Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மகிந்த & co வின் குண்டர் இராச்சியம் எங்குபோய் முடியுமோ?

Featured Replies

Mahinda-Cartoon1.jpg

 
 

'நரிக்கு நாட்டாண்மை கொடுத்தால், கிடைக்கு இரண்டு வெள்ளாடுகளை கேட்கத்தானே செய்யும்!' 'சிங்கள மகா ஜனதாவ' இதன் கருத்தியலை உணரும் காலம் பிறந்துவிட்டமைக்கான அறிகுறிகள் தெரிகின்றன.

http://tamilworldtoday.com/?p=17590

  • கருத்துக்கள உறவுகள்

மகிந்த & co வின் குண்டர் இராச்சியம் எங்குபோய் முடியுமோ?

‘நரிக்கு நாட்டாண்மை கொடுத்தால், கிடைக்கு இரண்டு வெள்ளாடுகளை கேட்கத்தானே செய்யும்!’ ‘சிங்கள மகா ஜனதாவ’ இதன் கருத்தியலை உணரும் காலம் பிறந்துவிட்டமைக்கான அறிகுறிகள் தெரிகின்றன.

கடந்த ஓரிரு நாட்களுக்கு முன்னர்தான் மகிந்த & co உறுப்பினர் ஒருவர் தனது புதல்வியை கண்டித்த ஆசிரியை ஒருவரை பாடசாலை மைதானத்திலேயே முழங்காலிட வைத்த சம்பவம் இடம்பெற்று போராட்டங்களைக் கிளப்பியிருந்தது.

இந்தச் செய்தியின் சூடு ஆறுவதற்கு இடையில் மகிந்த & co வின் இன்னொரு உறுப்பினரின் புத்திரசிகாமணி ஒருவர் பாடசாலை அதிபர் ஒருவரை தாக்கியதான செய்தி நேற்று வெளிவந்திருந்தது. தனது பாடசாலையின் அதிபர் என்று கூடப் பார்க்காமல் அவரது கையை முறுக்கி இரண்டு அடிகளைப் போடும் அளவுக்கு ஒரு மாணவனுக்குக் கொடுக்கப்பட்ட தைரியம் ஆளுங்கட்சி உறுப்பினர் என்ற அவனது தந்தையிடமிருந்தே வழங்கப்பட்டுள்ளது.

விடுதலைப் புலிகளையும் தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகளுக்கான தீவிர இயங்கு விசையையும் ‘ஒழித்த’ ஒரு தலைவர் என்பதற்காக, மகிந்தவையும் அவரது & co வையும் அதிகாரத்தில் அமர்த்தியதன் வினை இப்போது பாடசாலைகளில் குண்டர் இராச்சியம் புகும் அளவுக்கு பரிணாம வளர்ச்சியடைந்துவிட்டது.

இவ்வாறான சம்பவங்கள் யாவும், ஜேர்மன் இறையியலாளரான Martin Niemöller வழங்கிய பிரசித்தமான வாக்கியங்களை நினைவு கூறுகிறது. Adolf Hitler ஐ ஜேர்மனியின் தேசியத் தலைவர் என நம்பி ஆரம்பகாலத்தில் அவருக்கு ஆதரவு வழங்கிய Niemöller பின்னர் ஹிட்லரின் நாசி சுயரூபத்தைக் கண்டு அவரது கடும் எதிர்ப்பாளராக மாறியபோது அவரிடமிருந்து பிறந்ததுதான் “முதலில் அவர்கள் கமியூனிஸ்டுகளை தேடி வந்தார்கள்! ஆயினும் நான் பேசவில்லை.. ஏனெனில் நான் ஒரு கம்யூனிஸ்ட் அல்ல” என ஆரம்பிக்கும் பிரபலமான வாக்கியங்கள்.

“கம்யூனிஸ்டுகள், சோசலிஸ்டுகள், தொழிற்சங்க வாதிகளையெல்லாம் நாசிகள் கொண்டு சென்றபோது நான் பேசாமல் இருந்தேன். ஆனால் அவர்கள் இறுதியில் என்னையும் கொண்டு சென்றபோது ‘பேசுவதற்கு’ யாருமே எஞ்சியிருக்கவில்லை” என்பது Niemöller இன் நிலைப்பாடு!

அவ்வாறாக தமிழ் மக்களை தமது அதிகார மையம் வதைத்தபோது பேசாமல் இருந்த ‘சிங்கள மகாஜனதாவ’, இப்போது அதே அதிகார மையம் ‘ஆசிரியைகளையும் அதிபர்களையும் வதைக்கும்போது அதிர்ச்சியாகிவிடுகிறது.

சாதாரண சிங்கள மக்கள் மட்டுமல்ல, கிழக்க மாகாண சபையின் அமர்வை ஆளுந்தரப்பு உறுப்பினார்கள் நேற்று புறக்கணிக்கும் அளவுக்கு நிலைமை போகிறது! முதலமைச்சர் மட்டும் சபையில் ஈயோட்டிக்கொண்டிருக்க, ஏனைய நான்கு அமைச்சர்களும் ஆளுந்தரப்பு உறுப்பினர்களும் சபை அமர்வைப் புறக்கணித்திருந்தனர்.

கிழக்க மாகாண சபையின் அதிகாரங்களில் ஆளுநர் மேலாண்மை செலுத்துவதைக் கண்டித்தே ஆளுந்தரப்பு உறுப்பினர்கள் இவ்வாறு அமர்வைப் புறக்கணிக்கும் அளவுக்கு ‘மாகாணசபை’ லட்சணம் கிழக்கில் பல்லிளிக்கிறது. அதாவது வடக்கு மாகாணசபையோ கிழக்கு மாகாண சபையோ ஆளுநர் போர்வையில் முன்னாள் படைத்துறை நந்திகள் குந்தியிருக்கும் வரை, நிலைமை தேறாது என்பதற்கு ஆளுங்கட்சி உறுப்பினர்களே நேற்று சபையைப் புறக்கணித்த செய்தி சான்றாகின்றது.

