Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மனைவிக்கு இதயநோய் : வேதனையில் 102 வயது முதியவர் தற்கொலை!

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கோவை சித்தாபுதூர் வி.கே.கே. மேனன் ரோட்டைச் சேர்ந்தவர் ரங்கசாமி நாயுடு(வயது 102 ).  இவரது மனைவி ரங்கநாயகி(92).  இவர்களுக்கு 1 மகனும், 3 மகள்களும் உள்ளனர். அனைவருக்கும் திருமணமாகி சென்றுவிட்டனர். பேத்தி, பேரன், கொள்ளுப்பேரன், கொள்ளுப்பேத்தி என மகிழ்ச்சியுடன் வசித்து வந்தனர்.

இந்நிலையில் ரங்கநாயகி இதய  நோயால் பாதிக்கப்பட்டார். தொடர்ந்து சிகிச்சை எடுக்க வேண்டி இருந்ததால் சாய்பாபா காலனியில் உள்ள தனது மகள் வீட்டில் தங்கி இருந்தார்.

ரங்கசாமி மட்டும் வீட்டில் தனியே இருந்தார். மனைவிக்கு இதய நோய் வந்து விட்டதே எனவும்,இனி தன்னை யார் கவனிப்பார்கள் எனவும் வருந்திய ரெங்கசாமி ரங்கசாமிநாயுடு வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து தகவல் அறிந்த ரேஸ்கோர்ஸ் காவல்துறையினர் விரைந்து சென்று ரங்கசாமிநாயுடு உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

http://www.nakkheeran.in/Users/frmNews.aspx?N=95946

  • கருத்துக்கள உறவுகள்

அன்புக்கும் உண்டோ அடைக்கும் தாழ்.

 

இப்படியான அன்பான தம்பதிகளை பார்ப்பது இன்று அரிதாகிவிட்டது. இப்ப எல்லாம் காசு உள்ள வரை வசதி உள்ளவரை இளமை ஊஞ்சலாடும் வரை தேவை தீரும் வரை.. ஒட்டிவிட்டு அடுத்த மணித்துளியே இன்னொருவரோடு ஒட்டக் கூடிய ஒட்டுண்ணி உறவு முறைகள் தான் மனிதரிடத்தில் அதிகமாக உள்ளது. :icon_idea::(

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

அவருக்கு தன்ட மனைவி செத்த கவலையை விட தன்னை இனிமேல் பார்ப்பதற்கு ஒருத்தரும் இல்லையே என்ட கவலை தான் அதிகம் அதால தான் செத்தவர்

  • கருத்துக்கள உறவுகள்

அவருக்கு தன்ட மனைவி செத்த கவலையை விட தன்னை இனிமேல் பார்ப்பதற்கு ஒருத்தரும் இல்லையே என்ட கவலை தான் அதிகம் அதால தான் செத்தவர்

 

ஆமா.. அவா 25 வயசு இள நங்கை தூக்கிப் பறிப்போறாவாக்கும். ஒரு 92 வயசு மூதாட்டி... பிசிக்கலா.. ஒன்றும் செய்ய முடியாது. பக்கத் துணை தான் இருக்க முடியும். அன்பை.. ஆதரவை தான் காட்ட முடியும். மிஞ்சி மிஞ்சிப் போனா சமைச்சு பரிமாற முடியும்..! இதைத்தானே மூப்பின் போது பொம்மனாட்டிகளும் எதிர்பார்ப்பினம். இங்க தானே அன்பு கோலோஞ்சுது..! :)

 

உங்களுக்கு எப்பவும் ஆண்கள் (அது குழந்தை என்றால் என்ன வயதானவர் என்றால் என்ன) மீது ஒரே குற்றவியல் பார்வை தான். உங்க மனசை ஒருக்கா டவுட் செக்கப்புக்கு அனுப்பி வையுங்க..! :lol:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

கோவை சித்தாபுதூர் வி.கே.கே. மேனன் ரோட்டைச் சேர்ந்தவர் ரங்கசாமி நாயுடு(வயது 102 ).  இவரது மனைவி ரங்கநாயகி(92).  இவர்களுக்கு 1 மகனும், 3 மகள்களும் உள்ளனர். அனைவருக்கும் திருமணமாகி சென்றுவிட்டனர். பேத்தி, பேரன், கொள்ளுப்பேரன், கொள்ளுப்பேத்தி என மகிழ்ச்சியுடன் வசித்து வந்தனர்.

