Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

13ஆவது அரசமைப்பை இரத்துச் செய்தால் அரசியலில் இருந்து விலகிவிடுவேன்! பொதுபலசேனாவிற்கு அமைச்சர் வாசு சாவல்

Featured Replies

vasudeva-nanayakkara.jpg

 
 

13இல் மாற்றமின்றி வடக்குத் தேர்தல் நடத்தப்பட்டால் பொதுபல சேனாவைக் கலைப்பதாகக் கூறவேண்டும். அப்படியெனில் 13ஆவது திருத்தத்துடன் வடக்குத் தேர்தல் நடத்தப்படுமாயின் நான் அரசியலில் இருந்து விலகத் தாயர் என அமைச்சர் வாசுதேவ நாணயக்கார பொதுபல சேனாவிற்கு சவால் விடுத்துள்ளார்.

 

மேலும், http://tamilworldtoday.com/?p=18037

  • கருத்துக்கள உறவுகள்

விடுங்க வாசு. பொதுபல சேனவுக்கு தமிழீழத்துக்கு குறைவான ஒரு தீர்வை தமிழர்களுக்கு வழங்க விருப்பமில்லையாமில்ல. அதையேன் நீங்க தடுக்கிறீங்க. சும்மா கிடவுங்க. 13வது திருத்தமில்ல... மாகாண சபையே வேணான்னு தமிழர்கள் 1987 இலேயே சொல்லிட்டார்கள். தியாகி திலீபன் உட்பட்ட நூற்றுக்கணக்கான மாவீரர்களும் 5000 க்கும் மேற்பட்ட தமிழ் மக்களும் உயிர்விட்டதே இந்த மாகாண சபையால் தானே..! இன்னும் என்ன வேண்டும் என்று நினைக்கிறீங்க.

 

தமிழரின் தாகம்.. உள்ளூராட்சி சபை.. மாவட்ட சபை.. மாகாண சபை.. சமஷ்டி என்று இருந்தது ஒரு காலம். இப்ப அது தமிழீழம் தான் என்று முடிவாகிட்டுது. இதில பொதுபலசேன தமிழர்களுக்கு உதவனுன்னு நினைக்கிறாங்க. அதையேன் கெடுக்கிறீங்க..! :icon_idea:

சாபஸ். இதுதான் வாசுதேவா தான் யார் என்பதைக் காட்டக் கிடைக்கும் முதல் சந்தர்ப்பம். 

 

ஒன்றை மட்டும் வாசுதேவ ஒத்துகொள்ள வேண்டும். பந்தயங்கள் பொதுவில் சட்டப்படி, சட்ட வல்லுனர்கள் எழுதும் ஒப்பந்த ஆவணங்கள் அல்ல. ஆனால் வாசுதேவா இலங்கைப் பாரளுமன்றத்தில் இருக்கும் மிக மிக சில சட்டம் விளங்கிய உறுப்பினர்களில் ஒருவர்.  எனவே பந்தயத்தின் சில வரிகளைச் சட்டப்படி விளக்கமளிக்கவும் ஒத்துவர வேண்டும்.

 

அதாவது:

 

1.)கூட்டமைப்பு வடக்கில் பதவிக்கு வந்தும், அதன் பின்னர் ஒருவருடத்திற்குள் 13ம் திருத்தம் திருத்தப்பட்டால் அது பந்தயத்தில் உள்ளடங்கும் என்றதை அவர் ஒத்துக்கொண்டு பதவி விலகவேண்டும். ( தேர்தல், பொதுநலவாய தலைவர்கள் மகாநாடு, 13ம் திருத்தம் மூன்றும் இணைத்திருப்பதால் பந்தயக் காலம் பொதுநலவாய மகாநாட்டின் பின்னாலான சில மாதங்களையும் உள்ளடக்க வேண்டும். இலங்கை, பொதுநல வாய கூட்டத்திற்க்காக திருத்தாவிட்டால் அதற்கும் வாசுதேவா அரசின் மீது போடத்தக்க அழுதத்திற்கும் தொடர்பு இல்லை. ஆனல் பந்தயம் வாசுதேவாக்கும் அரசுக்கும் இடையில் இருக்கும் தொடர்பு பற்றியதாக மட்டும்தான் இருக்க வேண்டும். மகாநாட்டு நாடுகள் இடையில் வந்து அழுத்தம் போடுவதை வைத்து பந்தயம் போடக்கூடாது)

