Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

மூன்றாம் தரப்பு மத்தியஸ்தத்துடன் பேச்சுகள் நடத்த அமெரிக்கா பூரண ஒத்துழைப்பு வழங்கும் - ரொபட் ஓ பிளேக்

Featured Replies

மூன்றாம் தரப்பு மத்தியஸ்தத்துடன் பேச்சுகள் நடத்த அமெரிக்கா பூரண ஒத்துழைப்பு வழங்கும் - ரொபட் ஓ பிளேக்
                                             cb7821f1-1770-418b-a997-c8f80e124d7a1.jp

இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வை எட்டும் பொருட்டு இலங்கை அரசுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குமிடையில் மீண்டும் பேச்சுகள் ஆரம்பமாவதற்கும், மத்தியஸ்தம் வகிப்பதற்கும் உதவ தென்னாபிரிக்காவோ அல்லது ஏனைய மூன்றாம் தரப்போ முன்வருமானால் அதற்கு பூரண ஒத்துழைப்பு அளிக்கப்படும் என அமெரிக்கா அறிவித்துள்ளது.

தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்குப் பொறுப்பான அமெரிக்காவின் உதவி இராஜாங்கச் செயலாளர் ரொபட் ஓ பிளேக் இந்தத் தகவலை வெளியிட்டுள்ளார்.

போர்க்குற்றம் இழைத்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டில் அமெரிக்கா உறுதியாக இருக்கின்றது. அத்துடன், செப்டம்பர் மாதத்துக்குள் வடக்குத் தேர்தலை நடத்தி, அதிகாரங்களைப் பகிர்வது குறித்து கூட்டமைப்புடன் இலங்கை அரசு பேச்சுகளை ஆரம்பிக்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.

இதேவேளை, ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிராகக் கொண்டுவரப்பட்ட பிரேரணையின் கடும்போக்கு குறைக்கப்பட்டது என எழுந்துள்ள குற்றச்சாட்டுகளை ரொபர்ட் ஒ பிளேக் அடியோடு நிராகரித்துள்ளார்.

இலங்கை தொடர்பான பிரேரணையை ஜெனிவா மனித உரிமைபேரவையில் கொண்டுவந்து நிறைவேற்றுவதற்கு இந்தியாவிடமிருந்து கிடைத்த ஒத்துழைப்பு தமக்கு திருப்தியளிக்கக்கூடியதாக இருந்தது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
http://ponguthamil.com/shownewscontent.aspx?sectionid=1&contentid=cb7821f1-1770-418b-a997-c8f80e124d7a

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை தொடர்பான பிரேரணையை ஜெனிவா மனித உரிமைபேரவையில் கொண்டுவந்து நிறைவேற்றுவதற்கு இந்தியாவிடமிருந்து கிடைத்த ஒத்துழைப்பு தமக்கு திருப்தியளிக்கக்கூடியதாக இருந்தது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

 

 

தீர்வு தேவையான தமிழ் மக்கள் திருப்தி அடையவில்லை. 
 
நடுநிலைமை பற்றி தமிழ் மக்கள் ஏமாற்றமான பல அனுபவங்களை கண்டுள்ளார்கள்.
  • தொடங்கியவர்

இலங்கை சுதந்திரமான விசாரணையை நடாத்த தவறினால் சர்வதேச பொறிமுறை வலியுறுத்தப்படும்! - பிளேக்


[sunday, 2013-03-24 21:20:12]

blake-seithy-20120914-150.jpg

போர்க்கால மனித உரிமை மீறல்கள் குறித்து சுதந்திரமான, நம்பகத் தன்மையுடைய விசாரணையை இலங்கை நடத்தத் தவறினால், சர்வதேச சமூகம் அங்கு ஒரு சர்வதேச பொறிமுறையை வலியுறுத்தும் என்று அமெரிக்காவின் அரசுத்துறையின் துணைச் செயலர்களில் ஒருவரான றொபர்ட் பிளேக் கூறியுள்ளார். தற்போதைய ஜெனிவா தீர்மானம் ஒரு சுதந்திரமான, நம்பகத்தன்மையுடைய புலன் விசாரணை குறித்து வலியுறுத்துகிறது என்று கூறிய பிளேக், இந்த விடயத்தில் இலங்கை அர்த்தமுள்ள நடவடிக்கைகளை எடுக்குமென்று தாம் எதிர்பார்ப்பதாகவும், ஆனால் அப்படி அது செய்ய விரும்பா விட்டாலோ அல்லது அதற்கு செய்ய முடியாமல் போனாலோ சர்வதேச சமூகம் ஒரு சர்வதேச பொறிமுறையை அங்கு செயற்படுத்துவது குறித்து கவனம் செலுத்தும் என்றும் குறிப்பிட்டார்.

