Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சுதாராஜ்ஜின் "அடைக்கலம்"

Featured Replies

1992 ஆம் ஆண்டு ஆனந்த விகடன் நடாத்திய வைர விழா சிறுகதைப் போட்டியில் இவரது "அடைக்கலம்" சிறுகதை முதற்பரிசு பெற்றது.

முழுப்பதிவிற்கும்:

http://kanapraba.blogspot.com/2006/07/blog...og-post_09.html

"அடைக்கலம்" படித்தேன்

உங்கள் உதவியோடு .........

நன்றி!

  • தொடங்கியவர்

வணக்கம் அஜீவன்

வாசித்துக் கருத்தளித்த உங்களுக்கு என் நன்றிகள்

நான் ஏதும் படித்ததாக நினைவில் இல்லை. தங்கள் பதிவு சுதாராஜ் படைப்புக்களைப் படித்துப்

பார்க்கும்படி செய்ய வைத்தது. உங்கள் உதவியுடன் தரவிறக்கம் செய்து ஒரே மூச்சில் படித்து

முடித்தேன். மிகவும் அருமையான கதை. படிக்க சந்தர்ப்பம் தந்தமைக்கு நன்றிகள் கானபிரபா. :lol:

ஈழத்து எழுத்தாளர்களை அறிமுகபடுத்தியமைக்கு நன்றிகள் கானாபிராபா. உங்கள் ஆக்கங்களை வாசிக்கும் போது இப்படியான ஈழத்து எழுத்தாளர்களின் அறிமுகம் கிடைக்கின்றது. பாராட்டுக்கள்.

  • தொடங்கியவர்

வாசித்துக் கருத்தளித்தமைக்கு நன்றிகள் ரசிகை மற்றும் ரமாவிற்கு :-)

நானும் புத்தளத்தில் வாழ்ந்த காரணத்தால் சுதாராஜ் அண்ணாவை அறிவேன். உண்மையில் என்னுடைய முதலாவது சிறுகதையை வாசித்து ஆலோசனை சொன்னதுடன் நிறையப் புத்தகங்களை வாசிக்கவும் தந்தார். வயதில் குறைந்தவன் என்ற வேறுபாடு இல்லாது பல விடயங்களைப் பற்றியும் கதைப்பார்.

எனக்கென்றால் அடைக்கலம் சிறுகதைக்கும் கன்னத்தில் முத்தமிட்டாலுக்கும் ஒரு தொடர்பு இருப்பது போலத் தான் படுகிறது. அடைக்கலம் சிறுகதையில் குஞ்சுகளைத் தாயுடன் இணைத்து வைக்க எடுக்கப்படுகின்ற முயற்சியைப் போல கன்னத்தில் முத்தமிட்டாலில்குழந்தையைச் சேர்த்து வைக்க மயல்கின்றார்கள்.

அதுமட்டுமன்றி இயக்குனர் மணிரத்தினம் சுதாராஜ் வீட்டில் வந்து தங்கிச் சென்றதும் அடைக்கலம் சிறுகதையடங்கிய சிறுகதைப் புத்தகத்தைப் பெற்றுச் சென்றதையும் நான் அறிவேன்.

இணைப்புக்கு நன்றி பிரபா. இதுபோல் நாம் அறிய வேண்டிய ஈழத்து எழுத்தாளர்கள் பலர் இருக்கின்றார்கள்.

  • தொடங்கியவர்

வணக்கம் மணிவாசகன்

எங்கள் படைப்பைத் திருடி படமாக்குவது இதுதான் முதற் தடவை அல்ல, என்ன செய்வது?:-(

நானும் புத்தளத்தில் வாழ்ந்த காரணத்தால் சுதாராஜ் அண்ணாவை அறிவேன். உண்மையில் என்னுடைய முதலாவது சிறுகதையை வாசித்து ஆலோசனை சொன்னதுடன் நிறையப் புத்தகங்களை வாசிக்கவும் தந்தார். வயதில் குறைந்தவன் என்ற வேறுபாடு இல்லாது பல விடயங்களைப் பற்றியும் கதைப்பார்.

