Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அசாத் சாலி தொடர்பில் ரணில் நாடாளுமன்றில் கேள்வி

Featured Replies

  அசாத் சாலி தொடர்பில் ரணில் நாடாளுமன்றில் கேள்வி [Tuesday, 07/05/2013 10:31 AM]   7m310.jpg

கொழும்பு மாநகரசபையின் முன்னாள் பிரதி மேயர் அசாத் சாலி தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க நாடாளுமன்றில் கேள்வி எழுப்பியுள்ளார்.அசாத் சாலிக்கு எதிராக சாதாரண சட்டங்களின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்காது ஏன் பயங்கரவாதத் தடைச் சட்டம் பயன்படுத்தப்பட்டது.

வடக்கில் போர் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டுள்ளது. இவ்வாறான ஓர் நிலையில் பயங்கரவாதத் தடைச் சட்டத்தை ஏன் அமுல்படுத்த வேண்டும். அரசியல் எதிரிகளை அடக்குவதற்கு அரசாங்கம் இந்த சட்டத்தை பயன்படுத்துகின்றது.

அசாத் சாலி பயங்கரவாத அமைப்புக்களுடன் இணைந்து செயற்படவில்லை. முஸ்லிம் மக்களுக்கு எதிரான அடக்குமுறைகளுக்கு எதிராகவே அசாத் சாலி குரல் கொடுத்தார்.

அரசியல் எதிரிகளை அடக்குவதற்கு பயங்கரவாத் தடைச் சட்டம் பயன்படுத்தப்பட்டமை ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல என ரணில் விக்ரமசிங்க இன்று நாடாளுமன்றில் தெரிவித்துள்ளார்.

http://www.2tamil.com/readmore.php?id=w2w253y2d4

 

  • கருத்துக்கள உறவுகள்
"பேச்சைத் தண்டிக்க பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் தேவையில்லை"

 

இலங்கையில் ஒரு முஸ்லிம் தலைவரான ஆசாத் சாலியின் கைது இன்று நாடாளுமன்றத்திலும் எதிரொலித்தது. எதிர்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க இவ்விவகாரம் தொடர்பில் கேள்வி எழுப்பினார்

துவேஷத்தைத் தூண்டும் வகையிலான பேச்சுகளை தண்டிப்பதற்கு குற்றவியல் சட்டங்களிலேயே இடம் இருக்கிறது என்றும் பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் பாய வேண்டிய அவசியம் இல்லை என்றும் ரணில் கூறினார்.

 

நாட்டில் துவேஷத்தை தூண்டும் வகையான பேச்சுக்களை பலதரப்பினரும் பேசுகிறார்கள் என்பதை அனைவரும் அறிவர் என்று அவர் குறிப்பிட்டார்.

"பேச்சுரிமைகளை மீறி யாராவது செயல்பட்டால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க பொதுவான சிவில் மற்றும் குற்றவியல் சட்டங்களில் வழிமுறை உள்ளது. அந்தச் சட்டங்களின் அடிப்படையிலேயே தவறிழைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியும்."

நாட்டு மக்களின் இறையாண்மைய காப்பாற்ற ஆயுதங்களை கையிலெடுப்போம் என்றால் அது ஒரு குற்றமா என்று அவர் கேள்வி எழுப்பினார்.

"சுதந்திரத்தை பேண ஆயுதங்களை கையில் எடுக்கலாம் என்று ஒரு தரப்பில் கருத்து நிலவுகிறது. அப்படியென்றால் சுதந்திரம் எனும் சித்தாந்தத்தின் அடிப்படையில் ஆயுதம் ஏந்துபவர்களையும் தீவிரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையிலிட வேண்டும்." என்று பிரதான எதிர்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரான ரணில் விக்ரமசிங்க கூறினார்.

ஆனால் அவரது பேச்சுகள் இனமோதல்களுக்கு வழிவகுக்கும் என்பதாலும், தற்போது நாட்டில் நிலவும் அமைதிக்கு குந்தகம் ஏற்படுத்தும் வகையில் இருந்ததாலேயே ஆசாத் சாலி கைதுசெய்ப்பட்டுள்ளதாக ரணில் விக்ரமசிங்க அவர்களின் குற்றச்சாட்டுக்கு பதிலளிக்கும் போது பிரதமர் ஜெயரட்ண நாடாளுமன்றத்தில் பதிலளித்தார்.

ஜூனியர் விகடன் பத்திரிகைக்கு ஆசாத்சாலி அளித்த பேட்டியையும் பிரதமர் சுட்டிக்காட்டினார்.

http://www.bbc.co.uk/tamil/sri_lanka/2013/05/130507_ranilonassadsali.shtml

  • கருத்துக்கள உறவுகள்

அசாத் சாலி மீது ஜூனியர் விகடன் சஞ்சிகைக்கு கொடுத்த பேட்டி தொடர்பாக குற்றச்சாட்டு?

