Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தொடர்ந்தும் முற்றுகைக்குள் கப்பல்

Featured Replies

தொடர்ந்தும் முற்றுகைக்குள் கப்பல்- மேலும் ஒரு டோராப்படகு தாக்கியழிப்பு: இளந்திரையன்

[புதன்கிழமை, 2 ஓகஸ்ட் 2006, 05:04 ஈழம்] [கொழும்பு நிருபர்]

தொடர்ந்தும் முற்றுகைக்குள்ளேயே சிறிலங்கா கடற்படையினரின் கப்பல் உள்ளதாக தமிழீழ விடுதலைப் புலிகளின் இராணுவப் பேச்சாளர் இளந்திரையன் தெரிவித்துள்ளார்

இது தொடர்பாக கொழும்பு ஊடகமொன்றுக்கு அவர் தெரிவித்துள்ளதாவது:

திருகோணமலை துறைமுகத்திற்கு 854 சிறிலங்காப் படையினரை ஏற்றிவந்த கப்பலை புல்மோட்டை கடற்பரப்பில் தரையிறக்க முற்பட்ட போது கடற்புலிகள் கடுமையாக தாக்கியதனால் கப்பல் மீண்டும் சர்வதேச கடற்பரப்பினை நோக்கிச் சென்று விட்டது.

குறித்த கப்பல் நேற்று செவ்வாய்க்கிழமை பிற்பகல் 2.15 மணியளவில் திருமலை துறைமுகத்தில் தரையிறக்க முற்பட்ட போது விடுதலைப் புலிகள் ஆட்டிலறித் தாக்குதலை நடத்தியமையினால் கப்பல் சர்வதேச கடற்பரப்பிற்குள் கொண்டு செல்லப்பட்டது.

பின்னர் நேற்றிரவு 7.30 மணியளவில் புல்மோட்டை கடற்கரையில் தரையிறக்க முற்பட்டபோது கடற்புலிகள் நடத்திய தாக்குதலினால் சேதமடைந்த நிலையில் கப்பல் மீண்டும் சர்வதேச கடல் பரப்பை நோக்கிச் சென்றது.

நேற்றிரவு இடம்பெற்ற மோதல் ஒரு மணிநேரம் இடம்பெற்றுள்ளது. கடற்புலிகள் தரப்பில் எதுவித சேதங்களும் ஏற்படவில்லை. குறித்த கப்பலுக்கு பாதுகாப்பாக வந்த கடற்படையின் டோராப்படகு ஒன்றும் கரும்புலிகளினால் மூழ்கடிக்கப்பட்டுள்ளது என்றார் இளந்திரையன்.

அதேவேளை தரையிறக்க முடியாமல் சர்வதேச கடற்பரப்பில் தரித்து நிற்கும் கப்பலை தரையிறக்குவதற்கு கண்காணிப்புக்குழுவினர் உதவி கோரப்பட்டதாகவும் ஆனால் தற்போதைய சூழ்நிலையில் உதவி வழங்க முடியாது என்று இலங்கை போர்நிறுத்த கண்காணிப்புக்குழு மறுத்துள்ளதாக தெரியவருகின்றது.

மேலும், மாவிலாறு அணைக்கட்டுப்பகுதியில் நேற்றைய தினம் மோதல் எதுவும் நடக்கவில்லை என்று மேற்படி கொழும்பு ஊடகத்திற்கு விடுதலைப் புலிகளின் இராணுவப் பேச்சாளர் இளந்திரையன் தெரிவித்தார்.

தற்காப்பு நடவடிக்கைகளைத் தவிர வேறு எந்த விதமான தாக்குதல்களையும் விடுதலைப் புலிகள் மேற்கொள்ள மாட்டார்கள் என்றும் போர்நிறுத்த உடன்படிக்கையை விடுதலைப் புலிகள் தொடர்ந்தும் கடைப்பிடிப்பார்கள் என்றும் குறிப்பிட்டார்.