எனக்கென்றால் அடைக்கலம் சிறுகதைக்கும் கன்னத்தில் முத்தமிட்டாலுக்கும் ஒரு தொடர்பு இருப்பது போலத் தான் படுகிறது. அடைக்கலம் சிறுகதையில் குஞ்சுகளைத் தாயுடன் இணைத்து வைக்க எடுக்கப்படுகின்ற முயற்சியைப் போல கன்னத்தில் முத்தமிட்டாலில் குழந்தையைச் சேர்த்து வைக்க முயல்கின்றார்கள்.

அதுமட்டுமன்றி இயக்குனர் மணிரத்தினம் சுதாராஜ் வீட்டில் வந்து தங்கிச் சென்றதும் அடைக்கலம் சிறுகதையடங்கிய சிறுகதைப் புத்தகத்தைப் பெற்றுச் சென்றதையும் நான் அறிவேன்.

இணைப்புக்கு நன்றி பிரபா. இதுபோல் நாம் அறிய வேண்டிய ஈழத்து எழுத்தாளர்கள் பலர் இருக்கின்றார்கள்.

மணிவாசகன்

ஆரம்ப காலங்களில் இது உண்மையா? என்ற

சந்தேகம் இருந்தது.

அடைக்கலம் சிறு கதையை படித்த போது கூட

அதை நான் பெரிதாக ஒப்பிடாமல்

இருக்காது என்றுதான் நினைத்தேன்.

அடைக்கலம் சிறுகதையில் குஞ்சுகளைத் தாயுடன் இணைத்து வைக்க எடுக்கப்படுகின்ற முயற்சியைப் போல கன்னத்தில் முத்தமிட்டாலில் குழந்தையைச் சேர்த்து வைக்க முயல்கின்றார்கள்

என்ற

உங்கள் கருத்து மட்டுமல்ல ஒப்பீடும்

சுதாராஜ் அவர்களோடு இருந்த தொடர்பும் காரணமாக

உண்மையை தெளிவுபடுத்தியிருக்கிறீர்க

வணக்கம் அஜீவன் அண்ணாஇ

உண்மையில் சுதாராஜ் அண்ணாவை அறிந்தவர்களுக்குத் தெரியும் அவர் பணத்திற்கு அலைபவர் அல்ல. அவருடைய ஆதங்கம் எல்லாம் தன்னுடைய கதையைத் தழுவிப் படம் எடுப்பதைப் பற்றித் தன்னிடம் ஒருவார்த்தை கூடக் கூறவில்லையே என்பது தான்.

என்னுடை அப்பா புத்தளத்தில் வியாபார முயற்சிகளில் ஈடுபட்டிருந்ததால் என்னுடைய வாழ்நாளில் பெரும்பகுதி புத்தளத்திலேயே கழிந்தது. (சேனைக்குடியிருப்பு)

நான் சென் மேரிஸ் வித்தியாலயத்திலும் சகிராக் கல்லூரியிலும் ஆரம்பக் கல்வியைப் பெற்றேன்.

நீங்கள் படித்தது சென் மேரிஸா அல்லது சென் அன்ட்றூவா?

வணக்கம் அஜீவன் அண்ணா

உண்மையில் சுதாராஜ் அண்ணாவை அறிந்தவர்களுக்குத் தெரியும் அவர் பணத்திற்கு அலைபவர் அல்ல. அவருடைய ஆதங்கம் எல்லாம் தன்னுடைய கதையைத் தழுவிப் படம் எடுப்பதைப் பற்றித் தன்னிடம் ஒருவார்த்தை கூடக் கூறவில்லையே என்பது தான்.

என்னுடை அப்பா புத்தளத்தில் வியாபார முயற்சிகளில் ஈடுபட்டிருந்ததால் என்னுடைய வாழ்நாளில் பெரும்பகுதி புத்தளத்திலேயே கழிந்தது. (சேனைக்குடியிருப்பு)

நான் சென் மேரிஸ் வித்தியாலயத்திலும் சகிராக் கல்லூரியிலும் ஆரம்பக் கல்வியைப் பெற்றேன்.

நீங்கள் படித்தது சென் மேரிஸா அல்லது சென் அன்ட்றூவா?

வணக்கம் மணிவாசகன்

நான் இருக்கும் போது சுதாராஜ் அவர்கள் இருக்கவில்லை என்று நினைக்கிறேன்.

கலைஞன் என்ற ரீதியில் எனக்கும் வேதனை தருகிறது.

அவரது பெயரையாவது டைட்டலில் இணைத்து மூலக்கதை என்றாவது குறிப்பிட்டிருக்கலாம்?

