Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நாடாளுமன்ற தேர்தல்: சுவாரசிய கருத்துக்கணிப்பு! அ.தி.மு.க.வுக்கு 27 இடங்கள்!!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அடுத்த ஆண்டு வரவுள்ள நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பான சுவாரசியமான கருத்துக் கணிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. அடுத்த தேர்தலில் பா.ஜ.க. கூட்டணி, காங்கிரஸ் கூட்டணிக்கு இரண்டுக்குமே ஆட்சி அமைக்கும் அளவுக்கு மெஜாரிட்டி கிடைக்காது என்கிறது இந்த கருத்துக் கணிப்பு.

டைம்ஸ் ஆப் இந்தியாவின் டைம்ஸ் நவ் தொலைக்காட்சி CVoter ஆகியவை இணைந்து நாடு முழுவதும் நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பாக நடத்திய இந்த கருத்துக் கணிப்பு சொல்வது என்னவென்றால், பா.ஜ.க. கூட்டணி, காங்கிரஸ் கூட்டணி இரண்டிலும் இல்லாத பிராந்தியக் கட்சிகளே, மத்திய அரசை தீர்மானிக்கப் போகின்றன.

அதற்காக, அனைத்து பிராந்தியக் கட்சிகளும் அல்ல. அ.தி.மு.க. முலாயம் சிங்கின் சமாஜ்வாடி கட்சி, மம்தா பானர்ஜியின் திரிணமூல் காங்கிரஸ், ஜெகன் மோகன் ரெட்டியின் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் ஆகிய கட்சிகளே அடுத்த ஆட்சியை தீர்மானிக்கப் போவதாக கருத்துக் கணிப்பில் தெரியவந்துள்ளது.

அதாவது மேலே குறிப்பிட்ட கட்சிகள் அவை சார்ந்த மாநிலங்களில் ஜெயிக்கப் போகின்றன.

தமிழகம் பற்றி கருத்துக்கணிப்பு என்ன சொல்கிறது?

தமிழகத்தில் அ.தி.மு.க.வுக்கு பெரும் லாபம் கிடைக்கப் போகிறது. கடந்த தேர்தலில் வெறும் 9 இடங்களில் வென்ற அந்தக் கட்சிக்கு இம்முறை 27 இடங்கள் கிடைக்கும். தமிழகத்தில் மின் தட்டுப்பாடு, பால் விலை, பஸ் கட்டண உயர்வு, ஒட்டுமொத்த விலைவாசி உயர்வு என அதிருப்திகள் இருந்தாலும், இலங்கை விவகாரம், காவிரி விவகாரத்தில் முதல்வர் ஜெயலலிதாவுக்கு மக்களிடையே நல்ல பெயர் கிடைத்துள்ளது.

அப்போ, தி.மு.க.வின் கதி?மக்கள் மத்தியில் தி.மு.க. மீது அதிருப்தி நிலவுகிறது. 2ஜி விவகாரம் தொடர்பான அதிருப்தி உள்ளது. அதற்கும் மேலாக ஸ்கோர் பண்ணுகிறது, இலங்கை பிரச்னை.

இலங்கை விவகாரத்தில் காங்கிரசுடன் கடைசி வரை இருந்து விட்டு வெளியேறிய தி.மு.க. மீது அதிருப்தியே நிலவுகிறது. இதனால் கடந்த முறை 18 இடங்களில் வென்ற தி.மு.க.வுக்கு குறைந்த இடங்களே கிடைக்கும்.

நம்ம காங்கிரஸ் என்னாகும்?

தமிழகத்தில் காங்கிரசின் கதையை கேட்கவே வேண்டாம். அதனுடன் கூட்டணி அமைக்கவும் யாரும் முன் வராத நிலையில் அந்தக் கட்சிக்கு ஒரு இடம் கூட கிடைக்க வாய்ப்பில்லை என்கிறது கருத்துக் கணிப்பு. அதாவது முட்டைதான்!

இது தற்போதைய நிலைமை. தேர்தல் வருவதற்குள் தி.மு.க. இலங்கை விவகாரத்தில் ஸ்கோர் பண்ணினாலோ, அதே இலங்கை விவகாரத்தில் அ.தி.மு.க. சறுக்கினாலோ, இதுவே தலைகீழாக மாறிப் போகலாம்!

இந்த விஷயம், அந்தக் கட்சி தலைமைகளுக்கே தெரியும் என்பதால், தமிழக அரசியலில் இலங்கை விவகாரம் மிக மிக முக்கியத்துவம் பெறும்.

http://www.naamthamilar.ca/?p=115636.html

 

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல  செய்தி

27 இடங்கள் என்றால் மிகுதி 13 இடங்களும் யாருக்கு....

 

கூட்டணி குறித்தே இன்னும் முடிவாகாத நிலையில் இது ஒரு முந்திரிக் கொட்டைத்தனமான கருத்துக் கணிப்பு போலுள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்

27 இடங்கள் என்றால் மிகுதி 13 இடங்களும் யாருக்கு....

 

கூட்டணி குறித்தே இன்னும் முடிவாகாத நிலையில் இது ஒரு முந்திரிக் கொட்டைத்தனமான கருத்துக் கணிப்பு போலுள்ளது.

 

இதில் எல்லாவற்றையும் தாண்டி

இலங்கைத்தமிழர் பிரச்சினைதான் முதலாவது இடத்தில் நிற்கிறது  என்பதே கவனிக்கப்படவேண்டியது

இங்கு சிலர் தொடர்ந்து எழுதுகின்றனர்

அவர்களுக்கு பல பிரச்சினைகள்

அதற்குள் இலங்கைப்பிரச்சினை அடங்கவே மாட்டாது என்று.

அந்தவகையில் இது எமக்குக்கிடைத்த பெரும் வெற்றி.

மாநில மட்டத்தைத் தாண்டி மத்தியிலும் சலசலப்பை ஏற்படுத்தும் விடயத்தில் தமிழக மாணவர்களின் பங்களிப்பு மிகவும் முக்கியமானது. பாராட்டுக்கள் சகோதரர்களே!

  • கருத்துக்கள உறவுகள்

மாநில மட்டத்தைத் தாண்டி மத்தியிலும் சலசலப்பை ஏற்படுத்தும் விடயத்தில் தமிழக மாணவர்களின் பங்களிப்பு மிகவும் முக்கியமானது. பாராட்டுக்கள் சகோதரர்களே!

உண்மை

இளையோரிடமே இன்று பந்து

தமிழ் நாட்டில் கூட்டணி அமைக்காத நிலையில் இந்த கருத்துக்கணிப்பு நடந்திருக்கிறது.  இது ஜெயலலிதாவை மேல் சென்று கூட்டணி அமைப்பதை அதைரியப்படுத்த போகிறது. ஆனால் மேல் சென்று ஒரு நல்ல கட்சியுடன் கூட்டணி அமைத்தார் ஆனால் 40 தொகுதிகளையும் கைப்பற்றலாம்.

 

வழமையில் முன்னணியில் நிற்கும் கட்சிக்கு 1% வாக்கு கூடினாலே திடீரென பல தொகுதிகளை வாரியள்ளிக்கொண்டுவரும்.

 

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.