இந்நிலையில் ரங்கநாயகி இதய  நோயால் பாதிக்கப்பட்டார். தொடர்ந்து சிகிச்சை எடுக்க வேண்டி இருந்ததால் சாய்பாபா காலனியில் உள்ள தனது மகள் வீட்டில் தங்கி இருந்தார்.

ரங்கசாமி மட்டும் வீட்டில் தனியே இருந்தார். மனைவிக்கு இதய நோய் வந்து விட்டதே எனவும்,இனி தன்னை யார் கவனிப்பார்கள் எனவும் வருந்திய ரெங்கசாமி ரங்கசாமிநாயுடு வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து தகவல் அறிந்த ரேஸ்கோர்ஸ் காவல்துறையினர் விரைந்து சென்று ரங்கசாமிநாயுடு உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

http://www.nakkheeran.in/Users/frmNews.aspx?N=95946

 

செய்தியை வடிவாய் வாசித்துப் பார்க்கவும் தம்பி :lol:

பெண்கள் 92 வயது என்டாலும் சரி,100 வயது என்டாலும் சரி அவர்களுக்கு கணவன் இருந்தால் இந்த தள்ளாத வயதிலும் பெரும்பாலும் மனைவிமாரே கணவங்களை கவனிப்பார்கள் :)

  • கருத்துக்கள உறவுகள்

முதலில்

இந்த 2  பேரையும் கொஞ்ச நாளைக்கு  ஒன்றாக விட்டு

உலக சமாதானம் வருகுதா

உலக யுத்தம் வருகுதா என்று பார்க்கணும் :D :D :D :D

  • கருத்துக்கள உறவுகள்

அண்ணை ஒண்டா விட்டு ரெண்டும் வராமல் வேற ஏதாச்சும் வந்திட்டா என்னண்ணை ஆகிறது?

  • கருத்துக்கள உறவுகள்

செய்தியை வடிவாய் வாசித்துப் பார்க்கவும் தம்பி :lol:

பெண்கள் 92 வயது என்டாலும் சரி,100 வயது என்டாலும் சரி அவர்களுக்கு கணவன் இருந்தால் இந்த தள்ளாத வயதிலும் பெரும்பாலும் மனைவிமாரே கணவங்களை கவனிப்பார்கள் :)

 

கணவன் மனைவி என்றால் இரண்டு மனிதர்கள். ஒருவர் மற்றவரில் இயலாத காலங்களில் தங்கி இருப்பது தானே வழமை. கணவனுக்கு ஏலாது என்றால் மனைவியும் மனைவிக்கு ஏலாது என்றால் கணவனும் கவனிக்கத்தானே திருமணம்.. அது இதென்று சொல்லி.. குடும்பம் அமைக்கினம். இல்லாட்டி ஏன் திருமணம் என்று போய் குடும்பம் என்று ஒட்டிக்கிட்டு இருக்கனும்..???!

 

உங்களுக்கு.. சதா ஆண்களில் குறை காண்பதே வேலையாப் போச்சுது. இப்படியான பெண்கள் என்றால் ஆண்கள் வயசாக முன்னமே தற்கொலை செய்துகிடுவாங்க..! :):lol:

  • கருத்துக்கள உறவுகள்

அண்ணை ஒண்டா விட்டு ரெண்டும் வராமல் வேற ஏதாச்சும் வந்திட்டா என்னண்ணை ஆகிறது?

