Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

13 குறித்து கலந்துரையாட வேண்டும்: ஜப்பான்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

gh1(10).jpg

-றிப்தி அலி

13ஆவது திருத்தச் சட்டமூலம் தொடர்பில் விரிவாக கலந்துரையாடப்பட வேண்டும் என ஜப்பானின் உள்நாட்டு அலுவல்கள், தொடர்பாடல் அமைச்சர் யொஷpத்தகா ஷpன்டோ தெரிவித்தார்.

இது ஒரு நாட்டின் அரசியலமைப்பில் உள்ள விடயமாகும். இதனால் குறித்த நாடே இது தொடர்பில் கவனம் செலுத்த வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

எனினும் இந்த சட்டமூலம் தொடர்பில் விரிவாக கலந்துரையாடப்பட வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.

கலந்துரையாடல்கள் அமைச்சரவையிலோ அல்லது நாடாளுமன்றத்திலோ இடம்பெற வேண்டும் என ஜப்பானிய அமைச்சர் குறிப்பிட்டார்.

உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இலங்கை வந்துள்ள ஜப்பானின் உள்நாட்டு அலுவல்கள், தொடர்பாடல் அமைச்சர் யொஷpத்தகா ஷpன்டோ,  கொழும்பில் இன்று திங்கட்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டார்.

இதன்போது 13ஆவது திருத்தம் தொடர்பில் ஊடகவியலாளரொருவர் வினவியபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், 

ஜப்பானிய தகவல் தொடர்பாடல் தொழிநுட்பத்தினை மேம்படுத்துவதே எனது விஜயத்தின் பிரதான நோக்கமாகும். இது தொடர்பாக இலங்கை அரசாங்கத்தின் உயர் மட்டத்தினருடன் பேச்சு நடத்தியுள்ளேன். 

மிக விரைவில் இது தொடர்பான ஒப்பந்தமொன்றும் கைச்சாத்திடப்படவுள்ளது. எனினும் இதற்காக ஒதுக்கப்படவுள்ள நிதி, இதுவரைக்கும் தீர்மானிக்கப்படவில்லை. இந்த உதவிகள் கல்வி, நிதி, மேம்படுத்தல் என பல வகையில் வழங்கப்படவுள்ளது.

அத்துடன் பொருளாதார தொடர்புகளை மேலும் வளர்ப்பதற்கு இலங்கையும் ஜப்பானும் கவனம் செலுத்துகின்றன' என்றார்.

இதேவேளை, ஜப்பானின் அமைச்சர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை இன்று ஜனாதிபதி மாளிகையில் சந்தித்து பேச்சு நடத்தினார். இதன்போது தொடர்பாடல்துறை உள்ளிட்ட பொருளாதார தொடர்புகளை மேலும் வளர்த்துக்கொள்ளக்கூடிய புதிய மார்க்கங்கள் பற்றி கவனம் செலுத்தப்பட்டது.

 

2011ஆம் ஆண்டு சுனாமி அனர்த்தம் ஏற்பட்டபோது இலங்கையில் இருந்து கிடைத்த ஒத்துழைப்புக்கு தனது நன்றியை தெரிவித்த ஜப்பானிய அமைச்சர், ஜப்பான் மக்கள் அதை பெரிதும் மதிப்பதாக தெரிவித்தார். 

கடந்த மார்ச் மாதத்தில் ஜப்பானில் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டிருந்த ஜனாதிபதி ராஜபக்ஷ, ஜப்பான் பிரதம அமைச்சர் ஷpன்சோ அபே அவர்களுடன் இருதரப்பு பேச்சுவார்த்தைகளை நடத்தியிருந்தார். 

இலங்கைக்கு 57.8 பில்லியன் அபிவிருத்தி உதவியை வழங்குவதற்கு அப்பொழுது ஜப்பான் அரசு உறுதி வழங்கியிருந்தது. அதன் பின்னர் ஜப்பானின் உயர் மட்ட அரச தலைவர் ஒருவர் இலங்கைக்கு விஜயம் செய்துள்ள இரண்டாவது சந்தர்ப்பம் இதுவாகும். 

கடந்த மே மாதம் ஜப்பான் துணை பிரதமர் தாரோ அசோ இலங்கைக்கு விஜயம் செய்தபோது ஜனாதிபதி ராஜபக்ஷவையும் சந்தித்தார். 

இந்த சந்திப்பில் ஊடகத்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல, வெளிவிவகார அமைச்சின் கண்காணிப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்தன, ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க, ஊடகத்துறை அமைச்சின் செயலாளர் சரித்த ஹேரத், வெளிவிவகார அமைச்சின் பதில் ; செயலாளர் nஷனுக்கா செனவிரத்ன, ஜப்பானுக்கான இலங்கை தூதுவர் ரியர் அட்மிரல் (ஓய்வு பெற்றவர்) வசந்த கரன்னாகொட ஆகியோர் கலந்துகொண்டனர்.

gh2(6).jpg

 

ராசியில் பிறந்த ஆள்த்தான். இன்னொரு கணக்கு வர இடம் இருக்கு.

பின்னுக்கு வருபவர்கள் எல்லாப் பக்கமும் நோட்டம் விடுகின்றனர்!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

gh2(6).jpg

இருவரின் முகத்திலும் எதோ தெளிவு அற்ற தன்மை உள்ளது .......

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.