Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எட்டுக் கோடி தமிழர்களை கொண்ட தமிழ்நாட்டை சீண்டிவிட்டு அதை தனிநாடு ஆக்கி சிக்கலில் விழ வேண்டாம் : மனோ கணேசன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியா உடையாது ஒன்றாக இருப்பதே இலங்கையின் ஒருமைப்பாட்டுக்கு இருக்கின்ற பாதுகாப்பு அதைவிடுத்து இந்தியா துண்டு துண்டாக உடைந்து போக வேண்டும் என சாபமிட வேண்டாமெனஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்தார்.

இந்தியா துண்டு துண்டாக உடைந்து போக வேண்டும் என தேசிய தேசப்பற்று இயக்க தலைவர் குணதாச அமரசேகர என்ற பல் வைத்தியர் இந்தியாவை நோக்கி சாபம் போடுகிறார். விமல் வீரவன்சவும், சம்பிக்க ரணவக்கவின் தலைவர் ஓமல்பே சோபித தேரரும் தமிழகத்தை திட்டி தீர்க்கிறார்கள். போதாக்குறைக்கு கிரிக்கட் வீரர் குமார் சங்கக்காரவும் சின்ன ஒரு தமிழ்நாடு என்பது மிகப்பெரிய இந்தியா இல்லை என்று கிண்டல் செய்கிறார். நீங்கள் எல்லோரும் சேர்ந்து உங்கள் முட்டாள் தனமான சிங்கள பௌத்த தீவிரவாதம் மூலம் எட்டுக் கோடி மக்கள் தொகை கொண்ட தமிழ்நாட்டை சீண்டி விட்டு, அதை தனிநாடு ஆக்கிவிட வேண்டாம்.

இந்தியா ஒன்றாக இருப்பது ஒன்றுதான் இலங்கையின் ஒருமைப்பாட்டுக்கு இருக்கின்ற ஒரே பாதுகாப்பு. இலங்கையில் உள்ள இந்தியத் தூதரகம் இந்த பெரும் உண்மையை உங்களுக்கு விளக்கி சொல்லுகிறதா என எனக்குத் தெரியவில்லை. ஆனால், நான் சொல்கிறேன். இந்த அடிப்படை உண்மையை புரிந்துகொண்டு நடந்துகொள்ளுங்கள் என்றும் அவர் குறிப்பிட்டார்.

அதிகாரத்தை பகிர்ந்து ஐக்கியப்படும் இயக்கத்தின் ஊடக மாநாடு இன்று புதன்கிழமை கொழும்பில் நடைபெற்ற போது கருத்து வெளியிட்ட மனோ கணேசன் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

இந்தியாவில் இன்று மாணவர் போராட்டம் உச்சநிலை அடைந்துள்ளது. அரசியல் கட்சிகள் சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளன. நேற்று அங்கு நடிகர்களும் உண்ணாவிரதம் இருந்துள்ளார்கள். இதற்கு பதிலாக சிலர் இலங்கைக்கு தமிழ் திரைப்படங்களை கொண்டு வரக்கூடாது என சொல்கிறார்கள். இலங்கை ஒரு பெரிய திரைப்பட சந்தை இல்லை.இதனால் இங்கு தமிழ்நாட்டு திரைப்படம் வராதது பற்றி எல்லாம் அவர்கள் கணக்கிலும் எடுக்க மாட்டார்கள். இந்தியாவில் இருந்து எந்த பொருளும் கொண்டு வர விட மாட்டோம் என இன்னும் சிலர் சொல்கிறார்கள். அங்கிருந்து எதுவும் வராவிட்டால் அது நமக்குத்தான் பெரும் கஷ்டம். இந்தியாவில் இருந்து எதுவும் வேண்டாம் என்றால் ஏன் கௌதம புத்தரை மாத்திரம் இங்கு வைத்துள்ளீர்கள்? அவரை திருப்பி அனுப்பி விடலாமே.

இந்தியாவையும், தமிழ் நாட்டையும் சாபம் இட்டு, ஜெயலலிதா, கருணாநிதி, வைகோ, சீமான், நெடுமாறன் மற்றும் போராடும் மாணவர்களையும் கண்டபடி திட்டித் தீர்த்து அங்கு தமிழ் இன உணர்வை கொழுந்து விட்டு எரியச் செய்து இந்திய மாநிலமான தமிழ்நாட்டை தனியொரு நாடு ஆக்கி விடாதீர்கள்.

