Jump to content

அசத்தப் போகும், NFC !


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

அசத்தப் போகும், NFC !

nfc2.jpg?w=300&h=253

பழைய கால “சூப்பர் ஸ்டார்” படங்களில் ஒரு காட்சி வரும். ஹீரோ ஸ்டைலாக கையைத் தூக்கி கதவை நோக்கி நீட்டுவார். கதவு திறந்து கொள்ளும். ஞாபகம் இருக்கிறதா ? கைத்தட்டல்களால் திரையே கிழிந்த காலம் அது ! இப்போது அப்படி ஒரு காட்சி வந்தால் நாம் கொட்டாவி தான் விடுவோம். காரணம், நமது அலுவலகங்களிலேயே தானே திறக்கும் கதவுகள் தான் இருக்கின்றன ! சென்சார்கள் கதவைத் திறந்து விடும் செக்யூரிடி வேலையை செவ்வனே செய்து விடுகின்றன !

அதே போல தான் அமானுஷ்ய படங்களில் சட்டென டிவி ஓடுவதும். டேப் ரிக்கார்டர் பாடுவதும் என வெலவெலக்க வைக்கும் டெக்னிக் அதரப் பழசு. யாரும் தொடாமலேயே டிவி ஓடுமா என திகிலடையும் மனசு இப்போ இல்லை. கையடக்க ஒரு குட்டி ரிமோட் கண்ட்ரோல் எல்லா வேலையையும் செய்கிறது இல்லையா ?

“இப்படி தொடாமலேயே இயங்கும்” தொழில் நுட்பம் ஒரு இனிய ஆச்சரியம். தொழில் நுட்ப வளர்ச்சியின் ஒரு முக்கியமான மைல் கல் என்று இதைச் சொல்லலாம். அது தான் “அட” என வியக்க வைக்கும் பல விஷயங்களைச் சாத்தியமாக்கித் தந்திருக்கிறது. செல்போன் முதல் வை-ஃபை(WiFi) எனப்படும் வயர்லெஸ் இணையம் வரை தொடாமல் தொடும் விஷயங்களே ஆக்கிரமித்திருக்கின்றன.

அதிலும் “வயர்லெஸ் இணையம்” சாத்தியமானதால் இன்றைக்கு தொழில் நுட்பம் சட்டென பல படிகள் பாய்ந்து முன்னேறிவிட்டது என்று கூட சொல்லலாம். மொபைல்கள், டேப்லெட்கள், ரீடர்கள் என எல்லா கருவிகளிலும் இப்போது வை ராஜா வை என “வை ஃபை” ஆட்சி தானே !

எப்போதும் அடுத்த கட்டத்தை நோக்கி புலிப் பாய்ச்சலாய் ஓடும் தொழில் நுட்பம் இணையம் வந்தபின் ராக்கெட் பாய்ச்சலாய் மாறியிருக்கிறது. அதன் தற்போதைய வசீகரிக்கும் அம்சம் தான் “நியர் ஃபீல்ட் கம்யூனிகேஷன்” (Near Field Communication – NFC ). அழகிய தமிழில் இதை அருகாமைத் தகவல் தொடர்பு என்று சொல்லலாம். பெயரைப் பார்த்தாலே புரிந்திருக்கும் இதன் பயன் என்ன என்பது !

nfc6.jpg?w=300&h=224

சுருக்கமாகச் சொல்ல வேண்டுமென்றால், இரண்டு ஸ்மார்ட்போன்களை செல்லமாய் ஒன்றோடொன்று தொட்டுக் கொள்வதன் மூலம் தகவலைப் பரிமாறுவது தான் இந்த நியர் ஃபீல்ட் கம்யூனிகேஷனின் அடிப்படை. சுருக்கமாக என்.எஃப்.சி. தொட்டும் தொடாமலும் உங்க பேண்ட் பாக்கெட்டில் இருக்கும் பர்ஸை அபேஸ் செய்வார்கள் இல்லையா ? அதே போல தான் இங்கும் தகவல் பரிமாற்றம் இருக்கும் ! இரண்டு கருவிகள் ஒன்றோடொன்று தொடவேண்டும், அல்லது ரொம்ப ரொம்ப அருகில் உரசுவது போல வரவேண்டும். அப்போது தான் இங்கே தகவல் தொடர்பு சாத்தியம் !