MAY 6, 2013 by EEZHAN in இலங்கை with 0 COMMENTS

Asath_Sali.jpgபயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டுள்ள அசாத் சாலி உண்ணாநோன்பைக் கைவிட்டுவிட்டதாக அரசாங்கம் கூறுவதை அவரது குடும்பத்தினர் மறுத்துள்ளனர்.

 

தமிழ் முஸ்லிம் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் கொழும்பு மாநகரசபையின் முன்னாள் துணை மேயருமான அசாத் சாலி, கடந்த வியாழக்கிழமை கைதுசெய்யப்பட்டது முதல் உண்ணாநோன்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தார்.

 

மருத்துவமனையில் உள்ள அவர், நேற்று மாலைமுதல் உண்ணாநோன்பைக் கைவிட்டுவிட்டதாக இலங்கை பாதுகாப்பு விவகாரங்களுக்காக பேசவல்ல அதிகாரி லக்ஷ்மன் ஹுலுகல்ல இன்று திங்கட்கிழமை ஊடகங்களுக்குத் தெரிவித்திருந்தார்.

 

ஆனால், அசாத் சாலியின் உடல்நிலை இன்றும் மோசமடைந்துள்ளதாகவும் அவர் இன்னும் உண்ணாநோன்பைக் கைவிடவில்லை என்றும் அவரது மகள் அமீனா சாலி தெரிவித்தார்.

 

ஜூனியர் விகடன் பேட்டியின் திருத்தச் செய்தியையும் அசாத் சாலி அனுப்பியிருந்தார்

 

இதேவேளை, அசாத் சாலிக்கு எதிராக 18 குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளதாக லக்ஷ்மன் ஹுலுகல்ல கூறினார்.

 

தமிழகத்தில் சென்னையில் வைத்து ஜூனியர் விகடன் சஞ்சிகைக்கு கொடுத்த பேட்டி மூலம், அசாத் சாலி ‘இன்னொரு நாட்டில் வைத்து இலங்கைக்கு எதிராக கருத்துவெளியிட்டுள்ளதாகவும்’ அதனால் இலங்கையிலுள்ள முஸ்லிம் மக்களுக்கும் அவர் அவதூறு விளைவித்துள்ளதாகவும் தேசிய பாதுகாப்பு தொடர்பான ஊடகமத்திய நிலையத்தின் இயக்குநர் லக்ஷ்மன் ஹுலுகல்ல தெரிவித்தார்.

 

அதேவேளை, அசாத் சாலிக்கு எதிரான 18 குற்றச்சாட்டுக்களில் நிதி மோசடி பற்றிய குற்றச்சாட்டு தொடர்பிலும் சிஐடி குற்றத்தடுப்பு புலன்விசாரணையாளர்கள் விசாரித்துவருவதாக ஹுலுகல்ல கூறினார்.

 

இதேவேளை, இலங்கையில் பொது பல சேனா என்ற கடும்போக்கு பௌத்தவாத அமைப்பின் அண்மைக்கால நடவடிக்கைகள் தொடர்பில், அரசாங்கம் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்று ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பியபோது, அந்த அமைப்பினர் அரசாங்கம் நடவடிக்கை எடுக்குமளவுக்கு எதனையும் செய்யவில்லை என்று லக்ஷ்மன் ஹுலுகல்ல பதிலளித்துள்ளார்.

 

இதேவேளை, ஜூனியர் விகடன் இதழுக்கு அசாத் சாலி அளித்த பேட்டியில், பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்குமளவுக்கு எதுவும் கூறப்படவில்லை என்று அசாத் சாலியின் விடுதலைக்காக அமைக்கப்பட்டுள்ள அமைப்பின் தலைவர்களில் ஒருவரான நாடாளுமன்ற உறுப்பினரும் மூத்த சட்டத்தரணியுமான எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்திருந்தார்.

 

அதேநேரம், அசாத் சாலி தனது பேட்டி தவறுதலாக அர்த்தப்படுத்தப்பட்டுள்ளதாக அனுப்பியுள்ள திருத்தச் செய்திக்குறிப்பும் ஜூனியர் விகடன் சஞ்சிகை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

இதற்கிடையே, அசாத் சாலி அவரது சட்டத்தரணிகளை சந்திப்பதற்கு அனுமதியளிக்கப்பட வேண்டும் என்று இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் மிச்செல் ஜே. சிஸன் சமூக வலைத்தளமான டிவிட்டர் கேள்வி பதிலில் கூறியுள்ளார்.

http://www.myoor.com/assah-alis-junior-vikatan-interview/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=assah-alis-junior-vikatan-interview

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.