 

அதைத்தானே  எதிர் பார்க்கிறம்

அப்புறம் அதுக்காக? :wub:  என்று சமாளித்து போவாங்க இல்லையா??? :D

  • கருத்துக்கள உறவுகள்

அதைத்தானே  எதிர் பார்க்கிறம்

அப்புறம் அதுக்காக? :wub:  என்று சமாளித்து போவாங்க இல்லையா??? :D

 

அந்த செய்தியைப் படியுங்க விசுகு அண்ணா. அந்த வயதானவர்.. எல்லாம் செய்து.. பெற வேண்டியதுகள் எல்லாம்.. பெற்று.. அசிங்கப்பட வேண்டியது எல்லாம் பட்டு.. இறுதியில் தான்.. சரி எனியாவது அன்போட இருப்பமென்று முடிவெடுக்க.. அதுக்க நோய் வந்து தொலைச்சிட்டுது. அந்த அதிர்ச்சில போய் சேர முடிவெடுத்திட்டார்.

 

அவர் உங்களுக்கும் ஒரு பாடம்... விசுகு அண்ணா. எப்பவும் இளமை ஊஞ்சலாடும் என்று சொல்லிட்டு இருக்கப்படாது..! அந்தந்த காலத்திற்கு ஏற்ப எங்களை நாங்கள் பக்குவப்படுத்திக்கனும்..! அதனை இளமையில் புரிதலே.. பின்னாடி வாழ்கையை சுவாரசியமாக முடிக்கவும் உதவும். தற்கொலை செய்துக்க தேவை வராது.

 

உலகத்தில ஒன்றைக் கவனியுங்க.. இளைஞனான யேசுவும்.. இளைஞனான விவேகானந்தரும்.. இளைஞனான பாரதியும்.. இளைஞனான திலீபனும்.. சொன்னவை தான்.. தத்துவமாய் வந்திருக்குது. வயசு போனாக்கள் சொன்னதைக் காட்டிலும்..! இளைஞர்கள் எல்லோரும் இளமை ஊஞ்சலில் ஆடிக்கிட்டு திரியுற ஆக்களில்ல.. அதற்கு அப்பாலும் சென்று சிந்திக்கக் கூடியவங்க.. புரிஞ்சுக்குங்க..! :icon_idea::lol:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

அந்த செய்தியைப் படியுங்க விசுகு அண்ணா. அந்த வயதானவர்.. எல்லாம் செய்து.. பெற வேண்டியதுகள் எல்லாம்.. பெற்று.. அசிங்கப்பட வேண்டியது எல்லாம் பட்டு.. இறுதியில் தான்.. சரி எனியாவது அன்போட இருப்பமென்று முடிவெடுக்க.. அதுக்க நோய் வந்து தொலைச்சிட்டுது. அந்த அதிர்ச்சில போய் சேர முடிவெடுத்திட்டார்.

 

அவர் உங்களுக்கும் ஒரு பாடம்... விசுகு அண்ணா. எப்பவும் இளமை ஊஞ்சலாடும் என்று சொல்லிட்டு இருக்கப்படாது..! அந்தந்த காலத்திற்கு ஏற்ப எங்களை நாங்கள் பக்குவப்படுத்திக்கனும்..! அதனை இளமையில் புரிதலே.. பின்னாடி வாழ்கையை சுவாரசியமாக முடிக்கவும் உதவும். தற்கொலை செய்துக்க தேவை வராது.

 

உலகத்தில ஒன்றைக் கவனியுங்க.. இளைஞனான யேசுவும்.. இளைஞனான விவேகானந்தரும்.. இளைஞனான பாரதியும்.. இளைஞனான திலீபனும்.. சொன்னவை தான்.. தத்துவமாய் வந்திருக்குது. வயசு போனாக்கள் சொன்னதைக் காட்டிலும்..! இளைஞர்கள் எல்லோரும் இளமை ஊஞ்சலில் ஆடிக்கிட்டு திரியுற ஆக்களில்ல.. அதற்கு அப்பாலும் சென்று சிந்திக்கக் கூடியவங்க.. புரிஞ்சுக்குங்க..! :icon_idea::lol:

 

எங்கப்பரும் ஒழுங்காத்தான் இருந்தார் ராசா

அம்மா வயித்து நோ என்று யாழ் வைத்தியசாலைக்குப்போக

வயித்துக்குள்ள விட்ட கமெறா வயித்தில குத்த

அதால அவா 3 நாள் அங்க தங்கவேண்டி வர

தனக்கு முதல் அவா போகப்போறா என்று பயந்த எனது அப்பர் 2 நாளிலேயே  போய்ச்சேர்ந்திட்டார்

 

இது அன்பா

பயமா?