மிக எளிமையான வழி. வயர்லெஸ், புளூடூத் போல இரண்டு கருவிகளுக்கு இடையே இணைப்பை ஏற்படுத்துவது, அது இது என எக்ஸ்ட்ரா டென்ஷன் ஏதும் இல்லை. ஜஸ்ட் லைக் தேட் தொட்டால் தகவல் பரவும் !

ரேடியோ அலைவரிசைத் தகவல் பரிமாற்றம் தான் இதன் உள்ளே ஒளிந்திருக்கின்ற தொழில் நுட்ப சீக்ரெட் ! ரேடியோ பிரீக்வன்ஸி ஐடன்டிபிகேஷன் ( Radio Frequency Identification ) ஸ்டான்டர்ட் இந்த தகவல் பரிமாற்றத்தின் அடிப்படை. ISO/IEC 14443 , FeliCa போன்றவையெல்லாம் இந்த ஸ்டான்டர்களில் சில.

என்.எஃப்.சி  தொழில் நுட்பம் சாதாரணமான கிரடிட் கார்ட், எலக்ட்ரானிக் காசோலை, மொபைல் பண பரிவர்த்தனை போன்ற அனைத்து விஷயங்களையும் அடுத்த தளத்துக்கு எடுத்துச் செல்லும். கூகிள் வேலட் (google wallet ) கேள்விப்பட்டிருக்கிறீர்களா ? அது இந்த நுட்பத்தின் படி தான் இயங்குகிறது.

உதாரணமாக, கடையில் பொருள் வாங்கிவிட்டு என்ன செய்வீர்கள் ? கிரெடிட் கார்டைக் கொடுப்பீர்கள் ! அவர்கள் அந்தக் கார்டை மெஷினில் தேய்த்து, உங்கள் கையெழுத்து உட்பட இன்ன பிற சங்கதிகளை வாங்கி விட்டு அனுப்புவார்கள். யாராச்சும் உங்களுடைய கார்டை லவட்டிக் கொண்டு போய் பொருள் வாங்கினாலும், சந்தோசமாக வழியனுப்பி வைப்பார்கள்.

என்.எஃப்.சி  அதை பாதுகாப்பாகவும், வசதியாகவும் மாற்றுகிறது. உங்களுடைய கார்ட் தகவல்கள் எல்லாமே உங்கள் மொபைலில் பாதுகாப்பாக இருக்கும். பொருள் வாங்கிவிட்டு போனை அந்தக் கருவியில் உரசினால் போதும். எவ்வளவு பணம் செலுத்த வேண்டுமோ செலுத்தலாம். ஒரு “பாஸ்வேர்ட்” வைத்துக் கொள்ளலாம். அவ்ளோ தான் ! இது ஒரு சின்ன உதாரணம்

nfc4.png?w=300&h=178

என்.எஃப்.சி  பயன்பாடு எதிர்காலத்தில் மிரட்டக் கூடிய அளவில் இருக்கும் என்பது சர்வ நிச்சயம். உங்கள் வீட்டுக் கதவைத் திறக்க வேண்டுமானால் மொபைலினால் தொட்டால் போதும். சாவி இல்லாமலேயே பூட்டு திறந்து கொள்ளும். போனும் போனும் உரசிக் கொண்டால் அப்படியே விசிடிங் கார்டைப் பரிமாறிக் கொள்ளலாம். அப்படியே போட்டோக்களை பரிமாறிக் கொள்ளலாம். விமான டிக்கெட் போனில் இருந்தால் போதும் என இதன் பயன்கள் எக்கச் சக்கம்.

இதன் பயன்பாடு நவீன சமூக வலைத்தளங்கள் மற்றும் விளையாட்டு மென்பொருட்களில் சூடு பிடிக்க ஆரம்பித்திருக்கிறது.

