Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

முல்லைத்தீவைச் சேர்ந்த தமிழ் யுவதிக்கும் இராணுவ வீரருக்கும் காதல் திருமணம்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

திருமணங்கள் என்பது அவரவர் தனிப்பட்ட விசயம் எனினும், நாம் முக்கியமான ஒன்றைக் கவனிக்க மறந்து விடுகின்றோம்!

 

இப்படியான திருமணங்களில், மணப்பெண் அனேகமாக, 'சிங்கள' பாரம்பரிய முறையில் தான் மணப்பெண்ணுக்கான உடைகளை அணிகின்றார்!

 

இது தமிழ்க்கலாச்சாரமும், இந்து மதமும், சிங்களக் கலாசாரத்தையும், புத்தத்தையும் விடவும், தாழ்ந்தது என்பதை அப்பட்டமாக நிறுவும் ஒரு செயலாகவே நான் இதைக் கருதுகின்றேன்! :o

 

இது பற்றிக் மற்றைய கள உறவுகள் என்ன நினைக்கின்றீர்கள் என்பதை அறிய ஆவல்!

 

உண்மைதான் புங்கை.

 

எனது நெருங்கிய பெண் உறவினர் ஒருவருக்கு இது நடந்தது. 80 களின் நடுப்பகுதியில் யாரழ்ப்பாணத்தில் உயர்தர பரீட்சை எழுதிவிட்டு வேலை தேடிக்கொண்டிருந்த அவரை அவரது சகோதரர் தன்னுடன் வெலிக்கந்தையில் அப்போது நடைபெற்று வந்த மகாவலி அபிவிருத்தித்திட்ட அலுவலகத்திற்கு வேலை எடுத்து அழைத்துச் சென்றார். அங்கே இவர்கள் இருவரையும் தவிர அனைவரும் சிங்களவர்கள். குறிப்பாக வெலி ஓயா, பதவியா, கொரவப்பொத்தானை, கெப்பிற்றிகொல்லாவை, கஹட்டகஸ்டிகிலிய போன்ற திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்களில் இருந்து அங்கே வெலைக்கு வந்திருந்தவர்கள். இயல்பாகவே சிங்கள ஆதிக்க வெறியும், தமிழர் மேல் காழ்ப்புணர்ச்சி அதிகமும் கொண்டவர்கள். இவர்களுக்கு வெலிக்கந்தைப் பகுதியில் சிங்கள அரசாங்கம் வீட்டுத்திட்டம் ஒன்றையும் அமைத்துக்கொடுத்திருந்தது. மட்டக்களப்பு திருகோணமலை நெடுஞ்சாலையிலிருந்து சுமார் 500 மீற்றர் தூரத்தில் இந்த குடியேற்றம், புணாணைக்கும்,  மன்னம்பிட்டி எனும் தமிழ்க் கிராமத்திற்கும் மிக அருகில் அமைந்திருந்தது.

 

வேலைக்குச் செல்லத்தொடங்கிய சிறிது காலத்திலேயே அங்கு கிளார்க்காக வேலை பார்த்து வந்த கஹட்டகஸ்டிலிகிலியவைச் சேர்ந்த ஒருவருடன் இந்தப் பெண்மணிக்குக் காதல் மலர்ந்தது. சகோதரர் அந்த நேரத்தில் அம்பாறைக்கு இடமாற்றம் ஆகிப் போய்விட்டதால், தனித்துவிடப்பட்ட இவருக்கு பல சிங்களவர்கள் ஆசை வார்த்தை காட்டி அந்தச் சிங்கள வாலிபரை காதலிக்கும்படி ஆலோசனை வழங்கியிருக்கிறார்கள்.

 

வீட்டில் அறிந்ததும்  கடுமையான எதிர்ப்புக் கிளம்பியது. ஒருமுறை விடுமுறைக்கு வீடு வந்திருந்தவரை அவரது பெற்றோர்கள் இனி நீ வேலைக்குப் போகவேண்டாம் என்று மறித்தேவிட்டார்கள். ஆனால், எனது பொருட்களை எடுத்துக்கொண்டு வரவிடுங்கள் என்று கிளம்பிப் போனவர் பின்னர் வரவேயில்லை. ஒரு மாத காலத்தில் நாம் பதிவுத்திருமணம் செய்துகொண்டோம் என்கிற கடிதம் அவரிடமிருந்து வந்தபோது அனைவரும் இடிந்து போனோம்.