எண்பது மில்லியன் தமிழர் வாழும் தமிழ்நாடு தனிநாடு ஆகும் பட்சத்தில் அது இலங்கைக்கு பெரும் ஆபத்தில் முடியும். தனித்தமிழ்நாட்டின் முதல் நடவடிக்கை இலங்கைக்கு எதிராகத்தான் முடியும். இதை நாம் விரும்பவில்லை. இரு தரப்பிலும் வாழும் தீவிரவாதத்துக்கும் மத்தியில் சிக்கி தவிக்க நாம் விரும்பவில்லை. ஆனால் இந்த உண்மையை, இந்தியா துண்டு துண்டாக உடைந்து போக வேண்டும் என பகிரங்கமாக பேசும் சிங்கள தீவிரவாதிகள் உணர வேண்டும். இவர்கள் தங்கள் தலையில் மண்ணை அள்ளிக் கொட்டிக்கொள்கிறார்கள்.

இங்கே ஜெயலலிதாவை திட்டுகின்றவர்கள் ஒரு உண்மையை உணர வேண்டும். தமிழகம் சென்ற பிக்குமார்களை தாக்கியவர்களை தமிழக அரசு கைது செய்துள்ளது. ஆனால், இங்கே பெப்பிலியானவில் முஸ்லிம் வர்த்தக நிலையத்தை தாக்கி, ஒருவரின் மண்டையை உடைத்த காடையர்களை கைது செய்து மன்னிப்பு வழங்கி விடுவித்துவிட்டார்கள்.

கிளிநொச்சியில் சனிக்கிழமை நடந்த கூட்டமைப்பு கூட்டத்தில் மக்கள் பிடித்து கொடுத்த காடையர்களை பொலிஸ் உடனடியாக விடுவித்துவிட்டது. அதில் ஒருவர் பொலிஸ் புலனாய்வுத்துறை சிஐடி அதிகாரி. இதேபோல்தான் தெல்லிப்பளையிலும் மக்கள் பிடித்து கொடுத்த குற்றவாளிகளை பொலிஸ் விடுவித்தது.

இன்று காலை கிளிநொச்சியில் உதயன் பத்திரிகை அலுவலகம் தாக்கப்பட்டு நால்வர் காயங்களுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர். இது முதன் முறை அல்ல. இத்தகைய சம்பவங்களில் ஈடுபடுபவர்கள் எவரும் எப்போதும் கண்டு பிடிக்கப்படுவது இல்லை.

இதுதான் இலங்கையின் கோத்தாபய ராஜபக்ச பொலிஸ். ஆனால், இந்த கோத்தாபய ராஜபக்சவின் பொலிஸைவிட ஜெயலலிதாவின் தமிழ்நாடு பொலிஸ் நேர்மையாக தனது கடமையை செய்துள்ளது இன்று நிரூபணமாகியுள்ளது.

இந்திய மாணவர்கள் இலங்கை தீவில் தனித் தமிழீழத்தையும், அதற்கான பொது வாக்கெடுப்பையும் கோரி போராடுகிறார்கள். அதை நினைந்து சந்தோசப்படுங்கள். ஏனென்றால் அதனால்தான் இந்திய மத்திய அரசு இந்த கோரிக்கைகளை தனது தேச நலனுக்கு எதிரான தீவிரவாத கோரிக்கைகள் என்று சொல்லி நிராகரித்துள்ளது. அதனால் இன்று இலங்கை நாடு தப்பி பிழைத்துள்ளது.