எதிர்காலத்தில் வர்த்தகத்தில் என்.எஃப்.சி கொடி நாட்டும் என வர்த்தக ஜாம்பவான்கள் கற்பூரம் கொளுத்தி சத்தியம் செய்கிறார்கள். அதற்கு உதவுபவை இரண்டு விஷயங்கள். ஒன்று ஸ்மார்ட் போன், இன்னொன்று என்.எஃப்.சி டேக் (NFC Tag). என்.எஃப்.சி டேக் என்பதை பொருட்களில் இருக்கின்ற “பார் கோட்” போல நீங்கள் நினைத்துக் கொள்ளலாம்.  பல்பொருள் அங்காடிகளில் பொருள் வாங்கும் போது ஸ்கேன் செய்து பில் போட்டுத் தருவார்கள் இல்லையா ? அதோடு நீங்கள் ஒப்பிட்டுக்கொள்ளலாம்.

உதாரணமாக, காலையில் வீட்டுப் பேப்பரில் ஒரு ஸ்பெஷல் விளம்பரம் இந்த என்.எப்.சி டேக் சகிதம் வருகிறது என வைத்துக் கொள்ளுங்கள். உங்கள் போனை அதன் மேல் தொட்டால் உங்களுக்கு அது இன்னும் பல விஷயங்களை போனில் தரும். “சிங்கப்பூர் செல்ல இன்றைக்கு ஸ்பெஷல் ஆஃபர். உடனே டிக்கெட்டை வாங்குங்கள்” என ஒரு விளம்பரம் வருகிறது என வைத்துக் கொள்ளுங்கள். என்ன செய்வீர்கள். அந்த எண்ணுக்கு போன் பண்ணி விஷயத்தைக் கேட்பீர்கள். பிறகு அந்த அலுவலகத்துக்கோ, அல்லது ஆன்லைனிலோ உங்களுடைய டிக்கெட்களை புக் செய்வீர்கள். இது தானே வழக்கம்?

என்.எப்.சி டேக் விளம்பரமெனில் இதில் எதுவும் தேவையில்லை. உங்கள் போன் அந்த இணைப்பை வாசிக்கும். அப்படியே விவரங்கள் போனில் வரும். அங்கிருந்து உடனடியாக பணம் செலுத்தி டிக்கெட்டை வாங்கிக் கொள்ளலாம். ஒரு காபி குடிக்கும் நேரத்தில் எல்லாம் சுபம் ! அடுத்த லண்டன் ஒலிம்பிக் டிக்கெட்களை என்.எஃப்.சி  நுட்பத்தில் எளிதில் பெற்றுக் கொள்ளும் வசதியை இப்போதே சேம்சங் போன்ற செல்போன் நிறுவனங்கள் போட்டி போட்டு உருவாக்கி வருகின்றன.

கடை வீதிக்குப் போகிறீர்கள். போகும் வழியில் தெருக்களிலோ, கடை வாசலிலோ ஒட்டப்பட்டிருக்கும் என்.எப்.சி டேக் பக்கத்தில் உங்கள் போனைக் கொண்டு போய் “ஒரு கிலோ கத்தரிக்காய், நாலு கிலோ வெங்காயம்” என ஆர்டர் செய்து விட்டு வீட்டுக்கு அனுப்பச் சொல்லலாம். நீங்கள் வீடு வந்து சேரும் போது பொருட்களும் வந்து சேரும்.

ஜப்பான் போன்ற நாடுகளில் சில கடைகள் இதற்காகவே இருக்கின்றன. கடைகளில் பொருட்களே இருக்காது. போனால் படங்களும், அதன் விலையும், என்.எஃப்.சி விளம்பரமும் மட்டுமே இருக்கும். உங்களுக்கு எதெல்லாம் வேண்டுமோ அதையெல்லாம் தொட்டுக் கொள்ளுங்கள், பணத்தை போனிலேயே செலுத்துங்கள், வீட்டு அட்ரசைக் கொடுங்கள் வீட்டுக்கு பொருள் வந்து சேரும். வெண்டக்காயை ஒடிச்சுப் பாத்து தான் வாங்குவேன் என அடம்பிடிக்காதவர்களுக்கு இது ஒரு அற்புதமான ஷாப்பிங் ஐடியா !

