Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மலையக மக்கள் குறித்து சோனியா காந்திக்கு எடுத்துரைப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

845099525mutu_sivalingam.jpg

மலையக மக்கள் குறித்து சோனியா காந்திக்கு எடுத்துரைப்பு

இந்திய காங்கிரஸ் தலைவி சோனியா காந்தி மற்றும் இந்திய அமைச்சர் நாராயணசாமி ஆகியோரை இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளரும், கால்நடை வள மற்றும் கிராமிய சமூக அபிவிருத்தி அமைச்சருமான ஆறுமுகன் தொண்டமானின் தலைமையிலான குழு சந்தித்துள்ளது. 

சந்திப்பு குறித்து இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும், பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சருமான முத்துசிவலிங்கம் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில், 

இலங்கையிலுள்ள 13ம் அரசியல் அமைப்பு, மலையக இந்நிய வம்சாவளி மக்களுக்கான தனித்தன்மை, அவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள், என்பவற்றை கருத்திற்கொண்டு இந்திய அரசாங்கத்தால் மலையக மக்களுக்கு உதவிகள் கிடைக்க வேண்டும் எனவும் கலந்துரையாடப்பட்டதாக தெரிவித்தார். 

தொடர்ந்து கருத்து தெரிவித்த அமைச்சர் இன்று மலையக தேயிலை தோட்டங்கள் மங்கி வருகின்ற காலத்தில் மலையக இந்திய வம்சாவளியினர்களுக்கு அடிப்படை பிரச்சினைகள் இருக்கின்றன. 1938ம் ஆண்டு ஸ்தாபிக்கப்பட்ட இ.தொ.கா வினால் மலையக சமூக மக்களின் பிரச்சினைகள் தீர்த்து வைக்கப்பட்டாலும் கூட, மலையகத்திலுள்ள படித்த இளைஞர் யுவதிகளுக்கு பயிற்சி அளிக்க வேண்டும். 

அவர்களின் கல்வி வளர்ச்சிக்காக கலாசாலைகள் அமைத்து கொடுக்க வேண்டும். அது மட்டுமல்லாது நுவரெலியா மாவட்டத்திலுள்ள நான்கு தமிழ் பாடசாலைகள் தரம் உயர்த்தப்பட வேண்டும். இவற்றில் ராகலை, பதுளை பகுதிகளிலுள்ள பாடசாலைகள் குறிப்பிடத்தக்கவை. 

மற்றும் உயர்தர பரீட்சையில் சித்தி அடையக்கூடிய வாய்ப்பை ஏற்படுத்துவதன் மூலம் பின் கலாசாலை செல்வதற்கு இலகுவானதாக இருக்கும் எனவும், இலங்கையிலிருந்து இந்தியாவிற்கு சென்று ஆசிரியர் பயிற்சி அளிக்கப்பட்டு பின் திருப்பி அனுப்பப்பட்டார்கள் என்பதனை எடுத்துக் கூறும் போது, 

இந்திய காங்கிரஸ் தலைவி சோனியா காந்தி கவலைபடுவதாகவும் கூறினார். ஹட்டனில் கைதொழில் பயிற்றுவிப்பாளர்கள் பலர் இந்தியாவிலிருந்து வந்து இருக்கின்றார்கள் அதே போல மேலும் கைத்தொழில் பயிற்றுவிப்பாளர்களை அனுப்பிவைக்கமாறு கேட்டுக் கொள்ளப்பட்டது. 

மேலும் அமைச்சர் கூறுகையில் வடகிழக்கு மக்களுக்கும் பிரச்சினைகள் இருக்கின்றன அதே போல மலையக மக்களுக்கும் மாறுபட்ட பிரச்சினைகள் எழுகின்றன என்றார்.

தொண்டமான் அடிக்கும் வரை அடிப்போடு, மனோ கனேசனையும் அடிச்சு முறிக்க போனவர். மலையக மக்களின் துன்பதை, மலையகத் தமிழரின் திரி சங்கு நிலைமைகளை எடுத்து சொல்ல போனவரா, அல்லது அரசாங்கத்துக்காக, 13ம் திருத்ததை இலங்கை அரசு நிறை வேற்ற வேண்டும் என்று இந்தியா கேட்டால் மலையகத்தமிழர் அங்கிருந்து துரத்தப்படுவார்கள் என்று மிரட்டப் போனவரா? சிறிமா சாஸ்திரி ஒப்பந்தபடி எஞ்சி இருக்கும் மலையகத் தமிழரை இலங்கை அரசு பொறுப்பெடுக்க வேண்டும் என்று சோனியாகாந்தி தொண்டமானிடம் எடுத்துக்கூறினாரா?