 

அவர் பின்னர் தனது சிங்களக் கணவருடன் மாறி மாறி ஒவ்வொரு சிங்களக் குடியேற்றக் கிராமங்களிலும் வேலை நிமித்தம் சென்று வசிக்கத் தொடங்கினார். அவர்களுக்கு ஒரு ஆண்பிள்ளையும் பிறந்தது. அவர்கள் தங்கள் பிள்ளைய ஒரு முழுச் சிங்களவனாக வளர்த்ததோடு, தமிழர் மீது காழ்ப்புணர்ச்சியையும் கூடவே வளர்த்து விட்டனர். பிற்காலத்தில் நாம் கொழும்பில் இருந்த காலத்தில் அவர்கள் சிறிதுகாலம் எம்முடன் ஒன்றாக வசித்தார்கள். 

 

புலிகள் ஒரு ராணுவ முகாமைத் தாக்கும்போதோ அல்லது இராணுவம் புலிகளைத் தாக்கும்போதோ எமக்குள் கடுமையான வாக்குவாதம் நிகழும். எமது உறவினரான அந்தப் பெண்மணி, சிங்களவர் செய்வது சரிதான், புலிகள் பயங்கரவாதிகள், அப்பாவிச் சிங்களவர்களைக் கொல்கிறார்கள், தனிநாடு உங்களுக்கு அவசியமில்லை என்று எங்களிடம் கூறுவார். சில வருடங்களுக்கு முன்னர்வரை யாழ்ப்பாணத்துத் தமிழிச்சியாக இருந்தவர் இப்போது முழுப் பவுத்த சிங்களவராக மாறியிருந்தார். அவரால் தனது கனவரையோ அல்லது மகனையோ தமிழினத்தினுள் உள்வாங்கவோ அல்லது தமிழர் பக்க நியாயத்தை எடுத்துக் கூறவோ முடியவில்லை. அவரே முழுவதுமாக சிங்கள பேரினவாதத்தினுள் உள்வாங்கப்பட்டிருந்தார். அதுமட்டுமல்லாமல் தனது மகனையும் முழுச் சிங்கள இன்வாதியாக மாற்றியிருந்தார். 1995 இல் யாழ்ப்பாணம் பிடிபட்ட போதும், 2009 இல் புலிகள் அழிக்கப்பட்ட போதும் அவரது மகன் நடந்துகொண்ட விதமும், அவர் தனது முகப்புத்தகத்தில் வெளியிட்ட கருத்துக்களும் முழுச் சிங்களப் பவுத்த பேரினவாதத்தை காட்டியிருந்தன.

 

இதை ஏன் சொல்ல வருகின்றேன் என்றால், ஒரு தமிழ் பெண்ணைக் கட்டுவதன் மூலம் அவர்மேல் ஆதிக்கம் செலுத்துவது என்பது ஒரு இன ஆக்கிரமிப்பு நடவடிக்கையாகவே கருத முடியும். இப்படியான பல திருமணங்கள் இனப்பரம்பலில் பாதிப்பையும், தமிழினத்துக்குள்ளேயே சிங்களவருக்கு ஆதரவான ஒரு இனத்தையும் உருவாக்கிவிடும். இது இலங்கையில் மட்டுமல்லாமல் உலகின் பல இடங்களிலும் இனரீதியான ஆக்கிரமிப்பை நடத்தும் நாடுகளில் நடக்கிறது. பலவீனமான இலக்குகளாகத் தெரியும் பெண்ணினத்தின்மீது தனது ஆக்கிரமிப்பைத் தொடங்கிவிட்டால் பின்னர் இலகுவாக அந்தச் சமூகத்தை வழிக்குக் கொண்டுவந்து விடலாம் என்பதே இதன் நோக்கம்.