பிரான்ஸிலுள்ள டோலோஸ் விமான நிலையத்தில் என்.எஃப்.சி மூலம் செக்-இன் செய்யலாம் எனும் வசதியை உருவாக்கியிருக்கிறார்கள். உங்களுடைய போர்டிங் பாஸ் எல்லாம் போனில் இருக்கும். கையை ஆட்டிக் கொண்டே விமானத்தில் ஏறுவது போல, போனை ஆட்டிக் கொண்டே உள்நுழைய அனுமதி பெறலாம் ! உலகிலேயே இந்த வசதி இந்த விமான நிலையத்தில் தான் முதன் முதலாக உருவாக்கப்பட்டிருக்கிறது என்பது ஸ்பெஷல் நியூஸ் !

2004ம் ஆண்டு மூன்று வர்த்தக ஜாம்பவான்கள் சோனி, நோக்கியா மற்றும் பிலிப்ஸ் இணைந்து இதற்கான வரைமுறையையும் விதிகளையும் நிர்ணயித்தார்கள். இன்று வரை அவையே என்.எஃப்.சியின் அடிப்படை விதிகளாக இருக்கின்றன ! இதெல்லாம் பழைய கால வரைமுறை. இதெல்லாம் மாற்றியாகவேண்டும் என்பதையும் நான் சொல்லியாக வேண்டும் !

அறிவியல் படித்திருக்கிறீர்களா ? “இன்டக்டிவ் கப்ளிங்” (Inductive coupling) பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா ? எலக்ட்ரான்கள் ஒரு ஊடகம் வழியாகப் பாயும் போது ஒரு மின் காந்த தளத்தை உருவாக்கும். மின்காந்த தளம் மாறும் போது எலக்ட்ரான்கள் அதன் வழியாகப் பயணிக்கும். இந்த இரட்டை இயக்கம் தான் இன்டக்டிவ் கப்ளிங் எனப்படுகிறது. என்.எஃப்.சி தொழில்நுட்பத்தின் அடிப்படையும் இது தான். அதனால் தான் இந்த தொழில் நுட்பம் வேலை செய்ய வேண்டுமானால் கருவிகள் தொட்டுக்கொள்ளவேண்டும், அல்லது 4 சென்டீமீட்டர்களுக்குள் வரவேண்டும் எனும் விதி இருக்கிறது ! பத்து இருபது சென்டீமீட்டர்  வரை செயல்படும் என சிலர் வாதிடுவதுண்டு. எனினும் 4 சென்டீமீட்டர் என்பதே உத்தரவாத எல்லை !

nfc5.jpg?w=300&h=250

ரேடியோ பிரீக்வென்சி ஐடென்டிபிகேஷன் (Radio frequency identification (RFID) ) பற்றிச் சொன்னேன் இல்லையா ? அதில் இரண்டு வகைகள் உண்டு. ஒன்று பேசிவ் ஆர்.எஃப்.ஐ.டி, இன்னொன்று ஆக்டிவ் ஆர்.எஃப்.ஐ.டி. இரண்டாவது வகை பேட்டரியால்  சார்ஜ் செய்யப்பட்டிருக்கும் என்பதே அதி முக்கியமான வித்தியாசம். இதனால் இந்த தொடுபிணைப்பு தூரம் கொஞ்சம் அதிகரிக்கப்படும் என்பது ஒரு ஸ்பெஷல் பயன். போகும் வழியில் பஸ்ஸில் இருந்தபடியே போஸ்டரில் இருக்கும் “இணைப்பை வாசித்து” பொருளை வாங்கும் நிலை ஒருவேளை வரலாம் !

தொழில் நுட்ப அடிப்படையில் இது 13.56 மெகா ஹெட்ஸ் அலைவரிசையில் இயங்கும். வினாடிக்கு 106 முதல் 424 கிலோபைட் அளவிலான தகவல்களை பரிமாற்றும். இது என்.எஃப்.சி சார்ந்த வர்த்தகத்துக்கு போதுமான அளவு என்பது குறிப்பிடத்தக்கது. இதை பயன்பாட்டு அடிப்படையில் மூன்று பிரிவுகளாகப் பிரிக்கிறார்கள். ஒன்று ரீட் அன்ட் ரைட் ( read and write ) விளம்பரங்களில் உள்ள இணைப்பை வாசிக்க இது பெருமளவில் பயன்படும். இரண்டாவது பியர் – டு – பியர் (peer to peer). இரண்டு செல்போன்களுக்கு இடையே தகவல் பரிமாற்றம் நடத்தும் விஷயம் இது. போட்டோக்கள், பாடல்கள், விசிடிங்கார்ட் போன்றவற்றை பரிமாறிக் கொள்வது போல!. மூன்றாவது கார்ட் எமுலேஷன் மோட் ( card emulation mode ) இது கிரெடிட் கார்ட் பயன்பாடு, டிக்கெட் வாங்குவது போன்ற விஷயங்களுக்குப் பயன்படுவது !