 

பொறுப்பான இந்தியா என்றால் வடக்கு,கிழக்கில் தரமான முதலீடுகளை செய்து அவர்களை அங்கே குடியேற்ற முடியாதா?

  • கருத்துக்கள உறவுகள்

மலையக மக்கள் என்று சொல்ல வெள்ளைக்காரி காதில் மாவோயிஸ் என்று விழப்போது பார்த்துப்பா

 

அவர்களுக்கும் சனி பிடிக்குதா?

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
மலையகத் தமிழர்களின் தேவைகள் குறித்து சோனியாவுடன் பேச்சு

 

index23.jpg

 

 

 

 

 

இந்தியாவில் ஆளும் காங்கிரஸ் கட்சியின் சோனியா காந்தி மற்றும் அக்கட்சியின் முக்கியஸ்தர்களை சந்தித்து இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஆறுமுகன் தொண்டமான் குழுவினர் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.  இலங்கையில் இந்திய வம்சாவளி- மலையகத் தமிழர்களின் தேவைகள் குறித்தும் அவற்றுக்கு இந்திய உதவியைப் பெற்றுக்கொள்வது பற்றியும் இந்த சந்திப்பில் பேசப்பட்டதாக ஆறுமுகன் தொண்டமான் அளித்த பேட்டியில் தெரிவித்தார்.

தாம் விடுத்த அழைப்பின் பேரில், மலையகத் தமிழர்களை சந்திப்பதற்காக தூதுக்குழுவொன்றை அனுப்புவதற்கு சோனியா காந்தி சம்மதித்தாகவும் அவர் கூறினார்.

இதேவேளை, இலங்கை அரசியலமைப்பின் 13-ம் திருத்தம் பற்றியோ, இனப்பிரச்சனைக்கான அரசியல் தீர்வுத் திட்டம் பற்றியோ தாம் எதுவும் பேசவில்லை என்றும் மலையக மக்களின் கல்வி, சுகாதார மற்றும் அடிப்படைத் தேவைகள் பற்றியே பேசியதாகவும் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் செயலாளர் தெரிவித்தார்.

அரசியல் ரீதியான பிரச்சனைகளை இலங்கை அரசாங்கத்துடனே பேசித் தீர்த்துக்கொள்ளக்கூடிய வல்லமை தமது கட்சிக்கு இருப்பதாகவும் ஆறுமுகன் தொண்டமான் கூறினார்.

இந்தியாவிடமிருந்து கடந்த காலங்களில் மலையகத் தமிழர்களுக்கென பல்வேறு உதவித்திட்டங்கள் கிடைத்ததாகவும் அவை தொடர வேண்டும் என்று கோரிக்கை விடுத்ததாகவும் அவர் தெரிவித்தார்.

இலங்கையில் வாழும் இந்திய வம்சாவளி மக்களுக்கு உதவ வேண்டிய கடமை இந்தியாவுக்கு இருப்பதாலேயே அங்கு சென்று பேச்சுவார்த்தை நடத்திவருவதாகவும் தொண்டமான் கூறினார்.

ஆறுமுகன் தொண்டான் தலைமையிலான இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் ஆளும் மகிந்த ராஜபக்ஷ கூட்டணி அரசாங்கத்தில் பங்காளியாக இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

 

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி

 

  • கருத்துக்கள உறவுகள்

மலையக மக்களது அடிப்படை வசதிகள், தோட்டங்கள் நலிவடைவதிபற்றி பேசுவதற்கு எதற்காக சோணியாகாந்தியைச் சந்திக்கவேண்டும் மிஸ்டர் தொண்டைமான் (?) சோணியாகாந்தி உங்கநாட்டின் பிரதமரோ அன்றேல் உங்க கட்சியின் தலைவரோ இல்லையே (அடடகீலங்கைத் தோட்டத் தொழிலாளர் காங்கிரசுக்கும் இப்போ சோணியா அம்மா தலைவியாயிட்டாடா; அல்லது தண்ணியப்போட்டுட்டு சௌமியமூர்த்தி தொண்டைமானது பேரன் ஞானம் பெற்றுவிட்டரோ) இதுகளை கதைப்பதாக இருந்தால் நீங்கள் தொங்கிக்கொண்டிருக்கும் மகிந்த ஐயாவிடம் கதைக்கலாமே. ஒரு காலத்தில தொண்டைமான் ஆறு வெட்டினான், இப்போ அகழி வெட்டுறான்.



