Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

13 குறித்து எதுவுமே பேசவில்லை இந்தியா; பத்திரிகை ஆசிரியர்களிடம் கூறினார் ஜனாதிபதி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை இந்திய உடன்படிக்கையை இலங்கை அரசு மீறுவதாக எழுப்பப்பட்டுவரும் குற்றச்சாட்டுகளை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்றுத் திட்டவட்டமாக நிராகரித்தார்.

அதேசமயம், 13 ஆவது திருத்த விவகாரம் குறித்து இந்தியா உத்தியோகபூர்வமாக எந்தத் தொடர்புகளையும் இலங்கையுடன் ஏற்படுத்தவில்லை என்றும் தெரிவித்தார்.

 

பத்திரிகை ஆசிரியர்கள் மற்றும் மின்னியல் ஊடகங்களின் பொறுப்பாளர்களுடன் நேற்றுக்காலை சந்திப்பொன்றை ஜனாதிபதி நடத்தினார்.

அமைச்சர்களான பஸில் ராஜபக்ஷ, சுசில் பிரேமஜயந்த, கெஹலிய ரம்புக்வெல, சரத் அமுனுகம, அநுர பிரியதர்ஷன யாப்பா, எஸ்.பி. திஸாநாயக்க, ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க ஆகியோர் இந்தச் சந்திப்பில் கலந்துகொண்டனர்.

 

இதன்போதே மேற்கண்டவாறு கூறிய ஜனாதிபதி மேலும் தெரிவித்தவை வருமாறு:

13ஆவது திருத்தம் தொடர்பில் இந்தியா கவனஞ்செலுத்துவதாக ஊடகங்கள்தான் சொல்கின்றன.

ஆனால், எங்களுக்கு இதுவரை உத்தியோகபூர்வமாக எதுவும் தெரிவிக்கப்படவில்லை. எமது நிலைப்பாட்டை நாங்கள் ஏற்கனவே தெளிவுபடுத்தியுள்ளோம். 13ஆவது அரசமைப்புத் திருத்தம் தொடர்பில் நாடாளுமன்றத் தெரிவுக்குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

அதில் அனைத்தும் பேசப்படும். இலங்கை   இந்திய ஒப்பந்தத்தை நாங்கள் மீறியதாக சொல்லப்படுகிறது. அது தவறு. ஒப்பந்தத்தைச் செய்தவர்கள்தான் அதனை மீறினர். ஒப்பந்தத்தின் 2/10 என்ற பிரிவை வாசித்துப் பாருங்கள்.

 

ஒப்பந்தத்தின்படி எடுக்கப்படவேண்டிய நடவடிக்கைகள் குறித்து அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதனை யார் மீறியது? அது சரிசெய்யப்படவேண்டும்.
எங்கும் பிரச்சினை

பொலிஸ் அதிகாரங்கள் பற்றிப் பேசப்படுகிறது. அண்மையில் நடந்த சம்பவமொன்றைப் பாருங்கள். வடமேல் மாகாண சபைக்குப் பொலிஸ் அதிகாரங்களைக் கொடுத்திருந்தால் எப்படி இருந்திருக்கும்? மாகாணசபைகளுக்குப் பொலிஸ் அதிகாரத்தைக் கொடுத்தால் தெற்கிலுள்ள எனது வீட்டுக்கும் போகமுடியாது.

 

அதற்கும் அனுமதி கேட்கவேண்டிவரும். இப்போது வடக்கில் மட்டும்தான் பிரச்சினை இருப்பதாக நினைக்கவேண்டாம். பிரச்சினை தெற்கிலும் இருக்கிறது. முழுநாட்டிலும் இருக்கிறது. 13ஆவது திருத்தம் குறித்தும், அதிகாரங்கள் குறித்தும் இப்போது பெரிதாகப் பேசப்படுகிறது.

ஆனால், எல்லோரும் ஒன்றைப் புரிந்துகொள்ளவேண்டும். எந்தவொரு நாடும் தமது அரசியல், பாதுகாப்பு மற்றும் இதர உள்நாட்டுப் பிரச்சினைகளுக்கேற்பதான் தீர்மானங்களை எடுக்கும். அண்மையில் தொண்டமான் கூட இந்தியா சென்றிருந்தார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் சென்றிருந்தது. அதில் எனக்குப் பிரச்சினையில்லை.
நாம் எமது பக்க நியாயங்களை வெளிநாடுகளிலுள்ள எமது தூதரகங்கள் ஊடாக சர்வதேச சமூகத்திடம் தெரிவித்து வருகிறோம்.

இன்னமும் சர்வதேச ரீதியில் புலிகளின் பரப்புரை முன்னணியில் இருக்கிறது. அப்போது ஆயுதங்களுக்காக செலவழித்தவர்கள் இப்போது பிரசாரங்களுக்குச் செல்கின்றனர்.

 

வெள்ளையானை தான்!

 

13ஆவது அரசமைப்புத் திருத்தம் என்பது வெள்ளையானைதான். அற்காக அதனை உயிருடன் புதைத்துவிட முடியாது. அதிலும் சில வேலைகளை வாங்கவேண்டியுள்ளது. மாகாணசபை முறைமையில் எமக்கு முழு அளவில் நன்மைகள் இல்லை. சில நன்மைகளே இருந்தன.

அதிகாரஙகளை ரத்துச்செய்து, மாகாணசபைகளைக் குறைத்து அந்த முறைமையையே நீக்குவோம் என்று நாங்கள் கூறினால் ஊடகவியலாளர்களான நீங்களே எங்களுக்கு எதிராக வருவீர்கள். எனவே, பேச்சுகளை நடத்தியே நாங்கள் உரிய தீர்மானம் எடுப்போம்.

இந்த விடயங்கள் தொடர்பில் அனைத்துக் கட்சிகளுடனும் பேசவேண்டும். அன்று இது பலவந்தமாகக் கொண்டுவரப்பட்டபோது அதற்கெதிராக நாம் ஊர்வலம் சென்றோம்.

 

சி.ஐ.டியில் பலமணிநேரம் வாக்குமூலம் கொடுத்தோம். எனது காதுக்கு அருகில் துப்பாக்கியின் ரவையொன்று பாய்ந்து சென்றது. பலாத்காரமாகத்தான் இது எம்மிடம் திணிக்கப்பட்டதென்பதை நீங்களும் புரிந்துகொள்வீர்கள்.

இந்த விடயத்தில் நாங்கள் அனுபவம் பெற்றிருக்கிறோம். ஆனால் ஒரேயடியாக இதில் மாற்றங்களைச் செய்துவிட முடியாது என்றார் ஜனாதிபதி ராஜபக்ஷ.

 

http://onlineuthayan.com/News_More.php?id=184542119422733740

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியா தமிழருக்கு வாலும்.. சிங்களவனுக்கு தலையும் காட்டும் ஒரு விலாங்கு. அதனை நம்பி நம்ம கூட்டமைப்பினர் ஜோசியம் பார்த்துக் கொண்டு திரிகின்றனர். இந்தக் காலவெளியில்.. தமிழினம்.. இன்னும் இன்னும் குறுகி.. இறுதியில் உள்ளூராட்சி சபைகள் கூட இன்றி அடிமைகளாக வாழும் நிலையே மீளும்..! இந்தியாவை (தமிழகம் அல்ல) நம்பினால் இது தான் கதி..! :icon_idea:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.