 

2). பந்தயத்தில் "திருத்தம்" என்பது, வடக்கு-கிழக்கு இணைப்பு, காணி, பொலீஸ் அதிகாரம் என்பவைதான். ஆனால் அரசால் பல திருத்தங்கள் இவற்றுக்கு வெளியே செய்தும் இவற்றை மடக்கலாம். ஆனால் நாம் அந்த பக்கத்தில் வாசு தேவாவுக்கு விட்டுகொட்டுக்க ஆயத்தமாக இருக்கிறோம். அதாவது அரசு வெளிப்படையாக மேற்கூறிய திருந்தங்களை செய்யாவிட்டால் அரசு செய்யும் மற்றய திருத்தங்களை கண்டு கொள்ள கூடாது. ஆனால் அரசு ஆளுனரைப் பாவித்து கணி,பொலீஸ் அதிகாரங்களை முடக்கினால் வாசுதேவ பதவி விலக வேண்டும். ஏன் எனில் வாசுதேவ இங்கே "திருத்தம்" என்று கூறும் கதை உண்மையில் அதிகாரங்களை நீக்குவதாகும்.  சட்டப்படியான விளங்கங்களை ஏற்றால், ஆளுனரைப் பயன்படுத்தி அதை எடுக்கும் போது வாசுதேவா பதவி விலகாவிட்டால், ஏமாற்றினார் என்றுதான் கொள்ள வேண்டும்.

 

அதாவது பந்தயம், கூட்டமைப்பு தேர்தலில் வென்றால் அந்த சட்டங்கள் பாவிக்க அங்கே இருக்கும் என்றும், அப்படி இருந்தால் தேரர் துறவு வாழ்க்கையை துறக்க வேண்டும் என்றும், கூட்டமைப்பு வென்ற பின்னர் அதிகாரங்கள் கூட்டமைப்புக்கு பாவிக்க முடியவில்லையாயின் வாசுதேவா எதிர்க்கட்சியில் அமரவேண்டும் என்றும் இருக்க வேண்டும். சட்டம் அறிந்த வாசுதேவாவுக்கு பந்தய வசனங்களுக்கு இப்படி விளக்கம் அளிப்பது நியாயம் என்று விளங்கும். இல்லையேல் இவரும் பந்தயங்கள் கட்டுவதிலும், உண்ணாவிரதம் இருப்பதிலும் வீரவன்சா category மட்டும்தான். 

Edited by மல்லையூரான்

இந்தியாவுடன் பேச்சுக்களை ஆரம்பித்துள்ளதாம் சிறிலங்கா [ வெள்ளிக்கிழமை, 21 யூன் 2013, 07:52 GMT ] [ கொழும்புச் செய்தியாளர் ] Keheliya-Rambukwella-13.jpg

13வது திருத்தச்சட்டம் தொடர்பாக சிறிலங்கா அரசாங்கம் ஏற்கனவே இந்தியாவுடன் இராஜதந்திரப் பேச்சுக்களை ஆரம்பித்துள்ளதாக, சிறிலங்கா அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய அவர்,

“13வது திருத்தம் தொடர்பான இந்தியாவின் கவலைகளுக்குப் பதிலளிக்கும் வகையில் பொறிமுறை ஒன்று உருவாக்கப்படும்.

வெளிநாடுகள் மற்றும் அமைப்புக்களுடன் சிறிலங்கா அரசாங்கம் உடன்பாடுகளைச் செய்திருந்தாலும், நாட்டு மக்கள் மற்றும் நாட்டின் இறைமையுடன் தொடர்புபட்ட விடயங்களுக்குத் தீர்வு காணும் போது இறைமைக்கும், மக்களின் ஆணைக்குமே முன்னுரிமை அளிக்கப்படும்.

மக்களின் இறைமையை உறுதிப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டியது அரசாங்கத்தின் முக்கியமான கடமை.

இரண்டு மாகாணசபைகளை இணைப்பதற்கு சிறிலங்கா அதிபருக்கு உள்ள அதிகாரங்களை நீக்குவது தொடர்பான, அரசியலமைப்பின் 19வது திருத்தம் நாடாளுமன்றத்தில் அடுத்த சில நாட்களில் முன்வைக்கப்படும்.