மாவிலாறு அணைக்கட்டுப்பகுதியில் நேற்றைய தினம் மோதல் எதுவும் இடம்பெறவில்லை என்றும் பாரிய சேதங்களுடனும் இழப்புக்களுடனும் இராணுவத்தினர் நேற்று முன்தினம் இடம்பெற்ற பதில் தாக்குதலில் திரும்பிச் சென்று விட்டனர் என்று மேலும் தெரிவித்தார்.

http://www.eelampage.com/?cn=27933

  • கருத்துக்கள உறவுகள்

இந்திய உதவிக்காக காத்திருக்கிறது 854 சிங்கள இராணுவத்தினரைக் கொண்ட கப்பல்

திருகோணமலை கடற்பரப்பிலிருந்து 854 இராணுவத்தினருடன் புறப்பட்டு காங்கேசன்துறை துறைமுகத்துக்குச் செல்ல முடியாமல் தத்தளித்துக் கொண்டிருக்கும் சிங்கள கடற்படைக் கப்பல் பாதுகாப்பாக காங்கேசன்துறை செல்வதற்காக இந்தியாவின் உதவியை கோரியுள்ளது.

முல்லைத்தீவிற்கு வடமேற்காக 49 கிலோ மீற்றர் தொலைவில் அமைந்துள்ள புல்மோட்டையை அண்மித்த கடற்பரப்பிலேயே நேற்று மாலை 6 மணியளவில் இச்சம்பவம் நடந்தது.

854 படையினரை ஏற்றிவந்த இக்கப்பல் திருமலைக் கடற்படைத் தளத்தின் மீதான ஆட்லறித் தாக்குதலின் காரணமாக சர்வதேச கடற்பரப்பை நோக்கி சென்றது.

சர்வதேச கடற்பரப்பிற்குத் தப்பிச் சென்ற இக்கப்பல் கரைக்குச் செல்ல முடியாமல் தத்தளித்தது.

எனினும், மீண்டும் இலங்கைக் கடல் எல்லைக்குள் கொண்டுவரப்பட்ட இக்கப்பல் காங்கேசன்துறை துறைமுகம் நோக்கிய தனது பயணத்தை ஆழ்கடலினூடாக மேற்கொண்டிருந்த போது முற்றுகைக்கு உள்ளாக்கப்பட்டது.

இச்சம்பவத்தை உறுதிப்படுத்திய இராணுவத்தினர், மேலதிக தாக்குதல் நடைபெறாத வகையில் கீபிர் குண்டுவீச்சு விமானங்களை புல்மோட்டைக் கடற்பரப்பை நோக்கி அனுப்பியது.

இந்நிலையில் காங்கேசன் துறைமுகத்துக்கு தப்பிச் செல்வதற்காக இந்திய உதவியைக் கோரி சர்வதேச கடற்பரப்பில் அக்கப்பல் தொடர்ந்து தரித்து நிற்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

-புதினம்

இந்திய உதவிக்காக காத்திருக்கிறது 854 சிங்கள இராணுவத்தினரைக் கொண்ட கப்பல்

ஒரு 800 பேரையே அங்காலை கொண்டுபோகேலாமல் திண்டாடுற அரசு நாளைக்கு எப்பிடியாம். யாழிலிருக்கிற இராணுவத்தை வெளிய எடுக்கப்போகினம். அவர்களில் தொங்கின ஒட்டுப்படையின் கதியும் அவ்வளவுதான் போல. :lol:

ஒரு 800 பேரையே அங்காலை கொண்டுபோகேலாமல் திண்டாடுற அரசு நாளைக்கு எப்பிடியாம். யாழிலிருக்கிற இராணுவத்தை வெளிய எடுக்கப்போகினம். அவர்களில் தொங்கின ஒட்டுப்படையின் கதியும் அவ்வளவுதான் போல. :lol:

அவை இவ்வளவுக்கு பெட்டியை கட்டி மன்னார் பக்கத்தால நீந்த தொடங்கி இருப்பினம்...!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.