எதிர்காலத்தில் என்.எஃப்.சி நிச்சயம் ஒரு முக்கிய இடத்தைப் பிடிக்கும் எனும் நம்பிக்கை உங்களுக்கு வந்திருக்கும் என நினைக்கிறேன் ! இப்போதெல்லாம் வெளிநாட்டுச் சமாச்சாரங்கள் இந்தியாவிலும் உடனுக்குடன் இறக்குமதியாகின்றன. யார் கண்டது ? நாளை டவுன் பஸ்ஸில் டிக்கெட் எடுக்க நம்முடைய போன் பயன்படலாம் !

நன்றி : தினத்தந்தி, கம்ப்யூட்டர் ஜாலம், (மவுஸ் பையன்)

 

 

http://sirippu.wordpress.com/2012/05/31/nfc/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அழகு தமிழில், நல்ல சுவாரசியமான தொழில் நுட்பத் தகவல்கள்.

 

நான் தற்பொழுது பயன்படுத்திவரும் சாம்சங் காலெக்ஸி S3-யிலும் NFC வசதி உள்ளது. ஆனால் வியாபார சந்தையில் பயன்படுத்தும் அளவிற்கு இங்கே பயன்பாடுகள் இன்னும் வரவில்லை.

 

பகிர்வுக்கு நன்றி, கிருபன்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி இனைப்பிற்க்கு 

இந்த கானொளியில் அவர்களும் தயாராகிவிட்டார்கள் வெற்றி பெறுமா என்பது சந்தேகமே  :)

 

Link to comment
Share on other sites

இந்த NFC codes QR codes என்றும் அழைக்கிறார்கள் போலிருக்கு. இன்று பொருள்களை வாங்கும் போது இந்த codes யும் அதில் அச்சிடுகிறார்கள். இது வெறுமனே UPC சுட்டுஇலக்கம் அல்லாமல் பொருள் சம்பந்தமான பல விபரங்களை அதில் அடக்கியிருக்கிறது. இனிமேலைய காலங்களில் கண் தெரியாதவர் சுப்ப மாக்கெட்டில் பொருள்களின் அலர்ஜி விபரங்களை தெரிய வேண்டுமானால் அவர் பொருள் இருக்கும் இடத்துக்கு சென்று தனது செல் போனை அங்கு இங்கு அசைப்பத்தால் பெற்றுக்கொண்டுவிடுவார். பிரான்சுக்கு போனவர் ஒருவர் அங்கே ஒரு அழகிய சம்பெயின் பொத்தலை கண்டால் "இதென்னடாப்பா இந்த பாழா போன பிரெஞ்சுக்கரன் ஆங்கிலத்தில் விபரம் போட மாட்டேங்கிறானே" என்று வயிற்றில் அடித்துக்கொள்ள வேண்டியத்தில்லை. NFC அல்லது QR codes யை வாசிக்கும் போது செல் போன் அதை ஆங்கிலத்திற்கும் மாற்றிவிடும்.