மலையக மக்களது அடிப்படை வசதிகள், தோட்டங்கள் நலிவடைவதிபற்றி பேசுவதற்கு எதற்காக சோணியாகாந்தியைச் சந்திக்கவேண்டும் மிஸ்டர் தொண்டைமான் (?) சோணியாகாந்தி உங்கநாட்டின் பிரதமரோ அன்றேல் உங்க கட்சியின் தலைவரோ இல்லையே (அடடகீலங்கைத் தோட்டத் தொழிலாளர் காங்கிரசுக்கும் இப்போ சோணியா அம்மா தலைவியாயிட்டாடா; அல்லது தண்ணியப்போட்டுட்டு சௌமியமூர்த்தி தொண்டைமானது பேரன் ஞானம் பெற்றுவிட்டரோ) இதுகளை கதைப்பதாக இருந்தால் நீங்கள் தொங்கிக்கொண்டிருக்கும் மகிந்த ஐயாவிடம் கதைக்கலாமே. ஒரு காலத்தில தொண்டைமான் ஆறு வெட்டினான், இப்போ அகழி வெட்டுறான்.

         13ஆவது அரசமைப்பை முழுமையாக நிறைவேற்ற வேண்டும்! இந்தியா உறுதி
by Editor on 9th-June-2013
 

Narayanasamy.jpg13ஆவது அரசமைப்புத் திருத்தத்தின் அனைத்து அம்சங்களும் முழுமையாக நிறைவேற்றப்பட வேண்டும் எனவும் இதில் இந்தியா மிக உறுதியாகவும், தெளிவாகவும் இருக்கிறது எனவும் இந்தியாவின் திட்டக்குழு மற்றும் நாடாளுமன்ற விவகார மத்திய இணை அமைச்சர் வீ.நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் நிலைப்பாட்டை இலங்கை அமைச்சர் ஆறுமுகம் தொண்டமானிடம் தெளிவாக எடுத்துரைத்துள்ளதாக வீ.நாராயணசாமி கூறினார்.

அமைச்சர் தொண்டமான் காங்கிரஸ் கட்சித் தலைவி சோனியாகாந்தி ஆகியோருக்கு இடையில் அண்மையில் நடந்த சந்திப்பில் வீ. நாராயணசாமியும் கலந்துகொண்டிருந்தார்.

13 ஆவது திருத்தத்திலுள்ள அனைத்து அம்சங்களும் முழுமையாக நிறைவேற்றப்பட்டு தமிழர் பிரச்சினைக்கு நியாயமான தீர்வு காணப்பட வேண்டும் இந்தியாவின் நிலைப்பாடு என்றும் இதில் சோனியா காந்தி உறுதியோ இருப்பதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

 

http://tamilworldtoday.com/archives/15271

 

இந்த செய்தியில் தொண்டமானை வீ.நாரயணசாமி அரச பக்க அமைசராக வைத்து பதில் சொல்லி இருப்பத்தாகத்தான் இருக்கிறது.

 

இவரை மலையக மக்கள் பிரதிநிதியாக ஏற்றுகொண்டதாக சொல்லி இல்லை.

 

மலைநாட்டு தமிழருக்கும், வடக்கு-கிழக்கு தமிழருக்கும் ஒரு தீர்வு பொருந்தாது என்பதை முன் வைத்து தொண்டமான் கூட்டணியில் தலைமை பொறுப்பை முழுவதாக ஏற்க மறுத்தவர். மலைய பிரச்சனையை சேர்க்காமல் வடக்கு கிழக்கு பிரச்சனையை தீர்த்தால் மலைய பிரச்சனை பின்னாள் ஒரு நாளில் திர்க்கப்படுமா என்றல் அது சந்தேகமே.

 

திருத்தப்பட்ட 13+ ஒரு தீர்வாக ஏற்கப்பட்டால் மத்தியஅல்லது சபிரகமூவா மாகாணத்தை இணையும் வடக்கு கிழக்குடன் இணைக்க அரசு உடன் பட வேண்டும். 

 

இந்தியா 13+ ல் அதைக் கேட்கவேண்டும். தனிநாடாயின் அவர்களுக்கு குடிபெயர வடக்கு-கிழக்கும் அரசும் சேர்ந்து உதவ வேண்டும்.

Edited by மல்லையூரான்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.