Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஈரான் மக்கள் தொகையை உயர்த்த வேண்டும் - கருத்தடை சாதனங்களை பயன்படுத்த வேண்டாம்: - ஈரான் அரசு அறிவிப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
having-baby-abroad-iran-150.jpg

ஈரானில் கடந்த 1979-ம் ஆண்டு முதல் குடும்ப கட்டுப்பாட்டு திட்டம் அமல் படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தினால் நாட்டின் வளர்ச்சி பாதிக்கப் படுவதாக அதிபர் மகமூத் அகமதி னேஜத் தெரிவித்தார். மக்கள் தொகை பெருக்கத்தை கட்டுப்படுத்துவதன் மூலம் மேலை நாடுகளுடன் அதற்கு இணையாக போட்டியிட முடியாத சூழ்நிலை உருவாகும் என்றும் எச்சரிக்கை விடுத்தார். அதைத் தொடர்ந்து ஈரான் தலைவர் அயதுல்லா அலி காமெனி இக்கருத்தை ஏற்றுக் கொண்டார். அதன்படி தற்போது 7 கோடியே 50 லட்சம் ஆக உள்ள ஈரானின் மக்கள் தொகையை 15 கோடியாக உயர்த்த வேண்டும். அதற்காக ஈரானில் குடும்ப கட்டுப்பாடு திட்டத்தை ரத்து செய்யும் படி உத்தரவிட்டார்.

  

ஈரானில் மக்கள் தொகை பெருக்கத்துக்கான நடவடிக்கைகள் மேற் கொள்ளப் பட்டுள்ளன. அதற்காக சுகாதாரத்துறை அமைச்சகம் 1 கோடியே 50 லட்சம் அதிகாரிகளை பணி நியமனம் செய்துள்ளது. அவர்கள் வீடு வீடாக சென்று இளம் தம்பதிகளை சந்திக்கின்றனர். அவர்களிடம் அதிக குழந்தை பெற்றுக் கொள்ளும் படி வலியுறுத்துகின்றனர். ஏற்கனவே ஒரு குழந்தையுடன் வாழும் தம்பதிகளை அடுத்த ஒரு வருடத்தில் மீண்டும் ஒரு குழந்தை பெற்றுக் கொள்ளும்படி எடுத்துரைக்கின்றனர். கருத்தடை சாதனங்களை பயன்படுத்த வேண்டாம் என அறிவுரைகளை வழங்குகின்றனர்.

http://www.seithy.com/breifNews.php?newsID=81126&category=WorldNews&language=tamil

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஏற்க்கனவே பொருளாதாரத் தடையால் பொருட்களின் விலை எகிறியுள்ளது இந்த நிலையில் அதிகமாக குழந்தை குட்டியை பெற்று எப்படி வளர்க்கப் போகின்றார்கள்  :icon_idea:

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சர்வதேச பொருளாதாரத் தடைகளால் தடுமாறுகிறது ஈரான் - உணவுப் பொருட்களின் விலை எகிறியது! 

 

iran-fruits-2342013-150.jpg

சர்வதேச பொருளாதார தடையால், ஈரானில் உணவுப் பொருட்கள் விலை கடுமையாக உயர்ந்து வருகிறது. இதனால் பொதுமக்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். பல்வேறு நாடுகளின் எச்சரிக்கையையும் மீறி, ஈரான் அணு ஆயுதச் சோதனையில் ஈடுபட்டு வந்தது. இதையடுத்து, அந்நாட்டின் மீது பொருளாதார தடை விதிக்கப்பட்டது. ஈரானிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கும் நாடுகளின் கப்பல்களுக்கு இன்சூரன்ஸ் செய்யப்பட மாட்டாது என்றும் அறிவிக்கப்பட்டது.

  

இந்நிலையில், தற்போது பொருளாதார தடையால் ஈரானில் உணவுப் பொருட்கள் விலை பல மடங்கு உயர ஆரம்பித்துள்ளது. குறிப்பாக சமையல் எண்ணெய், முட்டை, இறைச்சி, பழங்கள் உள்ளிட்டவற்றின் விலை 60 சதவீதம் வரை உயர்ந்துள்ளதாக, தலைநகர் டெஹ்ரானில் இருந்து வெளியாகும், கேஹன் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. ஈரானில் வரும் ஜூன் 14ல் அதிபர் தேர்தல் நடக்க உள்ள நிலையில், உணவுப் பொருட்கள் விலை அதில் எதிரொலிக்கும் என்று அப்பத்திரிகை செய்தியில் கூறப்பட்டுள்ளது.

முன்பு ஒரு அமெரிக்க டாலருக்கு 12,260 ரியால்கள் கொடுக்கப்பட்டு வந்தது. ஆனால் பொருளாதார தடைக்கு பின்னர் நிலைமை மாறிவிட்டதால் தற்போது ஒரு டாலரை பெற 24,500 ரியால்கள் கொடுக்கப்படுவதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க டாலரை தந்தால் மட்டுமே வர்த்தகர்கள் உணவுப் பொருட்களை தருகின்றனர் என்பதால், அதை பெறுவதற்கு கூடுதல் விலை கொடுக்க வேண்டிய நிலை ஈரான் வர்த்தகர்களுக்கு ஏற்பட்டுள்ளது.

http://www.seithy.com/breifNews.php?newsID=81062&category=WorldNews&language=tamil

 

இனம்பெருக்கத்தை பற்றி இவங்களுக்கு விளக்கம் வேற கொடுக்கனுமா?

ஒரு ஆண் ஏழு பெண்களை திருமணம் செய்யலாம், அப்ப 1x7x10?

 

சனத்தொகை கூடிதான் பக்கத்து நாடுகளுக்கு ஓடுகின்றார்கள், இனி உலகமுழுக்க அல்லா....

 

  • கருத்துக்கள உறவுகள்

பேசாமல் ஒப்பந்த அடிப்படையில் இந்தியாவில் இருந்து எங்களது வாழைப்பழ சாமியாரை அனுப்பினால்.... ஜனத்தொகையை தாறுமாறா கூட்டி விடுவாரு....

பழைய சரியா சட்டத்தின் படி இது வரையும் பூட்டு போட்டு பூட்டியிருதவை எல்லாம் இனி புதிய சரியா சட்டத்தின் படி தொடர் அப்லோடிங்க் டவுன்லோடிங்க் தான் போலை. இல்லாடி பிரச்சனையாகும். இலங்கை ஆமிகள் மாதிரியே வீட்டை வந்து இறங்க போறாங்கள் ஆயுதங்கலோடை.



7.5 கோடி 15 கோடியாக வேண்டும். :(

:)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஏற்க்கனவே பொருளாதாரத் தடையால் பொருட்களின் விலை எகிறியுள்ளது இந்த நிலையில் அதிகமாக குழந்தை குட்டியை பெற்று எப்படி வளர்க்கப் போகின்றார்கள்  :icon_idea:

 

 உங்கடை கதையை பாக்க ஏதோ மற்ற நாடுகளிலை எல்லாச்சாப்பாட்டுச்சாமானும் குப்பைமலிவு மாதிரியெல்லே கிடக்கு? :icon_mrgreen:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.