Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

என் மகளுக்கு கணவராக வருபவர் நல்லவராக இருக்கவேண்டும்… சேரன் உருக்கம்

Featured Replies

எனது மகளுக்கு கணவனாக வருபவர் நல்லவராக இருக்க வேண்டும் என்று ஒரு தந்தையாக எதிர்பார்ப்பதில் தவறில்லையே என இயக்குனர் சேரன் கேட்டுள்ளார் அதேசமயம் நான் காதலுக்கு எதிரானவன் அல்ல...என்றும் அவர் உருக்கமாக கூறியுள்ளார். பிரபல இயக்குனரும், நடிகருமான சேரனின் 2வது மகள் தாமினி (20). தனது தந்தைக்கு எதிராக நேற்று சென்னை மாநகர காவல்துறை ஆணையரிடம் புகார் அளித்தார். காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து தன்னை வீட்டுச்சிறையில் தந்தை சேரன் அடைத்து வைத்து சித்ரவதை செய்வதாக தாமினி தெரிவித்தார். இது தமிழ் திரையுலக வட்டாரத்திலும், ரசிகர்களிடையேயும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், சேரன் இன்று சென்னை மாநகர காவல்துறை ஆணையரிடம் சந்துரு மீது புகார் மனு ஒன்றை அளித்தார். அதில் சந்துரு செல்போன் மற்றும் மின்னஞ்சல் மூலமாக தனது மகளுக்கு மிரட்டல் விடுத்ததாகவும், பணம் கேட்டு அச்சுறுத்தியதாகவும், பின்னர் தனது மகளை மூளைச் சலவை செய்து தனக்கு எதிராக புகார் கொடுக்க வைத்ததாகவும் கூறியுள்ளார். கமிஷனரை சந்தித்த பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த சேரன், கூறியதாவது: தான் ஏழை, பணக்காரன் வித்தியாசம் பார்ப்பவன் அல்ல என்றும், தானும் ஏழ்மையான குடும்பத்திலிருந்து வந்தவன்தான் என்றும் கூறிய அவர், தாமும் தனது மனைவியும் காதல் திருமணம் செய்து கொண்டவர்கள்தான் என்றும், மனைவி குடும்பத்தினர் கூட ஏழ்மை நிலையிலிருந்து மேலே வந்தவர்கள்தான் என்றும் தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில், "நானும் எங்களது குழந்தைகளை ஏழை, பணக்காரன், சாதி, மத பாகுபாடு பார்க்கக்கூடாது என்று சொல்லி அதன்படியே வளர்த்துள்ளோம்.எனது மகள் தாமினி சந்துருவை காதலிப்பதாக கூறியதை நான் ஏற்றுக்கொண்டேன். ஆனால் படிப்பு முடியும் வரை பொறுத்திருக்குமாறு கேட்டுக்கொண்டேன். இந்நிலையில் கடந்த 15 தினங்களுக்கு முன்னர் எனது மகளுக்கு உடல் நலம் சரியில்லாமல் போனது. அப்போது அந்த பையன் ( சந்துரு) தன்னை டார்ச்சர் செய்வதாகவும், பயமாக இருப்பதாகவும் எனது மகள் கூறினாள். உடனே உனக்கு விருப்பம் இல்லையென்றால் அந்த பையனை விட்டுவிடு...நான் பார்த்துக்கொள்கிறேன் என்று கூறியிருந்தேன். இது தொடர்பாக 10 தினங்களுக்கு முன்னர் காவல்துறை ஆணையரிடம் புகாரும் அளித்திருந்தேன். இந்நிலையில் என்ன நடந்ததோ தெரியவில்லை. எனது மகள் எனக்கு எதிராக நேற்று காவல்துறை ஆணையரிடம் புகார் அளித்துள்ளாள். தான் காதலுக்கு எதிரானவன் அல்ல என்றும், தான் எடுத்த திரைப்படங்களை பார்த்தாலே இதை தெரிந்துகொள்ளலாம். மேலும் ஒரு தந்தையாக எனது மகளுக்கு கணவனாக வருபவர் நல்லவராக இருக்க வேண்டும் என்றும், அதேப்போன்று ஒரு மாமனாராக எனக்கு மருமகனாக வருபவர் நல்லவராக இருக்க வேண்டும் என நான் எதிர்பார்ப்பதில் என்ன தவறு உள்ளது? நியாயமானதுதானே...?" என கண்ணீர் மல்க பேட்டியை முடித்துக்கொண்டார். கமிஷனர் அலுவலகத்திற்கு சேரனுடன் இயக்குனர்கள் அமீர், ஜனநாதன், கரு. பழனியப்பன், நடிகர்கள் ராதாரவி மற்றும் சரத்குமார் ஆகியோரும் உடன் வந்திருந்தனர்.

http://tamil.oneindia.in/news/2013/08/03/tamilnadu-i-am-not-against-love-says-cheran-180478.html

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எந்தவொரு பெற்றோரும் தமது பிள்ளைகளின் வாழ்க்கை நன்றாக அமைய வேண்டுமென்றே விரும்புவர்.


எல்லோரும் கமலகாசனின்  நடிப்பை போற்றினாலும் அவரது தனிப்பட்டவாழ்க்கை ஒரு சதத்திற்கு உதவாது.

