Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சபரிமலை அய்யப்பன் பயங்கர கோபத்தில் இருக்கிறார்!

Featured Replies

சபரிமலை அய்யப்பன் பயங்கர கோபத்தில் இருக்கிறார்!

ஏன் அப்படி? கடவுளுக்கும் சாதாரண மனிதனைப் போல் கோபதாபம் இருக்கிறதா? அது கடவுள் இலக்கணத்துக்கு முரண் இல்லையா?

இந்துக் கடவுளர்க்கு கோபமும் வரும் தாபமும் வரும் மோகமும் வரும்! எல்லாம் வரும்!

அது சரி. அய்யப்பன் பயங்கர கோபத்தில் இருக்கிறார் என்று யார் சொன்னது?

அட இது கூடத் தெரியாதா? சோதிடர் உன்னிக்கிருஷ்ண பணிக்கர் சொல்லுகிறார்!

யார் இந்த உன்னிக்கிருஷ்ண பணிக்கர்?

அவரைத் தெரியாதா? சோதிடர் உன்னிக்கிருஷ்ண பணிக்கர் என்ன சாதாரண ஆளா? முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் ஆஸ்தான சோதிடர்! அவர் சபரிமலை அய்யப்பன் சன்னிதியில் பிரஸ்னம் (சோழிகளை உருட்டி விட்டு கடவுளிடம் அருள் வாக்குக் கேட்பது) செய்து பார்த்து 19 ஆண்டுகளுக்கு முன் ஒரு பெண் அய்யப்பன் சிலையைத் தீண்டிவிட்டதாகவும் அதனால் அய்யப்பனுக்குத் தீட்டுப்பட்டு விட்டது என்கிறார்.

யார் அந்தப் பெண்? பெண் தொட்டு அய்யப்ப சாமிக்குத் தீட்டுப்பட்டுவிட்டதென்றால் அய்யப்பiனைவிட அந்தப் பெண்ணுக்கு அதிக சக்தி இருக்கிறது என்றல்லவா பொருள்?

சூனாமானக்காரன் போல் பேசாதே! நாத்தீகம் பேசினால் நாக்கு அழுகிச் சாவாய்! கடவுள் உன்னைச் சும்மா விடமாட்டார். அந்தப் பெண் ஜெயமாலா என்ற கன்னட நடிகை, அவர் 19 ஆண்டுகளுக்கு முன் அய்யப்பன் ஆலயத்துக்குச் சென்ற போது கூட்ட நெரிசல் நெட்டித் தள்ளியதால், கோயில் கருவறைக்குள் போய் விழுந்தாராம். அப்போதுதான் அந்த நடிகை அய்யப்பன் திருவுருவத்தைத் தொட்டுக் கும்பிட்டிருக்கிறார்!

கோயில் புூசாரியும் தொட்டுத்தானே கும்பிடுகிறார்? அவரும் மனிதர்தானே? ஜெயமாலா என்ற நடிகை மட்டும் ஏன் தொட்டுக் கும்பிடக்கூடாது? பெண் கும்பிடக்கூடாது என்று சொல்வது பெண் அடிமைத்தனத்துக்கு சாமரம் வீசுவது போல் இல்லையா?

விபரம் தெரியாமல் பேசாதே! ஜெயமாலா பெண். அய்யப்பன் சாமிக்குப் பெண் என்றால் பிடிக்காது! பெண்கள் கோயில் பக்கம் போகக் கூடாது!

ஏன் அப்படி? சிவபெருமான் தனது உடலில் பாதியைப் பெண்ணாக வைத்திருப்பதாக புராணிகர்கள் சொல்கிறார்களே? அதாவது அர்த்தநாரீசுவரர் வடிவில் இருக்கிறாராமே? அது புளுகா?

ஓய்! சிவன் வேறு அய்யப்பன் வேறு! அய்யப்பன் அரிக்கும் அரனுக்கும் பிறந்தவர். எனவே அவருக்குப் பெண்களைப் பிடிக்காது! பாலாழியைக் கடைந்ததும் அமுதம் எடுத்ததும் பாகவதத்தில் விலாவாரியாக விவரிக்கப்பட்டுள்ளது. மோகினி வடிவமெடுத்த விஷ்ணுவைக் கண்டதும், தன்னுடைய மனைவியான பார்வதி அருகில் இருப்பதைக்கூடப் பொருட்படுத்தாமல் சிவன் காமத்துடன் நெருங்கினார். கடைசியில் அவருக்குச் சுக்கில வெளிப்பாடு உண்டானது.

அது விழுந்த இடங்கள் பொன்னும் வெள்ளியும் விளையும் பிரதேசங்களாக மாறின எனப் பாகவத புராணம் கூறுகின்றது.