 

பொஸ்னியப் போரில் சேர்பியர்கள் இதை கச்சிதமாகச் செய்தார்கள். பொஸ்னியப் பெண்கள் விரும்பியோ விரும்பாமலோ சேர்பிய இராணுவத்தால் மணக்கப்பட்டனர் அல்லது கருவூட்டப்பட்டனர். இவ்வாறு கருவூட்டப்பட்டவர்கள் வேண்டுமென்றே அடைத்து வைக்கப்பட்டு பிள்ளை வளர்ந்ததும் வெளியே விடப்பட்டனர். இதன்மூலம் ஒரு சேர்பிய வம்சத்தை பொஸ்னியச் சமூகத்தில் உருவாக்கினர். இது அவர்களைப் பொறுத்தவரையில் தமக்குச் சார்பான ஒரு சமூகம் தனது எதிரியின் முகாமினுள் வளர்வதைப் போன்றது. இந்தச் சமூகம் காலப்போக்கில் சிறிது சிறிதாக அந்த இனத்தின் புற்றுநோயாக மாறி இன அடையாளத்தையே அழித்துவிடும், அதன்பிறகு அந்த இனத்தை ஆக்கிரமிப்பது இலகு என்பதே அவர்களின் நோக்கம். சிங்களமும் செய்வது இதைத்தான். வெறுமனே திருமண வாழ்த்துக் கூறி மகிழாமல் இதன் உள்நோக்கத்தையும் பார்ப்பது நல்லது. சிங்களவர்கள் தமிழ் மணமகன்களை விடவும் தமிழ் மணமகள்களை ஏன் அதிகம் விரும்புகிறார்கள் என்று பார்த்தால் இதன் அர்த்தம் புரியும். 

 

வெறுமனே ஒரு சிங்களவனுக்கும் தமிழிச்சிக்கும் நடந்த ஒரு திருமணம் என்று இதைப் பார்த்து இருந்துவிடுவோம் என்றால், இவை போல இன்னும் பல நடக்க நாம் உதவியவர்கள் ஆகிவிடுவோம். ஆகவே இவ்வகையான திருமணங்களின் உண்மை நோக்கம் என்னவென்பதை தமிழர்கள் விளங்கிக் கொள்வது அவசியம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

 

 
 

 

உங்களை மாதிரி கேள்வியே கேட்காத ஒரு அறிவாளியை சந்தித்ததில் யாழ்களம் பெருமையடைகிறது

 

 

ஆகா! யாழ்களம் இந்தவகைப் பொறுப்பையும் தங்களிடம் ஒப்படைத்திருக்கின்றதா?

ஏதோ ஒருவகைக்கு பொறுப்பாளினி ஆகவேண்டிய தவிப்பு, இயல்பு நிலை மறந்து ஆர்வக்கோளாறாய் அலைகின்றதோ?

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஆண்கள் ஆயிரக்கணக்கானோர் போரில் இறந்து போட்டினம் மீதம் உள்ள இளசுகள் வெளிநாடு போட்டுதுகள் வசதியில்லாத வயசுக்கு வந்த பெண் புள்ளைகள் இப்படி முடிவுக்கு வருகினமாம் என்று அங்கு உள்ள சிலர் இப்படியான நிகழ்வுகளுக்கு புதிய காரணம் கண்டு பிடிச்சு இருக்கினம் இதற்க்கு மேலும் இதுபற்றி கதைத்தால் நீங்கள் வெளிநாடுகளில் வசதியுடன் சந்தோஷமாக வாழ்கின்றீர்கள் உங்களுக்கு இங்குள்ள நிலை விளங்காது என்று முடிக்கின்றார்கள் .

சிங்களவர்களின் விருப்பம் இந்த பெண் போன்றவர்களினால் நிறைவேற்றப்படுகின்றது :(

  • கருத்துக்கள உறவுகள்

ஆகா! யாழ்களம் இந்தவகைப் பொறுப்பையும் தங்களிடம் ஒப்படைத்திருக்கின்றதா?

ஏதோ ஒருவகைக்கு பொறுப்பாளினி ஆகவேண்டிய தவிப்பு, இயல்பு நிலை மறந்து ஆர்வக்கோளாறாய் அலைகின்றதோ?

 

 

நான் ஏன் ஒரு பதவிக்கு அலைவான் யாழே என்டை என்டால் எழுதாமல் ஓடப் போறீங்களா என்ன

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.