  • தொடங்கியவர்

உண்மைதான் கு.சாமி அண்ணா எல்லோருக்கும் தங்கள் குடும்பம்,பெற்றோர்,பிள்ளைகள் முக்கியம். :icon_idea: 

நல்லவர் என்றால் யார்? கேட்டவர் என்றால் யார்? என்று சேரனால் சொல்ல முடியாத போது - அவரால் அவரது மகளின் விடயத்தில் தலையிடும் உரிமை துளியும் இல்லை!

சினிமாவில் கண்ணை மூடிக்கொண்டு குப்பைகளைக் கொட்டிவிட்டு இப்ப நல்லவன் போல பேசுவது அதிகப் பிரசங்கித்தனம்.

  • கருத்துக்கள உறவுகள்

மூத்த வழக்கறிஞர் வீட்டில் சேரன் மகள் தாமினி

Written by Tamil   // August 5, 2013   //

 

இயக்குனர் சேரனின் மகள் தாமினிக்கும், சென்னை சூளைமேட்டை சேர்ந்த சந்துரு என்ற இளைஞருக்கும் இடையேயான காதல் விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
இந்த காதல் பிரச்சினையில் தீர்வு காண பொலிசார் பேச்சுவார்த்தை நடத்தியதில், தாமினி தந்தை சேரனுடன் செல்ல மாட்டேன் என்று கூறியதால், அவரை மைலாப்புரில் உள்ள பெண்கள் காப்பகத்துக்கு அனுப்பி வைத்தார்கள்.

 

thamini.jpg

 

 

இந்த நிலையில் தாமினி யின் காதலன் சந்துருவின் தாயார் ஈஸ்வரி அம்மாள் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதிகள், ஈஸ்வரி அம்மாள் தாக்கல் செய்த மனு அவசர வழக்காக எடுத்துக் கொள்ளப்படும் என்றும் பிற்பகல் அந்த மனு விசாரிக்கப்படும் என்றும் அறிவித்திருந்தனர்.

 

இவ்வழக்கு விசாரணையின் போது இயக்குனர் சேரன் மகள் தாமினியை, சென்னை உயர்நீதிமன்றத்தில் பொலிசார் நேரில் ஆஜர் படுத்த வேண்டும். இதற்கான நடவடிக்கையை பொலிஸ் கமிஷனர் எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்.

 

இந்த உத்தரவினைத் தொடர்ந்து, இன்று பிற்பகல் நீதிபதிகள் வி.தனபால்,வி.டி.செல்வம் முன்னிலையில் விசாரணைக்கு வந்துள்ளது. சேரன், அவரது மனைவி மற்றும் மகள் தாமினி, இரு தரப்பு வழக்கறிஞர்களுடன் தனித்தனியாக நடைபெற்ற விசாரணையில், தாமினி தந்தை சேரனுடன் செல்ல விருப்பமில்லை என்று கூறியுள்ளார்.

 

பின்பு இந்த வழக்கை நாளைக்கு ஒத்தி வைத்த நீதிபதி, அதுவரை தாமினி மூத்த வழக்கறிஞர் என்.ஜி,ஆர் பிரசாத் வீட்டில் தங்கும்படி உத்தரவிட்டுள்ளார்.

 

http://news.tamilstar.com/archives/44023

Edited by இசைக்கலைஞன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நல்லவர் என்றால் யார்? கேட்டவர் என்றால் யார்? என்று சேரனால் சொல்ல முடியாத போது - அவரால் அவரது மகளின் விடயத்தில் தலையிடும் உரிமை துளியும் இல்லை!

சினிமாவில் கண்ணை மூடிக்கொண்டு குப்பைகளைக் கொட்டிவிட்டு இப்ப நல்லவன் போல பேசுவது அதிகப் பிரசங்கித்தனம்.

 

அட சினிமாவை வலுசீரியசாய் பார்த்து ஏமாந்து போனியள் போலைகிடக்கு :lol:

  • தொடங்கியவர்

நல்லவர் என்றால் யார்? கேட்டவர் என்றால் யார்? என்று சேரனால் சொல்ல முடியாத போது - அவரால் அவரது மகளின் விடயத்தில் தலையிடும் உரிமை துளியும் இல்லை!

சினிமாவில் கண்ணை மூடிக்கொண்டு குப்பைகளைக் கொட்டிவிட்டு இப்ப நல்லவன் போல பேசுவது அதிகப் பிரசங்கித்தனம்.

ஏப்பா  சேரன் மீது இவ்வளவு காண்டம் ? பாவம் அவர் நிலமைய பாருங்க 

அட சினிமாவை வலுசீரியசாய் பார்த்து ஏமாந்து போனியள் போலைகிடக்கு :lol:

 

 

ஏப்பா  சேரன் மீது இவ்வளவு காண்டம் ? பாவம் அவர் நிலமைய பாருங்க 

 

நான் சினிமா பார்ப்பது வலு குறைவு குமாரசாமி ஐயா!

2 வருடத்துக்கு 1 படம் என்றாலே அதிகம் தான். ஆனால் எங்காவது போகும்போது அங்காங்கே சினிமா பாடல்களை பார்ப்பதுண்டு.

பொதுவாக தமிழ் சினிமாவின் மோசமான நிலை காரணமாக பெரும்பாலான சினிமாகாரன்களை பிடிக்காது.

 

யாழ்அன்பு! இந்த விடயத்தில் அவர் மகளை வற்புறுத்த முடியாது என்பது என் எண்ணம்!

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.