலங்கை மீது அழுத்தம் கொடுக்கவில்லை என்றும், போர்க்காலச் செயற்பாடுகளுக்கான பொறுப்பு சுமத்தும் நடவடிக்கைகள் தொடர்பில் இலங்கை அரசு மேலதிக நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென்று தான் கோரப்பட்டிருக்கிறது என்றும் தயான் ஜயதிலக்க கூறினார்.

நல்லிணக்க ஆணைக்குழுவின் முக்கிய பரிந்துரைகளை நிறைவேற்றுவதன் மூலம் சர்வதேச சமூகத்தில் பெரும்பகுதியினர்  திருப்தியடைவார்கள். உதாரணமாக இந்தியா கூட நல்லிணக்க ஆணையத்தின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதையே வலியுறுத்துகிறது என்றும் அதற்கு மேலதிகமாக அந்நாடு எதையும் வலியுறுத்தவில்லை என்றும் ஜப்பானின் நிலைப்பாடும் அதுவே என்றும் தயான் ஜயதிலக்க பிபிசிக்கு சுட்டிக்காட்டியுள்ளார்.

http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/61270-2013-03-21-18-27-50.html

தயான் இதை விட கடுமையான பிரேரணை வரைபுகள் இருந்ததை ஒளிக்கிறார். அப்படி வரைபு ஒன்று பகிரங்கமாக சர்வதேச விசாரணையை கோரியிருந்தது. அதையும் சில பல ஆதரித்துத்தான் இருந்தன. 

 

தயான் எதை சொன்னாலும் மேற்கு நாடுகள் தமிழரின் நிலைப்பாடான சுயாதின விசாரணை ஒன்று தேவை என்றதை ஒத்துகொள்கிறார்கள். 

 

இந்திய ஆரம்பத்திலிருந்து பல நிலைகளுக்கு மாறியத்தால் பிரேரணை பலமுறை திருத்தப்பட்டுவிட்டது.

 

மாணர் எழுச்சியின் பலனாக இந்தியா அந்த திசையில் நல்ல முன்னேறம் கண்டிருக்கு. அடுத்த பிரேரணை நேரம் தேர்தல் வரும் சந்தர்ப்பம் இருக்கிறது. தமிழ்நாட்டில் தங்கள் பங்குதாரிகள் கணிசமான வாக்கு எடுக்க வேண்டுமாயின் தேசியக்கட்சிகள் தங்கள் கொள்கைகளில் மாற்றம் செய்துதான் ஆக வேண்டும். 

 

பிரேரணை பொறுப்பு கூறல் பற்றி குறிப்பிடுகிறது. இதில் என்ன சுவாரசியமான பகுதி என்றால் இலங்கைக்கு அமெரிக்க உதவியை பெற்றுத்தந்த பிளேக் அந்த விடையத்தில் மாற்றம் ஒரு கொள்கையை மட்டும் வெளிபடுத்தியிருந்தார். அது இலங்கை அரசு பொறுப்பு கூற வேண்டும் என்பது. ஆரம்பம் தொடக்கம் அது LLRC பரிந்துரையில் குறைகிறது என்றும் குறிப்பிட்டு வருகிறார்.

 

எனவே தயான் அரசோடு இருக்கும் கருத்து வேறுபட்டால் அதற்கு  அளவான கதையை சொல்லி அரசு அதனால் பயன் அடையும் என்று எதிர் பார்க்க முடியாது. 

Edited by மல்லையூரான்

மகிந்த கூட்டம் ஒரு சந்தியில் நிற்கின்றது.

 

 

அது தொடர்ந்தும் இதே பாதையில் பயணித்தால், நிச்சயம் ஒரு சர்வதேசம் ஒரு கடுமையான நிலைப்பாட்டை எடுக்காமலேயே சிங்களம் மக்கள் ஒரு பொருளாதார நெருக்கடிக்கு முகம் கொடுத்து நிலைமைகள் அசாதரணமாகும்.


அதேவேளை மகிந்த கூட்டம் எந்த சர்வதேச அணுகுமுறையையும் நம்பவும் போவதில்லை, இந்தியா உட்பட. சீனாவையும் உருசியாவையும் பாக்கிஸ்தானையும் ஈரானையும் நம்பியும் நீண்ட தூரம் பயணிக்க முடியாது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.