தமிழீழம், பொதுவாக்கெடுப்பு ஆகிய கோரிக்கைகளை விட்டுவிட்டு, அந்த மாணவர்கள் இலங்கை - இந்திய ஒப்பந்தத்தை அமுல் செய்யக் கோரி போராடினார்கள் என்றால் இந்திய மத்திய அரசு மிகப்பெரும் நெருக்கடியில் விழும். 13ஆம் திருத்தமும், மாகாணசபையும், முக்கியமாக வடக்கு-கிழக்கு மாகாணங்கள் இணைப்பும் இந்திய மத்திய காங்கிரஸ் அரசு, இலங்கை அரசுடன் செய்துகொண்ட ராஜீவ் - ஜே.ஆர். ஒப்பந்த சரத்துக்களாகும். இரு நாடுகள் மத்தியில் செய்யப்பட்ட இந்த ஒப்பந்த அமுலாக்கல் கோரிக்கையை இந்தியாவின் மத்திய அரசு இன்று நிராகரிக்க முடியாது. இந்தியாவில் எந்த ஒரு கட்சியும் நிராகரிக்க முடியாது.

போராடும் தமிழக மாணவர்களுக்கு நான் இந்த உண்மையை எடுத்துக் கூறுகின்றேன். இலங்கை இந்திய ஒப்பந்தத்தை அமுல் செய்யுமாறு உங்கள் நாட்டு அரசாங்கத்தை வலியுறுத்தி ஜனநாயக ரீதியாக போராடுங்கள் என நான் அவர்களிடம் வேண்டுகோள் விடுக்கின்றேன்.

எனவே நிலைமை மோசமாகும் முன், இந்தப் போராட்டங்கள் அனைத்துக்கும் மூல காரணமான தேசிய இனப்பிரச்சினைக்கு அரசியல் அதிகாரத்தை பகிர்ந்து அளித்து தீர்வு காணுங்கள். தமிழ் நாட்டை தூண்டி விட்டு இந்திய மத்திய அரசை நெருக்கடியில் தள்ளி, இலங்கையை ஆபத்தில் தள்ள வேண்டாம் என இலங்கை அரசாங்கத்தையும், சிங்கள - பௌத்த தீவிரவாத கட்சிகளையும் கோருகின்றேன் என அவர் மேலும் தெரிவித்தார்.

http://www.virakesari.lk/article/local.php?vid=3797

இந்தியாவை உடைக்க வேண்டும் என்று சிங்களமும் களத்தில் இறங்கியுள்ளது  :rolleyes:

 

அதற்கு பாகிஸ்தான் துணை நிற்கும் !

இந்த ஆள் நிறைய Logic ஆ அறிவோடு பேசுகிறார்  ... போராட்டகாலங்களில் இவரை ஏன் ஒருவரும் கணக்கில் எடுக்கவில்லை?

  • கருத்துக்கள உறவுகள்

சூரியனைப்போல் ஒரு சில மனிதர்களே உலகில் தோற்றம் கொள்கின்றனர். சூரியன் உதிப்பதுமில்லை!, மறைவதுமில்லை!, சூரியன் கண்ணுக்குத் தெரியும்போது உதிப்பதாகவும், தெரியாதபோது மறைவதாகவும் காண்பதை நம்பி வாழ்கிறோம். ஆனால் உண்மை எங்கோ இருக்கிறது. அதை நாம் உணரும்போது பிரமிப்படைகிறோம்!.
 

போராட்டகாலங்களில் இவர் வெளிப்பட்டிருந்தால் நிச்சயம் பயங்கரவாதிகள் பட்டியலில் ஒரு பயங்கரவாதியாகத் தொங்கவிடப்பட்டிருப்பார். ஏன் வெளிப்படவில்லை? அது ஆண்டவனுக்கு வெளிச்சம்!.

 

  • கருத்துக்கள உறவுகள்

மனோ கணேசனோடு சேர்ந்து சிங்கள அரசின் அராஜகங்களை உலகுக்கும் சிங்கள மக்களுக்கும் சொன்ன ரவிராஜ் கொல்லப்பட்டதை இலகுவில் மறந்து விட்டீர்களா?

  • கருத்துக்கள உறவுகள்

யோசவ் பரராசசிங்கம், ரவிராஜ் போன்று மனோகணேசன் அன்று பெரிதும் வெளிச்சத்துக்கு வரவில்லை. முள்ளிவாய்க்காலுக்குப் பின்பான காலங்களில் செய்யவேண்டிய நியாயமான கடமைகளை சிங்களவர்களுக்கு வலுவாக உணர்த்த முற்பட்ட செயற்பாடுகளே மனோகணேசனை மக்கள் அவதானிக்க வைத்தது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.