Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

"கணவரை வெளியே அனுப்பிவிட்டு உள்ளே நுளையும் புலனாய்வு "

Featured Replies

182907_306069786191829_1327600741_n.jpg

 

"கணவரை வெளியே அனுப்பிவிட்டு உள்ளே நுளையும் புலனாய்வு "
==============
படைப் புலனாய்வுப் பிரிவினர் கணவர்களை விசாரணைக்கு என அழைத்துச் சென்றுவிட்டு, பின்னர் வீட்டிற்க்கு வந்து பாலியல் ரீதியில் துன்புறுத்துகிறார்கள் என்று முன் நாள் பெண் போராளிகள் தெரிவித்துள்ளார்கள்

திருகோணமலை மாவட்டத்தில் கணவர்களை விசாரணைக்க என அழைத்துச் சென்றுவிட்டு, தனிமையில் இருக்கும் பெண் போராளிகளிடம் விசாரணை எனத் தெரிவித்து படைப்புலனாய்வுப் பிரிவினர் அடிக்கடி வீட்டுக்கு வந்து பாலியல் ரீதியிலான நடவடிக்கைக்கு முற்படுவதாக பாதிக்கப்பட்ட பெண் போராளிகள் தெரிவிக்கின்றனர். இதனால் தங்களின் பாதுகாப்பு கேள்விக் குறியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கட்டபறிச்சான் படை முகாமிலிருந்து படைப் புலனாய்வாளர்கள் என தங்களை அடையாளப்படுத்தி வந்தவர்கள், கடந்த 01.02.2013 சுதந்திர தினம் நடைபெறுவதற்கு முன்னர் இரு நாளைக்கு முன்னர் நான்கு போராளிகளின் வீட்டுக்கு சென்றவர்கள் தங்கள் கணவர்களை விசாரணை செய்தார்கள். பின்னர், சுதந்திர தினத்திற்கு அடுத்தநாள் வந்து 16 பேரை விசாரணை என்ற போர்வையில் அழைத்துச் செல்லப்பட்டவர்கள் இதுவரையில் எங்குள்ளார்கள் என்பது தெரியவரவில்லை என பெண் போராளிகள் தெரிவிக்கின்றனர்.

இது தொடர்பாக திருமலையில் பொலிஸ், மனித உரிமை ஆணைக்குழு மற்றும் ஐ.சி.ஆர்.சி ஆகியோரிடம் முறைப்பாடு செய்யப்பட்டும் இதுவரையில் எங்குள்ளார்கள் என்பது தெரியவரவில்லை. கணவர்களை கைது செய்து அழைத்துச் சென்ற பின்னரும், விசாரணை என்ற போர்வையில் புலனாய்வுப் பிரிவினர் அடிக்கடி வீட்டுக்கு வருவதாகவும் இதனால் பெரும் அச்சத்தில் உள்ளதாக அவர்கள் தெரிவிக்கின்றனர். இவர்களின், புண்ணியமூர்த்தி சுரேஸ் குமார் 29 அகவை தங்கநகர், சேனைஊரைச் சேர்ந்த நமசிவாயம் செந்தூரன் அகவை 28, நடராசா சண்முகலிங்கம் அகவை 35, பட்டித்திடலைச் சேர்ந்த கோணலிங்கம் சந்திரமோகன் அகவை 34, தர்மதாஸ் தவச்செல்வன் அகவை 36, தர்மலிங்கம் ஜெயக்காந்தன் அகவை 30, கணேசபுரத்தைச் சேர்ந்த யோகராசா உதயகுமார் அகவை 32 , வடிவேல் ராமு அகவை 34 கிளிவெட்டிமுகாம், இராசநாயகம், கணேஸ் ராமச்சந்திரன் அகவை 28 அம்மன்நகர், சுப்பிரமணியம் மகேந்திரன் அகவை 43 கிளிவெட்டி, வைரமுத்து வசந்தன் அகவை 34 ஆதியம்மன்கேணி, ஏனயை நான்கு பேரின் பெயர் விபரங்கள் தெரியவரவில்லை.