உலகை திருத்த படமெடுக்கு முன்

தம்மை திருத்த முனையாதது ஏனோ தெரியவில்லை?

சென்.அன்றூஸில் (சிங்கள மொழியில்) கல்வி கற்றேன்.

நீங்கள் ஆரம்ப கல்வியை சேனைக்குடியிருப்பு சென்.மேரிஸில் கல்வி கற்று

பின்னர் புத்தளம் சகிரா கல்லூரிக்கு போயிருக்க வேண்டும்.

(அதிபர் ஞானரட்ணம் மற்றும் பெர்ணான்டோ மாஸ்டர் போன்றோர் இருக்கும் காலத்திலா?)

புத்தளம் வைத்தியசாலை அருகே தமிழ் மகாவித்தியாலயம்

இருந்ததே!(வானிலை மையம் :meteorological office)

அதற்கு அருகாமையில் நான் வாழ்ந்தேன்.

  • தொடங்கியவர்

ஆஹா! அடைக்கலம் சிறுகதை மணிவாசகனையும் அஜீவனையும் அறிமுகப்படுத்தியிருக்கிறதே?

வணக்கம் மணிவாசகன்

எனது வானொலிப் பேட்டிக்காக சுதாராஜ்ஜைத் தொடர்புகொள்ளவிரும்புகின்றே

ஆஹா! அடைக்கலம் சிறுகதை மணிவாசகனையும் அஜீவனையும் அறிமுகப்படுத்தியிருக்கிறதே?

வணக்கம் மணிவாசகன்

எனது வானொலிப் பேட்டிக்காக சுதாராஜ்ஜைத் தொடர்புகொள்ளவிரும்புகின்றே

வணக்கம் மணிவாசகன்

நான் இருக்கும் போது சுதாராஜ் அவர்கள் இருக்கவில்லை என்று நினைக்கிறேன்.

நீங்கள் ஆரம்ப கல்வியை சேனைக்குடியிருப்பு சென்.மேரிஸில் கல்வி கற்று

பின்னர் புத்தளம் சகிரா கல்லூரிக்கு போயிருக்க வேண்டும்.

(அதிபர் ஞானரட்ணம் மற்றும் பெர்ணான்டோ மாஸ்டர் போன்றோர் இருக்கும் காலத்திலா?)

புத்தளம் வைத்தியசாலை அருகே தமிழ் மகாவித்தியாலயம்

இருந்ததே!(வானிலை மையம் :meteorological office)

அதற்கு அருகாமையில் நான் வாழ்ந்தேன்.

வணக்கம் அஜீவன் அண்ணா,

ஆமாம் அவர்கள் இருவரிடமும் நான் கல்வி கற்றேன்.

பழைய ஞாபகங்களை மீட்ட உதவியதற்கு நன்றி.

அன்புடன்

மணிவாசகன்

வணக்கம் மணிவாசகன்

நான் இருக்கும் போது சுதாராஜ் அவர்கள் இருக்கவில்லை என்று நினைக்கிறேன்.

நீங்கள் ஆரம்ப கல்வியை சேனைக்குடியிருப்பு சென்.மேரிஸில் கல்வி கற்று

பின்னர் புத்தளம் சகிரா கல்லூரிக்கு போயிருக்க வேண்டும்.

(அதிபர் ஞானரட்ணம் மற்றும் பெர்ணான்டோ மாஸ்டர் போன்றோர் இருக்கும் காலத்திலா?)

புத்தளம் வைத்தியசாலை அருகே தமிழ் மகாவித்தியாலயம்

இருந்ததே!(வானிலை மையம் :meteorological office)

அதற்கு அருகாமையில் நான் வாழ்ந்தேன்.

வணக்கம் அஜீவன் அண்ணா,

ஆமாம் அவர்கள் இருவரிடமும் நான் கல்வி கற்றேன்.

பழைய ஞாபகங்களை மீட்ட உதவியதற்கு நன்றி.

அன்புடன்

மணிவாசகன்

மிக்க மகிழ்ச்சி!

விரும்பினால் தனி மடலில் தொடர்பு கொள்ளுங்கள்.

பிரபாவுக்கு நன்றி!

ஆஹா! அடைக்கலம் சிறுகதை மணிவாசகனையும் அஜீவனையும் அறிமுகப்படுத்தியிருக்கிறதே?

நன்றி பிரபா

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.