13 இல் கைவைத்து மாகாண சபை அதிகாரங்களை பிடுங்குவதற்கு எடுக்கப்படும் நடவடிக்கைகளைக் கண்டித்து கிழக்கு மாகாண சபையில் உள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்கள் கறுப்புப் பட்டி அணிந்து சபைக்கு சமூமகளித்த நிலையில், ஆளுங்கட்சியே சபையைப் புறக்கணித்தமை இங்கு குறிப்பிடத்தக்க விடயமும்கூட.

இதற்கிடையே வடமாகாணசபைத் தேர்தலில் சிங்கள, முஸ்லிம் வாக்குளை மேலதிகமாக அபகரிப்பதற்காக, வடக்கிலிருந்து இடம்பெயர்ந்த மக்களை வாக்காளர்களாகப் பதிவு செய்வதற்கான விசேட ஏற்பாடுகள் சட்டமூலம், நேற்று சிங்களத்தின் நாடாளுமன்றத்தில் நிறைவேறியுள்ளது. இந்த விசேட சட்டமூலம் தமது அரசியலமைப்புக்கு உட்பட்டதென சிங்களம் கூறினாலும், இதன் நோக்கம் வடக்கிலிருந்து இடம்பெயர்ந்தவர்கள் என்ற போர்வையில் வாக்குப் பெட்டிகளை நிரப்பிக்கொள்ளும் குறிக்கோள் கொண்டதென்பதை தமிழர்கள் அறிவார்கள். இனியென்ன, 83 இற்கு முன்னர் வடக்கில் வசித்த சிங்கள மக்களின் சந்ததியென வடக்கே நிரந்தர முகவரியற்ற சிங்களவர்களும் வடமாகாண சபைத் தேர்தலில் வாக்களிக்கக் கிளம்பலாம்.

இதேபோல, முஸ்லிம் கட்சிகளின் வாக்கு வங்கியும் உயரக்கூடும். ஆனால் சிதறடிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு இந்த விசேட சட்டம் எந்த நிவாரணத்தையும் வழங்காது. அவ்வாறு நிவாரணம் பெற்று தமது வாக்குளைப் பதிவு செய்யும் தீவிர மனோநிலைகூட வடக்கிலிருந்து துரத்தப்பட்ட பூர்வீகத் தமிழ் மக்களிடமும் இல்லை.

இவ்வாறான ஆதாய அதிர்வுகளுக்கு இடையே, 13 இல் கைவைக்கும் தனது சின்னத்தம்பியின் முனைப்புகள் குறித்து, பெரியண்ணன் வீட்டு தலைமையமைச்சர் சென்னைக்கு ஒரு செய்தியை வழங்கிய நகர்வும் இடம்பெற்றிருந்தது. அதாவது 13 ஐ இல்லாதொழிக்க சிங்கள தேசத்தின் அரசியற்கட்சிகளால் மேற்கொள்ளப்படும் முயற்சிகளை இன்னும உன்னிப்பாக அவதானித்த பின்னர் இந்த விடயத்தில் அதிகாரபூர்வ நிலைப்பாடு டெல்லியிலிருந்து கொழும்புக்கு அனுப்பப்படுமெனவும் மன்மோகன் சிங் கூறுகிறார்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பினூடான சந்திப்புக்கு முன்னர் கருணாநிதிக்கு எழுதிய கடிதத்தில் மன்மோகன்சிங் இந்த விடயத்தை சுட்டிக்காட்டியுள்ள பின்னணியில், இலங்கையிலோ சம்பிக்க, விமல் வகையறாக்கள் 13 விடயத்தில் டெல்லி ஒன்றுமே வெடிக்கிளிக்க முடியாதென்ற தமது காட்டுக்கத்தலை தீவிரப்படுத்துகின்றனர். சம்பிக்க ஒரு படி மேலே போய், இரா.சம்பந்தனுக்கு என தமிழ் மக்களுக்கு ஒரு அச்சுறுத்தல் செய்தியையும் விடுக்கிறார். தம்மிடம் முள்ளிவாய்க்கால் வழியும், ஏ-9 வீதி ஊடான சமாதான வழியும் இருப்பதால், தமக்கு எந்த வழி தேவையென்பதை தமிழ் மக்கள் தெரிவு செய்யலாம் என சவால்விடும் சம்பிக்க, முள்ளிவாய்க்கால் வழியும் தமக்குப் பெரிதல்ல என மேலாண்மைக் குரூரம் காட்டுகிறார்.

இலண்டனில் இடம்பெறும் ஶ்ரீலங்கா அணியின் துடுப்பாட்டப் போட்டிகளுக்கு அறவழியில் தமது எதிர்ப்பைக் காட்டிய தமிழர்கள் மீதே தமது அடாவடிகளை சிங்கள துடுப்பாட்ட ரசிகர்கள் திங்களன்று (17) கட்டவிழ்த்துவிட்ட நிலையில், உள்ளூரில் சம்பிக்க காட்டும் முள்ளிவாய்க்காலின் சிறு ஒழுங்கை, புகலிட நாடுகளிலும் சிங்களத்தால் திறக்கப்படத்தான் செய்கிறது.

PermSivaguru-150x150.jpg

எழுத்து : பிரேம்

முன்னைய பதிவு

மாகாண சபைகளில் மகிந்த முகங்களே ஆதாயம் காணலாம்! தமிழருக்கு சலுகை அரசியல் மட்டுமே!

 

 

http://tamilworldtoday.com/archives/17590

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.