Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

திருமலை இறுதிப்போருக்கான பரீட்சார்த்த களம்

Featured Replies

திருமலை இறுதிப்போருக்கான பரீட்சார்த்த களம்

-இதயச்சந்திரன்-

கடந்த வாரக் கட்டுரையில் குறிப்பிட்டது போல் லெபனான் விவகாரத்தில் உள்வாங்கப்படும் அனுபவங்கள், மாவிலாறு அணைக்கட்டில் பரீட்சித்துப் பார்க்கப்படுவது போல் தெரிகிறது. இரு இஸ்ரேலிய வீரர்கள் கடத்தப்பட்டவுடன், லெபனான் மீது தொடர் விமான குண்டு வீச்சுக்கள் நிகழ்த்தப்படுவது போன்று, அணைக்கட்டு மறிப்பு விவகாரத்தை சாட்டாக வைத்து, திருமலை, முல்லைத்தீவு, மட்டக்களப்பு மீது விமானத் தாக்குதல்களும் எறிகணை வீச்சுகளும் மேற்கொள்ளப்பட்டன.

இத்தாக்குதலிற்கான பின்புலச் சதியில், மாவிலாறு சிக்கலை ஊதிப் பெரிதாக்கி திருமலை மாவட்டத்தை ஏனைய பகுதியிலிருந்து துண்டாடும் நீண்டகால பேரினவாதச் சிந்தனை தொழிற்படுவது போல் இருக்கிறது. இதனை விளங்கிக் கௌ;ள லெபனான் மீது வலிந்து தாக்கும் நடவடிக்கையை இஸ்ரேல் முடுக்கி விட்ட போது பிரயோகிக்கப்பட்ட இராணுவ போர்த் தந்திர பொறிமுறையை பிரித்தறிய வேண்டும்.

ஹிஸ்புல்லாக்கள் செறிந்து காணப்படும் தென் லெபனானை நோக்கிய சிரியாவிற்கான பாதைகள், பெய்ரூட்டை நோக்கும் பிரதான பாதைகள், தலைநகர் பெய்ரூட் ஆகியவற்றின் மீது குண்டுகள் வீசப்பட்டன. சகல ஆயுத, ஆளணி வழங்கல்கள், தென் லெபனானை நோக்கி நகர்வதை முடக்கும் வகையில் முதல் தாக்குதல் தொடுக்கப்பட்டது.

தென் லெபனானிற்கும் ஏனைய பிரதேசங்களுக்குமிடையேயுள்ள தொடர்புகளை பலவீனப்படுத்திய பின்னரே எல்லையூடாக தரைப்படை நகர்வினை இஸ்ரேல் மேற்கொண்டது.

இந்த மாதிரியுரு பிரதியாக்க நகர்வினை சிறிலங்கா இராணுவம் வடக்கு கிழக்கின் மீது மேற்கொள்ள எத்தனிக்கிறது. திருகோணமலை உட்பகுதிகள், அதைச் சூழவுள்ள மட்டக்களப்பை அண்டிய பாதைகள், கிராமங்கள் மீதும், அதேவேளை புலிகளின் அதியுயர் இராணுவ பீடமாக விளங்கும் வன்னி மீதும் ஒரே காலத்தில் விமானத் தாக்குதல் தொடுக்கப்பட்டுள்ளன.

இதன் தொடர்ச்சியாக மூதூரிலுள்ள விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தை நோக்கிய படை நகர்வும் மேற்கொள்ளப்பட்டது. அவ்வாறான வலிந்து ஊடுருவும் தாக்குதல் முறியடிக்கப்பட்ட போது மறுநாள் மட்டக்களப்பிலுள்ள தேனகம் விருந்தினர் விடுதி மீது இடைவிடாத விமானத் தாக்குதல் நடத்தப்பட்டு நிர்மூலமாக்கப்பட்டது.

பாதிப்புற்ற தேனகத்தைப் பார்வையிட அழைக்கப்பட்ட கண்காணிப்புக் குழு தமது பாதுகாப்புக் கருதி வர மறுத்து விட்டது. அப்படியே கொழும்பிலிருந்து விமானமேறித் தமது நாட்டிற்கு பயணமாகியிருந்தால் செப்டெம்பர் 1 ஆம் திகதி பிரச்சினை இலகுவில் தீர்க்கப்பட்டிருக்கும்.

போரைக் கூடக் கண்காணிக்க இயலாத குழுவாக இவர்கள் உருமாறி விட்டார்கள். அத்துடன் இப்போது நடைபெறுவது மென்தீவிர யுத்தமென புது இலக்கணம் வகுக்கிறார் குழுத் தலைவர். முதுகிற்குப் பின்னால் நடப்பது நிழல் யுத்தம். சூனியப் பிரதேசக் கோட்டினைக் கடக்காமல் நிகழ்வது மென்தீவிர யுத்தம்.