எனினும், மூன்று மாதங்களின பின்னர் இவர்கள் பூசா தடுப்பு முகாமில் உள்ளதாக தெரியவந்துள்ளது. எனினும், பெரும்பாலானோருக்குத் தங்கள் கணவர்கள் எங்குள்ளார்கள் என்று தெரியவில்லை. இவர்கள் அனைவரும், ஒரு வருடம் தொடக்கம் மூன்று வருடங்கள் வரை புனர்வாழ்வுத் தடுப்பு முகாங்களில் புனர்வாழ்வு அளிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டவர்கள். இதேவேளை, தங்களுக்கு புனர்வாழ்வு வழங்கப்பட்டு, சமூகத்துடன் இணைத்துள்ள போதிலும், விசாரணை என்ற போர்வையில் படைப் புலனாய்வுப் பிரிவினர் அடிக்கடி வீடுகளுக்கு வருகை தந்து பாலியல் ரீதியான தொந்தரவுகளை செய்வதாக முன்னாள் விடுதலைப் புலிகளின் பெண் போராளிகள் தெரிவிக்கின்றனர்.
இவர்களின் ஒருவர், திருகோணமலை மாவட்டத்தில் மூதூர் குமாரபுரத்தைச் சேர்ந்த கந்தபொடி, இவரின் மகள் 13 வயதில் விடுதலைப் புலிகளின் அமைப்பில் இணைந்து 2009 ஆம் ஆண்டில் படையினரிடம் சரணடைந்து புனர்வாழ்வு வழங்கப்பட்டு கடந்த (2011) விடுதலையாகிய இயல்பு வாழ்க்கையில் ஈடுபட்டுக் கொண்டுவரும் நிலையில் தற்போதும், விசாரணை என்ற போர்வையில் படைப் புலனாய்வுப் பிரிவினர்கள் வீட்டுக்கு வந்து சொந்தரவுகளை கொடுப்பதாக தெரிவிக்கின்றார்கள்.

இவரின் தாயார் கடந்த 1996 ஆண்டு படையினரால் வீட்டுக்குள் வைத்து சுட்டுக் கொல்லப்பட்டார், தந்தையையும் இழந்த அப்பெண் போராளி, விடுதலையாகிய பின்னர், ஊர்மக்களின் துணையுடன் ஒரு சிறிய கொட்டகையை அமைத்து தணிமையில் வாழ்ந்துவரும் இவரிடம் விசாரணை என்று கூறிக் கொண்டுவரும் படையின் புலனாய்வுப் பிரிவினர்கள் பாலியல் ரீதியான நடவடிக்கையில் ஈடுபட முற்படுவதாக தெரிவித்துள்ளார்.

 

http://vannimedia.com/site/news_detail/14963

 

 

  • கருத்துக்கள உறவுகள்

இவர்கள்  நாட்டை விட்டு வெளியேறுவதில் தவறில்லை தானே.

 

இவர்கள்  நாட்டை விட்டு வெளியேறுவதில் தவறில்லை தானே.

 

நுணாவிலன் அண்ணா!

உண்மையில் இப்படியானவர்கள் நாட்டை விட்டு  தப்பியோடும் விருப்பம் இல்லாதவர்கள். முடிந்தவரை தாய் மண்ணில்  இருந்து சுதந்திரக் காற்றை சுவாசிக்கும் நாளை எதிர்பார்த்துக் காத்துள்ளவர்கள்.

இன அழிப்பை செய்துவரும் சிங்கள போர்குற்ற அரசினரும் இவர்கள் வெளியேறுவதை விரும்புவார்கள்!

ஆனால் இதுபோன்றதொரு செய்திக்காக பலர் காத்துள்ளனர்! இவ்வாறான செய்திகளை வைத்து தற்போது நாட்டைவிட்டு தப்பியோடும் 99% ஆனவர்கள்  இனத்தை, தாய் மண்ணை மறந்து பொருளாதார நலனுக்காக தப்பியோடும் கோழைகளாகவே உள்ளனர்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.