Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

இந்தியாவில் எழுதுவதற்கு தடா?

Featured Replies

இந்தியாவில் புளாக்கர்கள் எல்லாம் எழுதமுடியாது இழுத்துபூட்டப்படுகிறது என இணைய வலைப்பூக்களில் எழுதுபவர்கள் சொல்கிறார்கள், காரணம் தெரியவில்லையாம் எல்லாமே மேலிடத்து உத்தரவாம் :roll: :roll: :roll:

அதுபற்றி செய்தி வந்த வலப்பூக்கள். :wink:

http://madippakkam.blogspot.com/2006/07/blogspot.html

http://icarus1972us.blogspot.com/2006/07/b...in-chennai.html

http://gragavan.blogspot.com/2006/07/blog-...9163033283.html

http://icarus1972us.blogspot.com/2006/07/b.../blog-post.html

http://icarus1972us.wordpress.com/

http://eebarathi.blogspot.com/

நம்ம நண்பர் மடிப்பாக்கம் லக்கிலுக்குக்கும் தடை விழுந்திட்டுதாம். :cry: :cry: :cry:

ஆமாம் பிருந்தன்.... சமீபகாலமாக சில வட இந்திய வலைப்பூக்களில் தீவிரவாதம் சம்பந்தமாக நிறைய செய்திகள் பரிமாறிக் கொள்ளப் படுகிறதாம்.... அதானால் இந்தியா முழுவதும் ISPக்கள் மூலமாக இந்தத் தடை ஏற்படுத்தப்பட்டிருக்கிறது... இது தற்காலிகமானதா அல்லது நிரந்தரமானதா என்று தெரியவில்லை.... நான் என்ன செய்வது என்ற குழப்பத்தில் இருக்கிறேன்....

  • கருத்துக்கள உறவுகள்

தீவிர வாதம் பற்றி கதைக்கிதற்காக் மெத்தமா இழுத்து புூட்டுறதா??இங்கு அய்ரோப்பாவிலும்தான் தளங்களில் இஸ்லாமியதீவிர வாதம் பற்றி கதைக்கிறாங்கள் சில குழுக்கள் அதை காவல்துறை கண்காணித்து சம்பந்த பட்டவர்களை மட்டுமே கைது பண்ணுகிறது அது மட்டுமல்மல தீவிர வாதிகளை கைது செய்ய அது ஒரு சுலபமான வழியாகவும் இருக்கிறது இங்குள்ள புலனாய்வு பிரிவினருக்கு.

  • கருத்துக்கள உறவுகள்

உண்மையில் இந்திய அரசு குரல்வளையைத் தான் முடக்குகின்றதே தவிர, தீவிரவாதிகளைப் பிடிப்பதில் அதிக சிரத்தை காட்டாமல் இருப்பது வேதனை தான். என்ன தான் ஜனநாயகம் என்று சொல்லிக் கொண்டிருந்தாலும், அதைத் பிறருக்கு பாவிக்கும் போது ஏற்படும் சுகம், தன் வீட்டில் விடமுடிவதில்லை.

தாலியை ஒளித்தால் திருமணம் நடக்காது என் கதை தான்.

இது தற்காலிகத் தடை தான் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.... விரைவில் பிரச்சினை செய்யாத இணையத் தளங்களுக்கு சுதந்திரம் வழங்கப்படும் என்கிறார்கள்....

தூயவன் போன்ற ஆட்களுக்கு இந்தியாவை பற்றி ஏதாவது சொல்ல்வில்லை என்றால் தூக்கம் வராது..

இந்தியாவில் வலைபூக்கள் அத்தனையும் தடை செய்யபடவில்லை.. மாறாக சில வலை பூக்க்ளை மட்டும் தான் சொல்லி நீக்க சொல்லி இருந்தார்கள்.. ஆனால் ISPகளிடம் இந்த சரியான துணை களத்தை கண்டுபிடித்து தடுக்கும் வசதி இல்லாத காரணத்தால் முழுமையாக நீக்கி விட்டார்கள்.. மேலும் அந்த வசதி கொண்டு வரப்படும் என்று சொல்லி இருக்கிறார்கள்.

பிளாக் ஸ்பாட் தளத்தில் இருந்து வரும் துணை தளங்களும் அதே ஐபி தான் காட்டும்..அதனால் ஏற்பட்ட பிழை இது.. அரசாங்கத்துக்கும் இதற்க்கும் தொடர்பு இல்லை

தமிழ் நாடு பிரிவினைவாதம் கேட்க்கும் ஏமாற்று கூட்டத்தின் தளமான daliston.org தடை செய்ய பட்டு இருக்கிறது.. அவர்கள் இந்த தளத்தை ஐரோப்பாவில் இருந்து போலியான முகவரி கொடுத்து பதிகின்றனர்.. இவர்களை எப்படி கண்டு பிடிப்பதாம்.. இந்தியாவில் இருந்து பதிந்தால் தான் கண்டு பிடிக்கலாம்.. ஏதோ ஒரு வெளி நாட்டில் இருந்து பதிந்தால் என்ன செய்ய முடியும்?

தீவிர வாதம் பற்றி கதைக்கிதற்காக் மெத்தமா இழுத்து புூட்டுறதா??இங்கு அய்ரோப்பாவிலும்தான் தளங்களில் இஸ்லாமியதீவிர வாதம் பற்றி கதைக்கிறாங்கள் சில குழுக்கள் அதை காவல்துறை கண்காணித்து சம்பந்த பட்டவர்களை மட்டுமே கைது பண்ணுகிறது அது மட்டுமல்மல தீவிர வாதிகளை கைது செய்ய அது ஒரு சுலபமான வழியாகவும் இருக்கிறது இங்குள்ள புலனாய்வு பிரிவினருக்கு.