 

அதை வாசிக்க Google play யிலிருந்து மென்பொருள்களை இலவசமாக தரவிறக்கம் செய்து கொள்ளலாம். 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இன்றைய உலகில், மதத்தை வைத்து பிழைப்பவர்களும் அதை விற்று பிழைப்பவர்களுமுண்டு. மதத்தின் புனிதம், மனித நேயம் எல்லாம் மரணித்து வெகுகாலமாகிவிட்டது. இந்து தமிழர் கட்சி தலைவர், ராம ரவிக்குமார் கிறிஸ்தவர்களை சாடியிருக்கிறார். ஒன்று இவர்களின் லாப நோக்கு அல்லது நிர்வாக திறன் இன்மையே காரணம் என்பதை ஒத்துக்கொள்ள தயாரில்லை. அங்கே முழங்கினால் இங்கே சச்சியர் வீட்டில் அடை மழைபெய்யும். கிறிஸ்தவர்களை வாங்கு வாங்கென்று வாங்குவார். ஆனால் தமிழக அரசு, இது ஒரு ஊர்ஜிதமற்ற குற்றச்சாட்டு என்றும் இவர்கள் கூறும் நிலையத்தில் கோவில் பிரசாதம் (லட்டு) செய்ய பொருட்கள் கொள்வனவு செய்வதில்லையென்றும் ஆதாரத்துடன் வெளியிட்டிருக்கிறது. 
    • அம்பாறையில் தேர்தல் நிலவரம்! அம்பாறை  மாவட்டத்தின்  திகாமடுல்ல  தேர்தல் தொகுதியில்  30 வீதம் வாக்குப்பதிவுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபரும் தெரிவத்தாட்சி அலுவலருமான சிந்தக அபேவிக்ரம தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது” அம்பாறை மாவட்டத்தில் 5,55,432 பேர் வாக்களிக்க தகுதி பெற்றிருந்தனர். சம்மாந்துறை, பொத்துவில், அம்பாறை, கல்முனை ஆகிய தேர்தல் தொகுதிகளில் வாக்காளர்கள் வாக்களிப்பதற்கான 528 வாக்களிப்பு நிலையங்கள் ஏற்படுத்தப்பட்டிருந்தன. அம்பாறை மாவட்டத்தின் திகாமடுல்ல தேர்தல் தொகுதியில் 4 ஆசனங்களுக்காக 39 வேட்பாளர்கள் அரசியல் கட்சிகளாகவும் பல சுயேட்சைகளாகவும் களமிறங்கி உள்ளனர். இத்தேர்தலில் கல்முனை தேர்தல் தொகுதியில் 82,830 பேரும் சம்மாந்துறை தேர்தல் தொகுதியில் 99727 பேரும் பொத்துவில் தேர்தல் தொகுதியில் 1,84,653 பேரும் அம்பாறை தேர்தல் தொகுதியில் 188222 பேரும் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். அம்பாறை மாவட்டத்தில் 184 அம்பாறை வாக்களிப்பு நிலையங்கள், 93 சம்மாந்துறை வாக்களிப்பு நிலையங்கள், 74 கல்முனை வாக்களிப்பு நிலையங்கள் மற்றும் 177 பொத்துவில் வாக்களிப்பு நிலையங்கள் உட்பட 528 வாக்களிப்பு நிலையங்கள் நிறுவப்படவுள்ளன. அத்துடன் சுதந்திரமானதாகவும் நடுநிலையாகவும் தேர்தலை நடத்துவதற்கான சகல நடவடிக்கையும் தேர்தல் திணைக்களம் முன்னெடுத்துள்ளது” இவ்வாறு மன்னார் மாவட்ட அரசாங்க அதிபரும் தெரிவத்தாட்சி அலுவலருமான சிந்தக அபேவிக்ரம தெரிவித்துள்ளார். இதே வேளை தமிழ் தேசிய கூட்டமைப்பின் அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசன் தனது வாக்கினை விவேகானந்தா மகா வித்தியாலயத்தில் அமைந்துள்ள வாக்களிப்பு நிலையத்தில் செலுத்தியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1400420
    • யாழில் தேர்தல் நிலவரம்! யாழ்ப்பாணத்தில் இன்று  மக்கள் ஆர்வமாக வாக்களித்து வரும் நிலையில்,நண்பகல் 12 மணி வரையிலான காலப்பகுதியில் 35 வீதமான வாக்களிப்பு இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்றைய தினம் மாலை 04 மணி வரையில் வாக்களிக்க முடியும் என்பதும் குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1400414
    • பின்னாலை... ரணில்,  காஸ் சிலிண்டருடன் சத்தமே  இல்லாமல்  போறார். . 😂 
  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 1 reply
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 1 reply
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.