அய்யப்பன் சாமிக்கு 19 ஆண்டுகளுக்கு முன்னர் தோசம் ஏற்பட்டுவிட்டது என்றால் இவ்வளவு நாளும் செய்த வழிபாடு, புூசை எல்லாம் சுத்த றயளவந இல்லையா?

ஆமாம்! தீட்டு நீங்க கோயிலை இனிப் புனிதப்படுத்த வேண்டும்.

ஆகம விதிகளுக்கு மாறாக தலித்துக்களைக் கோயிலுக்குள் அனுமதித்த போதும் சுவாமிக்குத் தீட்டுப்பட்டுவிட்டதென்றுதா

எவ்வளவுதான் சொன்னாலும் நம்ம சனம் திருந்தாது. ஐயையோ சாமிக்குற்றம் கன்னத்தல போட்டுக்கோ என்பார்கள்.

அவனவன் செவ்வாய்கிரகத்துக்கும் போகப் போறான் நாம் இன்னும் செவ்வாய் குற்றம், தோசம் என்று சொல்லிக்கொண்டிருக்கிறம்.

இதுவரை சபரிமலைக்கோ.. ஏன் ஈழபதீஸ்நடராஜரையோ தர்சிக்கவில்லை.. ஆண்டவனிடம் கேட்டுப்பெறக்கூடாது என்ற கொளகையிலிருந்து உங்களுக்காக சற்று விலகி.. போனால் ஈழத்தமிழர் என்ன செய்தார்கள் இப்படி சிதறித்து ஓடவைத்திருக்கிறய்..என்று ஒரு கேள்வியை வைத்து.. உங்களுக்கு நேடியான பதிலை கொடுக்குமாறு வேண்டுகிறேனே.. :P

  • கருத்துக்கள உறவுகள்

சைவசமயத்தில் இல்லாத ஆஞ்சனேயர், அய்யப்பனுக்கு ஈழத்தமிழர்கள் கோவில் கட்டத்தொடங்கிவிட்டார்கள். 15 வருடங்களுக்கு முன்பு ஆஞ்சனேயர், அய்யப்பனைப்பற்றி தெரியாத ஈழத்தமிழர்கள், வரும் காலத்தில் புதிய புதிய கடவுள்களுக்கும் கோவில் கட்டுவார்கள்.

சிட்னியில் ஒரே காணியில் அம்மனுக்கும் அய்யப்பனுக்கும் கோவில் கட்டப்பட்டு வருகிறது(அய்யப்பனுக்கு பக்கத்தில் பெண் தெய்வம்). கருப்பாணசுவாமி என்று யாராவது ஈழத்தமிழர்கள் கேள்விப்பட்டு இருக்கிறீர்களா? . சிட்னியில் அய்யப்பன் கோவிலில் கட்டப்படும் விக்கிரகத்தின் பெயர்.

இலங்கைக்கு வந்த முதல் றோ உளவாளி அனுமான். இவருக்கு உதவிய அணில்களுக்கும் இனி பிற்காலத்தில் ஈழத்தமிழர்கள் கோவில் கட்டுவார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

புலத்தமிழன் படுகிறப்பாடு,பணம் செய்யிறவேலை இருக்கிறசாமியை ஒழுங்காக கும்பிடுறான் இல்லை இதுக்குள்ளா புதுசாகசாமி.....இதை செய்யிறஆட்கள் சாதாரனமானவர்கள அல்ல .எல்லொரும் அதிகம் படித்தபுத்திஜீவிகள் இவர்களெ இப்படி என்றால் சாதரன என் பொன்றொர் எம்மாத்திரம்.அது சரி புலதமிழன் புதுசாக மதமெ உண்டாக்கிபோட்டான் (சத்தியசாயி மதம்)இது எம்மாத்திரம்......

கந்தப்பு

உங்களுக்குத் தெரியவில்லையென்பதால் 15 வருடங்களுக்கு முன் ஆஞ்சனேயர் ஐயப்பனை இலங்கைத்தமிழர்களுக்குத் தெரியாதென்று எழுதிவிடுவதா?? குறிப்பாக ஐயப்பனை தீவுப்பகுதி (அனலைதீவு ,புங்குடுதீவு) மக்கள் பல தலைமுறையாக வணங்கி வருகின்றார்கள்.

புலத்தில் காசு பார்ப்பதற்காக பலர் செய்யும் தெருக்கூத்துக்கள் சொல்லிமாளாது. கட்டவுட்டுக்கே கும்பாபிஷேகம் செய்வதென்றால் லேசுப்பட்ட சாதனையா??

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.