உண்மையை விளக்கியதற்கு நன்றி ராஜாதி ராஜா!

சென்றவார மும்பை குண்டுவெடிப்புப் பிரச்சினைக்கும் இந்த தடைக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது....

தமிழ் நாடு பிரிவினைவாதம் கேட்க்கும் ஏமாற்று கூட்டத்தின் தளமான daliston.org தடை செய்ய பட்டு இருக்கிறது.. அவர்கள் இந்த தளத்தை ஐரோப்பாவில் இருந்து போலியான முகவரி கொடுத்து பதிகின்றனர்.. இவர்களை எப்படி கண்டு பிடிப்பதாம்.. இந்தியாவில் இருந்து பதிந்தால் தான் கண்டு பிடிக்கலாம்.. ஏதோ ஒரு வெளி நாட்டில் இருந்து பதிந்தால் என்ன செய்ய முடியும்?

இதில் எனக்கு கொஞ்சமும் உடன்பாடு கிடையாது....! வசதி அற்ற பலஸ்தீனமோ இல்லை ஈழமோ இப்படிச்செய்ய வேண்டி வந்தால் ஏற்றுக்கொள்ளலாம்.... தகவல் தொழில் நுட்பத்தில் கொடி கட்டிப்பறக்கும் இந்தியாவிற்கு இந்த நிலை என்பது ஏற்புடையதான செய்தியாகவும் இல்லை...!

இந்தியா சர்வதேச பொலீசாருடன் நெருங்கைய தொடர்பு உடையவர்கள்... அவர்களால் எங்கே இருந்து எவர் எந்த செய்தியை வலையேற்றுகிறார் என்பதை கண்டுபிடிப்பது கடினமான காரியம் கிடையாது...! அதுவும் இந்தியாவுக்கு கஸ்ரமான காரியம் எண்றால் அது நம்பும் படியாக இல்லை...! சாதாரண கணனி பொறியியலாளரால் கூட இலகுவில் கண்டு பிடிக்க கூடிய விடயத்தை இந்திய அரச புலனாய்வுத்துறையால் முடியவில்லை என்பது சரியானதாக இருக்காது....!

வேறு ஏதோ காரணத்தால் அந்த வலைப்பூக்கள் செயலிளக்க செய்யப்பட்டிருக்கலாம்...! அல்லது பயங்கரவாதிகளின் அவசர தொடர்புகளை துண்டிக்க சில மணித்துளிகளுக்கு தற்காலிகமாக செயலிலக்க செய்ய சொல்லப்பட்ட வலைப்பூக்களை நிரந்தரமாக செயலிளக்க செய்து இருப்பார்கள் வலைப்பூக்களின் இணைப்பாளர்கள்....! இப்போது புலநாய்வுத்த்றையின் தலையை உறுட்டுகிறார்கள் போல உள்ளது....! எதுக்கும் நண்றாக விசாரியுங்கள்...!

இந்தியாவில் சில இணையத்தளங்களுக்கு தடை

இந்தியாவில் 50 மில்லியன் பேர் இணையங்களைப் பயன்படுத்துகின்றனர்

இந்தியாவின் மும்பாய் நகரத்தில் கடந்த வாரத்தில் நடத்தபட்ட குண்டு தாக்குதலை அடுத்து, பல்வேறு வெப்சைட் எனப்படும் இணையங்களுக்கு மக்கள் சென்று பார்ப்பதினை தடுக்க, இந்திய அரசு நடவடிக்கை எடுத்து இருப்பதினை இந்தியாவில் இருக்கின்ற இணையத்தளப் பயன்பாட்டாளர்கள் குறை கூறியுள்ளனர்.

மும்பாய் நகரத்தில் நடத்தப்பட்ட தாக்குதலுக்கு இஸ்லாமிய தீவிரவாதிகள் மீது குற்றம் சாட்டப்பட்டது.

ஒரு குறிப்பிட்ட தலைப்பு தொடர்பாக, பல்வேறு இணைய பயன்பாட்டாளர்கள், தங்களுடைய கருத்துகளை வெளியிடும் ‘வெப்லாக்ஸ்’ அல்லது ‘ப்லாக்ஸ்’ என்று கூறப்படும் இணையங்களை எதற்காக தடை செய்ய முடிவு எடுக்கப்பட்டது என்பதினை அரசாங்கம் கூறவில்லை.

ஆனால் வெறுப்பு உணர்வினை ஏற்படுத்தும் செய்திகள் பரவுவதினை தடுக்கவே அரசாங்கம் இந்த நடவடிக்கையினை எடுத்துள்ளதாக, அதிகாரிகள் தனிப்பட்ட முறையில் தெரிவித்துள்ளனர்.

அரசாங்கத்தினால் தற்போது தடுக்கப்பட்டுள்ள இணையங்களில், இந்து தேசியத்துவம் மற்றும் கம்யூனிஸத்திற்கு ஆதரவான இணையங்களும் அடங்கும்.

அரசாங்கத்தின் இந்த முடிவானது, பேச்சு சுதந்திரத்தின் மீது விடுக்கப்பட்டுள்ள தாக்குதல் என இத்தகைய இணையங்களை பயன்படுத்துபவர்கள் கூறுகின்றனர்.

நன்றி பி பி சி தமிழ்ச்சேவை

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.