ஆகவே ஒரு சொந்தமான, சுதந்திரமான, நம்பகத்தன்மையுடைய விசாரணையை தம்மால் நடத்த முடியும் என்பதை உறுதி செய்ய வேண்டிய அழுத்தம் இப்போது இலங்கையின் மீது இருக்கிறது என்றும் அவர் கூறினார். மனித உரிமைகள் என்பதைவிட அமெரிக்காவுக்கு இந்த தீர்மானத்தை கொண்டு வந்ததில் உள்நோக்கம் இருப்பதாக இலங்கை அரசாங்கம் குற்றஞ்சாட்டுகிறதே என்று கேட்டதற்கு பதிலளித்த பிளேக் அவர்கள், இலங்கை தீவில் அமைதியையும், நல்லிணக்கத்தையும், பொறுப்புக் கூறலையும் கொண்டு வருவதுதான் தங்கள் நோக்கம் என்றும், இலங்கை மக்களுடனான தங்கள் உறவை தொடர்ச்சியாக கட்டியெழுப்புவதும் அதில் அடங்கும் என்றும், அதனை விட தங்களுக்கு வேறு எந்த விதமான நோக்கமும் தங்களுக்கு கிடையாது என்றும் குறிப்பிட்டார்.

அந்தப் பிராந்தியத்தில் கேந்திர முக்கியத்துவம் குறித்து தங்களுக்கு அக்கறை, ஆர்வம் உள்ளது என்றும், பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கை, கடற்போக்குவரத்து பாதுகாப்பு, அதுபோன்ற பல விடயங்கள் குறித்தும் அந்தப் பிராந்தியத்தில் தங்களுக்கு அக்கறை உள்ளது என்றும் அவர் கூறினார். இலங்கையை, அமெரிக்கா உட்பட சர்வதேச சமூகம், இந்தத் தீர்மானத்தின் மூலம் பிளவுபடுத்த முயற்சிப்பதாக இலங்கை அரசாங்க தரப்பினரால் குற்றஞ்சாட்டப்படுவதை பிளேக் மறுத்துள்ளார். அமெரிக்காவும் , சர்வதேச சமூகமும் இலங்கையை மீண்டும் ஒன்றுபடுத்த விளைவதாகவே தான் நம்புவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

http://www.seithy.com/breifNews.php?newsID=78900&category=TamilNews&language=tamil

 

பிளேக் பல மாதங்களின் பின்னர் இலங்கையின் இனப்பிரசனையை பற்றி ஆர்வமாக கருத்துக்கள் கூறியிருகிறார். ஆனால் அவர் அந்த பதவியில் தொடந்தும் இருப்பாரோவும் தெரியாது.  அந்த நிலையில் அவர் செய்வது Too little; too late

Edited by மல்லையூரான்

  • கருத்துக்கள உறவுகள்

மூன்றாம் தரப்பு மத்தியஸ்தத்துடன் பேச்சுகள் நடத்த அமெரிக்கா பூரண ஒத்துழைப்பு வழங்கும் - ரொபட் ஓ பிளேக்

இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வை எட்டும் பொருட்டு

இலங்கை அரசுக்கும்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குமிடையில்

மீண்டும் பேச்சுகள் ஆரம்பமாவதற்கும்,

மத்தியஸ்தம் வகிப்பதற்கும் உதவ தென்னாபிரிக்காவோ அல்லது ஏனைய மூன்றாம் தரப்போ முன்வருமானால்

அதற்கு பூரண ஒத்துழைப்பு அளிக்கப்படும் என அமெரிக்கா அறிவித்துள்ளது.

 

இனபிரச்சனைக்கு தீர்வை எட்ட .................

ஆகா பயங்கரவாதம் இதை கடந்தும் அங்கு பிரச்சனை இருக்கிறது என்பதை இவர் ஏற்றுக்கொண்டுள்ளார். இனப்பிரச்சனையால் தமிழர்கள் அழியும்போது அதைப்பற்றி எந்த அக்கறையும் அமெரிக்கவிற்கு இல்லை என்று மறைமுகமாக சொல்கிறார்.
 
பிரச்னைக்கு உரிய பகுதிகள் =இலங்கை சிங்கள அரசு +தமிழ் தேசியம் 
 
மத்தியஸ்தம் = தென்னாபிரிக்க அல்லது வேறு ஒரு நாடு.
 
இந்த ஆதரவு தாரது இது என்ன? ஒரு ஜெனநாயக நாட்டில் பிரச்சனை என்றால் தீர்வு நீதிமன்றில் கிடைக்கும்.
அங்கே குற்றவாளி  (அவருக்காக வாதட ஒரு வக்கீல்)
பாதிக்க பட்ட தரப்பு (அவர்களுக்கு வாதாட ஒரு வக்கீல் )
ஒரு நீதிபதி (அல்லது நடுநிலமையாளர். மத்தியஸ்தர் )
 
இதில ஆதரவு தராது என்பது எதற்கு?
யாருக்கு?
 
இந்த குறளி  வித்தை விசுக்கோத்து இப்படியான விசர் பிடித்த கதைகளைத்தான் எப்போதும் காவி வருகிறது .
 
என்னால் முடிந்த அளவிற்கு இங்கு உள்ள செனட்டர் மார்க்கு விளக்கம் கேட்டு கடிதம் எழுதி வருகிறேன். 
இதை ஒட்டுமொத்த தமிழர்களும் தட்டி கேட்க தொடங்க வேண்டும்.
 
சிங்களவர்கள் மனிதாபிமானம் அற்று தமிழர்களை கொல்வதை  அமெரிக்கா ஏற்கிறதா இல்லையா?
அப்படி கொல்வதற்கு  ஆதாரம் அமெரிக்கர்களே தருகிறார்கள். ஏன் எந்த நடவடிக்கையும் இல்லை ?

Edited by Maruthankerny

அமெரிக்கா விழுந்தும் மீசையில் மண் ஒட்டவில்லை என்கிறது!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.