ஏனைய திருத்தங்கள் குறித்து ஆராய்வதற்கு தெரிவுக்குழு நியமிக்கப்பட்டு தீர்மானம் ஒன்று எடுக்கப்படும்.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

http://www.puthinappalakai.com/view.php?20130621108513

தெரிவுக்குழுவுக்கு மஹிந்த கட்சியினர் மட்டுமே!

Jun 21, 2013
 
இலங்கையில் அரசியல் அமைப்பினில் மாற்றங்களை கொண்டு வரும் நோக்கில் அரசாங்கம் அமைத்துள்ள நாடாளுமன்ற தெரிவுக்குழுவுக்கு நியமிக்கப்பட்ட அரசாங்க கட்சி உறுப்பினர்கள் பெயர்கள் வெளியாகியுள்ளது.
maginda.jpg

இதன்படி, மஹிந்த அமைச்சரவையை சேர்ந்த அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தலைமையில் அமைச்சர்களான ஜி எல் பீரிஸ், மைத்திரிபால சிறிசேன,டபில்யூ டி ஜே செனவிரட்ன, அனுர பிரியதர்சன யாப்பா, டக்ளஸ் தேவாநந்தா, சுசில் பிரேம்ஜயந்த, ஏ எல் எம் அத்தாவுல்லாஹ், டியூ குணசேகர, ரிசாட் பதியுதீன்,சம்பிக்க ரணவக்க,விமல் வீரவன்ச பெசில் ராஜபக்ச, லச்மன் செனவிரட்ன, வாசுதேவ நாணயக்கார, முத்து சிவலிங்கம் சுதர்சினி பெர்ணான்டோ புள்ளே மற்றும் ஜனக பண்டார ஆகியோர் இந்த குழுவில் அடங்கியுள்ளனர்

எனினும் ஐக்கியதேசியக்கட்சி,தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு உட்பட்ட எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் எவரும் இந்த தெரிவுக்குழுவில் இடம்பெறப்போவதில்லை என்று அறிவித்துள்ளனர்.

 

http://www.pathivu.com/news/25436/57//d,article_full.aspx

 

வடக்கு தேர்தலுக்கு முன்னதாக காணி பொலிஸ் அதிகாரங்களினில் கை வைக்கமாட்டோம்;- பல்டியடித்தது மஹிந்த அரசு!!

Jun 20, 2013
 

செப்டம்பரில் நடைபெறவுள்ள வட மாகாண சபைத்தேர்தலுக்கு முன்னர் மாகாணசபைகளுக்கு வழங்கப்பட்டுள்ள காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்கள் தொடர்பில் எந்தவொரு மாற்றமும் செய்யப்படமாட்டாது என்று இலங்கை அரசாங்கம் தற்போது  அறிவித்துள்ளது.இவ்வாறான திருத்தங்கள் நாடாளுமன்ற தெரிவுக்குழுவில் சமர்ப்பிக்கப்படலாம் எனவும் அது தெரிவித்துள்ளது

arsu.jpg

சகல அரசியல் கட்சிகளும் ஏற்றுக்கொண்டுள்ளதனால் இரண்டு அல்லது இரண்டிற்கு அதிகமான மாகாண சபைகள் இணைவதை தடுக்கும் திருத்தம் இரண்டுவாரங்களுக்குள் சட்டமாக்கப்படும் என்றும் அரசாங்கம் கூறியுள்ளது.

சிறீலங்கா சுதந்திரக்கட்சியின் தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அமைச்சரும், சபைத்தலைவருமான நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார். இந்த விவகாரங்களில் உள்நாட்டு,வெளிநாட்டு சக்திகளின் அழுத்தத்திற்கு அரசாங்கம் அடிபணியாது என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

தமிழ்நாடு மற்றும் இலங்கைக்கு எதிரான சக்திகளின் அழுத்தம் காரணமாகவே கடந்த மார்ச் மாதம்; நடைபெற்ற ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை பேரவையில் இலங்கைக்கு எதிராக இந்தியா வாக்களித்தது. இதனை நாம் விளங்கிக்கொண்டுள்ளோம்.

அதேபோல, நாம் இப்போது முகம்கொடுத்துள்ள நிலைமையை இந்தியா விளங்கிக்கொள்ளும். இலங்கை மக்களுக்கு நல்லதை செய்வதற்கு இந்தியா எம்மை அனுமதிக்குமென நாம் எதிர்பார்க்கின்றோம் என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

 

http://www.pathivu.com/news/25420/57//d,article_full.aspx

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.