கடந்த எட்டு மாதங்களாக நடைபெறும் யுத்தமானது இவ்விரண்டு வகைகளுக்குள்ளும் அடங்காத ஒரு வினோத யுத்தம். நடைபெறுவது யுத்தமாகவிருந்தாலும், அது யுத்தமல்ல என்றுதான் கண்காணிப்புக் குழு கூறவேண்டும். இதை யுத்தமென்று கூறினால் அவர்களின் இருப்பிற்கு ஆபத்து.

ஆயினும் யதார்த்தமான களநிலைமைகள் இதுவல்ல. கடந்த ஞாயிற்றுக்கிழமை மாவிலாறை நோக்கி 2000 துருப்புக்களுடன் கனரக ஆயுதங்கள், விமான முற்றுகை சகிதம் உள்நுழைய முயன்ற அரச படைகள், சூனியப் பிரதேசத்தை மீறி புலிகளின் பகுதிகளுள் ஒரு அங்குலம் கூட முன்னேற முடியவில்லை. ஆதலால் கண்காணிப்புக் குழுவைப் பொறுத்தவரை இது ஒரு மென்தீவிர யுத்தமாகும். தடுத்து நிறுத்தும் பலமுள்ளவர்கள், முன்னோக்கி நகர்வதென்பது கடினமான காரியமல்ல.

திருகோணமலையிலுள்ள திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்களை அகற்ற, ஆனையிறவு கூட்டுப் படைத்தள முற்றுகைக்கு பிரயோகிக்கப்பட்ட தந்திரோபாயங்களே போதும். அதன் பிரயோகச் சிறு கூறுகள் மாவிலாற்றில் பயன்படுத்தப்படுவது போல் தெரிகிறது. மாவிலாறு என்கிற குடியேற்ற உணர்திறன் கூடிய மையம் பற்றியதான விவாதங்கள் 84 களில் போராட்ட சக்திகள் மத்தியில் முன்வைக்கப்பட்டன.

மணலாறும், மாவிலாறு வெருகலும் இறுதிப் போரிற்கான மிகவும் இராணுவ உணர் திறன் கொண்ட மையப் புள்ளிகளாகும். இதனடிப்படையில் இவ்விவகாரத்தை முன்வைத்து அரசானது தொடுக்கும் தாக்குதல் நிகழ்ச்சி நிரலின் பின்புலத்தை புரிந்து கொள்ளலாம்.

இவை பற்றி எழுதும் போது திருமலை கடற்படை தலைமையகத்தின் மீது புலிகளால் எறிகணைத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இலங்கை குடியரசாகும் வரை றோயல் நேவி (Royal Navy) தளம் என்று அழைக்கப்பட்ட அத்தளமானது, பிரித்தானிய காலனித்துவ ஆட்சியில் தென்னாசியாவின் பிரதான கடற்படை தளமாகக் கொள்ளப்பட்டது. இதன் மூன்று பகுதியும் கடலால் சூழப்பட்டு, திருமலை இயற்கைத் துறைமுகத்தோடு இணைக்கப்பட்டதொரு பிரதான இராணுவ மையமுமாகும்.

இரண்டாம் உலக யுத்தத்தில் ஜப்பானிய விமானங்களின் குண்டு வீச்சிற்கு அகப்படாதிருந்த இத்தளமானது, முதல் தடவையாக புலிகளின் தாக்குதலிற்குள்ளாகியிருக்க

இங்கே கவனிக்கப் படாத இன்னொரு விடயம் இந்தத் தாக்குதல்கள் சாம்பூரில் நிலை கொண்டுள்ள அறுனூறு வரையிலான புலிகளின் உள்ளூர் படையணியே மக்களின் துணையோடு மேற்கொண்டது.இதன் தாக்குதலிலயே சிங்களப் படைகள் நிலை குலைந்துள்ளன ஆயின் பல்முனைகளிலும் இருந்து மேற்கொள்ளப் படக்கூடிய தாக்குதல்களில் எவ்வாறு நிலை தடுமாறப் போகின்றன என்பதை நினைத்துப் பார்க்க முடியும்.

சிரிலங்காவின் வான் படையும், பல்குழல் எறிகனைத் தளங்களும் முடக்கப்படுமாயின் சிரிலங்காவின் பல படை முகாங்கள் ஒரு சில மணி நேரத்திற்குள்ளயே விழக் கூடிய நிலமையையும் இந்தத் தாக்குதல்கள் உணர்த்தி உள்ளன.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.