எனக்குத்தெரியல ராசா?

இது எனது சொந்த அனுபவம் ராசா?

 

ஆனால் மேலே நான் எழுதியது தங்கள் இருவரையும் சும்மா சீண்ட மட்டுமே.

 

Edited by விசுகு

  • கருத்துக்கள உறவுகள்

இப்படி எங்கள் உறவுக்காரர் ஒருவருக்கும் நடந்துள்ளது. மனைவிக்கு மாற்ற முடியாத வருத்தம் என்று அறிந்ததும்.. அதிர்ச்சியில் இறந்து விட்டார். மனைவி சில வாரங்களின் பின் இறந்துவிட்டார். அவர்கள் இருவரும் மிகவும் அன்பான கணவன் மனைவியாக இருக்கவே செய்துள்ளனர். என்ன பிள்ளைகள் தான் அந்தரித்தன.

 

மனித வாழ்க்கை இத்தூண்டு சின்னது. அதற்குள் பெரிய பெரிய கனவுக் கோட்டைகளைக் கட்டி வைப்பதும் கூட ஆபத்துத்தான்..!

 

வாழும் வரை வாழ்ந்து பார்த்திட வேண்டியது தான். நல்லதாய் வாழ்ந்திட்டால் தனக்கும் நல்லம்.. பிறர்கும் நல்லம்.. ஊருக்கும் நல்லம்.. நாட்டுக்கும் நல்லம்.. உலகிற்கும் நல்லம்..! :)

 

 

  • கருத்துக்கள உறவுகள்

அதைத்தானே எதிர் பார்க்கிறம்

அப்புறம் அதுக்காக? :wub: என்று சமாளித்து போவாங்க இல்லையா??? :D

வேணாம் அண்ணை இப்ப தான் ஒராள் ஆள ரொம்ப நொந்து போய் இருக்காக.....கவிதை, கதை எண்டு தாங்க முடியல..... அதுக்குள்ள இன்னொன்னா....? உசிரு தான்காதண்ணை.....:(

  • கருத்துக்கள உறவுகள்

இப்படி எங்கள் உறவுக்காரர் ஒருவருக்கும் நடந்துள்ளது. மனைவிக்கு மாற்ற முடியாத வருத்தம் என்று அறிந்ததும்.. அதிர்ச்சியில் இறந்து விட்டார். மனைவி சில வாரங்களின் பின் இறந்துவிட்டார். அவர்கள் இருவரும் மிகவும் அன்பான கணவன் மனைவியாக இருக்கவே செய்துள்ளனர். என்ன பிள்ளைகள் தான் அந்தரித்தன.

 

மனித வாழ்க்கை இத்தூண்டு சின்னது. அதற்குள் பெரிய பெரிய கனவுக் கோட்டைகளைக் கட்டி வைப்பதும் கூட ஆபத்துத்தான்..!

 

வாழும் வரை வாழ்ந்து பார்த்திட வேண்டியது தான். நல்லதாய் வாழ்ந்திட்டால் தனக்கும் நல்லம்.. பிறர்கும் நல்லம்.. ஊருக்கும் நல்லம்.. நாட்டுக்கும் நல்லம்.. உலகிற்கும் நல்லம்..! :)

 

அதைத்தான் நானும் செய்கின்றேன்

ஆனால் இப்பவே பயம் வந்திட்டுது

தனிய கிடந்திடக்கூடாது என்று............. :(

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.